அறிவுரை

முகநூலிலும் வாட்சப்பிலும் குட்மார்னிங் என்று போட்டும் போடாமலும் நிறையச் செய்திகள் வருவதைப் பார்க்கிறேன். இவை பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கின்ற அறிவுரைகள். என்னைப் பொறுத்தவரை நான் இம்மாதிரிச் செய்திகள் ஒன்றையும் இதுவரை வெளியிட்டதில்லை. நான் பின்பற்றாத எதையும் நான் என் மாணவர்களுக்கும்கூட அறிவுரையாகக் கூறியதில்லை. எதை நான் பின்பற்றினேனோ அவற்றை மட்டுமே அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். “சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அரியவாம் சொல்லியவண்ணம் செயல்” என்ற குறள் மூதுரை என் மனத்தில் என்றும் நிலைத்திருக்கிறது.

தினம்-ஒரு-செய்தி