What is being civilized?

Years ago, anthropologist Margaret Mead was asked by a student what she considered to be the first sign of civilization in a culture. The student expected Mead to talk about fishhooks or clay pots or grinding stones.

But no. Mead said that the first sign of civilization in an ancient culture was a femur (thighbone) that had been broken and then healed. Mead explained that in the animal kingdom, if you break your leg, you die. You cannot run from danger, get to the river for a drink or hunt for food. You are meat for prowling beasts. No animal survives a broken leg long enough for the bone to heal.

A broken femur that has healed is evidence that someone has taken time to stay with the one who fell, has bound up the wound, has carried the person to safety and has tended the person through recovery. “Helping someone else through difficulty is where civilization starts”, Mead said.

We are at our best when we serve others. Be civilized.
(From facebook)


கெடுபவை காக்க

நீதி நூல்களைப் போலச் சிறப்பாக, குறுகிய வடிவத்தில் கருத்துகளைப் புலப்படுத்தும் தொகுப்பு இது. இத் தொகுப்பை உதவியது வாட்ஸப் குழு (அன்பாலயம்) ஒன்று. சில சந்திப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

பாராத பயிரும் கெடும்.
பாசத்தால் பிள்ளை கெடும்.

கேளாத கடனும் கெடும்.
கேட்கும்போ(து) உறவு கெடும்.

தேடாத செல்வம் கெடும்.
தெவிட்டினால் விருந்து கெடும்.

ஓதாத கல்வி கெடும்.
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்.

சேராத உறவு கெடும்.
சிற்றின்பன் பெயரும் கெடும்.

நாடாத நட்பு கெடும்.
நயமில்லாச் சொல்லும் கெடும்.

கண்டிக்காப் பிள்ளை கெடும்.
கடன்பட்டால் வாழ்வு கெடும்.

பிரிவினால் இன்பம் கெடும்.
பணத்தினால் அமைதி கெடும்.

சின(ம்) மிகுந்தால் அறமும் கெடும்.
சிந்திக்காச் செயலும் கெடும்.

சோம்பினால் வளர்ச்சி கெடும்.
சுயமில்லா வேலை கெடும்.

மோகித்தால் முறைமை கெடும்.
முறையற்ற உறவும் கெடும்.

அச்சத்தால் வீரம் கெடும்.
அறியாமையால் முடிவு கெடும்.

உழுகாத நிலமும் கெடும்.
உழைக்காத உடலும் கெடும்.

இறைக்காத கிணறு கெடும்.
இயற்கையழிக்கும் நாடு கெடும்.

இல்லாளில்லா வம்சம் கெடும்.
இரக்கமில்லா மனிதம் கெடும்.

தோகையினால் துறவு கெடும்.
துணையில்லா வாழ்வு கெடும்.

ஓய்வில்லா முதுமை கெடும்.
ஒழுக்கமில்லாப் பெண்டிர் கெடும்.

அளவில்லா ஆசை கெடும்.
அச்சப்படும் கோழை கெடும்.

இலக்கில்லாப் பயணம் கெடும்.
இச்சையினால் உள்ளம் கெடும்.

உண்மையிலாக் காதல் கெடும்.
உணர்வில்லாத இனமும் கெடும்.

செல்வம்போனால் சிறப்பு கெடும்.
சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

தூண்டாத திரியும் கெடும்.
தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

காய்க்காத மரம் கெடும்.
காடழிந்தால் மழையும் கெடும்.

குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.

வசிக்காத வீடு கெடும்.
வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

குளிக்காத மேனி கெடும்.
குளிர்ந்துபோனால் உணவு கெடும்.

பொய்யான அழகு கெடும்.
பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

துடிப்பில்லா இளமை கெடும்.
துவண்டிட்டால் வெற்றி கெடும்.

தூங்காத இரவு கெடும்.
தூங்கினால் பகலும் கெடும்.

கவனமில்லாச் செயலும் கெடும்.
கருத்தில்லா எழுத்தும் கெடும்.


தனது மகனின் ஆசிரியருக்கு லிங்கனின் கடிதம்

லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..

*அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்குத் தெரிவியுங்கள் .

*பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது கோழைத்தனம் எனப் புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடிலா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

*வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும்,சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் ,பசுமையான மலை யடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள். ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

*மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனைத் தயார்ப்படுத்துங்கள்

*அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என அறிவுறுத்துங்கள். எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள். துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள். போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்

*சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்…

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரஹாம் லிங்கன்.

