காப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்

kappiya-sitrilakkiya-2
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கக் கால்பகுதியில் இருக்கும் நமக்குக் கவிதை பற்றிய சிந்தனைகள் முற்காலத்திய சிந்தனைகளிலிருந்து பெரிதும் மாறியிருக்கின்றன. இன்று நாம் வாழ்க்கைக்கு அர்த்தம் தேவை, அழகு தேவை, சுதந்திரம் தேவை என்றெல்லாம் நோக்குகின் றோம். சகமனிதர்களின் சமவாழ்விலிருந்துதான் இவை பிறக்கின்றன என்பதையும் உணர்ந்தி ருக்கிறோம். முற்காலத்தில் இப்படிப்பட்ட சிந்தனை கவிஞர்களுக்குள் இருந்ததா என்பது கேள்விக்குரியது. பெருங்கவிஞர்களிடையே இப்படிப்பட்ட சிந்தனை ஓரளவு முகிழ்த்திருந்தாலும், புராணங்களும் சிற்றிலக்கியங்களும் பாடிய கவிஞர்களிடம் இது மலர்ந்திருக்கமுடியாது என்று தோன்றுகிறது. காரணம், இலக்கியங்கள் எழுந்த காலப் பகுதிக்கும், அவ்விலக்கியங் களின் உள்ளடக்கம் உருவம் பண்பு முதலியவற்றுக்கும் இடையில் உயிரியக்கமான பிணைப்பு உண்டு என்பதை நாம் அறிவோம்.

தமிழிலக்கியத்தைக் காலப்பகுதிகளாகப் பகுத்த அறிஞர்கள், சங்க இலக்கிய காலம், அறநூல்கள் காலம், முற்காப்பியக் காலம், பக்தி நூல்கள் காலம், பிற்காப்பியக் காலம், சிற்றிலக்கிய, தலபுராணக்காலம், பிறசமய நூல்கள் எழுந்த காலம், தற்காலம் என்றெல்லாம் பலவேறு வகைகளில் பகுத்துள்ளார்கள்.
வையாபுரிப்பிள்ளை, தமிழ்க்காப்பிய காலத்தை முதற்காப்பிய காலம், இரண்டாவது காப்பிய காலம் என இரண்டாகப் பகுத்தார். இதற்குக் காரணம், சிலப்பதிகாரம், மணிமேகலை தோன் றிய காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டுத்தான் பெரியபுராணம், கம்பராமாயணம் போன்றவை தோன்றியிருக்கின்றன. இடையில் பக்தி இலக்கிய காலம் நுழைகிறது. ஒவ்வொரு காலப்பகுதிக்கும் ஒரு மையம் இருக்கிறது.
சங்கக்கவிதைக்கான காலம், பக்திஇயக்கத்துக்கான காலம், தற்காலம், இவை எவற்றின் கால எல்லையையும்விடக் காப்பிய சிற்றிலக்கியக் கால எல்லை பெரியது. சிலப்பதிகாரம் என்ற காப்பியம் தோன்றிய காலம் ஏறத்தாழ கி.பி.இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டு என்று வைத்துக் கொண்டாலும், அதிலிருந்து, சிற்றிலக்கியங்கள் மிகுதியாகப் பாடப்பட்டுவந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்தக் காலப்பகுதி-ஏறத்தாழ 16 நூற்றாண்டுகள் விரிகிறது. இந்ததக் காலப்பகுதிக்குள் பக்தி இலக்கியக் காலமும் அடங்கிவிடுகிறது. ஆகவே இந்த மொத்தக் காலப்பகுதிக்கும் சமுதாயப் பின்புலம், இலக்கியப் போக்குகள் என்று சொல்வது, சங்கஇலக்கியத்தையும் தற்கால இலக்கியத்தையும் தவிர ஏறத்தாழ தமிழ் இலக்கியம் முழுவதை யும் பார்ப்பதே ஆகும்.
தமிழகத்தில் காலந்தோறும் நிலவிவந்துள்ள சாதியமைப்பு முறை, தமிழ் இலக்கியத்தைப் பாதித்த மிக முக்கியமான கூறு ஆகும். குறைந்தபட்சம் சிலப்பதிகாரக்காலம் முதலாக, தமிழகத்தின் பொருளாதாரத்திற்குரிய அடிப்படையாக நிலவுடைமை அமைப்பு இருந்தது. (நிலவுடைமை அமைப்பைப் பண்ணைவிவசாய முறை, பண்ணையடிமை முறை, நிலமானிய முறை என்றெல்லாம் சொல்வார்கள். ஐரோப்பாவில் இது படைமானிய முறை என்றும் சொல்லப்பட்டது.) இத்துடன் சாதி அடிப்படையும் சேர்ந்ததுதான் கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ‘ஆசியப் பொருளாதாரம்’ என்பது.
சாதிய முறைக்கு அடித்தளமாக நிலவுவது பார்ப்பனியம். இதற்கு நிகராகத் தமிழ் இலக் கியத்தில் காணப்படும் இன்னொரு போக்கு பெண்ணடிமைத் தனம். சங்ககாலம் முதலாகவே, தொல்காப்பியம் முதலாகவே தமிழ் இலக்கியம் பெண்ணை ஆணுக்கு நிகராகத் தமிழர்கள் கருதியதில்லை என்பதைக் காட்டுகின்றது. தமிழின் முதற்காப்பியமான சிலப்பதிகாரம், பெண்ணை அடிமைப்படுத்துகின்ற கருத்துகளைக் கொண்ட காப்பியமே என்பதில் சற்றும் சந்தேகமில்லை. கற்பு என்பதே பெண்களை அடிமைப்படுத்துகின்ற நோக்கு என்று இன்று நாம் விவாதிக்கிறோம். தனியுடைமை-சமூகத்தின் நன்மைக்கு மாறாகத் தனி ஒருவனே மிகுதியாகச் சொத்துகளைச் சேர்த்துக் கொள்வது அறத்திற்கு மாறானது என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டில்தான் சற்றே பரவலானது. பழைய இலக்கியங்கள் அனைத்தும் தனியுடைமையைப் போற்றுவன என்பதில் சந்தேகமில்லை. அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் முதல் சிறிய ஊர்த்தலைவன், ஜமீன்தார் வரை அனைவரையும் போற்றும் போக்கையே அவை கொண்டுள்ளன.
ஆனால்: இவை அந்தக் காலப்போக்கை வைத்துக் காணும்போது, இன்னும் குறிப்பாக சமஸ்கிருத இலக்கியம், கிரேக்க இலக்கியம் முதலிய அக்கால இலக்கியங்களையும் ஒப்ப வைத்துப் பார்க்கும்போது பெரிய குறைபாடுகள் அல்ல.
தனியுடைமைக்கும் அதிகாரத்திற்கும் எதிரான குரலையும் பழங்கால முதலாகவே தமிழ் இலக்கியத்தில் காணமுடியும். சிலப்பதிகாரக் கண்ணகி, அரசனையும் கடவுள்களையும் கேள்விக்குட்படுத்துகிறாள். அதேசமயம், கணவனின் தவற்றையும் மென்மையான முறையில் கூறி இடித்துரைக்கிறாள். மணிமேகலை சமதர்மத்துக்காக, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடினாள். சித்தர்கள் எந்தவிதத் தனியுடைமை, அதிகாரம் எதையும் ஏற்றவர்கள் அல்லர்.
உண்மையில் தமிழ் மண், அதன் இலக்கிய வரலாறு மிகவும் போற்றத்தக்கது. இளங்கோ வையும் கம்பரையும் சித்தர்களையும் தோற்றுவித்தது இந்த மண்ணே அல்லவா?
அறநூல்கள் காலத்துக்குப் பின் பல்லவர்கள் ஆட்சி தமிழ் மண்ணில் ஊன்றியது. வடக்கில் பல்லவ அரசர்களும் தெற்கில் பாண்டிய அரசர்களும் ஆண்டனர். இவர்கள் முதலில் பெரும்பாலும் சமணசமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பின்னர் பக்திக்காலத்தில்தான் இவர்கள் வைதிகசமயத்தைச் சேர்ந்தவர் ஆயினர். வைதிக-அவைதிக சமயப் போராட்டங் களை வேளாண்குலத்தவர்கள்-வணிகர்கள் போராட்டமாகக் கண்டு, இறுதியில் வேளாளர் களின் வெற்றியை மன்னர்களின் வைதிக மதமாற்றம் குறிப்பதாக விளக்கும் வரலாற்றாசிரியர்கள் உண்டு.

kappiya-sitrilakkiya-3
காஞ்சியும் மதுரையும் சமணத்துறவிகளின் இருப்பிடங்களாக விளங்கின. சமணசமயம் தர்க்க ரீதியான அறிவாலும், சாஸ்திர ஞானத்தாலும், தர்க்கவன்மையாலும் சிறந்து விளங்கிய ஒன்று. இதனை மக்கள் கலைகளைப் பயன்படுத்திய வைதிக சமயங்கள் வெற்றிகொண்டதில் வியப் பில்லை. பொதுவாக மக்கள் மத்தியில் அன்றும் இன்றும், தர்க்க ரீதியான அறிவைவிடக் கவர்ச்சியே வெற்றிபெறுகிறது.

பாண்டிய-பல்லவ மன்னர்கள் சமணர்களாக இருந்த காலத்தில்தான் சிலப்பதிகாரம், மணி மேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, நீலகேசி, பெருங்கதை, சூளாமணி போன்ற காப்பி யங்கள் அனைத்தும் இயற்றப்பட்டன. பெருங்காப்பியங்கள் எழவேண்டுமானால் பேரரசர் களின் அமைதியான ஆட்சி வேண்டும் என்பது உலகம் ஒப்பும் அடிப்படை. எனவே பல்லவ-முதற்பாண்டிய மன்னர்களின் காலமே ஐம்பெருங்காப்பியங்களின் காலம் ஆதல் வேண்டும். ஆனால் இவை முதலில் ஐம்பெருங் காப்பியங்களாகக் கருதப்படவில்லை. முதன்முதலில் நன்னூல் உரைகாரராகிய மயிலை நாதர்தான் (இவர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவர்) ஐம்பெருங்காப்பியம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்தத் தொடர் சமஸ்கிருதத்தின் பஞ்சகாவியங்கள் என்ற மரபை நமக்கு நினைவூட்டுகிறது. இது மிகப்பிற்கால வழக்கு என்பதில் சந்தேகமில்லை. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்கள்-சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி என்று ஏறத்தாழ கி.பி. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தணிகை உலாவில்தான் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள், குண்டலகேசி, வளையாபதி ஆகியவற்றை எந்தத் தன்மைகளால் பெருங்காப்பியங்கள் என்று ஏற்றுக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை. இவற்றில் காப்பியத்துக்குரிய தன்மைகள் அறவே இல்லை.
சிலப்பதிகாரக் கதைக்கூறுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. பேகன்மனைவி கண்ணகி கதை சங்க இலக்கியத்தில் வருகிறது. வள்ளல் பேகன், தன் மனைவி கண்ணகி என்பாளை விட்டுவிட்டு நல்லூர்ப் பரத்தை ஒருத்தியோடு வாழ்ந்தான் என்ற செய்தியும், அவனுக்குப் புலவர்கள் அறிவுரைகூறித் திருத்தினார்கள் என்ற செய்தியும் நமக்குக் கிடைக்கின்றன. ஒருமுலையறுத்த திருமாவுண்ணி என்பவளின் கதையையும் நாம் அறிவோம். இளங்கோ வடிகளுக்குக் கண்ணகி என்ற கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கி, அவள் கதையை அடிப்படையாக வைத்துத் தம் சமகாலத்து வடமொழி நெறியையும் தமிழ்நெறியையும் சமரசப் படுத்திப் படைக்கும் நோக்கம் இருந்தது. சிலப்பதிகாரம் என்னும் பெயரே சிலம்பு என்னும் தமிழ்ப்பெயரும் அதிகாரம் என்னும் வடசொல்லும் இணைந்து உருவானதுதான். காப்பியம் முழுவதும் நாம் இப்படிப்பட்ட தமிழ்நெறி-வடவர்நெறி இரண்டையும் சமரசப்படுத்தும் போக்கையே காண்கிறோம். தமிழ் மண்ணின் கூறுகளான வரிப்பாடல்கள் குரவைகள் முதலிய பலவற்றை எடுத்துக் கொண்ட அவர், இறுதியில் தமிழ்ப்பெண் கோயில் கொண் டதை விட மாடலமறையோனின் வைதிகநெறி மேம்படுவதையே காட்டிக் காப்பியத்தை முடிக்கிறார்.
அசல் தமிழ்க்கதையும் சமதர்மக்கதையுமான மணிமேகலையிலும் வடமொழிக்கூறுகள், மீயியற் கைச் சம்பவங்கள் முதலியன உள்ளன. ஆபுத்திரன் கதை மூலமாகப் பட்டவர்த்தனமாகப் பார்ப்பனியத்தை எதிர்க்கும் கதையாக அது தோற்றம் பெறுகிறது. என்றாலும் அக்கால வணிக வர்க்கம் தனது ஈவிரக்கமற்ற சுரண்டலை நடத்தியதை இரட்டைக் காப்பியங்கள் காட்டுகின்றன. அதனால் பசியினால் வாடி மக்கள் துடிதுடிக்க, அந்தப் பசியைப் போக்க எழுந்த அக்ஷய பாத்திரக் கற்பனையைத்தான் மணிமேகலையில் காண்கிறோம்.
சீவக சிந்தாமணி இரட்டைக் காப்பியங்களுக்குப் பின்னரும், கம்பர் காவியத்துக்கு முன்னரும் எழுந்த நூல் ஆதல் வேண்டும். இதன் காவியச் சுவையை நாம் விளக்கவேண்டியதில்லை. ஆனால் முன்எழுந்த சிலம்பு, மேகலை இரண்டு காப்பியப் போக்குகளுக்கும் மாறாக, ஒரு ஆடவனை-அதுவும் வடநாட்டு மன்னனைக் காப்பியத் தலைவனாக ஏற்கும் தன்மையை இதில் காண்கிறோம்.
kappiya-sitrilakkiya-1

