வணங்குதல்

வணங்குதல் பற்றி உங்கள் கருத்தென்ன?

1. கடவுளை வணங்குபவர்கள் எல்லாரும் கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். உதாரணமாகக் கிறித்தவர்கள், ஒவ்வொரு உணவின்போதும் “இன்றைய உணவை எங்களுக்கு அளித்த பிதாவே உங்களுக்கு நன்றி” என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். இதையே முஸ்லிம்களும், நிறைய இந்துக்களும் செய்வதை-அதாவது இறைவனுக்கு நன்றி பாராட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.

நாம் இளமையில் நம் அப்பாவின் ஊதியத்தில்தான் சாப்பிட்டு, உடைகள், பிற வசதிகள் போன்றவற்றைப் பெற்று, கல்வியும் பெற்றோம். ஒவ்வொருமுறை வீட்டிலும் சாப்பிடும்போதும், “நீங்கள் சம்பாதித்த பணத்தில்தான் நான் சாப்பிடுகிறேன், உங்களுக்கு நன்றி” என்று கூறுவோமா? கூறியிருந்தால் அவர்களுக்கும்தான் எப்படி இருந்திருக்கும்? அதுபோல கடவுளைப் பிதா, அதாவது தந்தை, அதாவது அப்பா என்று உண்மையில் நினைத்தால், ஏன் நன்றி கூற வேண்டும்? நமக்குத் தந்தையும் தாயும் செய்வனவற்றைக் கடமை என்றல்லவா நினைக்கிறோம்? அதுபோல ஏன் கடவுளுக்கும் நினைக்கலாகாது?

2. வணங்குதல் என்றால் ‘பணிவாக இருத்தல்’,’ கீழ்ப்படிந்து நடத்தல்’ (ஒபீடியன்ஸ்) என்றுதான் நேரான அர்த்தம். Pray என்ற அர்த்தம் இல்லை. கிராமத்தில் கடையில் பையனைப் போட்டால், சில நாட்கள் கழித்து, “பையன் வணங்கி நடந்து கொள்கிறானா, வணக்கமாக இருக்கிறானா” என்று கேட்பார்கள். அதாவது கீழ்ப்படிந்து, அடக்கமாக என்று பொருள். கடவுளுக்கும் நீ கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது இதன் உள்ளர்த்தம். உண்மையில் கடவுளை நம்புபவர்கள் யாரும் கடவுளின் போதனையாகச் சொல்லப்படும், வேதநூல்களில் கூறப்படும் எந்தக் கருத்தையும் ஏற்று நடப்பதில்லை. உதாரணமாக “ஒட்டகத்தின் காதில் ஊசி நுழைந்தாலும் ஒரு செல்வந்தன் சொர்க்கத்தில் நுழைய முடியாது” என்று கிறித்துவம் கூறுகிறது. ஆனால் உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்கள் எல்லாம் கிறித்துவர்கள்தானே? “திருடாதே, பொய் சொல்லாதே” என்றெல்லாம் மதங்கள் போதிக்கின்றன. யார்தான் கீழ்ப்படிந்து இவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள்? சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாரும் திருடுகிறோம், நமக்குத் தேவை என்று நினைத்தால் பொய் சொல்கிறோம். அப்படிச் செய்யாதவர்களுக்குப் ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று பெயரும் சூட்டுகிறோம்.


ஓடு ஓடு ஓடிக்கொண்டே இரு…

நட, நட, நடந்துகொண்டே இரு
செய், செய், செய்துகொண்டே இரு
இதுதான் வாழ்க்கை

உடலின் உறுப்புகள் ஒரு நிமிடம் வேலையை நிறுத்தினால்
உயிரோடு இருப்போமா நாம்?
இயங்கு இயங்கு இயங்கிக் கொண்டே இரு.
இதைக் கற்றுத் தருவது நமது உடல்.
இயற்கை அளித்த வரப்பிரசாதம்.


