மலையாளிகளின் துரோகங்கள்

இக்கட்டுரை பிறழ்-இதழிலிருந்து (அல்லது வாட்சப் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது).
எழுதியவர் பெயர்-சாம்ராஜ் 28-04-2020

இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான  கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத  நடிப்பும்,நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.
கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார். “சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர். இதை நான் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று. பிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு. மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா,  சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.
கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு. சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம். ஒருபாடு படங்கள். 80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம். துல்லிய மான middile cinema  உருவாகியிருந்தது. ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், பிளஸ்ஸி போன்ற நல்லஇயக்குனர்களும், எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.
மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயம். திலகனுடன் தொலைபேசியில் உரையாடு வதுண்டு. கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன். லோகிதாசை ஒருமுறை சந்தித் திருக்கிறேன். அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன். பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு  நெருக்கம்.
20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன்.அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம். (கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.) கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன். முன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.
இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை. மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள். மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை, இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது. தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.
வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான். பொள்ளாச்சி கவுண்டராக உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார். பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு, மோகன்லால்  அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி “வேண்டாம் மோனே தினேஷா” என மாரில் ஏறி மிதிப்பார்.
பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா? (கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்) தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார். அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.இப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். 
உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷ நாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார். மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள். நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம்  போதவில்லை.
கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது. அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள். அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும் ”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள். (இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.) கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா …..? சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது.
கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.) இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு. தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள். கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள். திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு. இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள் வாங்கவில்லை. கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”. வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள். (ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது. தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.
தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள். அவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை),  ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும். நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை. தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு. எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது.அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது. இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே. கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே. மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள். இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும், கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு. தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை. பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம்  படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.
எனக்குத் தெரிந்து மலையாளப் படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான். 81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ)அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார். அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை. கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார். அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை. ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத் திரையில் தென்படுவதுண்டு. பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான். பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.
இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார். இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை. அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள். பழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.
அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள். ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என.
இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை. பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள். உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள். பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே. ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்). அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே. இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.
பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே. பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.
பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே. அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார். முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது. சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.
ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை. மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர  பிறமொழிக்காரர்களும், மலையாளிகளுமே. கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிர மணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.
அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட   திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை. ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது. சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?
ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.
சமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது. மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார். முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது. சொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே. எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.
அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள். திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார். இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர். எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள். தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.
இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா. இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது. வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக். அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.
சரி கேரளத்துக்குத் திரும்புவோம். சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.
  ”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது. ஏறக் குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது. சேர மன்னர் களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே. அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’  நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.
இந்தப் பாண்டிகளின் தலைநகரில் தான் மலையாள் நடிக. நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர். மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன். மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது. ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது. ஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது. தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’. ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். ஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார். அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.
தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன. காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர “ பாவம் இந்தப் பாண்டிகள் என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள். கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட  செய்ய முடியாது. திரையரங்கம் சூறையாடப்படும். ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.
தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே. உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார். மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள். வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.
நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு. கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே. இன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது. மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம், ”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.
தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு. அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம். ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும், ’சொப்பன சுந்தரிகளும்’ ’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு. அந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு. (மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள். நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்). கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக் கூடியவர்கள். வாதிடக்கூடியவர்கள். அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.
கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு. ”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.
1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது. (முழுமையான பட்டியல் வெகு நீளமானது)
1.   நாடோடிக் காற்று- மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்
2.   நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986
3.   யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987
4.  இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983
5.   சித்ரம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989
6.  நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990
7.   முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு –  மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987
8.   வந்தனம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991
9.  மிதுனம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
10. விஷ்ணு – மம்முட்டி –       – 1993
11.  கிலுக்கம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
12. பிங்காமி – மோகன்லால் – சிபிமலயில் – 1997
13. மழவில் காவடி – ஜெயராம் – 1990
14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990
15. ஐட்டம் –மோகன்லால் – 1985
16. மணிசித்ரதாழ் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994
17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008
18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006
19. தாழ்வாரம் – பரதன் – 1987
20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005
21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000
22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998
23. சேக்ஸ்பியர் M.A  இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008
24. பிளாக் – மம்முட்டி – 2004
25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006
26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004
27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005
28. பளிங்கு – மம்முட்டி – பிளஸ்ஸி – 2006
29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007
30. பிரம்மரம் – மோகன்லால் – பிளஸ்ஸி – 2009
31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003
32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999
33. நரன் – மோகன்லால் – 2005
34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002
35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001
36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி – சத்யன் அந்திக்காடு – 2005
37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005
38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002
39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003
40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000
41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி – 1998
42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000
43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999
44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006
45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001
46.ஏகேஜி – 2007
47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998
48. பகல் பூரம் – முகேஷ் – 2000
49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992
50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு – 2003
இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும். மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.எம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது. மோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர  பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் .தமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் :இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார். M.G.R ன் விரிவாக்கம் அதுவே.. அவர் ராமசந்திரன் அல்ல ராமச்சந்தர். தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன். அப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே இல்லை இன்னும்.1972ல் பெரியார் மலையாள  எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார். சந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார் …….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்) ரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது. சூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.
நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை. நம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை .மற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர். எல்லோர் கையிலும் நம் ரத்தம் படிந்திருக்கிறது.*சேகுவாரா தேசமே* நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.  நாம்? நாம்தான் திராவிடர்கள் ஆச்சே! தமிழர்கள் அல்லவே.