சூளாமணி, பெருங்கதை, சீவக சிந்தாமணி மூன்றும் ஓரிரு நூற்றாண்டுகள் காலப்பகுதிக்குள் எழுந்தவையாக இருக்கவேண்டும். ஒரேமாதிரியான கதைப்போக்கினை இவை கொண் டுள்ளன. கம்பராமாயணம், பெரிய புராணம் இரண்டுக்கும் முன்னதாக எழுந்த சமண, பௌத்த சமயக் காப்பியங்களில் சிறந்தவை இவையே. அடுத்த நிலையில் நீலகேசியை ஏற்கலாம்.
கதைப்போக்கினை வைத்துப் பார்த்தாலும்கூட வளையாபதி பெருங்காப்பியமாக ஆவதற்கான சாத்தியம் தென்படவில்லை. குண்டலகேசியில் சில புரட்சிக்கூறுகள் தென்படுகின்றன. இது பௌத்த சமயக்காப்பியம் ஆனதால், பௌத்தர் அல்லாதவர்கள் இதனை அழித்திருக் கலாம் என்று கமில் சுவலபில் கருதுகின்றார். யாப்பருங்கலம், குண்டலகேசியைத் தர்க்கவாதம் என்று குறிப்பிடுகிறது. வீரசோழியமும் புறத்திரட்டும் இதை அகலகவி என்கின்றன.
ஐம்பெருங்காப்பியம் என்ற தொடரை வைத்து ஐஞ்சிறுகாப்பியம் என்ற தொடரும் உருவாகி யுள்ளது. சூளாமணி, யசோதர காவியம், நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம் என்பன அவை. இவற்றுள் உதயணகுமார காவியம், நாககுமார காவியம் என்பவை காவியம் என்னும் தகுதி படைத்தவையும் அல்ல, கவித்துவம் கொண்டவையும் அல்ல.
இதுவரை முற்காப்பிய காலம் பற்றி ஒருவாறு நோக்கினோம். பிற்காப்பிய காலத்திற்கு வருவோம்: சோழர் அரசு அக்காலத்தில் தனிப்பேரரசாகத் திகழ்ந்தது. வடநாடுகளிலும் கடலுக்கு அப்புறமுள்ள பர்மா, சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளிலும் சோழர்களது வெற்றிக்கொடி பறந்தது. இப்படிப்பட்ட பேரரசுக்காலத்தில் கம்பராமாயணம் பெரியபுராணம் போன்ற பெருநூல்கள் தோன்றியதில் வியப்பில்லை. இவற்றுடன் கலிங்கத்துப் பரணி போன்ற போர்ப் பிரபந்தங்கள், சாஸனக் கவிதைகள், மெய்க்கீர்த்திகள், உலா, கோவை போன்ற சிற்றிலக்கிய நூல்களும், திருத்தொண்டர் திருவந்தாதி போன்ற பக்திநூல்கள், ராஜராஜேசுவர நாடகம் முதலிய நாடகங்கள் ஆகியவையும் தோன்றின. சோழ அரசர்கள் பெருமை பெற்று விளங்கிய காலத்தில் அந்த அரசர்களது வெற்றிச் சிறப்பு முதலியன பற்றிப் பல பிரபந்தங்கள் தோன்றின.
சோழர் காலம், பாண்டியர் காலம் வரை பழைய நிலவுடைமை முறையே நிலவியது. தமிழகத் தின் நிலவுடைமை முறையை இரண்டு வகையாகக் காணவேண்டும் என்பதை வரலாற்று நோக்கு காட்டுகிறது. முற்கால நிலவுடைமை முறை வேறு, விஜயநகர அரசு ஏற்பட்ட பின் தோன்றிய பிற்கால நிலவுடைமை முறை வேறு.
சமயச்சார்பு பற்றிய சில வகைப் பிரபந்தங்கள் பக்திக்காலத்திலேயே தோன்றி யிருந்தாலும், அரசர்களைக் குறித்த பிரபந்தங்கள் பிற்காப்பிய காலத்தவை என்பதில் ஐயமில்லை. இவை ஒருவகையில் அரசர்களை மகிழ்வித்தும், கவிச்சுவையினால் இன்னொரு வகையில் மக்களை மகிழ்வித்தும் வந்தன. இவற்றுள் மிகச் சிறந்தவை கலிங்கத்துப் பரணியும் மூவருலாவும் ஆகும். “சமயத்தைவிடுத்து உலகியல் விஷயங்களை நூற்பொருளாகக்கொண்டு பல செய்யுட்களும் இக்காலத்து மிகுதியாய்ப் பிறந்தன. சமுதாய நிலைக்கும் இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பை இது நன்கு விளக்குகின்றதல்லவா?” என்பார் வையாபுரிப் பிள்ளை.
சோழர் காலத்தில்தான் முதற்கால நிலவுடைமை அமைப்பு உச்சத்தை அடைந்தது. உறுதிப் பாடு பெற்றது. கூடவே சாதியமைப்பும் இறுக்கம் பெற்றது. இந்தியாவில் சாதியமைப்பு வர்க்க அமைப்புடன் இறுக்கமான தொடர்புடையது. இதனால்தான் சமயத்தை விடுத்து உலகியல் விஷயங்கள் நூற்பொருளாகும் தன்மை பெற்றன, கம்பராமாயணம் போன்ற பெருங்காப் பியம் எழுவதும் இயன்றது.
சங்ககாலம் முதலாகவே பல்லவர்காலம், சோழர்காலம் ஊடாகத் தமிழகத்தின் தனிச் சிறப்பான ஊராட்சிமுறையும் தன்னிச்சையாக இயங்கிவந்தது. கம்பராமாயணம் தனிச் சிறப்புடன் திகழ்வதற்கு அக்கால ஊராட்சியின் தன்னாட்சித் தன்மையும், ஊராட்சிமுறையில் முக்கியத்துவம் பெற்றிருந்த சடையப்ப வள்ளல் போன்றவர்களின் உதவியும் முக்கியக் காரணம். ஊர்ச்சபைகள் நிலவுடைமை முறையின் வெளிப்பாடுகள் என்றாலும் குறைந்த பட்சமாக உணவு உரிமை (உணவுரிமை என்பது சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வரும் தொடர்) என்பது அதில் இருநதது. மேலும் இன்னின்ன சாதிக்கு இந்த இடம் என்று வரையறுக்கப்பட்டு ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் நிலை இருந்ததால் சாதிக் கட்டுப்பாடு இருப்பினும் ஒருவிதச் சார்புநிலையும் நிலவியது. இந்தப் பின்னணியில்தான் கம்பரின் இராமாயணம் தோன்றியது. இதைத்தான் முதற்கால நிலவுடைமை முறை என்கிறோம்.
எந்தக் கவிஞனும் தன் காலச் சமூகநிலையைப் பிரதிபலிப்பதுபோலவே அதனைத் தன்போக்கில் மறுபடைப்புச் செய்யவும் செய்கிறான். கம்பரின் சமத்துவக் கோட்பாடு பற்றிப் பலரும் விளக்கியுள்ளனர். கம்பர் தம் காலநிலையை மறுப்பதனையே அது காட்டுகிறது.
கம்பர் கவித்துவம் பெரியதென்பதை விளக்கவும் வேண்டுமோ? புராண இயல்பை மீறிப் பேரிலக்கியமாகக் கம்பர்காவியம் திகழ்கிறது. வான்மீகி இராமாயணத்தைக் கம்பர் தம் காலத் துக்கேற்றவாறு மறுபடைப்புச் செய்தார். கம்பர் கண்ட தெய்வம், வால்மீகி கண்ட இராமன் அல்ல. அது மனிதனுக்குள்ளிருந்து, தமிழ் மண்ணிலிருந்து விளைந்த தெய்வம். கம்பர் பல செய்திகளைப் பல பாடல்களில் சொல்லிச் செல்கின்றபோதே ஆங்காங்கு கவித்துவம் வெடித்து அற்புத ஒளிவீசுகிறது என்பதை யாவரும் அறிவார்கள்.
ஆனால் இருபதாம் நூற்றாண்டில் கம்பர் காப்பியம் இகழப்பட்டதுபோல-கம்பரசம் போன்ற நூல்களால் இழித்துரைக்கப் பட்டதுபோல வேறு எந்த நூலும் வசைக்கு ஆளாகவில்லை, அதேபோலக் கம்பன் விழாக்களும் கம்பன் வியாக்கியானச் சொற்பொழிவாளர்களும் பாராட்டியதுபோன்ற சிறப்பும் வேறு எந்தக் காப்பியத்திற்கும் கிடைக்கவில்லை.
இந்தியாவில் வர்க்கம்-வருணம்-சாதி மூன்றும் ஒன்றிற்கொன்று ஆதாரமானவை. மனிதர்களுக்குப் பிறப்புரிமைகள் உண்டு, எல்லா மனிதர்களும் சமம் என்பதை இந்தியச் சமூக அமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.
கம்பராமாயணம் மிகவும் ஆதியான மீயியற்கைத் தன்மை கொண்ட கதையை எடுத்துக் கொண்டதால் நேரடியாக இந்தச் சமூக அமைப்புக்குள் நுழைய வேண்டிய தேவையில்லாமல் போயிற்று. ஆனால் சைவ அடியார்களின் வரலாற்றைக்கூற எழுந்த, தமிழின் முதல் சைவசமயக் காப்பியமான பெரியபுராணம் பக்தியைப் போற்ற வேண்டி எழுந்ததால் பார்ப் பனியத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது. சுந்தரர் எழுதிய திருத்தொண்டத் தொகை இதற்கு மூலமாக அமைந்துள்ளது. பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தருக்கு நிகரான பெருமை திருநாவுக்கரசருக்கு அளிக்கப்படவில்லை என்பது வெளிப்படை. பார்ப்பன அடியார்களுக்கும் பிற அடியார்களுக்கும் வெவ்வேறு வகையான நீதிகள் பேசப் படுகின்றன இக்காப்பியத்தில் என்பதை யாவரும் அறிவர்.

kappiya-sitrilakkiya-4

சேக்கிழார் ஏன் மாணிக்க வாசகரைப் பெரியபுராணத்தில் சேர்க்கவில்லை என்பதற்கு விடை இல்லை. மாணிக்கவாசகரைத் தொகையடியார் என்பதில் சேர்க்கலாம் என்று சிலர் கூறுவார்கள். இப்படி மணிவாசகரை நூற்றோடு நூற்றொன்றாகச் சேர்க்க எவ்விதத்திலும் முடியாது. அநபாயசோழன் பற்றிய கதை கூறுவதுபோல, சமணர்களை முறியடிப்பதற்கு அவர்களுடைய காப்பியம் என்னும் ஆயுதத்தைத் தமதாக்கிக் கொண்டார் சேக்கிழார் என்பது உண்மை.
பெரிய புராணத்தைச் சிலர் காப்பியம் என்கிறார்கள். காப்பியத்தின் மையக்கதை சுந்தரர் கதை என்றால் பிற எல்லாக் கதைகளும் இந்த மையத்தோடு இணைகின்ற முறையில்தானே இருக்கவேண்டும்? அப்படி அமையவில்லை. இருப்பினும் பெரிய புராணத்தின் இலக்கியச் சிறப்பில் நமக்கு ஐயமில்லை. எந்தெந்தக் காலத்திலோ எந்தெந்த வடிவங்களிலோ எங்கெங்கோ நடை பெற்ற தாறுமாறான நிகழ்ச்சிகளைத் தம் காலத்தில் நிகழ்ந்தனவாகக் கொண்டு சிவனடியார் வரலாற்றைப் படைப்பதில் சேக்கிழார் வெற்றி பெற்றிருக்கிறார். சிவனும் சிவனடியார்களும் ஒன்று என்ற சைவ உணர்வின் அடிப்படையில் இதிலுள்ள பல கதைகள் இயங்குகின்றன. இயற்பகை நாயனார் கதை போன்றவற்றை இப்படித்தான் காண முடியும். தேவாரமூவர் வாழ்க்கைகளில் நடந்ததாகக் கூறப்படும் எலும்பைப் பெண்ணாக்கிய கதை, முதலை உண்ட பாலகனை மீட்ட கதை, கடலில் கட்டிப் பாய்ச்சிய போதும் உயிரோடு வந்த கதையெல்லாம் வெறும் கதைகளாக எஞ்சுபவை, இவை புராணங்களாகத்தான் தகுதி உடையவை. இலக்கியம் ஆக இயலாதவை. ஆனால், இலக்கியம் என்று சொல்வதற்கு ஏற்ற முறையில் புராணக் கூறுகள் அமுங்கி மனிதவாழ்வின் மேன்மைகள் சில கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. இம்மாதிரிக் கதைகள் சிலவற்றில் மட்டும் நாம் நவீனகாலப் போக்கினை இனம் காணமுடிகிறது.
மெய்ப்பொருள் நாயனார் கதை, பூசலார் கதை, மனுநீதிச்சோழன் கதை முதலியன நமக்கு உகந்த கதைகளாக உள்ளன. இவற்றில் மிகச் சிறப்பானதாக கண்ணப்ப நாயனார் கதையைச் சொல்லலாம். சிவகோசரியார் ஆகம வழிப்பட்ட சடங்குகளின் சார்பாக நிற்பவர். கண்ணப்பருக்கு பக்திதான் பெரியது. தன்னைப்போலவே இறைவனையும் மானிடவடிவமாகவே கருதும் மனப்பான்மை கொண்டவர். சிவனுக்கு ஊறுநேர்ந்தால் கண்ணைமட்டும் அல்ல, உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார். இந்தக் கதை ஓர் அருமையான உருவகமாக இலங்குகிறது. சட்டம், விதிமுறை, ஒழுங்கு சார்ந்தவர்கள் ஒருபுறமும், மனிதநீதி, இயற்கை நீதியின் சார்பாக நிற்பவர்கள் மறுபுறமும் எதிரெதிராக இயங்குவதைக் காட்டுகிறது இது.
திருநாளைப்போவார் கதை கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளான கதை. தங்கள் வாழ்நிலைக்குரிய சிறுதெய்வங்களை மறுத்துவிட்டு நந்தனார் பெரிய தெய்வமான சிவபெரு மானைத் தேடிச் செல்கிறார், ஆனால் சாதிமுறைமையை மீறிய காரணத்தினால் கோயிலுக்குள் மட்டுமல்ல-ஊர் எல்லைக்குள்ளாகவே நுழையமுடியாமல் தீயில் சாகிறார். இதில் சேக் கிழார் படைத்துக்காட்டும் கடவுளாகிய சிவனும் சாதி ஆதிக்கம் உடையவனாகவே இருக்கிறான். “தீயில் நீ மூழ்கித் தூய்மை அடைந்துவா” என்று ஆணையிடும் கடவுளை வேறு எப்படிப் பொருள்படுத்த முடியும்? திருநாளைப் போவாரைக் குலவொழுக்கம் மீறாமல் நடந்து கொண்டவராகவே சேக்கிழார் காட்டுகிறார். எனவே அக்கால முறைமையை மீறாமல் திருநாளைப் போவார் சந்தோஷமாகவே தீயில் இறங்கி ‘ஐயராகி’ யிருப்பார்.
சுந்தரரைச் சிவபெருமான் ஆட்கொண்டது ஓர் அற்புதமான நாடகமாகக் காட்சியளிக்கிறது. கடவுள் மனிதனுக்குத் தோழமைப்படுவதும் மனைவியின் பொருட்டாகத் தூதுசெல்வதும் வியப்பளிக்கின்றன. இத்தகைய இறைவனின் செயலையே விமரிசனப்படுத்தி உயிர்துறக்கும் ஏயர்கோன் கலிக்காம நாயனாரையும் நாம் பெரிய புராணத்தில் காண்கிறோம்.
சமண சமயத்தால் தமிழுக்கு விளைந்த நன்மை நீதிநூல்களும் காவியங்களும் மட்டுமல்ல. சமணர்கள் சமயவிவாதங்களில் அதிகமாக ஈடுபட்டுவந்ததால், சைவத்திலும் அந்தப்போக்கு தோன்றியது. இதன் விளைவாக எழுந்தனவே சமய சாத்திரங்கள். சுமார் கி.பி.1000 முதல் 1350க்குள் இவை எழுந்தன.
சோழப் பரம்பரை சிதைந்துபோய், இரண்டாவது பாண்டியப் பேரரசும் வலிமை குன்றிய நிலையில் புதுவகையான நூல்களும் இலக்கியங்களும் தோன்றும் வாய்ப்பு ஏற்படவில்லை. இது பதினான்காம் நூற்றாண்டின் தொடக்க காலம். மத்திய அரசு வலிமை குன்றிவிடவே நாட்டில் அமைதியும் குலைந்தது. சோழப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பாரம்பரிய ஊராட்சிமுறை மங்குதசை அடைந்தது. இச்சமயத்தில், பண்டை நூல்களைக் கற்று அவை அழியாமல் பாதுகாத்த அறிஞர்கள் இருந்தனர். அவர்கள் தமிழ் இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் உரை எழுதினர். கி.பி.1250 முதல் 1600 வரை உரையாசிரியர்கள் காலம் எனலாம். இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்றோர் யாவரும் இக்காலப்பகுதியில் தோன்றியவர்கள். தமிழ் உரைநடைக்கு அடிகோலியவர்கள் உரையாசிரியர்களே.
சித்தர்களின் இலக்கியம் தமிழின் தனிச்சிறப்பு. சாதிமத பேதங்களை மறுத்தவர்கள் சித்தர்கள். சான்றாக, சிவவாக்கியர், “உங்கள் பேதமன்றி உண்மை பேதமில்லையே” என்கிறார். சமரச சன்மார்க்கத்தை வலியுறுத்தியவர்கள் தாயுமானவரும் வள்ளலாரும். “வேதாந்தம் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும் நாதாந்த மோன நலமே பராபரமே” என்கிறார் தாயுமானவர். ஆனாலும் பழங்காலச் சித்தர்கள் முதல் வள்ளலார் வரை எல்லோரும் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்த ஆட்சேபணையாளர்களே தவிர, புரட்சியாளர்கள் அல்லர். தமக்குப் பிடிக் காத சமுதாயத்திலிருந்து விலகிக்கொண்டவர்கள் அவர்கள். “கடைவிரித்தேன் கொள்வா ரில்லை” என்ற வள்ளலார் கூற்று இதனை உறுதி செய்கிறது.
மேலும் சித்தர்களின் கோட்பாடுகள் அவ்வக்காலச் சமயநெறிக்கும், அதனால் சாதிநெறிக்கும், ஆதிக்கக் கருத்தியலுக்கும் உட்பட்டிருந்தன. அதனால் அவர்களால் பெரியதாக எதுவும் செய்ய இயலவில்லை.
பேரரசர்களின் காலத்திற்குப் பிறகு தமிழ் இலக்கியம் ஒடுங்குதசையை அடைந்தது. விஜய நகரப் பேரரசில் மக்களின் உரிமைகளைவிடக் கடமைகளே வலியுறுத்தப்பட்டன. இடைவிடாத போர்களால் நாடு நலிவுற்றது. இவற்றால் ஆங்காங்குள்ள பிரபுக்களை நாடி வயிறுவளர்க்கும் கேவலத்திற்குத் தமிழறிஞர்கள் ஆளாயினர். இராமச்சந்திரக் கவிராயர் “கல்லைத்தான் மண் ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?” என்று தம்மை நொந்துகொள்ளும் கவிதை இதற்குச் சான்று. பெரும்பாலும் புராணங்களும் சில்லறைப் பிரபந்தங்களுமே இக்காலங்களில் பாடப்பெற்றன.
விஜயநகரப் பேரரசின் கீழும், மராட்டியர்கள் கீழும், பாளையக்காரர்களின்கீழும், தெலுங்கு கன்னடம் மராட்டி போன்ற பாஷைகளே ஆதரிக்கப் பட்டதால் தமிழின் வளம் குறைந்தது. சிற்றரசர்கள் சிலர் தமிழை ஆதரித்தனர். திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், காசிமடம், திருவண்ணாமலை மடம் போன்ற மடங்களில் சைவத் தமிழ்க் கல்வி கற்பிக்கப்பட்டது. திருவரங்கம் ஜீய மடம் போன்றவை வைணவச் சார்பான நூல்களைக் கற்பித்தன. எனினும் பொதுவாக நோக்குமிடத்துக் கல்வியும் புலமையும் ஒடுங்கிவந்தன. இக்காலம் ஏறத்தாழ கி.பி.1300 முதல் 1800 வரை எனலாம்.
கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் முதன்முதலாக இஸ்லாமிய அரசு மதுரையில் ஏற்பட்டது. பின்னர் விஜயநகரப் பேரரசின் தென்மண்டலமாயிற்று மதுரை. விஜயநகரப் பேரரசு தலைக் கோட்டைப் போரில் க்ஷீணமடைந்தபோது விசுவநாத நாயக்கரால் ஏற்படுத்தப்பட்ட 72 பாளையப்பட்டுகள் தன்னாட்சி பெற்று ஆளத்தொடங்கின.
ஏறத்தாழ கி.பி.1600 முதலாக ஐரோப்பியர்கள் நுழையலானார்கள். சோழர் காலம்வரை தன்னாட்சியுடன் நிலவிய ஊர் மன்றங்கள் நிலங்களை உடைமையாக வைத்திருந்தன. இவற்றிற்கு கணபோகம் என்று பெயர். தனிப்பட்டோர் வைத்திருந்த நிலங்கள் ஏகபோகம் எனப்பட்டன. நாயக்கர் காலத்தில் கணபோக நிலங்கள் தெலுங்கு கன்னடப்படைத் தலைவர்களுக்கும் தனியார்களுக்கும் மானியமாக அளிக்கப்பட்டன. அதுவரை சதுர்வேதி மங்கலங்களாக இருந்தவை நாயக்க மங்கலங்கள் ஆயி.ன நாயக்கர்கள் கொண்டுவந்த ஆயக்காரர் முறை மக்களை நலிவடையச் செய்தது. தெலுங்கு பேசும் தலைவர்கள்-முன்பின் அறியாதவர்கள்-அவர்களுக்கு வரிவசூல் மட்டுமே நோக்கமாக இருந்தது. புராதன ஜனநாயகப் பண்பு மறைந்தது. நிலவுடைமை அமைப்பின் கேடு கெட்ட அம்சங்கள் மட்டுமே நிலை பெற்றன. இதனைத்தான் பிற்கால நிலவுடைமை முறை என்கிறோம்.
விஜயநகரப் பேரரசுக்காலத்திலிருந்து தெலுங்கு பிராமணர்கள் தமிழகத்தில் குடியேற்றப்பட்டு சாதி முறையும் சாதிக்கடமையும் வலியுறுத்தப்பட்டதால் சாதிக்கட்டுப்பாடு அதிகரித்தது; இந்துமதம் இறுதிவடிவம் பெற்றது. மதம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வக் கருவி ஆயிற்று. தஞ்சாவூர் மராட்டியர்கள் சமஸ்கிருதப்புலவர்களை மட்டுமே ஆதரித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழ்க்கல்வி எங்ஙனம் சிறப்பெய்த முடியும்? இதில் புராணங்களும் தல புராணங்களும் மட்டுமே மிகுதியாகப் பாடப்பட்டதில் வியப்பில்லை. அவ்வாறே சிற்றிலக்கியங்களும் தோன்றின. வரம்பு கடந்த கற்பனையில் தோன்றியவை தல புராணங்கள். இடைக்காலத்துத் தமிழ்ப் புலவர்கள், கற்பனை உணர்வில் மட்டுமே பிறந்த இவற்றைத்தான் இலக்கியங்களாகக் கருதியிருக்கிறார்கள். யமகம், திரிபு, அந்தாதி போன்ற புதிய யாப்பு வடிவங்களையும் இவற்றில் காண்கிறோம். சமஸ்கிருத மொழி வரலாறு தொடர்பான புராணப் புனைகதைகளை நம்பி மேலாதிக்கத்துக்கு அடிபணிந்திருந்தவர்கள் இவர்கள். இருபதாம் நூற்றாண்டில் பாரதி தோன்றி சமகாலத்தன்மையில் பார்வையைச் செலுத்தும் வரை இவ்வகைப் புலமை இலக்கியத்திற்குச் செல்வாக்கு இருக்கவே செய்தது.
இருவகைச் சிற்றிலக்கியங்கள் தமிழில் உள்ளன. இரண்டு வகைகளுமே பாடாண்திணை என்ற ஒரேஒருவகையில் அடங்குவன என்றாலும், முதல்வகை, இலக்கியப் பாங்கானது. இதில் அதுவரை தமிழில் இருந்த கவிதைப்போக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட போக்கினைக் காண்கிறோம். முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா போன்ற யாவும் இதில் அடங்கும். இவற்றில் தமிழ்க்கவிதையின் வளத்தைச் சந்திக்கலாம். சிலசமயங்களில் தரை நமக்குத் தட்டுப்படுவதில்லை என்று சொல்லுமளவுக்குக் கற்பனை சிறகுமுளைத்துப் பறக்கிறது இவற்றில். என்றாலும் தமிழ்வளத்திற்கு இவை முக்கியமானவை.
யதார்த்தமான கற்பனைக்கு மாறுபட்ட போக்குக் கொண்டவை இரண்டாவது வகைச் சிற்றி லக்கியங்கள். இவை மன்னர்களையும் ஜமீன்தார்களையும் உள்ளூர்க் கோவில்களிலுள்ள இறைவனையும் மையப்படுத்திப்பாடும் போக்கில் எழுந்தவை. பரணி, தூது, உலா, கோவை, பிள்ளைத் தமிழ், பள்ளு, குறவஞ்சி என்று எத்தனையோ வகைப் புதிய பிரபந்தங்கள். இடையிடையே சீறாப்புராணம் போன்ற இஸ்லாமியக் காப்பிய நூல்களும் தேம்பாவணி, சதுரகராதி, பரமார்த்த குருகதை போன்ற கிறித்துவ நூல்களும் தோன்றின. இவற்றிற்குள்ளும் வரலாறு சமூகம் போன்றவற்றின் இயக்கத்தைக் குறைந்த அளவிலேனும் காணமுடியும். என்றாலும் பள்ளு போன்ற மிகக்குறைந்த சில இலக்கியங்களைத் தவிர, பிற வகைகள் சமூகம் சார்ந்த உள்ளடக்கம் அற்றவையாகவே உள்ளன.
தமிழ் இலக்கியத்தை இப்புலவர்கள் வளப்படுத்தினார்கள் என்பதைவிட தமிழ் இலக்கியம் ஏதோ ஒருவகையில் சாகாமல் காத்துவந்த பாதுகாவலர்களாகப் பணியாற்றினார்கள் என்று தான் கூறமுடியும். கவிதையில் இலக்கணத்தின் மேலாதிக்கத்தை ஏற்றவர்கள் இவர்கள். இன்னொரு புறம், இவர்கள் பாடிய காதல், உலா, உலாமடல், கோவை போன்றவை ஜமீன்தார்களின் சிற்றின்பப் போக்கிற்கு ஏற்பவே அமைந்தன. இம்மாதிரிப் பிரபந்தங்களின் காமப்போக்கு குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில் ஏற்பட்ட இன்னொருவகையான இலக்கியப் போக்கும் நோக்கத்தக்கது. இது ஓர் எதிர்ப்புப் போக்கு. ஔவையார், காளமேகம், இராமச்சந்திரக் கவிராயர், இரட்டைப் புலவர் கள் என எத்தனையோ கவிஞர்கள் தனிக்கவிதைகளை இயற்றியுள்ளனர். இவை கவர்ச்சி மிக்கவை. கடவுளர்களையும் இக்கவிஞர்கள் கேலி செய்துள்ளனர். வள்ளல்களைப் பாராட் டியதுபோலவே குறைகண்டும் பாடியுள்ளனர். வறுமையையும் செம்மையென ஏற்று மிக அழகாகப் பாடியவர்கள் இவர்கள். அதுபோலவே பள்ளு நொண்டிநாடகம் போன்றவற்றில் இடம் பெறும் ஆண்டைகளைப் பற்றிய வசைக் குறிப்புகளும் நோக்கத் தக்கவை.
சங்ககாலத்தை அடுத்துப் பதினெண்கீழ்க்கணக்குநூல்கள் தோன்றியதுபோலவே, பிற்காலத்திலும் அறநூல்கள் தோன்றியுள்ளன. ஆனால் இந்தப் பிற்காலத்து நீதி நூல்களுக்கு அடிப் படைக் காரணம், வர்க்க முரண்பாடுகள் இறுகி, சாதிக்கட்டுப்பாடுகளும் இறுக்கமடைந்து, சமுதாயத்துக்குப் பெரும்தளையாக மாறியமைதான். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், அறநெறிச் சாரம், நல்வழி எனப் பல அறநூல்கள் தோன்றியுள்ளன. இவற்றில் சிறந்தது, இரண்டு சீர்களில் ஓர் அற நெறியைச் சொல்வது ஆத்திசூடி. இதனை பாரதியார் உட்படப் பிற்காலக் கவிஞர்கள் எத்தனையோ பேர் போற்றியுள்ளனர். இவற்றைப்போலவே அறநெறியை உட்கொண்டதாகச் சதக இலக்கியம் என்பதும் தோன்றியுள்ளது. இது தெலுங்கில் காணப்படும் ஒரு முக்கிய இலக்கிய வகை.
நாயக்கர், ஐரோப்பியர் ஆட்சிமுறையில் உழைப்பவனுக்கு உத்திரவாதம் இல்லை. பழைய ஊராட்சி முறை முற்றிலும் அழிந்ததால், உணவுரிமை என்பதும் இல்லை. உணவுரிமை மறைந்து கூலி என்ற புதிய சொல் இலக்கியங்களில் இடம்பெறுவதைப் பார்க்கிறோம். புதிய அமைப்பில் ஏற்பட்ட ஜமீன்தார்கள் தெலுங்குச் சார்பினர் ஆதலின் தமிழ் விவசாயிகளைக் கடன்வாங்கும்படி செய்து சந்ததி சந்ததியாகக் கொத்தடிமைகள் ஆக்கினர். இது பிற்கால நிலவுடைமை முறையின் நேரடி விளைவு. இதற்குப் பின் கி.பி. 1600 முதலாக ஐரோப்பியர் வருகை நிகழ்கிறது.
ஆனால் ஐரோப்பியர்களின் ஆட்சி கி.பி.1800 முதலாகவே நன்கு ஏற்பட்டது. அச்சு எந்திரம் இக்காலத்தில்தான் பிரபலம் அடைந்தது. 1812இல் திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பு நிகழ்ந்தது. இதற்குப் பின் இக்காலத் தமிழ் இலக்கியத்தின் தோற்றத்திற்கான அறிகுறிகள் தென்படு கின்றன. எனவே இங்கு இந்த எல்லையோடு நிறுத்திக்கொள்வோம்.
இறுதியாக ஒன்றைச் சொல்லலாம். இவ்வளவு இடர்ப்பாட்டுக்கிடையிலும் எவ்வாறோ தமிழும் அதன் இலக்கியமும் பிழைத்திருந்தன என்பதுதான் வியப்பு. “தன்னியல்பு கெடாது காலகதியோடு ஒத்துச் செல்வதுதான் தமிழ்ப்பண்பாட்டின் இயற்கை” என்று வையாபுரிப் பிள்ளை பாராட்டுகின்றார். தமிழின் இடைக்கால வரலாற்றைப் புரிந்துகொண்ட நாம், அது உண்மைதான் என்பதை இன்னும் தெளிவாகவே அறிகிறோம்.


தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி

thamiz01
க. பூரணச்சந்திரன், திருச்சி. 

தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற தலைப்பில் ஒரு புறநிலையிலான, ஆய்வு பற்றிய ஆய்வாக-metaresearch ஆக இக்கட்டுரையை, இக்-கட்டு-உரையை, இக்கட்டு-உரையை நான் அமைக்கவில்லை. மாறாக, தமிழ் ஆய்வுபற்றிய எனது சில மனப் பதிவுகளை-எண்ணங்களை இங்குக்கூற நினைக்கிறேன்.

தமிழ் ஆராய்ச்சி வளர்ந்திருக்கிறதா இல்லையா? ஆமாம் என்று அடித்துக் கூறவும் முடியாத, இல்லை என்று அறவே ஒதுக்கிவிடவும் இயலாத ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் இன்று நாம் இருக்கிறோம். இவ்வாறு சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதலில் வளர்ந்துள்ளதா என்ற கேள்வி, எங்கிருந்து, எந்தக் கட்டத்திலிருந்து என்ற கேள்வியை உள்ளடக்கியது. சங்ககாலத்திலிருந்து வளர்ந்திருக்கிறதா? 18ஆம் நூற்றாண்டிலிருந்தா? 19ஆம் நூற்றாண்டிலிருந்தா? 2001இலிருந்தா? எங்கிருந்து? பொதுக்கருத்துநிலையில் இருபதாம் நூற்றாண்டிலிருந்து என்று பெரும்பாலும் பொருள் கொள்கின்றனர் பலர்.

இரண்டாவது, மாற்றம் என்பது எந்தத் துறையிலும்-வாழ்க்கையின் அத்த னைக் களங்களிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் மாற்றம் என்பது வளர்ச்சியாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஏற்றம் போலவே இறக்கமும் மாற்றம்தான். ஒரு துறையில் கட்டாயமாக ஏற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இறக்கமும் இருக்கலாம்.

இவை ஒருபுறம் இருக்க, ஆராய்ச்சி, திறனாய்வு இரண்டிற்குமான வேறுபாடுகளை முதலில் நோக்கவேண்டும். ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் research, criticism என்ற சொற்களில் எவ்விதக் குழப்பமும் இல்லை. ஆனால் தமிழில் ஆய்வு, திறனாய்வு என்ற இருசொற்களிலும் ஆய்வு என்ற சொல் இடம்பெறுகிறது. இது குழப்பத்திற்கு ஓரளவு வித்திடுகிறது. இரண்டின் அடிப்படைகளும் வெவ்வேறு. இரண்டையும் ஒன்றாக இணைத்துப்பார்க்கத் தேவைஇல்லை. நான் முதுகலை ஆங்கிலம் படிக்கும் போது The Scholar Critic என்ற அரிய நூலைப்படித்தேன். ஆசிரியர் பெயர் Bates அல்லது Bateson என்று ஞாபகம். அது இருதுறைகளையும் இணைத்து விரிவாக நோக்கிய ஒரு நூல்.
நடுநிலை நோக்கு என்பதே இயலாத ஒன்று என்று இன்று பின்னமைப்பிய வாதிகள் கூறிவருகின்றனர். ஆனால் நடுநிலை நோக்கினை அவாவுகின்ற நிலையிலேனும் எழுவதுதான் ஆராய்ச்சி. திறனாய்வு அப்படியில்லை. அதில் மதிப்பீடுதான் முக்கியமானது.

தனது கருத்தைச் சொல்லும் ஒருவர், அதற்கான நியாயப்படுத்தல்களை வழங்கவேண்டும் என்பதுதான் திறனாய்வு. ஆராய்ச்சியிலும் முடிவுரைத்தல் உண்டு என்றாலும் அதன் தன்மை வேறு. ஆராய்ச்சியில் இலக்கியப் பண்பு சார்ந்த திறனாய்வு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தமிழ் ஆராய்ச்சியின் துறைகள், களங்கள் பலவாக இன்றைக்கு விரிந்துள்ளன. மொழியியல்சார்ந்த ஆய்வு, ஒப்பிலக்கியம் போன்ற துறைகள் புதிதாக உருவாயின. அறிவியல் தமிழ் நான்காம் தமிழ் என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அமைப்பியம் பின்னமைப்பியம் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிய நோக்கு பல புதிய சிந்தனைப்பாதைகளைத் திறந்து விட்டிருக்கிறது.

ஆய்வு வரலாற்றைச் சொல்லுகின்ற நூல்கள் சிலவற்றை புதுவைப்பல்கலைக் கழகப் பேராசிரியர் மதியழகன் தமது தமிழாய்வு திறனாய்வு வரலாறு என்ற நூலில் கொடுத்துள்ளார். ஆனால் அப்பட்டியல் குறையுடையது. தனிநாயக அடிகள், தி.முருக ரத்தனம், அன்னி தாமஸ், தமிழண்ணல், அ.அ. மணவாளன் போன்றவர்கள் செய்த அடைவுகளைக் குறிப்பிட்டுள்ளார். “பழைய இலக்கிய இதழ்களான செந்தமிழ், செந் தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில் போன்றவற்றில் இடம்பெற்ற கட்டுரைகளைத் தொகுத்து மதிப்பீடு செய்தால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய திறனாய்வுப்போக்கை உணரமுடியும்” என்றும் சொல்கிறார். ஏற்கெனவே செந்தமிழ் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் அடைவை (பெயர்கள்-ஆசிரியர்-ஆண்டு மட்டும்) மதுரைத் தமிழ்ச்சங்கமே வெளியிட்டுள்ளது. சிறந்ததொரு தேர்ந்தெடுத்த அடைவினை பா.ரா. சுப்பிரமணியன் தொகுத்திருக்கிறார். இவையிரண்டும் நூல்களாக வெளிவந்துள்ளன. அதே அடிப்படையில் நான் தமிழ்ப்பொழில் இதழில் வெளிவந்த கட்டுரைகளை (1925-1980) நான் தொகுத்திருக்கிறேன். இது நூல்வடிவம் பெறவில்லையாயினும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உள்ளது. பலர் இதைப் பயன் படுத்தியுள்ளனர்.

இந்த முயற்சி, தமிழ்ப்பொழிலின் ஆய்வுத்திறனை வெளிப்படுத்துவ தற்காக மேற்கொண்ட எனது பிஎச். டி. ஆய்வின் (தமிழ்ப்பொழில் தந்த தமிழ் ஆய்வு) ஒரு பகுதி. ஆனால், தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி ஆகியவற்றில் ஆய்வுமேற்கொள்வோர் அதன் வாயிலாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய ஆய்வுப்போக்கினை உணரமுடியுமே தவிர, திறனாய்வுப் போக்கினை உணரமுடியாது. நாம் இன்று திறனாய்வு என்ற சொல்லை எந்த அர்த்தத்தில் கையாளுகின்றோமோ அந்த அர்த்தத்தில் அவர்கள் செய்யவில்லை. தமிழ்ப்பொழில் இதழை மதிப்பிட்ட எனது ஆய்வேட்டின் முடிவுகளில் மிகத் தெளிவான ஒன்று, அவ்விதழ் இலக்கண, இலக்கிய, கல்வெட்டு, வரலாற்று ஆய்வுகளுக்கு உதவியுள்ளது, ஆனால் திறனாய்வு நோக்கு அதில் அறவே இல்லை என்பது. வருத்தத்துக்குரிய செய்தி, செந்தமிழ்ச் செல்வி இதழ்க்கட்டுரைகள் இதுவரை இப்படித் தொகுக்கப் பெறவில்லை.
தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் சென்ற நூற்றாண்டு முதல் இந்த நூற்றாண்டுவரை அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ள கட்டுரைகளின் அடைவை வெளியிட்டுள்ளார்.

மேலும் மதியழகன் தமது நூலின் முன்னுரையில் க. பஞ்சாங்கத்தின் நூலைக் குறிப்பிட்டுள்ளார். 1983இலேயே அதைவிட விரிவாக எழுதப்பட்ட-ஆனால் இரண்டு ஆண்டுகள் முன்புதான் வெளியிடப்பட்ட எனது தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற நூலைக் குறிப்பிடவில்லை. பக்.20-21இல் திறனாய்வுக் கோட்பாடுகள் குறித்த நூல்கள் என்பதிலும் என்னுடைய அமைப்புமையவாதம், செய்தித்தொடர்பியல் கொள்கைகள் (குறியியல் கோட்பாடுகள் பற்றியது) என்னும் நூல்கள் சேர்க்கப்பெற வில்லை.