தகவல்- பூ.கொ.சரவணன் – விகடன்.


ஆசிரியரும் மாணவனும்

ஆசிரியர்- சர்க்கரை என்ற சொல்லை வைத்து ஒரு வாக்கியம் சொல்.
மாணவன்- நான் காலையில் காப்பி குடித்தேன்.
ஆசிரியர்- நீ சொன்ன வாக்கியத்தில் சர்க்கரை வரவில்லையே?
மாணவன்- அதுதான் காப்பியில் கரைந்துவிட்டதே சார்.

ஆசிரியர்- இன்று நமது பாடத்தின் தலைப்பு ஒளிச்சேர்க்கை.
ஆசிரியர் (மீண்டும்)- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
மாணவன்- ஒளிச்சேர்க்கை என்பது இன்று நமது பாடத்தின் தலைப்பு சார்.

ஆசிரியர்- “ஜான் மாம்பழத்‍தைப் பறிக்க வருகிறான்”. மாணவர்களே, யாராவது மாம்பழம் என்று தொடங்கி இந்த வாக்கியத்தை மாற்றியமைத்துச் சொல்லுங்கள்.
மாணவன்- மாம்பழமே, ஜான் உன்னைப் பறிக்க வருகிறான்.

ஆசிரியர்- கொசுக்களை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கிறீர்கள்?
மாணவன்- நாங்கள் அழைப்பதில்லை சார், அவை தானாகவே வருகின்றன.

ஆங்கில ஆசிரியர்- What is the nation that people hate most?
மாணவன்- Exami-NATION, Sir.

ஆசிரியர்- நாம் நமது பள்ளியைச் சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
மாணவன்- நாம் எல்லாரும் வீட்டிலேயே இருந்துவிடலாம் சார், பள்ளி சுத்தமாக இருக்கும்.

ஆசிரியர்- நமது நாடு ஒருகாலத்தில் ஊழலற்றதாக மாறும். இது என்ன காலம்?
மாணவன்- நடக்க-இயலாத எதிர்காலம் சார்.


பாஸிசம்

லாரன்ஸ் பிரிக் எனும் அரசியல் அறிஞர் பாஸிசம் என்றால் என்னவென்று பதிநான்கு கூறுகளாய்ப் பிரித்து நமக்கு விளக்குகிறார், அவை என்னவென்று பார்க்கலாம்.

1) அதீத தேசியவாதம்.
அதாவது நாடுதான் எல்லாமும் எனப் பேசுவது, நாடுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று பேசுவது, அது தேசப்பற்று என்பதை மிஞ்சி அடுத்தவர் மீதான வன்முறை என்று மாறிப்போவது.

2) மனித உரிமை மறுப்பு.
அதிகாரத்தில் இருப்பவர் தம்மைக் காத்துக் கொள்ள மனித உரிமையற்ற சூழலை உருவாக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, அதிகாரத்தில் இருப்பவர் எவரும் வன்முறையைக் கையில் எடுக்கலாம் என்பது போல.

3) பொது எதிரி என்கிற கற்பனையை உருவாக்குவது, அதாவது மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்க குற்றமே செய்யாத சம்பந்தமே இல்லாத ஒரு பிரிவினரை நாட்டுக்கே எதிரியென சித்தரிப்பது, அந்த எதிரி என்கிற ஒன்று ஒரு இனமாகவோ மதமாகவோ நாடாகவோ இருக்கலாம்.

4) ராணுவத்தின் அதிகாரம்.
அதாவது நாட்டின் பொருளாதாரம் பெருமளவு ராணுவத்திற்கே செலவழிக்கப்படும். அந்த ராணுவமும் வெளிநாட்டினருடன் போரிடுவதை விட உள்நாட்டு மக்களை கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்குமே அதிகமாக பயன்படுத்தப்படும்.

5) ஆணாதிக்கம்.
அதிகாரத்திலிருப்பவர் அனைவரிடமும் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும். அதிகாரத்தில் பெண் அமர்த்தப்பட்டாலும் அவர் ஆணாதிக்கத்தைத் தூக்கிச் சுமப்பவர்களாகவே இருப்பார்.

6) ஊடகங்களில் அரசின் தலையீடு.
அரசிற்கு சாதகமாகவே ஊடகங்கள் செயல்படும் அல்லது செயல்படுத்தப்படும்.