அறிவுரை

முகநூலிலும் வாட்சப்பிலும் குட்மார்னிங் என்று போட்டும் போடாமலும் நிறையச் செய்திகள் வருவதைப் பார்க்கிறேன். இவை பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கின்ற அறிவுரைகள். என்னைப் பொறுத்தவரை நான் இம்மாதிரிச் செய்திகள் ஒன்றையும் இதுவரை வெளியிட்டதில்லை. நான் பின்பற்றாத எதையும் நான் என் மாணவர்களுக்கும்கூட அறிவுரையாகக் கூறியதில்லை. எதை நான் பின்பற்றினேனோ அவற்றை மட்டுமே அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். “சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அரியவாம் சொல்லியவண்ணம் செயல்” என்ற குறள் மூதுரை என் மனத்தில் என்றும் நிலைத்திருக்கிறது.


என் இளமைக் காலம்-4

பழைய காலத்தை நினைவுக்குக் கொண்டுவருவதற்கு முக்கியக் காரணம், அன்றைக்கும் இன்றைக்குமான சமூக மாறுபாடுகளைப் பதிவசெய்வதற்காகத்தான். காலத்திற்குக் காலம் எல்லாம் மாறுகிறது. மாற்றத்தைத் தவிர மாறாதது ஒன்றில்லை. சமூகத்தின் புறத் தோற்றம் மாறும்போது அதன் அகமும் முற்றிலும் மாறிப்போய் விடுகிறது. அந்த மாற்றங்களைப் பதிவுசெய்தாக வேண்டும். எங்கள் தலைமுறையைப் போல ஒன்று உலகில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. எங்களுக்கு முந்திய தலைமுறை வரை மாற்றங்கள் மிக மெதுவாக நடந்துவந்த காலம். 1900களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டைப் பார்க்கும்போது ஒரு மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த அதே தோற்றத்தில்தான் காட்சியளித்திருக்கக்கூடும். ஆனால் இப்போது பூமியே சுற்றுச்சூழல் மாறுபாட்டினால் அழிந்து விடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு மாற்றங்கள். எங்கள் தலைமுறை மின்சாரமே இல்லாத இளமையையும் கண்டது, முதுமையில் இப்போது இதோ இண்டர்நெட்டில் இணையதளத்தில் பதிவுசெய்துகொண்டிருக்கிறேன். இனிவரும் காலம் தொழில்நுட்பக் காலம். எனது பேரன்மார்கள் மூன்று வயதிலேயே ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இந்த மாற்றங்களில், எங்கள் வாழக்கையில் நான் கண்டவற்றில் ஒருசிலவற்றைப் பதிவு செய்வதுதான் இந்த எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. (இந்த மாற்றங்களுக்கான காரணங்கள் வேறு, அவை நன்றாக ஆராயப்பட வேண்டியவை. அவை சமூகவாதிகளின், பொருளாதாரவாதிகளின் வேலை).
என் வாழ்க்கையின் இளமைக் காட்சிகளில் ஒன்று இங்கே.

1950களின் தொடக்கத்தில் இன்று உள்ளதுபோன்ற காசு (பணம்) கிடையாது. அப்போது தம்பிடி (பைசா), அணா போன்றவை வழக்கில் இருந்தன. ஒரு ரூபாய்க்கு 16 அணா. ஒரு அணாவுக்கு 12 பைசா (தமிழில் தம்பிடி). ஆக ஒரு ரூபாயில் 192இல் ஒரு பங்கு ஒரு தம்பிடி. இன்று பத்துரூபாய்க்குக் கூட மதிப்பில்லை. அந்தக் காலத்தில ஒரு தம்பிடிக்கும் சாமான்கள் கிடைத்தன என்பது இன்று நினைக்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. அன்று ஒரு காலணாவுக்குக் கிடைத்த பொருள்களை இன்று பத்து-பதினைந்து ரூபாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டியிருக்கிறது. (காலணாவுக்கு ஒரு வீசை (அப்போதெல்லாம் கிலோ கிடையாது, ஒரு வீசை என்பது ஏறத்தாழ இரண்டு கிலோ என்று வைத்துக் கொள்ளுங்கள்) காய்கறி வாங்கலாம். இன்று அதன் விலை ஐம்பது ரூபாய் முதல் நூறு ரூபாய். 2400 காலணா ஐம்பது ரூபாய்க்குச் சமம் என்றால், இன்று ஊதியத்தில், வசதிகளில் அன்றைய வாழ்க்கையைப் போல 2400 மடங்கு முன்னேறியிருக்கிறதா? குறிப்பாக, கீழ்மட்ட வேலைகளில்?)