(அடிக்குறிப்பு-மதியழகன் நூலைப்பற்றி இங்கே குறிப்பிட்டதனால், இக்கருத்தையும் இங்கே சொல்லத் தோன்றுகிறது. ப.92இல் “பின்நவீனத்துவ நோக்கில் பண்டைய இலக்கியங்களை அணுகிய க.பூரணச்சந்திரன் சங்க இலக்கியங்களுக்குப் புதிய விளக் கங்கள் கொடுத்துள்ளார். பின்நவீனத்துவம் இலக்கிய விமரிசனம் செய்யவில்லை என்று கூறிவிட்டுப் புதிய நோக்கில் விமரிசனம் செய்திருப்பது எடுத்துக்கொண்ட பின்நவீனத்துவக் கொள்கைக்கு முரண்பட்டதாகவே தோன்றுகிறது” என்று அவர் தமது நூலில் கூறியிருக்கிறார். இங்கு அவரிடம் ஒரு கருத்துக்குழப்பம் காணப்படு கிறது. அமைப்பியம், பின்னமைப்பியம் போன்றவை தத்துவங்கள் மட்டுமல்ல, அவற்றின் அடிப்படையிலான விமரிசனமுறைகளும்கூட. தகர்ப்பமைப்பும் பின்ன மைப்பிய முறைக்குத் தொடர்புடைய ஒன்றுதான். அவற்றின் அடிப்படையில் விமரிசனம் செய்கிறோம். பின்நவீனத்துவம் என்பது ஒரு படைப்பு முறை. நான் எங்கும் பின்நவீனத்துவ நோக்கில் விமரிசனம் செய்கிறேன் என்று குறிப் பிடவே இல்லை. குறியியல், பின்னமைப்பிய, தகர்ப்பமைப்பு நோக்கில் விமரிசனம் செய்வதா கவே கூறியுள்ளேன் என்பதை அன்புகூர்ந்து நோக்கவும். மேலும் இந்தக் கோளாறு பிரேம்-ரமேஷ்-சாரு போன்றோர் நூல்களில்தான் உண்டு. பின்னமைப்பியத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும் வேறுபாடு தெரியாமல், ‘பின்நவீனத்துவ நோக்கில் இது’, ‘பின் நவீனத்துவநோக்கில் அது’ என்றெல்லாம் தலைப்பிட்டு எழுதுபவர்கள் கட்டுரைகளை மதியழகன் காணவும். மேலும் அதே பக்கத்தில் “அமைப்பியல் பின்னமைப்பியல் போன்றவை தத்துவங்களை, மையங்களை விமரிசிக்க வந்தவையாகும்” என்ற தொடரும் இடம் பெற்றுள்ளது. அமைப்பியத்திற்கு மையம் உண்டு. அதனால்தான் எனது முதல் நூலுக்கு அமைப்புமையவாதமும் பின்னமைப்புவாதமும் என்று பெயர்வைத்தேன். இரண்டாவது, எந்த ஒரு தத்துவமும் இன்னொரு தத்துவத்தை விமரிசிப்பதே ஆகும்.)

தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில், ஆய்வடங்கல்கள், நூலடைவுகள் ஆகியவற்றிற் கான சிறப்பிடம் உண்டு. ஆனால் தமிழ் ஆராய்ச்சி வரலாறு என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் குறையுடையனவாகவே உள்ளன.
தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தோன்றிய ஆராய்ச்சி சமய/மத ஆராய்ச்சி. இது செய்யுள் வடிவில், மணிமேகலை, நீலகேசி போன்ற நூல்களிலேயே தொடங்கி விட்டது. நீலகேசி உரையாசிரியர், சிவஞான முனிவர் போன்ற உரையாசிரியர்கள் இந்த விஷயத்தில் பெருந்தொண்டு ஆற்றியுள்ளனர். தங்கள் மதக் கருத்துகளை வலியுறுத்துதல் (சுபக்கம்), பிறமதக் கருத்துகளை ஆராய்ந்து மறுத்தல்(பரபக்கம்) அல்லது ஒரோவழி உடன்படுதல் இந்த ஆராய்ச்சியின் சாராம்சம். வீரமாமுனிவர் காலம் முதல் இது பரவலாக வெளிப்பட்டது. தங்கள் கொள்கைகளை ஆதரித்தும், சைவ வைணவக் கொள்கைகளை மறுத்தும் கிறித்துவர்கள் எழுத, அவை தவறு என்று சித்தாந்த வித்தகர்களாகிய சிவஞான முனிவர் போன்ற தமிழ் அறிஞர்கள் எழுத, ஒரே களேபரம்தான். குறிப்பான ஒரு விஷயம், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தச் சண்டையைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிப்பட்ட மத ஆராய்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது.

கால அடிப்படையில் தமிழ்மொழியில் இரண்டாவதாகத் தோன்றிய ஆராய்ச்சி, இலக்கிய இலக்கண உரைகள். பலபேர் உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்கள் அல்லது திறனாய்வு முன்னோடிகள் என்று தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் கள். உரையாசிரியர்களின் நோக்கில் மதிப்பீடு கிடையாது. மதிப்பீட்டுக்கு அடிப்படை யான ஒப்பீடும் கிடையாது. ஆனால் எடுத்துக்கொண்ட நூலின் அமைப்பை விவரித் தல், அதில் இலக்கண ஆய்வு அடிப்படையில் குறிப்புரைகள் தருதல், பொருள்கோள் முறையைத் தெரிவித்தல், தங்கள் நோக்கில் விரிவான அல்லது செறிவான உரையை வழங்குதல் போன்ற தன்மைகள் உண்டு. இவை யாவும் ஆராய்ச்சியின்பாற் பட்டவை. (மதஅடிப்படையில் சுயஸ்தாபனமும் பரநிராகரணமும் செய்த நீலகேசி உரையாசிரியர் முதலியவர்களையும் இங்கே இணைத்து நோக்கினால், உரையாசிரியர்கள்தான் நமது முதல் ஆராய்ச்சியாளர்கள்.)
உரையாசிரியர்களுக்கும் அக்காலக் கவிஞர்களுக்கும் துணையாக எத்தனையோ மடங்கள், ஆதீனங்கள் இருந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். ஏறத்தாழ உ.வே. சுவாமிநாதையர் காலம் வரை ஆதீனங்கள்தான் தமிழ்க்கல்விமுறையையும், படைப்பு முறையையும் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றன. குறிப்பிட்ட வகைப் படிப்பு முறை என் பதே பின்னர் எவ்வகையான தமிழ் இலக்கியங்கள் காப்பாற்றப்படவேண்டும், படிக்கப் படவேண்டும் என்பதற்கான அளவுகோலாக மாறியிருக்கும்.

மேற்கண்ட இருவகை முயற்சிகளுக்கும் பின்னால் தோன்றியவை பதிப்பு முயற்சிகள். பதிப்புகளில் பலவித ஆய்வுக்குறிப்புகள் உண்டு. முதன்முதலில் தமிழில் அச்சுப்பதிப்பான நூல் திருக்குறள். 1812ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை அக்காலத்தில் வெளியிட்டவர்கள் தாங்கள் அதைப் பிழைநீக்கிய சுத்தப் பதிப்பாகக் கொண்டுவர எத்தனை முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பதைக் குறித்திருக்கி றார்கள். மூலப்பதிப்பாய்வு தோன்றும் முன்னரே சுத்தப்பதிப்பு என்பதை மேற் கொள்ள இவர்கள் செய்த முயற்சிகள் அருமையானவை.
அதற்குப் பிறகு தொடங்கிய ஆராய்ச்சி கால ஆராய்ச்சிதான். சுந்தரம் பிள்ளை காலத்திலேயே கால ஆராய்ச்சி தொடங்கிவிட்டது. கால ஆராய்ச்சியோடு சமூக வருணனைப் பார்வையும் சேர்ந்துகொண்டது வி. கனகசபைப் பிள்ளை போன்றவர்க ளால். இந்தப் போக்கு 1950வரை தொடர்ந்தது. சாணக்கியனின் நூலுக்குப் பின்னால் திருக்குறள் எழுந்து அதைக் காப்பியடித்ததா? திருக்குறளுக்குப் பின்னால் கௌடில் யம் எழுந்ததா போன்ற ஆய்வுகளை 1960கள் வரை கண்டிருக்கிறேன்.

ஒப்பிலக்கியம் என்றதொரு புதிய துறை 1980வாக்கில் தமிழ்த்துறைகளில் புகுந் தது. கால ஆராய்ச்சி கொண்டு இது முன்னதா, அது முன்னதா என்று ஆராய்ச்சி செய்வது ஒப்பிலக்கிய ஆய்வே அல்ல என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

காலஆராய்ச்சியை ஒட்டி எழுந்த இன்னொரு விஷயம் புதியஉரை எழுதுவது. இதுவும் 1950கள் வரை தொடர்ந்தது. உ.வே. சாமிநாதையர், இரா. இராகவையங்கார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை, சோமசுந்தரனார் போன்ற சிலர்இத்துறையில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளனர். பிறகு ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு உரை எழுதுதல் என்ற விஷயம் தூங்கிவிட்டது. இப்போது பழைய உரைப்பதிப்புகள் எவையும் கிடைப்பதில்லை என்ற நிலையில் மீண்டும் உயிர்பெற்று இன்றைக்குத் தக்கார்-தகவிலார் யாவரும் சங்கஇலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை உரையெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கால ஆராய்ச்சியோடு ஒட்டிய ஆய்வு ஒப்பிலக்கிய ஆய்வு. இலக்கிய வரலாற் றாய்வுதான் பின்னர் ஒப்பிலக்கிய ஆய்வாக உருவெடுத்தது என்பதையும் மனத்திற் கொள்ளவேண்டும். தமிழில் கால ஆராய்ச்சி இலக்கிய வரலாற்று ஆய்வாகவோ ஒப்பி லக்கிய ஆய்வாகவோ சிறப்பாக உருப்பெறவில்லை. இது ஏன் என்பதை ஓரளவு கா. சிவத்தம்பி தமது தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் ஆராய்ந்துள்ளார். அவரும் முழுஅளவில் ஆராயவில்லை.
எந்த இலக்கிய ஆராய்ச்சிக்கும் அடிப்படை இலக்கியவரலாறுதான். தமிழில் இலக்கிய வரலாற்று நூல்களே இல்லை என்பது ஒரு முக்கியமான குறை. இந்தி மொழியைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அது அண்மையில் தோன்றிய மொழி என்று நம் தமிழாசிரியர்கள் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்தியின் இலக்கிய வரலாற்றைச் சொல்கின்ற விரிவான நூல்கள் பல உள்ளன. ஆயிரம் பக்க அளவில் விரிவாக எழுதப்பட்ட இந்தி இலக்கியவரலாற்று நூலை நானே பயன்படுத்தியிருக்கி றேன். தமிழில் மிக விரிவாக எழுதப்பட்ட ஒரே இலக்கிய வரலாற்று நூல் மு. அருணாசலத்தினுடையது மட்டும்தான். அதுவும் 9ஆம் நூற்றாண்டுமுதல் 16ஆம் நூற் றாண்டுவரைதான் உள்ளது. பிறகு சிற்சில குறிப்பிட்ட போக்கிலான நூல்கள்-மயிலை சீனி வேங்கடசாமியின் சமணமும் தமிழும் பௌத்தமும் தமிழும் போன்றவை உள்ளன. மற்றபடி பூரணலிங்கம் பிள்ளை, கா.சு. பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரன் முதல் ஜேசுதாசன், மு. வரதராசன் வரை எழுதியவை அனைத்தும் குறிப்புகளே. அதற்குப்பின் இளங்கலைத் தேர்வுப்பாடத்திட்டப் பட்டியல் நோக்கைத் தாண்டி நமது இலக்கிய வரலாற்று நூல்கள் முன்னேறவில்லை. உண்மை யில் நாம் செம்மொழி என்பதை நிறுவவேண்டுமானால் இன்று தேவையானது மிக விரிவான உண்மையான நேர்மையான ஒரு தமிழ் இலக்கிய வரலாற்று நூல்.

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஏற்பட்ட நிறுவனங்களின் ஆய்வுப் பணி குறிப்பிடத்தக்கது. எத்தனையோ தமிழ்ச்சங்கங்கள் சென்ற நூற்றாண்டில் எழுந் தன. மிகவும் குறிப்பிடத் தக்கவை மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி சைவசித்தாந்த சபை, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகள். 1912ஆம் ஆண்டு அளவிலேயே தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒன்றைத் தோற்றுவிக்கவேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அவ்வாறு முன் வைத்தவர்களில் மிகமுக்கியமானவர் பள்ளியகரம் நீ. கந்தசாமிப் பிள்ளை. 1924-25 அளவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தோன்றியபோது அதுவே தமிழ்ப் பல்கலைக்கழகம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பற்றிய செய்திகளைத் தமிழ்ப் பொழில் இதழ்களில் காணலாம்.
பிறகு தமிழிசை வளர்ச்சிக்கென, தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்குவதற் கெனச் சில அமைப்புகள் எழுந்தன. தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்குவதில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பணி மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்று. தனி மனிதர்கள் என்ற அளவில் நீ. கந்தசாமிப் பிள்ளையும், கோவை கலைக்கதிர்இதழ் தாமோதரனும் பெரும் பணியாற்றியுள்ளனர்.

பல தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ்ஆய்வு, தமிழ்க் கலைச்சொற்கள் போன்றவற் றிற்கு உறுதுணையாக இருந்துள்ளன. குறிப்பாக யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ்ப் பதிப்பு (மணவை முஸ்தபா பல ஆண்டுகள் இதன் ஆசிரியராக இருந்தார்) தந்திருக் கும் உலகளாவிய விவரங்கள் மிகுதி. தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே பலவகையான இதழ்கள்-சாதி சார்ந்தவை, பெண்கள் சார்ந்தவை, அறிவியல் சார்ந் தவை என்றெல்லாம் எழுந்தவை-ஆற்றியுள்ள பணிகளும் மிகுதி. சிற்றிதழ்களைப் பொறுத்தவரை, அவை திறனாய்வை வளர்த்த அளவு ஆராய்ச்சிக்குப் பணியாற்ற வில்லை. அக்காலத்தில் தோன்றிய செந்தமிழ், தமிழ்ப்பொழில், சித்தாந்தம் போன்ற இதழ்களையோ, அண்மைக்கால ஆராய்ச்சி, இக்காலச் சமூகவியல் போன்ற இதழ்க ளையோ சிற்றிதழ்கள் என்று நோக்கமுடியுமா என்பது ஐயத்திற்குரியது.

இப்படி நோக்கிக்கொண்டே நாம் ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் பிற் பகுதிக்கு வந்துவிட்டோம். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக் கழகம் போன்றவை தோன்றின. முன்பேஆராய்ச்சியாளர்கள் பல்கலைக்கழக அமைப்புகளைச் சேர்ந்தவர்களாகத்தான் ஓரளவு இருந்தனர் என்றாலும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழ் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் பணியாற்றுபவர்களையே முற்றிலும் சார்ந்ததாகி விட்டது. இதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. ஆய்வுக்குத் தேவையான உதவி, கொடை போன்றவை எளிதில் கிடைத்தமை நன்மை. ஆய்வு ஆழமாக இல்லாமல் சிமெண்டுத் தரையில் தண்ணீர் பரவுவதைப்போன்று பயனின்றி அகன்று போய்விட்டது மிகப் பெரிய குறை.

1966இல் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது தொடங்கியது. இதன் வாயிலாகப் பல நாட்டுத் தமிழ் ஆர்வலர்களின், ஆராய்ச்சியாளர்களின் தொடர்பு ஏற்பட்டது நன்மை. ஆனால் ஒட்டுமொத்தமான விளைவு என்று நோக்கினால் இவற்றில் செல விடப்படும் தொகைக்கும் ஆய்வுக்கும் எவ்விதத் தொடர்புமே இல்லை.
கல்லூரிகளிலிருந்து பியூசி என்ற வகுப்பு நீக்கப்பட்டது முதலாகக் கல்லூரி ஆசிரியர்களுக்கு யுஜிசி உதவிபுரியும் ஆய்வுப்படிப்புகள், எஃப்ஐபி போன்ற வசதிகள் ஆகியவை கிடைத்தன. ஆனால் இவற்றால் என்ன பயன் விளைந்தது என்பதை நேர்மையாக எவரேனும் மதிப்பிட வேண்டும். என் கண்ணோட்டத்தில், குப்பைகள் பெருகின. தகுதியற்றவர்கள் மிகவும் உயர்ந்த பட்டங்களையும் அதனால் உயர்ந்த பதவிகளையும் பெற்றனர். அதனால் இன்னும் தரமற்ற, தகுதியற்ற ஆய்வுகள் பெருகின. இது ஒரு விஷச்சுழல் அல்லவா? இன்றைய மாணவர்கள்தானே நாளைய ஆசிரியர்கள், நெறியாளர்கள்? இவர்கள் எல்லாரும் எழுதுவதற்காகவே இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் முதலிய மன்றங்கள் தொடங்கப்பட்டன. பலன் என்ன?
தனிப்பட்ட முறையிலும், பல்கலைக்கழக மானியக்குழு சார்பிலும் முதலில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அவை பிறகு தேசியக் கருத்தரங்குகள் ஆயின. தொண்ணு£றுகளில் அவை சர்வதேசக் கருத்தரங்குகளாயின. ஆனால் கட்டுரைகளின் தரம் என்னமோ தொடக்கத்தில் இருந்த அளவுக்கும் குறைவுதான்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது தனிப்பட்டோர் முயற்சிகளே நல்ல ஆய்வுகளாக நிற்கின்றன. செல்வக்கேசவராய முதலியார், மறைமலையடிகள், மு. இராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, மயிலை. சீனி. வேங்கடசாமி, ந.மு. வேங்கட சாமி நாட்டார், வே. வேங்கடராஜுலு ரெட்டியார் என்று எத்தனையோ பெயர்கள் நமக்கு நினைவில் வருகின்றன. அவர்கள் காலத்தைத்தாண்டி சற்றே பின்னால் வந்தால் தெ.பொ.மீ,-மு.வ. சகாப்தம் ஆரம்பமாகிறது. சமகாலத்தில் வானமாமலை, பேராசிரியர் இராமகிருஷ்ணன் போன்ற சில மார்க்சிய அறிஞர்கள் சிறந்த ஆய்வுகளை அளித்துள்ளனர். இலங்கையிலிருந்தும் ஆ. வேலுப்பிள்ளை, க. கைலா சபதி, கா. சிவத்தம்பி, நுஃமான், சுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்கள் வழி பல நூல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு வளர்ச்சியில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகக் குறைவு-தனிப்பட்டோர் ஆர்வமே சிறந்த பலன் தந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

சிலர் குறிப்பிட்ட தனித்துறைகளைத் தங்களுக்கெனத் தேர்ந்துகொண்டு சிறந்த பணியாற்றியுள்ளனர். வடமொழி இலக்கியக் கோட்பாடுகளை அறிமுகம் செய்த கு. சுந்தரமூர்த்தி, பக்தி இலக்கியங்களை மட்டுமே ஆராய்ந்த வெள்ளை வாரணன், ப. அருணாசலம், சிற்றிலக்கிய ஆய்வைச் செய்த ந. வீ. ஜெயராமன், நாட்டார் இலக்கிய ஆய்வை முன்னெடுத்துச்சென்ற லூர்து, கிறித்துவஇலக்கிய ஆய்வை மட்டுமே மேற் கொண்ட இன்னாசி, மார்க்சியநோக்கில் சிற்றிலக்கியங்களைப் பார்த்த கோ. கேசவன், மொழியியல் நோக்கில் கவிதையாக்கத்தை விளக்கும் செ.வை. சண்முகம் போன்று எத்தனையோ பெயர்களைக் குறிப்பிடலாம். தலித்திய நோக்கில் மட்டுமே எழுதும் ராஜ்கௌதமன் போன்றோரையும் இதில் சேர்க்கலாம். நான் நினைவில் வந்த பெயர் களைக் குறிப்பிட்டிருக்கிறேன். இது தனியாகத் தொகுக்கப்பட வேண்டியதோர் பட்டியல்.