20 Questions to Ask Yourself at The End of Every Week

20 Questions to Ask Yourself at The End of Every Week
By: Natalie Smith

Once a week, we should all take a moment and pause our daily lives, to breathe deeply and think about the big picture, the essential things in life. The following questions are a great way to capture new goals and achieve success in your personal and professional life, all you have to do is just answer them honestly to yourself.
1. What did I learn this week? If it is difficult for you to answer this question, it is time for a change. No matter how old you are you should be learning something new every week.
2. What was my greatest achievement this past week? Writing your achievements is a healthy and easy way to raise your self-confidence, set new goals for yourself and track your progress.
3. What is the most memorable moment of the past week? In this way you can open your mind to new goals and desires you didn’t know were burning within you. It’s also a great way to keep good memories for the future.
4. What is the first thing I have to accomplish next week? Setting an initial goal will help you distinguish between what’s important and what isn’t when it comes to your task list, and also give you a new angle on things you may not have noticed before.
5. What can I do right now to make next week less stressful? Whether it’s jotting down reminders, filling up gas, or putting in a good workout, consider how you can spend a little time this week to make time next week.
6. What have I struggled with in the past that could help me this week?The idea behind this question is to think about what you’ve learned from the mistakes and challenges of the past that can serve you for the future. You might be surprised to discover that many times in the past you’ve dealt with problems similar to the problems you face in the present.
7. What was my biggest distraction this past week?Just knowing what you spent most of your time (physically and mentally) in the past week can bring you to a state where you think twice before you fall into the same distraction next week.
8. Am I carrying baggage from the previous week with me into the coming week?Whether it’s an emotional storm, unfulfilled errands or other kinds of “baggage”, there are many things we carry with us that can be left behind to start the new weak on a clean new page.
9. What task did I progress in this week?It does’t matter whether it’s personal professional, we all avoid “annoying” tasks. It’s time to stop dodging them and finish what you have to do. If these tasks take 20 minutes or less, schedule them in for next Sunday, and if they take longer, schedule them in throughout the week and commit to doing them.
10. What opportunities are on the table?If you have an opportunity that is just waiting for you to pick up, decide that this week is the time. Plan everything from the execution plan to the timetable. Remember – if opportunities were given over and over, they wouldn’t be called “opportunities”.
11. Is there anyone I intended to talk to and didn’t this last week?Communication is the basis for solving problems even before they start, don’t give up a healthy conversation with those around you, and contact with old friends or relatives.
12. Is there anyone who deserves thanks from you?When you invest thought in your week, think of the people who helped you. Gratitude is the most important thing in human relationships, so show others that you care about them. As you would probably want to hear thanks for your actions, make sure to show your friends your appreciation.
13. How can I help someone in the coming week?The best way to get what you want is to help others achieve what they want. It isn’t a matter of hidden interest or hypocrisy, but of courtesy that brings with it courtesy.
14. What are my top 3 goals for the next 3 years?In order to advance in life, you must set realistic goals for the long-term and meet them. Remind yourself every week what it is you want to accomplish, and where you want to go.
15. Did my last decision bring me closer to achieving these goals?If the answer to this question is no, you probably need to rethink your decisions.
16. What is the next step in achieving the ultimate goal?In order to reach a big goal, it must be divided into small stages. Each week, ask yourself what step you need to take next.
17. What am I looking forward to this coming week?The answer to this question will fill you with motivation for the new week, and make the week more meaningful. If you don’t have an answer to this question, make fun plans with friends, family or just yourself, anything that’ll have you looking forward to the week.
18. What am I afraid of?Recognizing your fears, again and again, every week is a slow progression towards overcoming them. With small steps at your fingertips, you can finally conquer the thing you are afraid of.
19. What am I most thankful for?To be thankful for things in your life is a great way to stay in perspective, give up resentment and remember what really matters.
20. If this was my last week on earth, what would I do? This is a small reminder of how short life is, and that you should spend some time this week with your favorite people.


சில அறிவுரைகள்

சில அறிவுரைகள்-கொரொனாவின் பின்னணியில்

இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியாப் பாடம்.