1960 அளவில் மேல்வகுப்பு (9 முதல் 11 கிளாஸ்) வாத்தியாருக்கு 100 ரூபாய் மொத்தச் சம்பளம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்கள். இன்று பணத்தின் மதிப்பு அன்றைக்கிருந்ததைப் போல தோராயமாக 2500 முதல் 3000 வரை உயர்ந்திருக்கிறது என்றால், இன்று 100 X 3000 = 300000 ரூபாய் சம்பளமா தருகிறார்கள்? (என் தாய்வழிப் பாட்டன் குமாரசாமிப் பிள்ளை 1950 அளவில் ‘எலிமெண்டரி ஸ்கூல்’ வாத்தியார் வேலையிலிருந்து ‘ரிடையர்’ ஆனார். அவரது சம்பளம் கடைசியாக 14 ரூபாய் என்று சொன்னதாக ஞாபகம்.)

மூன்று தம்பிடி காலணா. ஆறு தம்பிடி அரையணா. பன்னிரண்டு தம்பிடி ஓரணா. தம்பிடி, காலணா, அரையணா, ஓரணா இவற்றுக் கெல்லாம் காசுகள் (நல்ல செப்புக்காசுகள்தான், அப்போது நிக்கல் காசு வழக்கில் வரவில்லை) இருந்தன என்றால் இன்றைக்கு நம்புவீர்களா? இரண்டணாவுக்குப் பித்தளைக் காசும் இருந்தது.

காலணாவிலேயே சாதாரண காலணா, ஓட்டை (தொண்டி)க் காலணா என்று இரண்டுவகை. நான் தொண்டிக்காலணாவைத் தான் நிறையப் பயன்படுத்தியிருக்கிறேன். சிறிய செப்பு வட்டக் காசு. மத்தியில் வட்டமான துளை. சுற்றிலும் பழைய ஜார்ஜ் ராஜாத் தலை, காசின் மதிப்பு, ஆண்டு ஆகியவை அச்சாகியிருக்கும். 1954 வாக்கில் இவைதான் புழக்கத்தில் இருந்தன. 1956இல்தான் புதிய பைசா (அபபோது நயாபைசா என்று அழைக்கப்பட்டது) புழக்கத்துக்கு வந்து தம்பிடி, காலணா, அரையணா கணக்கை எல்லாம் அழித்துவிடத் தொடங்கியது. இந்தியா மெட்ரிக் முறைக்கு மாறியது. மைல் கிலோமீட்டர் ஆகியது, வீசை கிலோகிராம் ஆகியது, உழக்கு, ஆழாக்கு எல்லாம் போய் லிட்டர் வழக்கிற்கு வந்தது…
ஆனாலும் இந்த மாற்றங்கள் முறறிலும் ஏற்றுக்கொள்ளப்பட சில ஆண்டுகள் ஆயின.