தமிழ்த்துறைக்குத் தொடர்பற்ற அ. மார்க்ஸ், பொ. வேலுச்சாமி, அம்பை போன்றவர்களும் ஆய்வில் ஈடுபட்டனர். பழங்கருத்தாக்கங்கள் சிலவற்றை உடைப்ப தில் இவர்களின் ஆய்வுகள் பயன்பட்டுள்ளன. குறிப்பாக அம்பை தமது பிஎச்.டி பட்ட ஆய்வுக்கெனத் தந்த A face behind the mask என்பது தமிழ்ப் பெண் சிறுகதையாளர்கள் பற்றிய, பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட சிறந்த ஆய்வுநூல்.

அண்மைக்காலத்தில், மார்க்சிய நோக்கு, தலித்திய நோக்கு, பெண்ணிய நோக்கு போன்றவற்றின் நோக்கில் பல ஆய்வு நூல்கள் வெளிவருகின்றன. இவற்றின் தகுதியை மதிப்பிடுவது அவசியம். பல நூல்களில் ஆழமில்லை. சில கூறியதுகூறலாக வே இருக்கின்றன. அண்மைக்காலத்தில் சங்க இலக்கியங்களைத் தகர்க்கும் பலரும் ஒரேமாதிரியான கருத்துகளையே கூறிவருகின்றனர். பன்முகநோக்கும் அதற்குத் தேவையான உழைப்பும் இன்மையே காரணம்.
இக்கட்டுரைத் தொடக்கத்தில் ஆய்வு வளர்ந்துள்ளதா இல்லையா என்பது இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டேன். இதுவரை ஓரளவு ஆய்வு வளர்ந்துள்ளது என்பது விரிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. இனி இதன் மறு தலையைக் கொஞ்சம் பார்ப்போம்.

தமிழிலக்கிய ஆய்வு வளரவில்லை என்று கூற மிக முக்கியமான ஒரு காரணம், தமிழில் உள்ளடக்க ஆய்வு பெருகிய அளவுக்கு உருவ ஆய்வு பெருகவில்லை என்பது. ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு இலக்கிய ஆராய்ச்சியை நோக்கும்போது, குறிப்பிட்ட நூல் அல்லது இலக்கியம் என்ன சொல்கிறது என்பதை வைத்துப் பெரும்பாலும் ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்களே தவிர, அது எப்படி இலக்கியமாகியிருக்கிறது என்பதைப் பலரும் ஆராய்ந்ததில்லை. ஒருபுறம் உள்ளடக்கம்-உருவம் என்று பிரிப்பது தவறு என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் அந்த இலக்கியம் காட்டும் வீடு, நாடு, காடு, மாடு என்று ஆராயத்தான் நமது ஆய்வாளர்களுக்குத் தெரியும்.

இதன் விளைவு தமிழ் ஆய்வு மாணவர்களை மிகவும் பாதித்திருக்கிறது. புதுப் புது நூலாகத் தேடி அதன் உள்ளடக்கம் என்ன என்று எம்.ஃபில்லுக்கும் பிஎச்.டிக்கும் ஆலாய்ப் பறப்பார்கள். பழைய இலக்கியங்களிலேயே செய்யக்கூடிய பணிகள் ஏராள மாக உள்ளன என்பதை அறியமாட்டார்கள். நற்றிணையின் மொழியமைப்பு, வாக்கிய அமைப்பு பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியபோது இரா. கோதண்டராமன் அதை மிகவும் பாராட்டி, இத்தகைய கட்டுரைகள் ஏராளமாக வெளிவரவேண்டும் என்றார். இத்தனை சங்க நூல்கள் இருக்கின்றனவே, அவற்றின் மொழியமைப்பு, வாக்கிய அல் லது தொடரமைப்பு, உள்கட்டுமான அமைப்பு போன்றவற்றைப் பற்றி எவரேனும் ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்களா? தலைப்பைத் தேடி ஏன் அலையவேண்டும்?

இன்னொன்று, ஆய்வுசெய்யும் மாணவர்களின் சோம்பேறித்தனம். “சார், ஏதா வது ஈசியா நாவல் இருந்தா குடுங்க ஆய்வு செய்யலாம். இலக்கணம், பழைய இலக் கியமெல்லாம் கஷ்டம்” என்று நிறைய மாணவர்கள் சொல்வதை நான் கண்டிருக் கிறேன். ஏறத்தாழ இருபதாண்டுகள் இருக்கும். எனக்கென்று ஒதுக்கப்பட்ட எம்.ஃபில் மாணவர் ஒருவர் வந்தார். ‘என்ன படித்திருக்கிறாய்? எதில் உனக்கு ஆர்வம்?’ என்ற பொதுவான கேள்விகளை நாம் கேட்பது வழக்கம்தானே? அவருக்குத் தமிழின் எந்த இலக்கியத்திலும்-செய்யுள், உரைநடை எதிலும் ஆர்வமில்லை. கடைசியில் நான் அவருக்கு வாலியின் திரைப்படப் பாடல்களை ஆய்வுத் தலைப்பாகத் தர நேரிட்டது.

இன்று நாம் ஒரு நூற்றாண்டுக்காலத்தில் உருவான பல கருத்தாக்கங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலையில்இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட கருத்து உருவா வதற்குச் சமூகரீதியாகச் சில காரணங்கள் உண்டு. எதுவும் தானாக வரலாற்றில் முளைப்பதில்லை. அதுபோல வரலாற்றுரீதியான காரணங்கள் சிலவற்றால் தமிழின் பெருமை, முதன்மை பேசவேண்டிய ஒரு தேவை முன்பு இருந்தது. சில இயக்கங்கள் தோன்றியதற்குப் பலவித காரணங்கள் இருந்தன. உதாரணமாகத் தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், தலித் இயக்கம் போன்ற வற்றைச் சொல்லலாம். ஆனால் ஓர் இயக்கம் எல்லையற்றுக் காலத்தில் நிற்கமுடியாது. எல்லா இயக்கங்களும் காலத்திற்குக் கட்டுப்பட்டவை-காலம் மாறினால் மாறிவிடுபவை. அதுபோலத் தனித்தமிழ் இயக்க மும் திராவிட இயக்கமும் இன்று காலாவதியாகிவிட்டன.

தமிழ்இயக்கங்கள் வரலாற்றில் உருவான விதத்தைப் பற்றிப் பலர் பல நூல் களில் பேசியிருக்கிறார்கள். எனதுநோக்கில் சுருக்கமாக அவற்றை முன் வைத்து மேற் செல்கிறேன்.
19ஆம்நூற்றாண்டில் இரண்டுவிஷயங்கள் தமிழரின் வாழ்க்கையை பாதித்தன. ஒன்று ஆங்கிலம், இன்னொன்று சமஸ்கிருதம். ஆங்கிலம் என்பது ஆங்கிலேயரின் பழக்கவழக்கங்கள், பாஷை. அதன் இலக்கியவளம், பிற வளங்கள், கலாச்சாரம் முதலியவற்றை உள்ளடக்கியது. இன்னொன்று சமஸ்கிருதத்தின் முதன்மையை ஐரோப் பியர்கள் ஏற்றுக்கொண்ட நிலை. இவையிரண்டும் தமிழர்களின் தன்மானத்தை பங்கப்படுத்துவதாக இருந்தன. இவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நல்லவேளையாக தமிழர்களுக்குச் சாதகமாகவும் மூன்று விஷயங்கள் வாய்த் தன. சமஸ்கிருதத்திலிருந்தே அத்தனை இந்திய மொழிகளும் பிறந்தன என்ற கருத்து அக்காலத்தில் நிலவியது. விண்டர்நிட்ஸ் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய இந்திய இலக்கிய வரலாற்றிலும்கூட இப்படித்தான் குறிப்பிடுகிறார். இப்படிப் பட்ட சமயத்தில் திராவிட மொழிக்குடும்பம் என்பது தனியானது, தமிழ் அதில் மூத்த மொழி என்ற அந்தஸ்தினை நாம் பெற்றோம். இதற்கு உதவியாக இருந்தவர் கால்டுவெல். இன்னொன்று சங்க இலக்கியங்களின் பதிப்பு. இதற்கு உதவியாக இருந்தவர்கள் சுவாமிநாதையர் உள்ளிட்ட பல பதிப்பாசிரியர்கள். மூன்றாவது, சிந்து வெளி நாகரிகத்தின் வெளிப்பாடு. இதற்கு உதவியாக இருந்தவர்கள் சர் ஜான் மார் ஷலும் ஹீராஸ் பாதிரியாரும். இதனுடன், ஆரியர்கள் கி.மு. 3500 வாக்கில் இந்தியாவுக்குள் நுழைந்த வந்தேறிகள் என்ற சரித்திரக் கருத்து. இவை தமிழர்களின் தன் மானத்தைக் காப்பாற்றின.

இவற்றின் விளைவாக எழுந்தவை தனித்தமிழ் இயக்கமும் தமிழிசை இயக் கமும். இவை சாராத ஒரு சமூக, அரசியல் நிகழ்வு, இட ஒதுக்கீட்டிற்கென ஏற்பட்ட நீதிக்கட்சி. இரண்டிற்கும் பொதுவானது அக்கால வேளாளர்கள் நிலைப்பாடு அல்லது மனப்பான்மை. இவையிரண்டிலும் அவர்களுக்கு உடன்பாடு இருந்தது. இரண்டிற்கு மெனத் தனித்தனியே இயங்கியவர்கள்கூடச் சில மேடைகளில் ஒருங்கே நின்றார்கள். உதாரணமாகத் தமிழிசை இயக்கத்தில், தனித் தமிழ் இயக்கம் சார்ந்தவர்களும் நீதிக் கட்சி சார்ந்தவர்களும் உடன்பட்டு இயங்கியதைக் காணமுடிந்தது.
திரு.வி.க. போன்றவர்கள் இவற்றை முழுதும் உடன்படாவிட்டாலும் பார்ப்ப னர்களைத் தனிமைப்படுத்திவிடக்கூடாது என்பதில் கண்ணாக இருந்தார்கள். மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த சாதிகளுக்குரிய தலைவர்கள் சிலர் அக்காலத்தில் இருந்த போதிலும் அவர்களை இந்த இயக்கங்கள் சேர்த்துக்கொள்ள நினைக்கவில்லை-அவற் றை பாதிக்குமளவிற்கு அவர்களை முக்கியமானவர்களாகக் கருதவில்லை. நீதிக்கட்சி அழியும் நிலையில் திராவிட இயக்கம் தோன்றிவிட்டது.
திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலேயே சில தமிழறிஞர்கள் வெளிப் படையாகத் தங்கள் நிலைப்பாட்டைக் கூறியதில்லை. உதாரணமாக 20ஆம் நூற் றாண்டில் தமிழ் ஆராய்ச்சியைப் பெரிதும் பாதித்தவர்களான டாக்டர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும், டாக்டர் மு. வரதராசனாரும். இவர்கள் நூல்கள் இவர்களை திராவிட இயக்கச் சார்பானவர்களாகக் காட்டுகின்றன. அக்காலத்தில் சங்க இலக் கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை திராவிட இயக்கச் சார் பான நூல்களாகக் கருதப்பட்டன. பிற காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் போன்றவை சமஸ்கிருதத் தொடர்பினால் கெட்டுப்போனவை என்ற கருத்து நிலவி யது. அக்காலத் தமிழ் அறிஞர்கள் முன்சொல்லப்பட்ட நூல்களையே பெரிதும் ஆராய்ந்திருப்பதைக் காணலாம்.

மாறாக, காங்கிரஸ் கட்சியில் ஆதியிலிருந்தே பார்ப்பன ஆதிக்கம் இருந்தது. அதனால் அவர்கள் கம்பராமாயண ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார்கள். ஏறத் தாழ 1960வரை கம்பராமாயண ஆய்வில் ஈடுபட்டவர்களை நோக்கினால், கம்பன்விழா நடத்தியவர்களை நோக்கினால் அவர்கள் யாவருமே காங்கிரஸ்கட்சி சார்ந்தவர்களாக இருப்பதைக் காணலாம்.

அவர்களும்கூட வில்லிபாரதத்தை மதிக்கவில்லை. காரணம் அது வேளாளர் சார்புடைய, கிராம மக்கள் சார்புடைய நூல். நமது கிராம மக்களின் நாட்டுப்புற தெய்வங்கள், கலைகள் ஆகியவற்றின் சார்பு வில்லிபாரதத்தை ஒட்டியதாக இருப்ப தைக் காணலாம். திரௌபதியம்மன் நாட்டாரின் முக்கிய தெய்வங்களில் ஒருத்தி. கோடைகாலங்களிலெல்லாம் வடக்குத் தமிழ்நாட்டு கிராமங்களில் பாரதக்கதை படிக் கப்பட்டதை, தெருக்கூத்தாக நடிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். ராமசாமி கிருஷ்ணசாமி என்றெல்லாம் பெயர்வைத்துக்கொள்ளும் ஐயர்களும் ஐயங்கார்களும் தருமன், அருச்சுனன், சகாதேவன் என்று பெயர்வைத்துக்கொள்ளமாட்டார்கள். அவை தாழ்ந்த சாதிக்குரிய பெயர்கள். பெயரளவில் மகாபாரதம் ஐந்தாம் வேதம் என்று பார்ப்பனர்களால் சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டு நடைமுறையில் அப்படியில்லை.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் நமது தமிழ் ஆராய்ச்சியையும் வளர்ச்சியையும் சாதியநோக்கு-வகுப்புவாத நோக்கு முதலிலிருந்தே பாதித்துவந்திருக் கிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான். தமிழ் ஆராய்ச்சியையும் வளர்ச்சியையும் இந்த நோக்கு வளர்ப்பதற்கு மாறாகக் கெடுத்துவிட்டது.

பெரியாருக்குத் தமிழின்மீது பெரிய அபிமானம் இருந்ததாகச் சொல்ல முடி யாது. அவர்கூட சங்க இலக்கியம், திருக்குறள் பற்றி ஓரளவுதான் சாதகமாகப் பேசி யிருக்கிறார். சிலப்பதிகாரத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான நூல்கள் யாவும் பொதுவாக மக்களையும், குறிப்பாகப் பெண்களையும் ஒடுக்குவதற் காகத் தோன்றியவையே என்பது அவர் கருத்து. ஆனால் தமிழ்ப் பெருமை பேச விரும்புபவர்களால் சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் ஒதுக்க முடியாது. கம்பராமாயணத்தையும் புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் பக்திப்பாக்களையும் அவர்கள் ஒதுக்கினார்கள்.

பாரதியார் இதற்கு விதிவிலக்கு. அவரை ஒருவாறு திராவிட இயக்கத்தவரும் அல்லாதவர்களும் ஏற்றுக்கொண்டனர். திராவிட இயக்கத்தினர் அவரை ஒரு சீர் திருத்தவாதியாகக் கண்டனர். பிறர் அவரை தேசியவாதியாகக் கண்டனர். திராவிட இயக்கத்தினரின் canon சங்கஇலக்கியம்-திருக்குறள்-இரட்டைக் காப்பியங்கள்-தமிழ் சார்ந்த சில சிற்றிலக்கியங்கள்-பாரதி-பாரதிதாசன் என்று அமைந்தது. பார்ப்பன நோக்குடையவர்களின் canon (திருக்குறள்)-சமய இலக்கியங்கள்-கம்பராமாயணம்-புரா ணங்கள்-பாரதி என்று அமைந்தது. (இதில் பாரதிதாசனும் அவர் பரம்பரை யினரும் இடம்பெற மாட்டார்கள்).

இவற்றை மீறிப் பொதுநிலையில் செயல்பட்ட சில ஆராய்ச்சியாளர்களாக வையாபுரிப்பிள்ளை, மயிலை.சீனி. வேங்கடசாமி போன்ற ஒருசிலரை மட்டுமே அக் காலத்தில் குறிப்பிடமுடியும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து தமிழ் ஆராய்ச்சியை இரண்டு போக்குகள் கட்டுப்படுத்தின. ஒன்று வரலாற்று ஆய்வு. இன்னொன்று உரை எழுதுதல். இவற்றில் சைவநோக்கு கலந்திருந்தது. இருநோக்குடையவர்களும் தங்கள் கருத்துகளைப் பெருமளவு பரிமாறிக் கொண்டனர். இதற்கு அக்காலத்தில் தோன்றிய செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம் போன்ற இதழ்கள் உதவி யாக இருந்தன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அக்காலத்தில் சதாசிவப் பண் டாரத்தார்-ஒளவை.சு.துரை சாமிப்பிள்ளை-வெள்ளைவாரணன் மூவரும் ஒன்றாகவே வலம்வருவதைப் பலர் கண்டு சொல்லியிருக்கிறார்கள். வெள்ளைவாரணன் என்னி டம் நேரிலும் கூறியிருக்கிறார். முதல்வர் வரலாற்றாசிரியர் என்பதும், இரண்டாமவர் உரையாசிரியர் என்பதும் மூன்றாமவர் சைவஇலக்கிய ஆய்வாளர் என்பதும் நாம் அறிந்தது. இது அக்காலப் பொதுப்போக்கு. (விதிவிலக்குகள் இருந்தன-அவற்றிற்குள் நான் இப்போது புகவில்லை).