1 ஊரடங்கு முடிந்து நீங்கள் நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும், குடும்பத்துக்காக வருமானம் ஈட்ட வேண்டும். இன்று முதல் ஒரு வருடத்திற்குச் சிக்கனமாக இருங்கள். தேவையற்றவைகளுக்குச் செலவு செய்ய வேண்டாம்.

2 கூடியவரையில் சிறு வியாபாரிகள் கடையில் பொருள்களை வாங்குங்கள். ‘மால்’ மற்றும் சூப்பர்மார்கெட்டுகளைத் தவிருங்கள்.

3 Amazon /flip cart போன்ற online நிறுவனங்களை ஒரு வருடத்திற்குத் தவிர்த்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

4 நகைக் கடைகளைப் புறக்கணியுங்கள். இன்று தங்கம் ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றால் 5000 ரூபாய் அளவில் உள்ளது. நீங்கள் நகைக் கடைகளை ஆக்கிரமித்தால் லாபம் நகைக் கடைக்காரர்களுக்கே. ஒரு வருடத்திற்கு நீங்கள் நகைகள் வாங்கவில்லை என்றால் ஊரில் பாதி நகைக்கடைகள் காணாமல் போய் விடும்.

5 திரை அரங்குகளைப் புறக்கணியுங்கள். எந்த ஹீரோவும் நமக்கு ஒரு சிறு நன்மை கூடச் செய்தவனல்ல. மாறாக ஹீரோ ஒர்ஷிப்பை நடைமுறை ஆக்கியவன்கள். அதிகக் காசு கொடுத்துப் பிடித்த நாயகன் படத்தை முதல் ஷோ பார்ப்பதினால் எந்தக் குடும்பத்திலும் மங்கலம் உண்டாகப் போவதில்லை. மூன்று மாதங்கள் பொறுங்கள். “உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக, திரைக்கு வந்த சில நாட்களே ஆன படம்” என்று தொலைக்காட்சிகளில் அதை நீங்கள் காணலாம்.

6 குடிமகன்களுக்கு ஒரு வார்த்தை. குடியைத் தற்காலிகமாகவேனும் நிறுத்திய இந்த ஊரடங்கிற்கு நன்றி சொல்லுங்கள். படிப்படியாகக் குடியை நிறுத்தி உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள். 

7. வாகனம் மற்றும் கார் வாங்குவதை அறவே தவிருங்கள்.

8. 35000 ரூபாய் பெறுமான AC இன்று 10000 ரூபாய்க்கு விற்பனை என்று கூவிக் கூவி விற்பார்கள்.  இதனால் நஷ்டம் நமக்கே. Quality Compromise strategy will be adopted. சீனாவில் இருந்து வரும் மொபைல் போன்ற வற்றை online shop மூலமாக ஏகப்பட்ட discount கொடுத்து விற்பார்கள். ஒரு வருடம் மொபைல் வாங்க வில்லை என்றால் நமது குடி முழுகிப் போய்விடாது.

9 வாழ்க்கைக்கு ஒரு பொருள் தேவை என்கிற நிலை வந்தால் மட்டுமே அந்தப் பொருளை வாங்குங்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு நிரந்தரக் கடன்காரனாக மாறி விடாதீர்கள்.

10 கடன் அட்டை (Credit Card )உபயோகத்தைக் கூடிய அளவு தவிருங்கள்.

11 குழந்தைகளுக்கு ஒரு சொல். தயவு செய்து உங்கள் பெற்றோர்களை வருத்தாதீர்கள். “என் நண்பன் அதை வைத்திருக்கிறான் இதை வைத்திருக்கிறான் அதே போல எனக்கும் வேண்டும்” என்று அடம் பிடிக்காதீர்கள். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.

இன்னும் ஒரு ஆண்டு நமக்குச் சோதனையான காலம். அதைக் கடந்து விட்டால் இன்று புறநகரில் 70 லட்சம் விற்கும் வீடு 50 லட்சத்திற்கு வரக்கூடும். பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஒரு வருடப் பொறுமை உங்களுக்கு 20 லட்சம் வரை சேமிப்பிற்கு வழி வகுக்கும். அதே போலத்தான் தங்கம் விலையும். நீங்கள் ஒரு வருடம் வாங்க வில்லை என்றால் அடுத்த வருடம் பாதி விலையில் உங்களுக்குக் கிடைக்கக்கூடும். தயவு செய்து காத்திருங்கள்.

ஏமாற்றாதே ஏமாறாதே என்கிற வரிகள் எப்போதும் நமக்குத் தேவை. சிக்கனமும் சேமிப்பும் நமக்குச் சோறு போடும். ஊதாரித்தனம் நமது வம்சத்தை அழித்து விடும்.

கலியுகத்தின் கொடுமைகளை இன்னும் ஒரு வருடம் நாம் கண்முன்னே காணப் போகிறோம். ஜாக்கிரதை. விலை உயர்ந்த நகைகளைப் போட்டுக் கொண்டு சாலையில் செல்ல வேண்டாம். ஒரு ரூபாய்க்காகவும் கொலை செய்யும் கயவர்கள் உண்டு இந்த நாட்டில்…(யா‍ரோ கூறிய அறிவுரைகள்)


கொரோனாவுக்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

ஏப்ரல் 14க்கும் பிறகு வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாது.

