பூச்சியமும் ஒன்றும்

Nothing and Being

மனித வாழ்க்கை என்பது என்ன அதன் அர்த்தம் என்ன என்றெல்லாம் பெரிய அறிஞர்கள் விவாதித்திருக்கிறார்கள். பல மதங்களும் அதைப் பற்றிப் பேசுகின்றன.

என்னைப் பொறுத்தவரை

மனித வாழ்க்கை என்பது

பூச்சியத்திலிருந்து தொடங்கி ஒன்று ஆகி பிறகு மீண்டும் பூச்சியமாகவே ஆகிப் போவது. அவ்வளவுதான்.

குழந்தை பிறக்கும்போது பூச்சியமாக இருக்கிறது. மிருகங்களைப் போலத் தன் உண‍வைத் தேடவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்கூட இயலாமல் இருக்கிறது. பிறகு ஒன்று ஆகிறது, ஒன்றாகிறது. காலப் போக்கில் மீண்டும் தேய்ந்து ஒன்று என்ற நிலையிலிருந்து கீழே குறைந்து சாவில் பூச்சியமாகிறது.

அவ்வளவுதான் மனித வாழ்க்கை. இதில் எதற்கும் அர்த்தம் இல்லை. ஒன்று என்பது ஒரு இழிவான பணிபுரியும் தொழிலாளியாகவும் இருக்கலாம், மந்திரம் ஓதித் தன்னைப் பெரிய அறிவாளியாகக் காட்டிக் கொள்ளமுயலும் உயர்சாதியினனாகவும் இருக்கலாம். எல்லாம் ஒன்றுதான். மீண்டும் அனைவரும் பூச்சியத்தை நோக்கிய பயணத்தைச் சற்று முன்னாலோ பின்னாலோ தொடங்கிவிடுகிறார்கள் என்பது நிதரிசனம். இதில் எல்லா நிகழ்வுகளுக்கும் அர்த்தம் கற்பித்துக் கொண்டு தன்னைப் பெரியவன் என்றோ மிகச் சிறியவன் என்றோ கருதிக்கொள்பவர்களைப் பார்த்து பூச்சியம் சிரிக்கிறது.