சைவசைமய-உரையாசிரிய-வரலாற்றாசிரியக் கூட்டணி தமிழில் உருவாக்கிய பொதுப்புத்தி மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதுதான் இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் ஆராய்ச்சியைக் கட்டுப்படுத்தியது. இக்கூட்டணியின் விளைவாக, உரு வான பொதுக்கருத்தாக்கங்கள் சிலவற்றை இங்கே பட்டியலிடலாம்.

1. தமிழின் தனித்தன்மை. சமஸ்கிருதம்இன்றி இந்தியாவில் தனித்தியங்கக்கூடிய மொழி தமிழ் ஒன்றே என்ற தற்பெருமை இதில் அடக்கம். இது வரலாற்றுப் பூர்வமானது. ஒரு வேளை சங்கஇலக்கியம் தோன்றிய காலத்தில் இக்கருத்துக்கு நியாயம் இருந்தி ருக்கலாம். இத்தற்பெருமைக்கு இன்று எந்தவித நியாயமும் இல்லை. தொல்காப்பியம் சங்கஇலக்கியம் தொடங்கியே சமஸ்கிருதத்தின் கலப்பு நிகழ்ந்திருப்பதைக் காண்கி றோம். பிராகிருதம், தெலுங்கு முதலியவற்றின் கலப்பும் உள்ளது. சமஸ்கிருத மொழி யைப் பாராட்டுபவர்கள்தான் தாங்கள் தான்தோன்றிகள், பிற மொழிக் கலப்பற்ற வர்கள், தேவபாஷைக்காரர்கள் என்று முட்டாள்தனமாக நினைத்தால் நாமும் முட்டா ளாக வேண்டிய அவசியம் என்ன?எந்தச் சமூகத்திலும் பிற சமூகங்களுடைய-பிறமொழிகளுடைய கலப்பு இருக் கத்தான் செய்யும். கலப்பை இழிவாக நினைப்பது தவறான மனப்பான்மை. உண்மை யில் கலப்புதான் இயல்பானது. இன்றும் நாகர்கோவில் கன்யாகுமரி தமிழில் மலையா ளக்கலப்பு அதிகமாகத்தான் இருக்கிறது. சென்னைத் தமிழில் உருது, தெலுங்குக் கலப்பு இருக்கிறது. அதிலும் நாம் பேதம் பாராட்டுகிறோம். மலையாளம் தமிழிலிருந்து தோன்றி யது, சேரநாடு பழங்காலத்தில் செந்தமிழ்நாடு என்ற எண்ணம் இருப்பதால், பேசுபவர் கள் அனைத்து சாதியினருமாக இருப்பதால் குமரி வட்டாரவழக்கைக் குறை சொல்வ தில்லை. திரைப்படம் முதற்கொண்டு மலையாளக் கலப்பை ஏற்றுக்கொண்டு பாராட் டுகிறோம். தெலுங்கரை வடுகரென்றும், உருதுவை எங்கிருந்தோ வந்தவர்கள் (‘துலுக் கர்கள்’) பேசியமொழி என்றும் நினைத்ததாலும், இவற்றைக் கலந்து பேசியவர்கள் பொருளாதார, சாதிஅடிப்படையில் தாழ்ந்தவர்களாக இருந்ததாலும், சென்னைமொழி இழிவானதென்று நினைக்கிறோம். அங்கு எழுந்த கலைகளும், கானாப்பாட்டுகளும் இழிந்தவை என்ற எண்ணம் நெடுங்காலம் நிலவியது. இப்போது சற்றே மனப் பான்மை மாற்றம் காணப்படுகிறது.தனித்தமிழ் இயக்கம் சொல்லுருவாக்கத்தில் மட்டும் சில நன்மைகளைச் செய் தது. ஆனால் தமிழ் ஆய்வுப்போக்கை அறவே கெடுத்துவிட்டது. அறிவியல் மனப்பான் மையின்றியே மொழி, இலக்கியம், இலக்கணம், வரலாறு ஆகியவற்றை அணுகும் முறையை ஏற்படுத்திவிட்டது. இதற்கு மாபெரும் சான்று தேவநேயப் பாவாணரின் ஆய்வுமுறை. இன்றைய கணிப்பொறிக் காலத்தில் தமிழின் பழம்பெருமை பேசுவ தற்குத் தவிர வேறு எதற்கு இது பயன்பட்டிருக்கிறது?

2. காலமுதன்மை. முன்னரே கால ஆய்வு பெருவரவாக இருந்த நிலை பற்றிப் பேசி யிருக்கிறோம். கால ஆய்வுசெய்தால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தியது என்று சொல்லிவிடுவது பழந்தமிழ் ஆய்வுகளின் வழக்கம். எத்தனை தமிழ் அறிஞர்கள் சிவபெருமானும் முருகப்பெருமானும் இருந்து தமிழாய்ந்த காலத்தைப்பற்றித் தங்கள் ஆய்வுநூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்! எது பொய் எது உண்மை என்றே அறியாதவர்கள்-பாவம். சமயநம்பிக்கை அவர்களின் ஆய்வுப்போக்கைக் குலைத்து விட்டது. சமயநம்பிக்கையால் ஆய்வுப்போக்கு குலைந்த ஒரு மாபெரும் நூலுக்கு உதா ரணம், மறைமலையடிகள் மாணிக்கவாசகர் காலம் பற்றிய ஆய்வு.
சமஸ்கிருதத்தை விட நாங்கள் முந்தியாக்கும் என்று சொல்லமுனைந்த தமிழ்ப் பற்றுக்கு ஆராய்ச்சி பலியாகிவிட்டது.

3.பழம்பெருமை பேசுதல். சங்ககாலம் பொற்காலம் என்று தமிழ்அறிஞர்களும், சோழர்காலம் பொற்காலம் என்று பண்டாரத்தார் போன்ற வரலாற்றாசிரியர்களும், பக்திக்காலம் பொற்காலம் என்று சமயம்சார்ந்தவர்களும் நீண்டகாலம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்றும் இப்படிப்பட்டவர்கள் உண்டு. இதனால் ஆகப்போவது என்ன? என் தாத்தாவுக்கு யானை இருந்தது, ஆனால் நான் பிச்சைக்காரன் என்ப வனை யாரேனும் மதிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இன்று நமது வளர்ச்சி என்ன, சாதனை என்ன என்பதுதான் பிறர் நம்மை மதிப்பிடும் முறை. நமது பழம் பெருமை, கலாச்சாரப் பெருமை என்பது நம்மை வளர்த்துக்கொள்வதற்கான சாதன மாகவே இருக்கவேண்டும்.

4. இங்கு இல்லாதது இல்லை இளங்குமரா என்ற மூடமனப்பான்மை. பக்தர்கள் பிள்ளையார் சுழி போடுவதைப்போல, சமஸ்கிருத பக்தர்கள் எல்லாம் வேதத்திலிருந்து வந்தது என்பதைப்போல, மார்க்சியவாதிகள் எல்லாவற்றையும் மார்க்ஸ் முன்னரே சொல்லி விட்டார் என்பதைப்போல, பெரும்பாலும் தமிழ் ஆய்வினைத் தொடங்குபவர்கள்-குறிப்பாக பிஎச்.டி. ஆய்வளார்கள் தொல்காப்பியத்திலிருந்துதான் எல்லாவற்றையும் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பித்தால்தான் அவர்களுடைய வழிகாட்டிமார்கள் விடுவார்கள். சிறுகதையா, தொல்காப்பியத்தில் இலக்கணம் சொல்லப்பட்டிருக்கிறது. புதுக்கவிதையா, தொல்காப்பியத்தில் அதன் இலக்கணம் இருக்கிறது. நகைச்சுவைக் கட்டுரையா, தொல்காப்பியம் அதைப்பற்றிப் பேசியிருக்கிறது…எல்லாவற்றையும் தொல் காப்பியம் சொல்லிவிட்டதென்றால் உனக்கு என்ன வேலை இங்கே? அப்படி எல்லாவற்றையும் ஒருவன் சொல்லிவிட முடியுமா? காலம் எவ்வளவு மாறுதல்களை உண்டாக்கும்? நானும் என் பங்குக்குச் சொல்லிவிடுகிறேன், இவற்றையெல்லாம் உணர்ந்துதான் தொல்காப்பியர் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்று சொல்லியிருக்கிறார். போதுமா?
நமக்கென்று உள்ள பாரம்பரியத்தை நான் மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை. ஆனால் அந்தக் கலைகளின் அஸ்திவாரங்கள்தானும் எங்கே? சமஸ்கிருதக்காரன் நாடகக்கலை பற்றிப் பேசினால் அவனிடம் இருநூறு நாடகங்கள்-பாஸன் எழுதியவை முதலாக காளிதாசன் எழுதியவை முதலாக இருக்கின்றன. இலக்கிய வரலாற்றுப் புத்தகங்களில் தமிழில் நாடகம் இருந்தது என்று சாதிக்க நமது தமிழ் ஆசிரியர்கள் படும் பாட்டைப் பார்க்கும்போதெல்லாம் மனசு நோகிறது. மயிலை சீனி வேங்கடசாமி மறைந்துபோன தமிழ்நூல்கள் என்று பட்டியல் எழுதிப் பெரிய பாவத்தைச் செய்துவிட்டார்.

5. தவறான சரித்திர ஏற்புகள். குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம் என்றெல்லாம் கப்சா விட்டார்கள் நமது சரித்திர ஆசிரியர்கள். அங்குதான் தமிழினமே தோன்றியது, தமிழ்தான் உலகின் மூத்தமொழி என்று போய்விட்டார்கள் நமது ஆய்வாளர்கள். எத்தனை புதுமைப்பித்தன்கள் உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க்குரங்கா என்று கிண்டலடித்தாலும் புத்திவராது நமக்கு. இன்றைக்கும் மங்கோலிய பாஷைக்கும் ஜப்பா னிய பாஷைக்கும் மூலம் தமிழ் என்பவர்கள் இருக்கிறார்கள். பெரியபெரிய உலகளா விய ஆராய்ச்சி நிறுவனங்களை வைத்து இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

6. சைவசித்தாந்தம் பற்றிய பெருமை. தமிழர்களின் பங்களிப்பு சைவசித்தாந்தம் என்ப வர்கள் உண்டு. சைவம் இந்தியாவின் பிறபகுதிகளில் மேன்மையோடு இல்லாமையால் ஒருவேளை இக்கருத்து உண்மையோ என்ற ஐயம் எழுகிறது. ஆனால் அதுவும் வட மொழிசார்ந்த ஒரு பாஷையில்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. ஏன்?

7. அறநோக்கு. பழங்காலத்தில் அறம்பொருள் இன்பம்வீடு அடைதல் நூற்பயனே என்று சொன்னாலும் சொன்னான், நாம் எல்லா நூல்களிலும்-குறிப்பாக இலக்கிய நூல்களில் அறங்களைத் தேடியே வாழ்நாளைக் கழிக்கிறோம். ஆனால் நம் வாழ்க் கையில்தான் அறம் இல்லை. இலக்கியம் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை மேற்கொண்டுவிட்டால் பிறகு எப்படி மதிப்பிடமுடியும்?
இதெல்லாம் இப்படியிருக்க, திராவிட இயக்கங்கள் தமிழ் ஆராய்ச்சியை எங்கே கொண்டுவிட்டிருக்கின்றன? ‘பேசுவது மானம் இடைபேணுவது காமம்’ என்பான் கம்பன். சுயமரியாதைவீரர்கள் பேச்சில்தான் சுயமரியாதையே தவிர, நிஜத்தில் ஒருவர் காலில் இன்னொருவர் விழுவதுதான் அவர்கள் கலாச்சாரம் ஆயிற்று. தமிழர்கள் காலில் மட்டுமல்ல-எங்கே பதவி பணம் கிடைக்குமோ அங்கெல்லாம் காலில் விழுந் தார்கள். தமிழர்கள் மானத்தை அடியோடு விலை பேசினார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் என்றைக்குமே ஜனநாயகம் என்பது மருந்துக்கும் இல்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிசெய்த காலத்திலேயே கைதூக்குவதற்கென்று மட்டுமே எம்எல்ஏ ஆனவர்கள்-ஆக்கப்பட்டவர்கள் உண்டு. பின்னர் அதுவே வாடிக் கையாயிற்று. ஜனநாயகம் இல்லாத கூட்டத்தின் மத்தியில் ஆராய்ச்சி எப்படி வளரும்?
இறக்கும்போதும் இரண்டு மதத்தலைவர்களை இருபுறமும் வைத்துக்கொண்டு நான் இயேசுவைப்போல இறக்கிறேன் என்று நையாண்டி செய்த இங்கர்சால் எங்கே? இங்கர்சால் பற்றி எழுதிக் கொட்டியவர்கள்-கடவுள் இல்லை என்று கத்தியவர்கள்-கடைசியில் ஓட்டுவாங்குவதற்காக ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’தான் எங்கள் கொள்கை என்று உளறிய தமிழ் திராவிட மானஸ்தர்கள் எங்கே? நேர்மையற்ற சமூகத்தில் ஆராய்ச்சி பிறக்காது. திறனாய்வு கருவிலேயே கலைந்துவிடும்.

பெரும்பாலும் இன்றைக்கு ஆராய்ச்சியில் இறங்குபவர்கள் எல்லாம் இதனால் பின்னால் என்ன லாபம் கிடைக்கும் என்ற நோக்கோடுதான் இறங்குகிறார்கள். யாரைப்பற்றிய தலைப்பு எடுத்தால் விற்கும்? பணம் பாராட்டு பதவி கிடைக்கும் என்ற எண்ணத்திலே மனத்தைவிட்டபிறகு ஆராய்ச்சிக்கு எங்கே போவது? அல்லது குழு மனப்பான்மையோடு ஆராய்ச்சி என்ற பெயரில் குப்பைகளை உருவாக்குகிறார் கள். குழுமனப்பான்மை எப்படி ஆராய்ச்சியில் கெடுதலை விளைவிக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் காட்டுகிறேன்.

எங்கள் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர். இரா. ஜெய்சங்கர் என்று பெயர். அவரது பிஎச்.டி ஆய்வேட்டைத் தமிழில் சமூகவியல் திறனாய்வு என்ற பெயரில் நூலாக தாயறம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டிருக்கிறார் (2007). சமூகவியல் ஆராய்ச்சியாளர்களாகப் பன்னிரண்டு பேரையும் ஒரு கட்டுரைத் தொகுப் பாளரையும் சொல்லியிருக்கிறார். அவரது வரிசை இது-க.ப. அறவாணன், அன்னி தாமஸ், ஈஸ்வரப் பிள்ளை, (இவர்களுக்குப் பின்) கோ. கேசவன், க.கைலாசபதி, கா. சிவத்தம்பி, சிலம்பு நா. செல்வராசு, (மறுபடி இவர்களுக்குப் பின்) தொ. பரமசிவன், சி. இ. மறைமலை, பெ. மாதையன், (மீண்டும் இவர்களுக்குப் பின்) நா. வானமாமலை, ஆ. வேலுப்பிள்ளை, கடைசியாக ஞா. ஸ்டீபன் என்பவர். இவர்களில் உண்மையான சமூகவியல் திறனாய்வாளர்கள் யார், அவர்களுடைய பங்களிப்பு என்ன, பொருத்த மான வரிசைமுறை என்ன என்பது உங்களுக்கே தெரியும். இது அவரது திறனாய்வுக் கருத்தாக இருந்தால் நான் பொருட்படுத்தமாட்டேன். க.நா.சு. எப்போதும் ஒரு பட்டி யல் வெளியிடுவதுபோல, இவருக்கும் ஒரு பட்டியல் என்று விட்டுவிடுவேன். இது ஆய்வு-பிஎச்.டி. ஆய்வு. இதை ஏற்றுக்கொள்ள மூன்று தேர்வாளர்கள், ஒரு புறத் தேர் வாளர். எங்கே சொல்வது இப்படிப்பட்ட வேதனைகளை? இதனால் யாருக்கு எவ்வ ளவு லாபம் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், எதிர்கால மாணவர்களுக்கு இது தவறான வழிகாட்டுதல் அல்லவா?
தன் கருத்தைத் தீர்க்கமான ஆய்வுக்குப் பின்னரே சரியான முறையில் வெளியி டும் திறன் ஆராய்ச்சியாளனுக்கு வேண்டும். அது எப்படியிருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமுதாயத்திற்கு வேண்டும். நன்கு ஆராயப்பட்ட இன்றைய கருத்தும் அல்லது கண்டுபிடிப்பும் நாளை தவறாகலாம். அத்தன்மையை உடன்பட்டுத் தான் ஆய்வுக்களத்தில் இறங்குகிறோம். அறிவியல் துறையிலேயே நியூட்டனின் கருத்து களைத் தூக்கி எறிந்தார் ஐன்ஸ்டீன். ரூதர்ஃபோர்டின் கருத்துகளைப் பொய்யாக் கினார் ஹைசன்பெர்க்.

ஆய்வுசெய்பவர்களுக்குப் பணிவு அவசியம். நியூட்டன் ஒருசமயம் சொன்னா ராம்-“நான் கடற் கரையில் கூழாங்கற்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தை” என்று. பௌதிகத்தில் ஒளிபற்றிய அடிப்படைகள் யாவற்றையும் கண்டறிந்த மேதை-ஈர்ப்புத் தத்துவத்தைக் கண்டறிந்த பேரறிவாளர்-கால்குலஸ் என்ற கணிதத் துறையையே உருவாக்கிய வித்தகர்-அவரது தன்னடக்கம் அது. நம்மையும் ஆராய்ச்சி யாளர்கள் என்று சொல்லிக் கொள்ள நாக்கூசுகிறது. கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னொப்பில் என்னையும் என்று பாடிய கதைதான்.