ஏனெனில் இனி இயல்பு நிலை என்று நாம் வைத்திருந்த parameters மொத்தமாக மாறும்.

Post-corona economic crisis அழுத்தி நம்மை தரையோடு சாய்க்க காத்திருக்கிறது.

இதுவரை உங்களை support செய்துவருவதாக, salary சரியாக கொடுத்துவருவதாக நினைக்கும் நிறுவனங்கள் இனி layoff கந்தாயங்களைத் தொடங்குவார்கள்.
Downsizing விளையாட்டில் காவு வாங்கப்படவிருக்கும் உயிர்களின் எண்ணிக்கையை ஊகிக்கவே முடியவில்லை.
இதில் பெருத்த அடி வாங்கப்போவது IT, Fossil Fuel , Tourism and its allied services viz Hotels. Renewable energy நொண்டுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
End of the day, இந்த மொத்த களேபரத்தின் முதல் பலி 30-45 வயதுடைய அந்த மிடில் கிளாஸ் காமன் மேன். கையில் காசு, வாயில் தோசை, சேமிப்பு என்பது கானல் நீர், Job security என்பது Pipedream , என்னேரமும் சோலி முடிக்கப்படலாம் என திவாலாக காத்திருக்கும் நிறுவனங்கள். இப்படி middle class paupers உருவாகுவார்கள்.

இதர நாடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கொரோனா தான் மிகப்பெரிய பேரிடர்.2008-09 காலக்கட்டத்தை கடந்தப்பின்னர் அவர்களது பொருளாதாரம் சீரானது. இங்கே நாம் சூ அடி வாங்கும் இடம் இதுதான். கொரோனாவுக்கு முன்பே நமது பொருளாதாரத்தை சூறையாடிய Man made crisis என்றால் அது demonization மட்டுமே.
Industryயின் small players, startups, cottage Industries, self reliant micro businessசை கொத்தாக கபளீகரம் செய்து முடித்தது. குத்துயிரும் கொலை உயிருமாக இயங்கிய தொழில்களை GST சோலி முடித்துவிட்டது. இப்பொழுது இருப்பதாக காட்டப்படும் economy ஒரு quasi steady state என்றால் அது மிகையே இல்லை.

Trillion dollar economy என்றால் என்ன, அது சாத்தியமா என்று மெத்தப்படித்த social economist களிடம் கேட்டுப் பாருங்கள். வாயால் சிரிக்க மாட்டார்கள். இப்படி இந்தியா என்ற entity யை மொத்தமாக காலி செய்ய வைரசை விட ஒன்று காத்திருகிறது. அது தான் சீர்கெட்ட பொருளாதாரம்.

1920களில் ஹெர்பட் ஹூவரின் அமெரிக்க நொண்டியதைவிட இந்தியாவின் நொண்டல் ராஜ நொண்டலாக இருக்கும். இதை முதலில் கண்டுகொண்டவர்கள் சங்கிகள் தான். சொன்னால் நம்ம கடினம். ஆனால் அவர்களது modus operandi அப்படித்தான் இருக்கிறது. இதுகாறும் அதிக கடன் வாங்கி நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் எதேச்சையாக வெளியேறவில்லை. பக்கா execution.

இங்கே இருப்பதை வாரி சுருட்டிக்கொண்டு திடமான பொருளாதாரம் கொண்ட ஊரில் அடைக்கலமாதல். எளிமையாக சொல்வதென்றால் British இங்குள்ள் resources எல்லாவற்றையும் அங்கே எடுத்து தங்களை வளமாக்கிக்கொண்டார்களோ அந்த மாதிரி. வெளிநாடுகளில் இவர்கள் இன்வெஸ்ட் செய்வது, கடனை மட்டும் வாராக்கடனாக்கி என்போன்ற உங்களைப் போன்ற குப்பன் சுப்பன் தலையில் வாராக்கடனாக்கி, அய்யா மாஸ்க் பிச்ச போடுங்கைய்யா என்று நம்மை பிச்சையெடுக்க விட்டிருக்கிறார்கள்.

அடுத்த பஞ்சாயத்து 20-30 வயதுடையோர் professional job ல் சேர இயலாத சூழல். DSLR/ Ola driver/ Swiggy delivery boy generation ஒன்று உருவாகியிருப்பது கண்கூடு. 10 வருடம் முன்பு நான் UPSC aspirant என்று சொன்ன கூட்டத்தில் கணிசமான அளவில் இன்று நான் ஒரு Swiggy delivery செய்யும் இஞ்சினியர் என்று சொல்லத்தக்க ஒரு கூட்டமாக ஆகியிருக்கிறது. இவர்களால் கொரோனாவுக்கு பின்னர் ஏற்படப்போகும் அந்த lacunae வை நிரப்ப முடியாது. தாங்க மாட்டார்கள்.
அந்த 30-45 வயதினர் வீட்டுக்கு அனுப்பப்படும்போது அவர்களை சீரும் சிறப்புமாக replace செய்ய இருக்கும் skilled workforce இங்கே இல்லை. மேலும் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும் ஆட்களுக்கு இங்கே வந்தாலும் ஒன்றும் கிட்டப்போவதில்லை.
இந்த சூழலைத் தான் நமக்கு கடந்த 6 வருட ஆட்சி கொணர்ந்திருக்கிறது. அச்சே தின் என்பது எப்படி இருக்கும் என்பது முன்னோட்டம் இது.

