செய்திக் குறிப்புகள்

1. ஒருவாரப் பயணமாக சீனாவுக்குச் சென்று திரும்பி வந்தேன். அது பற்றிப் பின்னர் விரிவாக இணையதளத்தில் எழுதுவேன்.

2. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திற்காக அருட்தந்தை கிஸ்பெர்ட் எழுதிய ‘சமூகவியலின் அடிப்படைகள்’ என்னும் நூலை நான் மொழிபெயர்த் திருந்தேன். அதை மே 25ஆம் நாளன்று மத்திய அரசின் மனிதவளத் துறையின் அமைச்சர் மாண்புமிகு ஸ்மிருதி ஜுபின் ஈரானி ஒரு நிகழ்வின்போது வெளியிட்டார்.

3. வெண்டி டோனிகர் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பான எனது நூல் – ‘இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு’ என்பது எதிர் வெளியீட்டின் சிறப்பு வெளியீடாகச் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 01-06-16 அன்று வெளியிடப்பட இருக்கிறது.

4. அதே நாளன்று நான் எழுதிய ‘தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்’ என்ற நூல் காவ்யா வெளியீடாக வெளியிடப்பட இருக்கிறது.

 

file:///D:/Documents%20and%20Settings/Poornachandran/My%20Documents/My%20Pictures/GP_Hindus.JPG


அண்ணா நகர் ஆய்வு வட்டம்

அண்ணா நகர் ஆய்வு வட்டம் அழைக்கிறது

நாள்: 08-05-2016 நேரம்: முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 12.30வரை

ஆய்வுப்பொருள்: பேராசிரியர் க. பூரணச்சந்திரன் எழுதிய கதையியல் என்ற நூல். பேராசிரியர் பூரணச்சந்திரனும் விவாதத்தில் பங்கேற்கிறார்.

இடம்: நந்தனம் அரசினர் கலைக்கல்லு£ரித் தமிழ்ப் பேராசிரியர் பசுபதி அவர்களின் வீடு – திருமகள் இல்லம்.
இடமும் வரும் வழியும் பிற தகவல்களும் அறியத் தொடர்புக்கு:
90259 07555.