நேர்மையான ஆய்வுக்குப் பின் தங்கள் மனத்தில் பட்ட கருத்துகளை-சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது, இல்லை என்ற பயமின்றி-தர்க்கரீதியாக முன்வைத்தவர்கள் யாரா னாலும் அவர்கள் நல்ல ஆராய்ச்சியாளர்கள்தான் என்ற வரையறையை வைத்துக் கொண்டு இருபதாம் நூற்றாண்டு முழுவதும் தமிழ் ஆய்வாளர்களைத் தேடினால் அப்போது நமக்குக் கிடைப்பவர்கள் நல்ல ஆய்வாளர்களாக இருக்கக்கூடும்.

1980 வாக்கில் தமிழியல் என்ற ஒரு சொல் புழக்கத்துக்கு வந்தது. அதை ஆங்கிலத்தில் Tamilology என்று பெயர்த்துக் கொண்டனர். நான் முதுகலை படிக்கும் போதுதான் என்று நினைக்கிறேன்-ஒரு நூல்-அதன் தொகுப்பாசிரியர்களில் வ.சுப. மாணிக்கமும் ஒருவர்- Glimpses of Tamillogy என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழ்க்கட்டுரைகளைத் தாங்கி வந்தது. அந்தத் தலைப்பு அப்போது எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது.
எனக்குப் பிடிக்காத பல சொற்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றில் வாழ்வி யல், தமிழியல் என்பவை முக்கியமானவை. அது என்ன வாழ்வியல்? Is there any subject called Lifeology?வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி என்றால் அது தத்துவம்- philosophy or metaphysics தான். அதேபோலத்தான் தமிழியலும். எல்லாத் துறைகளிலும் தமிழைவிடப் பன்மடங்கு மிக அதிகமான நூல்களைக் கொண்டிருக்கும் மொழி ஆங் கிலம் என்பதை அநேகமாக ஒப்புக் கொள்வீர்கள். Is there any field called Englishology? நண்பர் மதியழகன்கூட தமது நூலில் “தமிழ் ஆராய்ச்சி வரலாற்றை வெறும் இலக்கிய ஆய்வு வரலாறாக இல்லாமல் தமிழியல் ஆய்வு வரலாறாகப் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றும் “தமிழியல் ஆய்வு புதிய பரிமாணத்தை அடையக்கூடும்” என்றும் எழுதியிருக்கிறார்.
தமிழியல் என்பது கல்வெட்டுக்கல்வி, சுவடியியல் தொடங்கி அறிவாராய்ச்சி யியல் வரை எல்லாவற்றையும் அடக்குவதற்குக் கொண்டுவரப் பட்ட ஒரு எல்லா மடக்கி- holdall சொல். முதலில் இப்படி அடக்கினாலே ஆய்வு வளராது. கல்வெட்டு, அந்தத் துறையில் கற்ற நிபுணர்கள் செய்யவேண்டிய பணி. இதில் தமிழ் வாத்தியாருக்கு என்ன வேலை?
தமிழ் இலக்கியம் இலக்கணம் படித்தவர்கள் அத்துடன் தங்கள் வேலையை நிறுத்திக் கொண்டால் தமிழ் எவ்வளவோ வளர்ந்திருக்கும். தொல்காப்பியத்தை ஆராய்ச்சி செய்கிறாயா, செய். சிலப்பதிகாரத்தை ஆராய்கிறாயா, செய். அல்லது இக்காலத் தமிழிலக்கியத்தை-புதிதாக வந்த நாவலையோ சிறுகதையையோ கவிதை யையோ ஆராய்கின்றாயா, செய். அதைவிட்டுக் கல்வெட்டு ஆய்வில், சமூகவியலில், உளவியலில், கோயில் கட்டடக்கலையில், தமிழக வரலாற்றில், தமிழ் இசையில், நாடகத்தில், இவற்றிலெல்லாம் தமிழ் இலக்கியம் படித்தவனுக்கு என்ன வேலை? அது அந்தந்தத் துறைசார்ந்த நிபுணர்கள் செய்யவேண்டிய காரியம் அல்லவா?
உதாரணமாக, ஆங்கிலத்தில் சிறந்த ஆய்வாளர்களோ திறனாய்வாளர்களோ அவ்வளவு எளிதாக A sociological approach என்றோ A psychological approach என்றோ போட்டுக்கொள்ள மாட்டார்கள். சமூகவியல் நோக்கு என்று போட்டுக் கொண்டால் முறையாக அந்தத் துறையில் படித்துக் குறிப்பிட்ட ஒருவருடைய நோக்கில்-உதாரண மாக எமில் டர்க்ஹீம், அல்லது மாக்ஸ் வெபர் அல்லது டால்காட் பார்சன்ஸ் போன் றோர் ஒருவருடைய பார்வையில்-ஒரு குறிப்பிட்டநோக்கில் ஆய்வைச் செய்வார்கள். நமது ஆய்வேடுகளில் போல சமூகவியல் ஆய்வு என்று போட்டுவிட்டு ஒரு சமூக வியல் அறிஞரின் கருத்துகளையும் தெரிந்து கொள்ளாமல் குடும்பம், பெண்ணின் நிலை என்று பொத்தாம் பொதுவாக எழுதிக்கொண்டு போகமாட்டார்கள்.

சமூகவியல் நோக்கில் என்று போடப்பட்ட ஆய்வேடுகளை உருவாக்கிய பல மாணவர்களை நான் உசாவியபோது அவர்கள் படித்தது பத்து-பதினொன்று-பன்னி ரண்டாம் வகுப்புக்குரிய பாடநூல்களுக்குமேல் எதுவும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த தமிழில் அவ்வளவு தரத்தில்தான் நூல்கள் கிடைத்தன.
இந்த நிலைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில்-பிற துறையினர் ஆர்வம் காட்டவில்லை என்பதனால், தமிழ் அறிஞர்களிலேயே ஒரு சிலர் வரலாறு, கோயில், கட்டடக்கலை, இசை, நாடகம் போன்ற தமிழ்க்கலாச்சாரம் சார்ந்த துறைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் அப்படிப் பட்ட பொது ஆய்வுக்காலம் முடிந்துவிட்டது. உதாரணமாக இன்று யாரும் வ.சுப. மாணிக்கம் ஆய்வு செய்தது போல தமிழ்க்காதல் என்ற ஒட்டுமொத்தமான தலைப்பில் செய்யமுடியாது. அது ஒரு காலகட்டம். அவ்வளவுதான். இப்போது நாம் தனித்தனித் துறைகளாகப் பகுத்து நுணுக்கமான ஆராய்ச்சி மேற்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்று வரலாற்று வரைவியலில் சீனிவாச ஐயங்காரையும் கே.கே. பிள் ளையையும் தரமான வரலாற்றறிஞர்களாக ஏற்பதில்லை.
தமிழியல் மாயைக்கு இன்னொரு காரணம் முத்தமிழ் என்ற சொல். நான் வெறுக்கும் சொற்களில் இன்னொன்று. ஏதோ ஒரு காலத்தில் தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்று சொல்லி எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துவிட்டார்கள். அது என்ன முத்தமிழ்? இசையும் நாடகமும் எந்த மொழியில் இல்லை? எங்கேயாவது மூவாங்கிலம், மூஇந்தி (திரிஹிந்தி) போன்ற தொடர்களைக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ஏன், ஆங்கிலமொழிக்கென இசை இல்லையா? நாடகம் இல்லையா? கேட் டால் இது தமிழின் தனித்தன்மை என்பார்கள்.

இயல்-தமிழ்தான். இலக்கியம் தமிழ்தான். இலக்கணம் தமிழ்த்துறை சார்ந்தது தான். இசை எப்படித் தமிழ்த்துறை சார்ந்தது ஆகும்? இசை தனிக்கலை அல்லவா? அதில் வன்மை பெறவேண்டுமென்றால் குறைந்தது ஐந்து முதல் பத்தாண்டுகள் வரை யில் இசையை-அது கர்நாடக இசையோ, இந்துஸ்தானியோ, மேற்கத்திய இசையோ எதுவாயினும் கற்கவேண்டும் அல்லவா? தமிழ் மட்டும் படித்தவன் இசையில் சொல்வ தற்கு என்ன இருக்கிறது? 72 மேளகர்த்தா ராகங்களின் அமைப்பையும் பாடும் முறை யையும் தெரியாமல் சும்மா பழங்காலத்தில் அந்த இலக்கணம் இருந்தது, இந்தப் பண் இருந்தது என்று சொல்வதற்குமேல் என்ன செய்துவிடமுடியும்?
அதேபோல் தான் நாடகத்திலும். நாடகம் என்பது அரங்கக்கலை என்ற உண் மையே தெரியாமல் மனோன்மணீயத்தைப் பின்பற்றி மேடைக்குச் சம்பந்தமில்லாமல் ஸ்கிரிப்ட் எழுதியவர்கள் எல்லாம் இங்கே நாடகாசிரியர்கள். விஷயம் தெரிந்தவர்கள் அவற்றைக் குறைகூறியபோது படிப்பதற்குரிய நாடகங்கள் (அப்படி ஒரு பிரிவே உண்மையில் கிடையாது) இவை என்று பகுத்து ஆராய்ச்சி வேறு செய்யத் தொடங்கி விட்டார்கள். தமிழ்க் கவிதை நாடகங்கள் என்ற தலைப்பில் ஒரு பழங் கல்லூரி ஆசிரியர் ஆய்வே நிகழ்த்தியிருக்கிறார். கவிதையோ உரைநடையோ விஷயமல்ல. அது நாடகமா என்பதுதான் விஷயம். அரங்கக் கலை என்பது ஸ்கிரிப்ட் கற்பனையில் தயாரிப்பது மட்டுமல்ல. ஒப்பனையிலிருந்து, ஒளிஒலி அரங்க அமைப்பிலிருந்து நடிப் பிலிருந்து எத்தனை விஷயங்கள் அதில் இருக்கின்றன? பெக்கட் எழுதிய சில நாடகங் களில் காட்சிகள்தான் உண்டு. வார்த்தைகளே கிடையாது. இம்மாதிரி பேச்சுமொழி யற்ற-ஆனால உடல்மொழி மட்டும் கொண்ட நாடகங்களை நம் முத்தமிழ் அறிஞர்கள் எப்படி ஆராய்வார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

அவரவர் வேலையை அவரவர் நேர்மையாகச் செய்தாலே போதும், உலகம் மிகவும் பரிசுத்தமான இடமாகிவிடும். இன்னொருவரது வேலையை நாம் ஏற்றுச் செய்யவோ, பிறருக்கு அறிவு கொளுத்தவோ தேவையில்லை.
ஒருகாலத்தில் தொல்காப்பியம் வாழ்க்கைக்கு இலக்கணம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கைக்கு யாரால் இலக்கணம் வகுக்க முடியும்? வாழ்க்கை என்ன ஒரு சிமிழில் அடைத்துவிடக்கூடியதா அல்லது சில அறக்கோட்பாடுகளுக்குள் கட்டுப்படுத்தக்கூடியதா? காலத்திற்குக் காலம் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன? இவற்றையெல்லாம் எவராலேனும் ஒரு சிறுநூலுக்குள் அடைக்கமுடியுமா? தொல் காப்பியம் கவிதைக்கு-அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த கவிதைகக்கு-இலக்கணம். அவ்வளவுதான். இந்தக் காலத்திற்கே தொல்காப்பிய இலக்கணத்தைப் பயன்படுத்தமுடியுமா என்பது கேள்விக்குறி. தொல்காப்பியத்தில் எல்லாம் இருக்கிறது என்பவனின் மூடத்தனம், வேதத்தில் எல்லாம் இருக்கிறது என்று சொல்பவனின் மூடத்தனத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல.
மேற்கண்ட காரணங்களாலும் பின்னால்வரும் காரணங்களாலும் தமிழ் ஆய் வில் துல்லியம் குறைந்து இப்போது அறவே இல்லாமல் போய்விட்டது. ஆய்வின் துல் லியமும், ஆய்வுப்பொருளின் துல்லியமும் மிகவும் அவசியம். மேலே கூறப்பட்ட உதா ரணம்-பின்னமைப்பியம், பின்நவீனத்துவம் என்பவற்றைப் பலரும் குழப்பிக்கொள்வ தும் துல்லியமின்மைதான். அமைப்பியம் என்பதற்கு பதிலாக அமைப்பியல் என்றா லும் துல்லியமின்மைதான். தமிழில் கலைச்சொற்களின் துல்லியத்தைப் பற்றியோ, ஆய்வின் துல்லியத்தைப் பற்றியோ கவலைப்பட ஒருவருமில்லை. பிரபலமான ஒருவர் எழுதிவிட்டால் அப்படியே பின்பற்றுவது என்றாகிவிட்டது. எல்லாம் மரபுவழுக்கள் தான். வழுஅமைதியாக ஆக்கிக்கொள்க.

1975இல் பிஷப் ஹீபர் கல்லூரியில் சேர்ந்த நான் 2007இல் 32ஆண்டுகள் கழித்து ஓய்வு பெற்றேன். இந்த 32 ஆண்டுகளில் அநேகமாகப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கென எழுதிய கட்டுரைகள் ஆறு அல்லது ஏழு இருக்கலாம். அவையும் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களுக்கென எழுதப்பட்டவை. உதாரணமாக எங்கள் கல்லூரியிலேயே இரண்டு முறை பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற விழா நடந்திருக்கிறது. அந்த இருமுறைகளும் நான் எழுதியிருக்கிறேன். நான் பிஎச்.டி ஆய்வுசெய்யத் தொடங்கியபோது எனது தலைப்பை அறிமுகப்படுத்தி ஒரு கட்டுரை வரையுமாறு எனது நெறியாளர் கூறினார். அதற்காக ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதினேன். ஒருமுறை புதுதில்லியில் தமிழாசிரியர் மன்றம் நிகழ்ந்தபோது அதற் காகவே எழுதப்பட்ட கட்டுரை, ரஷ்ய உருவவியலின் கூறுகளை அறிமுகப்படுத்து கின்ற கட்டுரை. ஆனால் இப்போதெல்லாம் தமிழாசிரியர்கள் பல்கலைக்கழகத் தமிழா சிரியர் மன்றத்திற்கு ஆண்டுதவறாமல் கட்டுரை வரைகிறார்கள். காரணம் வேறொன் றுமல்ல-அக்கட்டுரைகள் யுஜிசியினால் அவர்களது படைப்பாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. அவ்வளவுதான்.
யுஜிசி ஊதியக்குழுவின் பரிந்துரைகளையட்டி அந்த ஊதிய விகிதங்களை அறிமுகப்படுத்தியபோது அவர்களுடைய விதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந் தம் நேரிட்டது. அதனால் சில ஆய்வுக்கட்டுரைகளை ஆசிரியர்கள் வெளியிட்டிருக்க வேண்டும் என்றானது. பின்னர் பிஎச்.டி. பட்டம் பெற்றோர் நெறியாளராகப் பணியாற்றவும் கட்டுரைகள், நூல்கள் தேவைப்பட்டன.

இடையில் மாலைநேரக் கல்லூரிகள் வந்தன. அவை பின்னர் சுயநிதிக் கல்லூரிகள் ஆயின. அவற்றில் வேலைசெய்பவர்களுக்கு யுஜிசி ஊதியம் பெறக்கூடிய அரசாங்க அல்லது உதவிபெறும் கல்லூரிப்பதவிகளில் சேர்வது ஒரு கனவு. அதனால் அவர்கள் நெட், ஸ்லெட் போன்றவற்றை எழுதநேரிட்டது மட்டுமல்ல, டி.ஆர்.பியின் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காகவே நூல்களை எழுதவேண்டிய அவசியம் நேரிட்டது. டிஆர்பியில் தேர்ச்சிபெற வேண்டி, எனது மாணவர் ஒருவர் (தெரிந்தே அது உருபைப் பயன்படுத்துகிறேன்) தம்முடைய பிஎச்.டி. ஆய்வேட்டைப் பகுத்து ஆறு நூல்களாக வெளியிட்டது நினைவிருக்கிறது. எழுத வேண்டிய நிர்ப்பந்தத்திற்காக- கணக்குக் காட்டுவதற்காக எழுதுபவர்களின் எழுத்தில் எவ்வளவு ஆய்வு நேர்மை, ஆய்வு மனப்பான்மை யெல்லாம் இருக்கும்?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நெறியாளர்கள் செய்யும் ஊழல். தங்களுக் குள் குழுக்கள் அமைத்துக் கொண்டு உன்னுடைய மாணவனை நான் தள்ளிவிடுகி றேன், என்னுடைய மாணவனை நீ குறைசொல்லாதே என்பதுபோல-பண்டப்பரிவர்த் தனையில் இறங்குகிறார்கள். நேர்மையாக மதிப்பீடு செய்பவரை ஒருவரும் மதிப்பதும் இல்லை, அவருக்கு ஆய்வேடு செல்வதும் இல்லை.

இவை யாவற்றிற்கும் மேலாக, ஆராய்ச்சி பொதுப்புத்தியினால் எடைபோடப் படுகிறது. அவர் மனத்தைப் புண்படுத்தக்கூடாது, இவர் மனத்தை பாதிக்கக்கூடாது, மதச்சார்பாளர்களை அவமதிக்கக்கூடாது, இந்தக் கட்சியை எதிர்க்கக்கூடாது, அந்தக் கட்சியைக் குறைசொல்லக்கூடாது என்ற நிலை. எல்லாம் எப்படியோ போகட்டும், எதுக்கய்யா நமக்கு வம்பு? முதலில் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்தானே?
ஆக இன்றைய நிலை, நான் பல ஆண்டுகளாக என் மாணவர்களிடையே சொல்வதுபோல, 100 பக்கம் எழுதினால் முதுகலை திட்டக்கட்டுரை, 200 பக்கம் எழுதினால் எம்.ஃபில் ஆய்வு. 300 பக்கம் எழுதிவிட்டால் பிஎச்.டி ஆய்வேடு. தலைப்பு உள்ளடக்கம் பற்றியெல்லாம் கவலை இல்லை. ஆய்வுநெறிமுறை பற்றிக் கவலையே இல்லை. அப்புறம் ஆய்வு எப்படி தமி ழில் வளரும்? அதுகூடப் போகட்டும், தமிழ் ஆய்வைப் பற்றிப் பிறதுறையாளர்கள் இடையே என்ன மதிப்பு இருக்கும்? தங்கள் மதிப்பைக் குறைத்துக்கொள்வதோடு, தமி ழின் மதிப்பையும் குறைத்து, இறுதியில் தமிழ் படிப்பதில் கஷ்டம் என்ன இருக்கிறது என்ற கேலிக்கு மொழியை ஆளாக்கிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழாசிரியர்களை யும் ஆய்வாளர்களையும் பார்த்தவர்கள் உயர் அதிகாரிகள் ஆகும் வாய்ப்பு நேரிட்டால் தமிழ்க்கல்விக்கு என்ன மரியாதை தருவார்கள்? கடைசியாகத் தமிழாசிரியரின் நிலை கமலாம்பாள் சரித்திரத் தில் வரும் ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளையின் நிலைதான்.