7) தேசப் பாதுகாப்பு என்ற அச்சம்.
அதாவது தேசத்திற்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு அச்சத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டேயிருப்பது. அதன் வழியே அரசு செய்யும் எல்லா செயல்களுக்கும் மக்களிடம் ஆதரவைத் திரட்டிக் கொள்ளுவது.

8) மதமும் அரசும் ஒன்றாக இருக்கும். அதாவது குறிப்பிட்ட மதத்தின் ஆதிக்கம் அரசில் அதிகமாக இருக்கும். அரசிலிருக்கும் அமைச்சர்கள் அதிகாரிகள் தம் பெரும்பான்மை மதத்தையே முன்னிருத்தி அரசியல் செய்வர். அரசின் குறைபாடுகள் எல்லாமும் மதம் என்கிற போர்வையால் மூடி மறைக்கப்படும்.

9) முதலாளிகள் பாதுகாக்கப்படுவர். அதாவது தொழிலதிபர்கள் முதலாளிகளின் சொகுசு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பையும் அரசு ஏற்படுத்தாது, அவர்களை முதற் கடமையாக பாதுகாக்கும். அவர்கள் மக்களைச் சுரண்ட அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

10) உழைக்கும் சக்தி ஒடுக்கப்படும். அதாவது தொழிலாளர் நலன் நசுக்கப்படும். தொழிலாளர்கள் சங்கங்கள் அழிக்கப்படும். தொழிலாளர்கள் அரசியல் சக்தியாக உருவாவதை அரசு முறியடிக்கும்…

11) அறிவு மறுக்கப்படும்.
அதாவது அரசு விரும்பும் கல்வி மட்டுமே அனுமதிக்கப்படும், அதை எதிர்க்கும் அறிஞர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள், கலைகளும் ஒடுக்கப்படும்…

12) தண்டனைகள் மீதான ஆர்வம். அதாவது பாஸிஸ ஆட்சியில் காவல்துறைக்கு கட்டுமீறிய அதிகாரம் வழங்கப்படும். தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட முன்னுரிமைகள் வழங்கப்படும். நியாயமான கோரிக்கைகள் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படும்.

13) ஊழல்.
அதாவது முதலாளிகளுக்கு ஏதுவான வழிமுறைகள் தங்கு தடையின்றி திறந்துவிடப்படும். முதலாளிகளுக்கு ஆதரவானவர்களே அதிகாரங்களில் நியமிக்கப்படுவர்.

14) முறைகேடான தேர்தல்கள்.
அதாவது பாஸிசம் பரவும் நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகள் மிகுந்திருக்கும். மாற்றுக் கட்சித் தலைவர்கள் கொல்லப்படுவர் அல்லது சட்டம் வளைக்கப்படும் அல்லது வாக்கு எந்திரங்கள் திருடப்படும் குளறுபடியாகும், வாக்கு எண்ணிக்கை பொய்யாக சொல்லப்படும்.

இந்த 14 விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இந்த 14 விஷயங்களும் உங்களுக்கு பரிச்சயமானதாகத் தோன்றுகிறதா என யோசியுங்கள்.

பரிச்சயமானது போல் தோன்றினால் குறித்துக் கொள்ளுங்கள் உங்களையும் முசோலினி போன்ற ஒரு பாஸிஸ்டே ஆண்டு கொண்டிருக்கிறார் என்று.
ஏனென்றால் பாஸிசம் மக்களின் ஆதரவின்றி வளர்வதில்லை.


A True Story

A SOLDIER’S FATHER
From the notes of a Wing Commander

The helicopter appeared over the late morning horizon. We were to receive Mr Lachhman Singh Rathore who was visiting our Flight Unit to perform the last rites of his son, Flying Officer Vikram Singh.

Only the day before, I had sent the telegram, “Deeply regret to inform that your son Flying Officer Vikram Singh lost his life in a flying accident early this morning. Death was instantaneous.” It was the first time for me- to meet and manage the bereaved next of kin, in this case the Father of the brave officer.

While most of the desolate family members insist on seeing the body, many a time there isn’t a body to show! Flying Officer Vikram Singh’s remains were only a few kilos –scrapped from what was left in the cockpit. We had to weigh the wooden coffin with wood and earth.