Rats feeling the sinking ship என்பதுபோல் , இவர்கள் மூழ்கடித்த இந்திய பொருளாதாரத்தை நரி பேர்லே எழுது, ஓட்டேரி நரி பேர்லே எழுது என்பதுபோல் கொரோனா மேல் எழுதிவிட்டு பதமாக நகர்வார்கள். நகர்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.

கொரோனாவுக்குப் பின் பீடு நடை போடப்போகும் தொழில் என்று எதையுமே சொல்ல முடியாது. ஆகவே சங்கிகள் இன்னும் அதிகமாக தேசபக்தி பாடல்கள் பாடுவார்கள். விளக்கேற்றுவார்கள், பாத்திரம் தட்டுவார்கள், ராமர் அனுமார், ஜடாயு, ஜாம்பவான் கோயில் கட்டுவார்கள். ஆனால் மறந்தும் பொருளாதார மீட்சி குறித்து பேச மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது.
அச்சே தின் பொச்சே தின் என்று கதைவிடலாம். ஆனால் அதை கொண்டு வருவது என்பது குதிரைக் கொம்பு என்று அவர்களுக்குத் தெரியும்.
எரியும் வீட்டில் ஒரு டம்பளர் கொண்டு உங்களை தீயணைக்க சொல்லிவிட்டு, அவர்கள் அடுத்த வீட்டுக்கு தங்கள் பெட்டிப் படுக்கையை தயார் செய்வார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டதில் ஹிட்லர் ரஷியாவை ஆக்கிரமிப்பு செய்தபோது, பின்வாங்கி வெளியேறிய ரஷியப்படை ஒரு காரியம் செய்தது. அவர்கள் வெளியேறும் நகரங்களின் வயல்வெளிகள், வணிக நிலையங்கள், வருவாய் தரும் எல்லாவற்றையும் கொளுத்திவிட்டு கிளம்புவார்கள். ஹிட்லரின் படைகளுக்கு காய்ந்து கருவாடாகிப் போன ஒரு சுடுகாட்டு ஊர் மட்டுமே கிடைக்கும். அதிலிருந்து எதுவும் கிடைக்காமல் வாடி வதங்கி அவர்கள் மடிவார்கள்.

அப்படி இந்தியாவை சூறையாடிவிட்டு நமக்கு சுடுகாட்டை விட்டுவிட்டு கிளம்புவார்கள் சங்கிகள். நமக்கு ஒரு பெரிய சைஸ் திருவோடும், தம்தூண்டு அகல் விளக்கும் மட்டுமே கிடைக்கும். அதை வைத்து கம் எகானமி கம், கம் எகாணமி கம், பாசிடிவ் எகாணமியே வா வா வா, ஜெய் எகாணமி என்று ஒரு 110 வருடம் கத்தினால் போதும். நமக்கு எகாணமி கிடைத்துவிடும்
நாம் வல்லரசாகிவிடுவோம்.

கொடூரமான காலம் காத்திருக்கிறது. மிக மிக அண்மையில்.

Umamaheshvaran Panneerselvam வாட்சப் மூலமாகப் பகிர்வு.


கொரோனாவும் அரசாங்கமும்

நோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறை மக்களுக்கு உண்டு. அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல், புரிதல் இல்லாமல் அரசால் மட்டும் நோயிலிருந்து மக்களை காத்துவிட முடியாது. அரசின் அணுகுமுறை என்பது மக்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுடன் உரையாடுவதாக, அவர்கள் ஒத்துழைப்பைக் கோருவதாக இருப்பதுதான் முறையானது. அதுவே மக்களாட்சி.
கொரோனா தொற்று என்பது சட்ட ஒழுங்கு பிரச்சினையல்ல. வைரஸை கைது செய்ய முடியாது. இது ஒரு சுகாதாரப் பிரச்சினை. இந்த தொற்றின் துரிதமான பரவலால் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும்போது இது பெரியதொரு பொருளாதார பிரச்சினையாகவும் மாறுகிறது. இதெல்லாமே மக்கள் வாழ்வை நேரடியாக பாதிப்பது.
இது போன்ற அசாதாரணமான சூழ்நிலைகள் ஏற்படும்போது அரசு தன்னுடைய அதிகாரத்தை மட்டுமே நம்புகிறது. ஒப்புக்காக ஆட்சியாளர்கள் மக்களிடம் ஊடகங்களில் பேசுகிறார்களே தவிர அவர்களிடம் கருத்துக்களை கேட்பதில்லை. அவர்கள் தேவைகளை புரிந்து கொள்வதில்லை.
மக்கள் முதிர்ச்சியற்றவர்கள், கட்டுப்பாடற்றவர்கள், தங்கள் நலன்களை பேணத் தெரியாதவர்கள்; எனவே, குழந்தைகளை பெற்றோர்களும், ஆசிரியர்கள் கண்டித்து, தண்டித்து கட்டுப்படுத்துவதைப் போல மக்களை நட த்தவேண்டும் என்றுதான் அரசாங்கங்கள் நினைக்கின்றன. இதன் காரணமாக கொரோனா தொற்றால் மக்களாட்சி நெறிமுறைகள், மக்களின் சுதந்திரம் என்பதே பெருமளவு பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. சில முக்கிய பிரச்சினைகளை கவனிப்போம்.