1950கள்தான் காப்பிக்கடைகள் பெருகி, காலையில காப்பி குடிப்பது என்பது மத்தியதர வர்க்கத்தில் பழகத்தொடங்கிய காலம். என் அம்மா அக்காலத்தில் ஒரு காலணாவைக் கையில் கொடுத்து கடையில்போய் ‘காப்பி வில்லை’ வாங்கிவரச் சொல்வார். (அப்போதெல்லாம் ப்ரூ போன்ற பெயர்களெல்லாம் கிடையாது, ஒருவேளை நரசுஸ் மாதிரி காப்பித் தூள்கள் இருந்தனவோ என்னவோ தெரியாது). கருப்பாக ஒரு சிறிய சதுர வடிவத்தில் ஒரு காப்பி வில்லை கிடைக்கும். அதைக் கொண்டுவந்து கொதிநீரில் இட்டால் காப்பி டிகாக்-ஷன். அதில் பாலை ஊற்றி சர்க்கரை போட்டுக் குடிக்க வேண்டும். அவ்வளவுதான். (சர்க்கரை என்றால் வெள்ளைச் சர்க்கரை அல்ல. வெல்லத்தூள் போல மஞ்சள் முதல் பழுப்பு நிறம் வரை பல நிறங்களில் ஒன்று இருக்கும். அதுதான் சர்க்கரை. நாட்டுச் சர்க்கரை என்பது இன்றைய வழக்கு). ஆனால் அந்தக் காப்பியும் நன்றாகத்தான் இருந்தது.
டீக்கடைகளைப் பார்க்க முடியாது. எனக்குத் தெரிந்து 1950களில் அதிகமாக இல்லை. 1960 வாக்கில்தான் திமிரியில் இருந்தபோது எங்களுக்கு டீ அறிமுகம் ஆயிற்று. லிப்டன் என்ற கம்பெனி வீடுவீடாக வந்து டீத்தூளை அறிமுகப் படுத்தியது. அதன் விளைவாக காப்பிக்கு பதிலாக டீ போட ஆரம்பித்தோம். ஆனால் எந்தக் காரணத்தினாலோ குழந்தைகளுக்கு நிறைய உடம்புக்கு வர ஆரம்பிக்க, அது டீயினால்தான் என்று முடிவு செய்து அதை ஒதுக்கிவிட்டு பழையபடியே காப்பியில் சரணம். ஆனால் ஏறத்தாழ 1960 வாக்கில் காப்பி வில்லைகள் மறைந்து காப்பித்தூள் வகைகள் மிகுதியாக வரத் தொடங்கிவிட்டன.

ஏறத்தாழ காப்பிக் கடைகளும் (கிளப்புகள், கபேக்கள்) 1950களில் அதிகமாயின. டீக்கடைகளும் தோன்ற ஆரம்பித்தன. “பிறாமணாள் காப்பி கிளப்புகள்” ஊருக்கு ஊர் பெருகிய காலம். அரையணாவுக்கு நல்ல “டிகிரி” காப்பி அந்தக் கடைகளில் கிடைக்கும். கடைகள்தான் “பிறாமணாள்” கடைகளே தவிர பிராமணர்கள் பெரும்பாலும் எச்சில் தீட்டு கருதி அந்தக் கடைகளுக்கு வருவதில்லை. அதற்கு இன்னும் சில காலம் ஆகியது.

திரைப்படங்களிலும் பெரிய மாற்றம் ஏற்பட்ட காலம் ஐம்பதுகளின் பிற்பகுதிதான். அதற்குமுன்பு புராணப்படங்கள்தான் மிகுதி (பராசக்தி விதிவிலக்கு. வாழ்க்கை, பெண் மாதிரி சில குடும்பக் கதைகளும், தேவதாஸ் போன்ற காதல் கதைகளும் முன்பே வந்துவிட்டன என்று நினைக்கிறேன். ஆனாலும் தமிழில் ஒரு புரட்சிகர மாற்றம் ஏற்பட்டது பராசக்திக்குப் பிறகுதான்.) அதனாலோ என்னவோ என்எஸ்கே ஐம்பத்தொண்ணுக்கும் அறுபத்தொண்ணுக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு திரைப்படப் பாட்டாகவே பாடிவிட்டார். இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம் சிவாஜி கணேசன், எஸ்எஸ் ராஜேந்திரன் போன்றவர்கள் நடித்த ஏழைபடும் பாடு, பணம், செந்தாமரை…இப்படி எத்தனையோ “சமூகப்”படங்கள். ஐம்பதுகளின் இறுதியில் எம்ஜிஆர் ‘தானா’வரிசைப் படங்களிலும், சிவாஜி ‘பானா’ வரிசைப் படங்களிலும் நடிக்க, சினிமாவின் தோற்றமே தலைகீழாக மாறிவிட்டது.