The pilot brought the helicopter to a perfect touchdown. Soon Mr Lachhman Singh Rathor was helped down the ladder. A small and frail man he was, maybe of 80 years, clad in an immaculate dhoti.

As I approached him, he asked in a quiet and dignified whisper, “Are you Venki, the Flight Commander?” “Yes Sir.” “Vikram had spoken to me about you. I’d like to speak to you alone for a minute.”

We walked to the edge of the concrete apron. ‘I have lost a son, and you have lost a friend. I’m sure that you have taken great care in arranging the funeral. Please tell me when and where you want my presence and what you want me to do. I’ll be there for everything. Later, I would like to meet Vikram’s friends, see his room and, if it is permitted, visit his work place. I then would like to return home tomorrow morning.”

A commander couldn’t have given me clearer instructions.

The funeral, with full military honours, was concluded by late afternoon. After the final echoes of the ‘Last Post’ faded away, Lachhman Singh spent the evening talking to the Squadron Pilots. Vikram’s room mate took him to see Vikram’s room. Lachhman Singh desired to spend the night in his son’s room instead of the guest house we had reserved for him. Early next morning after a tour of the squadron area, my boss took him to his office.

A while later, the staff car took Lachhman Singh to the civil airfield two hours away.

As the car disappeared round the corner, I remarked to my Boss, “A brave man he is. Spoke to me like a General when he told me exactly what he expected from us during his stay here. I have never seen a more composed man on such an occasion. I admire him.”

“Yes, Mr Lachhman Singh Rathore is a warrior in his own way. He sired three sons and has laid to rest all three of them.

-His 1st son Captain Ghanshyam Singh of the Gurkha Rifles was killed in Ladakh in 1962 War.
His 2nd son, Major Bir Singh, died along the Ichogil Canal in 1965 in an ambush.
His youngest, the 3rd, Vikram Singh, who had the courage to join the Air Force, is also gone now, more to our country’s defence than All of us combined.”

Yes, he is indeed a brave Indian ; in fact HE is MORE INDIAN than anyone else – His sacrifice can never ever be repaid by the Country! He is almost a Martyr himself!

But our Great Nation does not know this Simple Giant — India only knows those Super Rich Cricketers need to be conferred BHARAT RATNA while a bunch of media personal or actors & actresses need to be conferred PADMA VIBHUSHANs and PADMASHREEs !

But what about Those who have SIMPLY LOST their EVERYTHING to the Nation & to its Citizens? Like this Father of Three Brave Soldiers!

(Note: A story to be included in the school syllabus! A brave father of brave sons. How the country could repay its debt to him? We do not know. Could we Print and circulate to all our MPs & JNU scholars?)


நல்ல நேரம்

புத்தாண்டு நல்ல பொழுதாக விடிந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏன் என்றால் நேற்று (31 டிசம்பர் 2019) மாலைதான் நான் ஆனந்தவிகடன் இதழுக்கான சிறந்த மொழிபெயர்ப் பாளராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்ற தொலைபேசிச் செய்தி வந்தது.
இது எனது உழைப்புச் சார்ந்த விஷயம் என்றாலும் இப்படித் தேர்ந்தெடுக்கப்படுவது மிகுந்த அதிர்ஷ்டவசமானது என்றுதான் சொல்லவேண்டும். ஒரே பத்திரிகை, மூன்றாவது முறையாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பது அரிதல்லவா?
முதல்முறை 2011இல் ஆந்திரக் கவிஞர் வரவர ராவின் ‘சிறைப்பட்ட கற்பனை’ (Captive Imagination) நூல் மொழிபெயர்ப்புக்காக இவ்விருது கிட்டியது.
இரண்டாவது முறை 2016இல் இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு நூலுக்காக. அப்போதுதான் மிக ‘கிராண்ட்’ஆக விழாக் கொண்டாடும் முறையும் தொடங்கியது.
மூன்றாவது முறை இப்போது 2019இல் ‘நாகரிகங்களின் மோதல்’ நூலுக்காக.
விருதுவழங்குவிழா ஜனவரி 24 அன்று சென்னை வணிக வளாகத்தில் நடைபெற உள்ளது.
மகிழ்ச்சிதான். இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டும் (சொந்தமாகவும், பெயர்ப்பாகவும்) என்ற எண்ணத்தை உறுதியாகத் தோற்றுவிக்கிறது. வாழ்நாள் அதற்குத்தக உதவ வேண்டும்.