மக்களின் நடமாட்டம்

கொரோனா கிருமிகள் எப்படிப் பரவும் என்பதை ஊடகங்கள் ஓயாமல் விளக்கி வருகின்றன. கொரோனா தொற்று இருப்பவர் இருமும்போதோ, தும்மும்போதோ அக்கம்பக்கத்தில் இருக்கும் பொருட்களில், தளங்களில் விழும் துளிகளில் இருக்கும் வைரஸ் பிறர் கரங்களில் பட்டு அவர்கள் உடலுக்குள் ஊடுருவுவதன் மூலம் பரவிவிடும். சில சமயங்களில் அந்த துளிகள் நேராகவே அருகிலிருப்பவர் சுவாசத்தில் கலக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த இருமலோ, தும்மலோ கடுமையாக இருக்க வேண்டியதில்லை. சாதாரணமாக ஒருவர் அவர் முகத்தை துடைத்துவிட்டு அந்த கையால் ஒரு பொருளை தொடும்போதே பரவலாம். இதனால் மக்கள் நெருக்கமாக கூடும் இடங்களில் தொற்று எளிதில் பரவிவிடும் என்று கருதப்படுகிறது. உதாரணமாக ஒரு விமானத்தில், ரயில் பெட்டியில் பயணம் செய்யும் ஒருவருக்கு தொற்று இருந்தால் அவர் கரங்கள் தொடும் கைப்பிடிகள் போன்றவற்றை தொடும் பலருக்கு அந்த தொற்று பரவலாம்.
இதன் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டிய தேவையை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்தன. தமிழ்நாடு மாநில அரசு 21ஆம் தேதி மாலையிலிருந்து பத்து நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. அனைத்து அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், உணவகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவித்தது. மத்திய அரசு 21/22 நள்ளிரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கை, நாடு தழுவிய லாக் டவுன் என்ற சமூக இயக்க நிறுத்தத்தை மூன்று வாரங்களுக்கு அறிவித்தது. இதன் மூலம் மக்கள் கூட்டமாக குழுமும் இடங்கள் பல மூடப்பட்டன. மக்கள் பெருமளவு வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
இதில் ஒரு முக்கிய பிரச்சினை தோன்றியது. வீட்டிலேயே இருப்பவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், காய்கறிகள் எப்படி கிடைக்கும் என்ற கேள்வி. பிற அத்தியாவசிய சேவைகளான குடிநீர், மின்சாரம், கழிவு நீர் அகற்றல், துப்புரவு செய்தல், மருத்துவம் போன்றவையும் கிடைக்க வேண்டும். இவையெல்லாம் அனைவருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால் அதற்காக பலர் பணிகளில் ஈடுபட்டுத்தான் ஆகவேண்டும். வீட்டில் இருக்கும் பலர் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், இந்த தொழில்கள் தொடர்பாகவும் வெளியே செல்வதும் அவசியம்.
ஆனால் அரசு தெருக்களில் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வோரை காவல்துறையைக் கொண்டு கட்டுப்படுத்தத் துவங்கியது. அந்தந்த காவல்துறை ஆணையர்கள், ஆய்வாளர்கள் மனப்போக்கிற்கு ஏற்ப தெருக்களில் வாகனங்களில் செல்பவர்கள் லத்தியால் அடிக்கப்படுவதிலிருந்து, பலவிதமான தொல்லைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் தரும் வாய்மொழி விளக்கங்களை காவலர்கள் உதாசீனம் செய்தார்கள். மருந்து வாங்கி செல்கிறேன் என்று மருந்தைக் காட்டுபவரிடம் பொய் சொல்கிறாய் என்று வண்டியை பறிமுதல் செய்தார்கள். வயலுக்கு நீர் பாய்ச்ச செல்கிறேன் என்பவரை அச்சுறுத்தினார்கள். தங்கள் இஷ்டத்திற்கு அவர்களை முட்டிபோட்டு நடக்க வைப்பது, தோப்புக்கரணம் போட வைப்பது என்று பலவிதமாக அவமானப்படுத்தினார்கள். தெருவில் வாகனங்களில் செல்வதே குற்றம் என கெடுபிடி செய்தார்கள். மக்களை குற்றவாளிகள் போல நடத்தினார்கள்.