1965இல் நான் கல்லூரியில் பியூசி சேர்ந்த காலத்தில், வேலூர் ஊரிஸ் காலேஜுக்கு எதிரில் இருந்த தாஜ் சினிமாக் கொட்டகையில் மத்திய வகுப்பு டிக்கட் 25 பைசா (நாலணா). (மத்திய வகுப்பு என்றால், உயர்ந்த வகுப்பும் அல்ல, தரை டிக்கட்டும் அல்ல, ஓரளவு பின்னாலிருந்து பெஞ்சில் உட்கார்ந்து பார்க்கலாம். தரை டிக்கட் என்றால் பெஞ்சு கிடையாது. திரைக்கு மிக அருகில் இருக்கும்.)
அதில்தான் அந்த ஆண்டு வெளிவந்த எங்கவீட்டுப் பிள்ளை, படகோட்டி ஆகிய இரு திரைப்படங்களையும் பார்த்தேன்.
ஊரிசுக்கல்லூரியில் பியூசியில் படிக்க நான் கட்டிய மொத்த ஃபீஸ் 64 ரூபாய் என்று ஞாபகம்.


எழுபத்தொன்றில் அடியெடுத்து…

1949 மே 14 என் பிறந்த நாள். அந்தக் கணக்குப்படி இன்று எழுபது முடிந்து எழுபத்தொன்றாம் வயதில் அடியெடுத்து வைக்கிறேன். மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 40 ஆண்டுகள் முடிந்தபோது-41இல் அடியெடுத்து வைத்தபோது, நானும் மனைவியும் மகன் துணையோடு சீனாவுக்குச் சென்று வந்தோம். (அந்தக் குறிப்புகளைக்கூட இன்றுவரை எழுதமுடியவில்லை!) என் வாழ்க்கை வரலாற்றில்தான் அதைப் பற்றி எழுத வேண்டும். இப்போது எழுபத்தொன்றாவது வயதில் அடிவைக்கும்போது, வெளிநாட்டுக்கு இல்லை என்றாலும், மீண்டும் ஒரு சிறு பயணமேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதன்படி மங்களூர், மேற்குக் கடற்கரை வரை சென்றுவர வேண்டும் என்று முடிவுசெய்தேன். நேற்று மூகாம்பிகைக்கும் முருதேஷ்வருக்கும் சென்றுவிட்டு வரும் வழியில் உடுப்பி அருகில் மேற்குக் கடற்கரைச் சாலையில், கடற்கரையில் மாலை நேரம் சுமார் மூன்று மணிநேரம் செலவிட்டோம். பக்திக்காகக் கோயிலுக்குச் செல்ல வில்லை. மனத்துக்குப் பிடித்த மேற்குக் கடற்கரைச் சாலை, அரபிக் கடலில் சூரிய அஸ்தமனக் காட்சி…இம்மாதிரி விஷயங்களுக்காகத்தான். கடவுள் என ஒன்றிற்குப் பெயர்தர வேண்டுமானால், இயற்கைதான் கடவுள். இயற்கையின்றி மனிதன் ஏது?
இன்று பெங்களூர் திரும்புகிறோம்.


The price of success

I think these are the qualities commonly obtained from the people who have attained success.

1.LATE NIGHTS – Succeed people never cared about what time is it and how late is it. They just cared about the work. They cared that the work had been completed or not. It doesn’t mean that one must need to awake till late night. But, people lost in their work had no time to care about the time.

2. EARLY MORNINGS – Early mornings do not mean to be awake at 4 AM or 5 AM. It means about the time spent in sleeping must be less. Less sleep is one of the cost paid for your success. Someone has said, “EARLY TO BED AND EARLY TO RISE, MAKES A MAN HEALTHY, WEALTHY AND WISE.” So, Rise in the early mornings and start working for your goals.

