நல்ல நேரம்

புத்தாண்டு நல்ல பொழுதாக விடிந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏன் என்றால் நேற்று (31 டிசம்பர் 2019) மாலைதான் நான் ஆனந்தவிகடன் இதழுக்கான சிறந்த மொழிபெயர்ப் பாளராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்ற தொலைபேசிச் செய்தி வந்தது.
இது எனது உழைப்புச் சார்ந்த விஷயம் என்றாலும் இப்படித் தேர்ந்தெடுக்கப்படுவது மிகுந்த அதிர்ஷ்டவசமானது என்றுதான் சொல்லவேண்டும். ஒரே பத்திரிகை, மூன்றாவது முறையாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பது அரிதல்லவா?
முதல்முறை 2011இல் ஆந்திரக் கவிஞர் வரவர ராவின் ‘சிறைப்பட்ட கற்பனை’ (Captive Imagination) நூல் மொழிபெயர்ப்புக்காக இவ்விருது கிட்டியது.
இரண்டாவது முறை 2016இல் இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு நூலுக்காக. அப்போதுதான் மிக ‘கிராண்ட்’ஆக விழாக் கொண்டாடும் முறையும் தொடங்கியது.
மூன்றாவது முறை இப்போது 2019இல் ‘நாகரிகங்களின் மோதல்’ நூலுக்காக.
விருதுவழங்குவிழா ஜனவரி 24 அன்று சென்னை வணிக வளாகத்தில் நடைபெற உள்ளது.
மகிழ்ச்சிதான். இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டும் (சொந்தமாகவும், பெயர்ப்பாகவும்) என்ற எண்ணத்தை உறுதியாகத் தோற்றுவிக்கிறது. வாழ்நாள் அதற்குத்தக உதவ வேண்டும்.

தினம்-ஒரு-செய்தி