தெருவில் தங்கள் சொந்த வாகனங்களில் மக்கள் செல்வதால் யாருக்கும் தொற்று ஏற்படாது. அவர்கள் சென்று சேரும் இடங்களில், கடைகளிலோ, மருத்துவ மனைகளிலோ, வேறு பணியிடங்களிலோதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு பொது இடங்களில் கூடுவதை கண்காணிக்கலாமே ஒழிய அனைத்து இடங்களிலும் ஊடுருவி அனைவரையும் கண்காணிக்க முடியாது. ஆனால் வாகனங்களில் செல்லும் அனைவரிடமும் தேவையில்லாமல் கடுமை காட்ட த் தொடங்கினார்கள். வாகனங்களை பறிமுதல் செய்தார்கள். தேவையில்லாமல் சுற்றுகிறார்கள் என்றார்கள்.

மற்றொரு புறம் பல சந்தைகளில், கடைகளில் மக்கள் கூட்டமாக கூடினார்கள். அங்கெல்லாம் காவல்துறை எந்த இடையீட்டையும் செய்யவில்லை. தொலைக்காட்சிகளில் மக்கள் பலவிதமான கடைகளில், கடைவீதிகளில் கூடுவதையும் காட்டினார்கள்; வாகன ஓட்டிகளை காவல்துறை அத்துமீறி தண்டிப்பதையும் காட்டினார்கள். இதிலெல்லாம் மக்களின் தேவைகள், உரிமைகள் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் அரசு தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டது.
இந்தியாவை பொறுத்தவரை தனிமனித உரிமைகள் குறித்த தெளிவான புரிதல் இன்னமும் ஏற்படவில்லை. அதனால் வாகனங்களில் செல்பவர்களை லத்தியால் அடிப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் உண்டு என்றே பொதுமக்களில் பலரும் கருதுகிறார்கள். ஆனால் இது மிகப்பெரிய மனித உரிமை மீறல். அரசு மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை தடை விதிக்கவில்லை. கூட்டமாக செல்வதைத்தான் தடை செய்துள்ளது. ஆனால் எந்த காரணத்தினாலோ வாகனங்களில் மக்கள் செல்வது ஆபத்தானது என்று கருதப்பட்டு அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏன், எதற்காக செல்கிறார்கள் என்பதையெல்லாம் பரிசீலித்து ஏற்றுக்கொள்ள காவலர்கள் பல இடங்களில் மூர்க்கமாக மறுத்துள்ளார்கள். இதனால் மக்கள் எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துள்ளார்கள். இது மிக மோசமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.
அடிப்படையில் ஒரு நோய் தடுப்பு முயற்சியை, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக அரசும், காவல்துறையும் புரிந்துகொண்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மாநிலங்களிடையே போக்குவரத்தை தடைசெய்தல்

மக்கள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதை பொதுவாக தடை செய்வதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் விவசாய விளைபொருட்கள், தானியங்கள் என பல்வேறு வர்த்தக பரிமாற்றங்களையும் மாநிலங்களிடையே தடை செய்ததன் நோக்கம் புரியவில்லை. ஒரு சில மாநிலங்களிடையே புரிந்துணர்வு இருந்தாலும், கர்நாடக முதல்வர் எடியூரப்பா கேரள வாகனங்களுக்கு முற்றாக அனுமதி மறுத்துள்ளார். அந்த வாகனங்கள் உள்ளே வந்தால் பெருமளவில் மரணங்கள் நிகழும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு கூறுவதற்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் என்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை. அந்த வாகன ஓட்டிகளை தொற்று உள்ளதா என்று சோதித்துப் பார்த்து கூட அனுமதிக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பண்டங்களை தடை செய்தால், அதனால் ஏற்படும் பொருள் இழப்பு ஒட்டுமொத்தமாக நாட்டையல்லவா பாதிக்கும். மேலும் அவசர சிகிச்சைக்கு செல்லக்கூடிய நோயாளிகளுக்கும் அனுமதி மறுத்துள்ளது கர்நாடகா. எந்த விதமான தடைகள் அவசியம், எவை அவசியம் இல்லை, எப்படி கூடியவரை எச்சரிக்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என்பதையெல்லாம் தொடர்புடைய மக்களுடன் கூட்டுறவு நோக்கில் விவாதிக்காமல், அரசாங்கங்கள் எதேச்சதிகாரமாக முடிவு செய்வது நோய் தடுப்பிற்கு உதவுவதை விட, சர்வாதிகார மனப்போக்கை உருவாக்கவே துணை புரியும். பொதுவாக மக்கள் அனைவரும் குற்றவாளிகளாக மாற சாத்தியமுள்ளவர்கள் என்ற நோக்கில் சட்ட ஒழுங்கு பிரச்சினையை அரசு அணுகும்; கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் நோயாளிகள் என்ற நோக்கில் அணுகுகிறது.
இதைவிட கொடூரமான பிரச்சினை வெளிமாநிலங்களில் பணி செய்பவர்கள் சொந்த மாநிலத்திற்கு நடந்தே ஊர் திரும்புவது. இவ்விதம் நடந்தே சென்றவர்கள் பலர் இறந்து போயுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் நினைத்திருந்தால் நெடுஞ்சாலைகளில் நடப்பவர்களை உடனே தடுத்து நிறுத்தி, அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்கள் ஆங்காங்கே தங்குவதற்கோ, அல்லது அவர்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்கோ ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் மக்கள் பயணம் செய்வதே சட்ட விரோதம், குற்றம் என்ற அபத்தமான மனநிலையின் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நடை பயணத்தை மிகவும் உதாசீனமாக கையாண்டுள்ளது மத்திய அரசு.

