மூவன்னா ஆட்சி

ஆற்றில் தண்ணீர் நிற்பதற்கு மணல் தேவை. அந்த மணலை எல்லாம் அள்ளியாகிவிட்டது. மலைகளையே வெட்டி விழுங்கிவிட்டார்கள். மலையின்றி மழையில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட மூவன்னாக்களுக்குத் தெரியாது. காடுகளை அழித்தாயிற்று. இன்னும் அழிக்கின்ற திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறார்களாம், அதானி அம்பானிகளுக்காக. இப்படி நீரை வருவிக்கும், சேமிக்கும் எல்லா வழிவகைகளையும் அடைத்துவிட்டு மழை வேண்டும் என்று எல்லாக் கோயில்களிலும் யாகங்கள் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாம் ஒரு மூனா ஆட்சி. என்ன செய்வது? தெர்மோகோல் வைத்து நீரை ஆவியாகாமல் இருக்க திட்டம் போட்ட ஆட்சி வேறென்ன செய்யும்?