3. VERY FEW FRIENDS – Its better to pet one lion rather than 20 street dogs. It doesn’t mean that street dogs are useless or something. But, if you have one quality things, then it’s better than many local products. Here, Lion represents your friend who can help you in achieving your goals. They motivate you, help you, care about you, console you. Whereas, Street dogs here represent the group of useless fellow who just demotivate you, never care about you, never tried to console you.

4.BEING MISUNDERSTOOD

5. FEELING OVERWHELMED

6. QUESTIONING YOUR SANITY

7. BEING YOUR OWN CHEERLEADER


மூவன்னா ஆட்சி

ஆற்றில் தண்ணீர் நிற்பதற்கு மணல் தேவை. அந்த மணலை எல்லாம் அள்ளியாகிவிட்டது. மலைகளையே வெட்டி விழுங்கிவிட்டார்கள். மலையின்றி மழையில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட மூவன்னாக்களுக்குத் தெரியாது. காடுகளை அழித்தாயிற்று. இன்னும் அழிக்கின்ற திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறார்களாம், அதானி அம்பானிகளுக்காக. இப்படி நீரை வருவிக்கும், சேமிக்கும் எல்லா வழிவகைகளையும் அடைத்துவிட்டு மழை வேண்டும் என்று எல்லாக் கோயில்களிலும் யாகங்கள் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாம் ஒரு மூனா ஆட்சி. என்ன செய்வது? தெர்மோகோல் வைத்து நீரை ஆவியாகாமல் இருக்க திட்டம் போட்ட ஆட்சி வேறென்ன செய்யும்?


Learn to Say ‘No’ to unimportant things

Learning how to say no allows you to focus on the more important goals in your life!

If you learn to say no to a lot more things in life, you can focus on the things that truly matter to your own life.

The things that are necessary for you to perform in order to accomplish the goals you’ve set for yourself.

Don’t just say yes to everything that comes on your path. Think about it for a second, think about whether it is better to say yes or to focus on your own goals.

2. Learning how to say no makes you stick to the right paths in life

Because when you make a habit of saying no to things that are not in line with those goals, you are a lot more likely to become successful.

As stated earlier, many people will just say yes to anything that crosses their path.

An invitation to a party is a lot easier to accept when you’re bored rather than pushing yourself to read a book.

But that book is most likely going to change you as a person. It’s going to give you better insights in the field you want to improve in.

By saying no to the invitation and investing your time into reading, you get into the habit of constantly sticking to your goal.

If you already deep down believe that you should read that book, don’t let yourself procrastinate reading it just because something else comes up. Your future-self will love you for doing that.

3. Learning how to say no makes you develop other great habits in life

Most people have a hard time putting great habits in their life.

See, just knowing how to say no isn’t the only habit that takes less than 10 minutes.

But saying no is something that is going to save you so much time! It’s going to allow you to have so much extra free time to develop even more great habits!

Odds are that you are not putting the best habits in your life because you just don’t have the time to do it.

You skip meditating because you don’t have time. You skip working out because you don’t have time. You don’t study or read a book because you don’t have time.

Do you want more time in your life? Stop saying yes to the things that don’t matter. That don’t bring you closer to your goal but rather take you far away from it.

We all have 10 minutes a day to meditate. And if you don’t, skip the things that don’t matter and free up 10 minutes.

Start saying no because it will get you into a position where you can invest a lot more time in achieving your goals. And that’s the best investment you can ever make!

Help the future you to be who you want to be today!


என் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2

என் மகனுக்குப் பெண் நிச்சயித்த சமயம். 2012 பிப்ரவரி-மார்ச் ஆக இருக்கலாம். பெண்வீட்டாரில் ஒரு பதினைந்துபேர் எங்கள் வீட்டைப் பார்க்க வந்தார்கள். அப்போது நாங்கள் கிண்டியில் ஒரு வீட்டு மாடியில் வாடகைக்குக் குடியிருந்தோம். நான் நிறைய எழுதியிருந்த போதிலும் அங்கீகாரங்களோ விருதுகளோ கிடைக்காத காலம் அது. 2011இல் ஆனந்தவிகடனின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கிடைத்திருந்த போதிலும் அவர்கள் அப்போது அதற்கான பட்டயங்களோ அடையாளங்களோ எதையும் அளித்திருக்கவில்லை.
மாமரத்தில் ஏறிய குரங்குப் பட்டாளம் போல் வீடுமுழுவதையும் அடைத்துக் கொண்டார்கள். அவர்கள் திமிர்ப்பேச்சு தாங்க முடியவில்லை. பெண்ணுக்குத் தாய்வழிப் பாட்டனாம் ஒரு கிழவன். எங்கள் பெண்ணைப் போல் உலகத்தில் இருக்க முடியாது, எவ்வளவு சீர்செனத்தி செய்வீர்கள்? 100 பவுன் போடுவீர்களா? என்றெல்லாம் கிண்டலோ, நிஜமோ தெரியாது, பேசிக் கொண்டிருந்தான். பெண் ஏதோ ஒரு கம்பெனியில் இரண்டு வருஷமாக வேலை செய்கிறாளாம். பெண்ணின் மாமன் என்று ஒருவன். இவன் இரயில்வேயில் உத்தியோகத்தில் இருக்கிறானாம், இவனுடைய ஆணவப் பேச்சையும் சகிக்க முடியவில்லை. இதற்கு நடுவில் என் மகனோ மனைவியோ, “இவங்க ஒரு எழுத்தாளர். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறாங்க” என்று என்னைப் பற்றிக் கூறினார்கள். “எழுத்தாளராம்…எழுதுகிறானாமே இவன்? என்ன சார் எழுதறீங்க?” என்று கிண்டலடித்தார்கள் பெண் வீட்டில். சாண்டில்யனைப் படித்துக்கூட புரிந்துகொள்ள முடியாத கும்பல், இந்த மாதிரிப் பேசியது. சிவனே என்று பொறுத்துக் கொண்டு உபசரித்து அனுப்பிவைத்தோம். வெறும் பண அருமை தவிர வேறு எதுவும் தெரியாத கும்பல். அப்போதே அதன் தகுதி தெரிந்துவிட்டது. கட் பண்ணி யிருக்க வேண்டும். ஆனால் பெண்பார்த்த அன்றே “உங்கள் பெண் பிடித்திருக்கிறது, எடுத்துக் கொள்கிறோம்” என்று என் மனைவியையும் கேட்காமல் வாக்குக் கொடுத்துவிட்டேன். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அன்றும் பேசாமல் இருந்தேன். அதனால் எனக்குப் பின்னால் ஏற்பட்ட அவமானங்கள் சொல்லி முடியாது. என்ன செய்ய?
கொண்டு குலம்பேசக் கூடாது என்பார்கள். ஆனால் தேவையின்றி எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் வாழ்க்கையில் மிகுதி. குறிப்பாக எங்கள் சாதியைச் சொல்லவேண்டும். எப்படியோ பிஎஸ்.சி, பி.இ., என்றெல்லாம் சற்றே படித்து, பெரும்பாலோர் வேலையில் இருந்தார்கள். ஆனால் பொது அறிவு பூஜ்யம். பாடப்புத்தக அறிவுக்குமேல், பணம் சம்பாதிப்பதற்குமேல், சற்றும் வெளி விஷயங்கள் இருக்கின்றன என்பதை அறியாத சோற்றுக் கூட்டம்.
இப்படிப்பட்ட சாதியில் பிறந்துவிட்ட வள்ளலார் என்ன பாடு பட்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க மனம் தாள முடியவில்லை. அதனால்தானோ என்னவோ, “கடைவிரித்தேன், கொள்வாரில்லை” என்று கடைசியில் சொல்லிப் போனார், பூவினும் மெல்லிய மனமுடைய அந்தப் பெரியார்.