உத்தரவிடத்தான் அரசா?

இருபத்தோரு நாட்கள் ஊரடங்கு என்றால் பணிபுரியும் இட த்தில் தங்க வேண்டுமா, சொந்த ஊரில் தங்க வேண்டுமா என்று முடிவு செய்யும் உரிமை எந்த ஒரு தொழிலாளிக்கும், பணியாளருக்கும் உண்டு. அவர்களது கருத்தை அறிந்து, அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை புரிந்துகொண்டு அவர்களுக்காக விசேஷ பேருந்துகளை, ரயில்களை அரசு இயக்கியிருக்க வேண்டும். தேவையானால் அவர்களுக்கு கிருமி தொற்று இருக்கிறதா என்பதை பரிசீலித்துவிட்டுக் கூட அவர்களை பயணம் செய்ய அனுமதித்திருக்கலாம். அல்லது அவர்களை சொந்த ஊர் சென்ற பிறகு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருக்கலாம்.
மத்திய அரசும் சரி, கோயம்பேட்டிலும், பெருங்களத்தூரிலும் மார்ச் இருபதாம் தேதி இரவு மக்களை அலைமோத விட்ட தமிழக அரசும் சரி, மக்கள் ஊரடங்கின் போது தாங்கள் எங்கே வசிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உரிமை உள்ளவர்கள் என்பதை ஏற்கவில்லை. எந்த வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசாங்கம் சொன்னவுடன் மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கேயே தங்கிவிட வேண்டும் என்று நினைத்தார்கள்.
இது நோய் தடுப்பிற்கான அணுகுமுறை அல்ல; சர்வாதிகார அணுகுமுறை. மக்கள் அவ்வளவு கூட்டத்தில் அலைமோதாமல் உரிய பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்திருக்க முடியும். டெல்லி அனந்த் விஹார் பேருந்து நிலைய காட்சிகளும் பெரும் அவலத்தையே வெளிப்படுத்தின. இது போன்ற நிகழ்வுகளையெல்லாம் மக்களுடன் கூட்டுறவாக விவாதித்து முடிவுகளை எடுக்கும் பக்குவம் இருந்திருந்தால் தவிர்த்திருக்கலாம். ஒரு சில தினங்களில் ஊரடங்கு அறிவிக்கப் போகிறோம், சொந்த ஊர் சொல்ல விரும்புபவர்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு மிஸ்ட் கால் அல்லது குறுஞ்செய்தி அனுப்புங்கள் என்று கூறியிருந்தால், மக்களின் மனப்போக்கும் தேவையும் புரிந்திருக்கும். மக்களுடன் பேச, கலந்தாலோசிக்க அரசிற்கு எந்த வாய்ப்புமே இல்லையென்றால் எப்படி ஒரு ஆட்சியை மக்களாட்சி என்று அழைக்க முடியும் என்பதே கேள்வி.

மருத்துவத் துறை போதுமான தயாரிப்புடன் இல்லை; பொருளாதார இழப்புகளை அதனால் விளையக்கூடிய தேக்கத்தை, பின்னடவை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்றாலும் அரசு கொரோனா காலத்தில் தன் அதிகாரத்தை பல விதமான தடைகளை தினசரி விதிப்பதன் மூலம் நிறுவி வருகிறது. இது மக்கள் தங்கள் உரிமைகளை மறந்து அரசின் சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்திற்கு கொண்டு செல்லக்கூடாது. இந்த நிலையில் எதிர்கட்சிகளும் தேசிய பேரிடர் காலத்தில் அரசிற்கு ஒத்துழைக்கிறோம் என்ற பெயரில் அரசின் அத்துமீறிய நடவடிக்கைகளை, மெத்தனத்தை கண்டிக்காமல் விட்டுவிடக்கூடாது. அரசதிகாரம் என்பது என்றுமே மக்களாட்சியுடன் முரண்பட்டது என்ற அரசியல் தத்துவ அடிப்படையை நாம் மறந்துவிடக் கூடாது. கொரோனாவில் இருந்து நாம் கற்கும் பாடம் அதிகாரப் பரவலாக இருக்க வேண்டுமே தவிர, அதிகாரக் குவிப்பாக இருக்கக் கூடாது.
rajankurai@gmail.com, through minnambalam.