நாம் என்ன செய்தாலும் அது நம்மை மட்டுமல்ல, தமிழின் நிலையையும் பாதிக் கும் என்ற உணர்வு இருந்தால் ஒழுங்காகவே தமிழ் வளரும், தமிழ்க் கல்வி வளரும், தமிழ் ஆராய்ச்சி வளரும். ஆனால் சுயநலம் மிகுந்த இக்காலத்தில் இதைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் யார்? தமிழ்ச்சாதியில், தமிழ்நாட்டில் பிறந்துவிட்டோம். அதிலும் தமிழ் கற்கவும் தொடங்கிவிட்டோம். நாம் செய்யும் எல்லாக்காரியங்களும் தமிழின் மதிப்பையும் தமிழ்நாட்டின் மதிப்பையும் தமிழர்களின் மதிப்பையும் பாதிக்கக்கூடி யவை என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் காலம் மாறும்.

555882_475200095840939_39838795_n-1

 

 

Critical analysis on

மேற்கு நாட்டில் ஆய்வு வளர்ச்சி எந்த அளவு பெருகியுள்ளது

ஆய்வு நெறிமுறைகள்
ஆய்வு வளர்ச்சியில் சிறுபத்திரிகைகள் என்ன பங்களிப்புச் செய்தன?
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு போன்ற மாநாடுகள்
தனியார் அமைப்புகள், நிறுவனங்கள்
தமிழ் ஆராய்ச்சியை வளர்ப்பதற்கென சில தமிழ் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழ்ப் பல்கலைக் கழகம்
ஆசிய ஆய்வு நிறுவனம்
இதேபோல ஆண்டுதோறும் ஒருமுறையாவது எழுதவைக்கின்ற
பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்
மதுரையில் இதையட்டி இன்னொன்று தோன்றியது
பல்கலைக்கழக அமைப்புகள்
ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்
பல்கலைக்கழக ஆய்வேடுகள்வையை மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தில் தோன்றிய முன்னோடி அமைப்பு
பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆண்டுதோறும் இரண்டு ஆசிரியக் கருத்தரங்கங்கள்
அவற்றைத் தொகுத்து வெளியிடுதல்
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் மருதம் என்ற பெயரில் வெளியிட்டார்கள். இதுபோல அந்தந்தப் பல்கலைக்கழகம், கல்லூரி அவற்றின் ஆய்வுஅமைப்புகளுக்கும் வெளியீடுகளுக்கும் பெயர்களை நிர்ணயித்துக்கொண்டன.


Gnani’s Life and Achievements

new-ap4

 

 

1. Gnani (K. Palanisamy, b. ) was born in a simple family in a village in Coimbatore district in Tamilnadu. He had his school education in Coimbatore and studied Tamil literature in Annamalai University. He worked as a Tamil teacher for 30 years in a distinguished school in Coimbatore. Though he neither served in a college nor got a Doctorate in Tamil literature, his contacts with renowned Tamil scholars and his self-learning which has continued for more than 50 years, have endowed him with a deeper knowledge of Tamil literature, both ancient and modern. His involvement in Marxism and Tamil has shaped him into a critic of Tamil Literature and contemporary Tamil society. Though he has written more than 25 books in a Marxist perspective, he has always remained aloof from the Party Communists. He is always concerned with Tamil Vitue (Aram) and the Tamil way of thinking. In his view, Tamil Virtue implies equality and socialism. We can easily call Gnani a Tamil Marxist.

2. Though he had a formal education in Tamil, he was always concerned with the Little Magazine movement in Tamilnadu. He regards highly the service of doyens like C.S. Chellappa, Ka. Naa.Su and N. Pichamoorthy in the rejuvenation of Tamil. Though he has sometimes agreed and often differed with the views of Venkat Swaminathan, Pramil and Sundara Ramaswamy, he has always appreciated them for their service. Gnani has been editing little magazines for more than 40 years. First he edited Puthia Thalaimurai and Vaanampadi. Then with a few friends’ help, he ran Marxia Ayvithazh, Parimanam and Nigazh. Lastly, he edited Thamizh Neyam. His work with the Tamil Little Magazines has made his knowledge in modern literary movements extensive.

3. Gnani has great reverence for old scholars like Maraimalai Adigal, T.P. Meenakshi sundaram and V.Sp. Manickam. Likewise he appreciates the works of Ka. Naa.Su, N. Picha moorthy, Pramil, Jeyakanthan, Sundara Ramaswamy and lately Jayamohan. Like the ancient literature in Tamil, modern literature also has contributed to the growth of Tamil language. Gnani has proved that modern Tamil Literature is not less in richness or resources than the ancient.

4. The views acquired from the Little Magazines have provided the acumen to Gnani to understand the potential of ancient Tamil literature. Tholkappiyar’s Thinai Theory can be used for analysing the whole of Tamil literature. Along with Marxism, modern movements like Periyarism, Dalitism, Feminism, Postmodernism can contribute to the growth of Tamil literature.

5. Mere scholarship in Tamil or worshipping Tamil shall not make Tamil rich. Indian Government’s recognition of Tamil as a Classical language is a good opportunity for Tamil’s advancement. It could also be taken as the last chance for the rescue of the Tamil race. It is the Tamil scholars’ responsibility to ascertain the larger contribution of the Tamil civilization in shaping the Indian civilization. Exploration in various fields like Tamil Music, Tamil Medicine, Tamil architecture and sculpture, technology, agriculture, mathmatics, science and philosopy is the timely need to do this. Also, we can regain the expertise we had in these fields which were lost during the Medieval period. Continuation of the Indus valley excavation and the study of its hieroglyphics might help a lot to understand the Tamil contribution to Indian culture.

6. True Tamil scholarship will not prostrate before power, money or fame. During the Sangam period, poets and scholars had the power to advise the kings on the political happenings of their times. Today also poets’ service in this direction is needed. The perfidy of the political party leaders to Tamil shall be always despised by the Tamil scholars. Tamil Eelam’s liberation was ruined by them. What kind of future we can expect from them, for the freedom of the Tamils living in Tamilnadu?

7. Tamil research should not be confined to literature and grammar alone. It should be deeply concerned with the day to day problems of the Tamil people. Love for Tamil cannot be limited to language alone. Tamil way of living, Tamil Aram, the landscape, the water and land resources of Tamilnadu, its industrial growth – everything should be keenly attended to. Everybody involved in such matters should keep in mind the fact that we are the heirs of Valluvar, Ilango, Bharati and Bharatidasan. Verily we have to live by Bharatidasan’s dictum, Tamil is our soul.

8. One third of Tamil Literature is concerned with Bhakti. Raw rationalist approaches cannot help the study of Bhakti literature. Knowledge of many fields is a necessity.
Gnani expressess these views in all his writings which extend to more than 5000 pages in print. His life is in accordance to his views.

9. Gnani has never sought fame or greatness. He is always concerned with the tribulations of Tamil. In his writings he speaks about how the hard times came over to Tamil and the Tamil race. For example, the Indian government has accepted globalization, and through that, acknowledged the dominance of the world powers. Tamil Language and the Tamil people face destruction because of this move. We cannot agree with the Tamil politicians who cooperate with the Indian government. We have no future without socialism. In the above criticism, we hear the voices of the noble poets of Sangam in Gnani.

10. We can reread Tamil literature with the aim of developing a Tamil philosophy and enhancing our lives. We are still in need of Valluvar, Ilango and Seethalai Sathanar. Mere literary appreciation shall not help solve our problems. We have to find our stength and energy from our literature. Literary studies should go beyond language through society and history to philosophy. We can accept existentialist views which delve into the meaning of life. If we can follow Valluvar’s moral principles, Ilango’s revolutionary views, Kamban’s sensitivity, the Tamil race shall become everlasting and never fade, as Bharati said.

11. Because of his great reverence for the Scholars of Tamil Gnani says that he is only a student of Tamil. He works in congruence with the movements on Natural farming, Green movement, People’s rights movements and movements on Tamil Nationalism. In this also, he claims to be a student of Tamil.

12. Just by glancing over his 25 books, the Little magazines he has authored, and the collections of articles and short stories edited by him, and the collection of his writings published by Kavya we know about Gnani’s lifelong achievements. We understand that he is deeply concerned with the improvement of the Tamils, their lives and their history. Though his eyesight has been impaired for more than 20 years, we cannot but appreciate the tasks performed by him in this direction, without rest, only with the help of few assistants and friends.

13. Gnani joined hands with institutions like Ilakkiya Ayvarangu, Tamil kalam, Tamil Ariviyakkam, and lastly Tamil peravai. He has spawned a number of creative writers and Tamil scholars around Coimbatore. Though he himself is not a Doctor of philosophy, he has helped a few people in achieving that honour. He has participated and given monographs, beginning speeches and concluding remarks in many seminars and conferences held by almost all the Universities in Tamilnadu. Though he never went seeking awards, the awards (like Vilakku award) came to him voluntarily. The last award to him was the one given by Tamil Thottam, a forum run by the Eelam Tamilians of Canada in 2009.

 

NOTES ON GNANI’S WORKS

1. Indian Life and Marxism – foreword for a discussion (1976)
Gnani examines the relationship between Indian life and Marxism in this book. Without an internal compulsion, one shoul not accept the Marxism. Indians believe in a Supreme being. It extends beyond formal variations, rituals or myths. Gnani quotes here the words of Tagore that If we delve into the concept of the Supreme God, we only find ourselves seeking the principles of the universe, history and humanity. Gnani’s writing presents his faith in Unity in Diversity. If everything is Brahmam as put forward by the Vedanta philosophy, Indian religions and culture cannot stand in favour of class, caste or other differences. What religions say about Moksha or Mukthi or Parinirvana could be only paths leading to human liberation. Indian life can be understood through Marxism only. Ignoring the external manifestations of the religions, we should go to the basics and then only we can see God within us. Hence Indian life can be cherished only through Marxism. We should go deepex

2. A beautiful house on a sand dune (1979)
This is a critique on J. Krishnamoorthy’s concepts in his own style. Gnani interprets and criticises JK with deep reverence. He takes 30 important sayings from JK’s writings for examination and presents his own ideas thereon. JK’s ideas are like a beautiful house built on a sand dune. JK’s views cannot help us build our life. But his insights might help us. Gnani accepts JK’s ideas of Consciousness and awareness. Man should live in the present moment. He should not get frozen in old ideas. Gnani adds that even in a class struggle, man should possess perfect consciousness. Man is nothing without an awareness of the known. From his awareness, It is possible to renew himself. JK has no religion. But there is religiosity within him. With JK, there is the possibility of a remote God. His God is expressed through the words – Timeless, Which can not be known by us and Inner awareness. Marxism need not consider JK as an antagonist.

3. Kalligai (1984, 1986)
This is a long poem in the form of a free verse, inspired by the Vanampadi Movement which sprang up from Coimbatore. The story of Akaligai (Ahalya) in Ramayana has been recreated and rewritten by many writers, like Pudumaippittan, in modern times. Gnani has recreated the story with a Marxist outlook. This work is a simple evidence of the poetic talent which resides within Gnani.
Man is torn inside, when private property and the institution of state come into existence. On oneside private property and the state rule over him; on another side, religion ensnares him. Man is torn between these two. When society is divided into classes, this is the fate of man, as we can see from history. Until private property and state die away, this situation will continue.
Gnani sees man’s binded-ness in Ahalya. Torn between Indra and Gauthama, she chooses to become a stone and waits for the time when Rama will appear as a simple man, shorn of his crown and weath. The poem depicts her pitiable condition.
Rama, losing his wealth and right to the throne, takes the poor and the tribal people as his kith and kin. He destroys Ravana, who is in the zenith of his power. But when he returns to Ayodhya, he becomes an emblem of power, and sends Sita in exile. This is Gnani’s interpretation of Ramayana in the light of Marxism.
In this book, there is another poem by name Enakkul oru Vaanam (A sky inside me). Gnani’s friend Devaraj, who had faith in Marxist thought, became alienated within himself as a result of a family problem and committed suicide. Gnani tells his story with a few changes. This poem presents an elaborate view of the alienation theory. A Marxist party which has no faith in alienation can not help its members or the people. In this poem, Gnani deals with the stories of Yudhistra and Nala also, in this light.

4. Marxism and Tamil literature (1988)
This book is about 400 pages long. It contains about 30 articles written from 1970 to date. We have to emphasize that Gnani’s views are different from those of Party Communists, chiefly in that, according to Gnani, Marx’s theory of alienation helps not only to understand religion, but also art and literature.
Here Gnani analyzes a few literary pieces, taken from Sangam anthologies to Modern writings. The seven donors of the Sangam period were those that outlasted from an earlier socialist society. Private property and the state machinery came into existence gradually in the Sangam period. The Virtuous poets of the period did not approve of this change. They spoke against private property and the state. When the family system was established in favour of private property, Sangam period got terminated. After that, the bards and poets could not find any patronage. Having concubines became the way of life for the rich. The Party Marxists criticize that Valluvar, Ilango and Kambar were with the ruling class. Gnani emphasises that the great poets stood on behalf of the common man. Kambar spoke against the Ravanas found everywhere in the Chola period.
A socialist conception of society can be seen largely among the old Tamil poets. The
thoughts of Kaniyan Poongunranar through Valluvar and other great poets, to Siddhars reveal this. This point of view continues through Pudumaippittan and Jeyakanthan in modern times. Gnani does not approve of the Ezhuthu poets who lack a socialist stance. Man can revitalize himself only through close contact with Nature and Society. When he goes deep within himself, he understands the collective unconscious that binds him with society and nature, as Jung said. This collective unconscious becomes the fountain of poesy. Poesy is the name of the creative talent in Man. In this way Marxism and Literature join hands together. The poets of Vaanampadi had relationship with Marxism in this way. Party communists lack this insight. Gnani sees that Bharati was also a Siddhar within himself. Gnani’s views on Bharati’s Kannan pattu are commendable.
Gnani criticizes the views of Party Communists on Art and Literature. Reflection, according to Lenin’s view, is not passive, it is actively inspiring. There place for man’s reciprocity. Though it is a truism that environment changes man, Gnani emphasizes that man also changes his environment, according to Marx. Gnani does not approve of the theory of socialist realism put forward by the Communist party. It also controls man with its power. But artists always oppose domination in any form. Gnani speaks elaborately on the history and metaphysics that are inter woven and function in literature.

5. From a distance (Tholaivilirunthu-1988)
This book contains many of the short poems of Gnani. These poetic pieces express his experience of the changes in the family life due to his involvement in Vaanampadi movement. He distances himself to narrate how he came to be influenced by the Marxist Party which affected his family life. A few poems propose that he has come from a distance. He even does not want to trod on grass as it will be a show of his dominance over other beings. People are imprisoned by the party ideology. The pattern of socialism followed in the Soviet Union has caused a lot of pain to its people. His poems in this collections are completely devoid of any kind of rhetorical element. They are colourless. They might not be accepted as poetical compositions, but they are expressions of his deep insights. These poems show that spirituality is possible within Marxist thought also.

6. Tamil literature from a creative point of view (1994)
Glass is a miraculous thing in the sense that it is completely different from the sand and the limestone which went inside it. In high temperatures, they have combined to form a new object. This is the result of a leap, says Gnani. This is in accordance with the dialectic method. Literature is also born in this way.
Gnani extends the concepts of Muthal porul, Karupporul and Uripporul, and the theories of Akam and Puram (found in Sangam literature) to the literatue of modern times. He also applies the new concepts of Modernism and Postmodernism to Tamil literature in a creative way. Realism can not be destroyed. It can absorb Modernism and survive. Tamil literature has imbibed casteism and male domination. Our creative talent shall flourish only by getting rid of these evils. Postmodernism which speaks against domination cannot be an opponent of Marxism. Marxists can embrace the leftist views found in postmodernism.

7. Culturall crises in Tamilnadu(2004)
People think that Marxism has no future because of the end of socialism in Soviet Union. In reality, Soviet Socialism, which had taken in capitalist tendencies, only has been obliterated. Gnani opines that this is the time to show the real power residing within Marxism. This is also the view of Gnani’s Marxist Guru S.N. Nagarajan. Gnani analyzes the cultural problems of Tamilnadu in this light.
In late eighties, Dalit, Periyarist, Feminist views have taken root in some regions of Tamilnadu. The ideologues of these movements think that Marxism is a grand narrative and say that grand narratives have no future. Micropolitics and microideology only shall survive. But Gnani asserts that Marxism does not accept dominance in any form and discusses the above views.
For example, though Periyar first preached socialism, Periyarism opposes casteism, religion and brahminism severely, but it does not criticize private property or state power. Capitalism is contained within Periyarism. If we include socialistic thoughts in Periyarism, it can help us. The capitalistic forces and the market economy, along with the intervention of multinational companies in India have increased conusmerist tendencies to the maximum, which has caused the destruction of nature to the utmost level.
In the name of market economy, exploitation and dominance by the state have grown enormously. Dominance over Dalits and women have grown many times in this situation. Tamil language and Tamil Nationalism are subjected to danger. Though these are seen as cultural crises, these are really philosophical issues, as Gnani points out in the foreword. By only embracing the Marxist view which emphasizes socialism, we can purge away the capitalist tendencies found within Periyarist, Dalit, Feminist and Tamil Nationalist approaches.
This book is one of the finest works of Gnani.

8. Tamil Novels in Eighties (1994)
In this book Gnani discusses sixty five novels written by thirty Tamil writers during Nineteen Eighties. New approaches to the study of novel entered the Tamil field from the beginning of Eighties: A novel need not not have a plot with a centre; a story that connects all the aspects of a novel is not a necessity; in fact, no story at all is needed; especially stories in which the hero is in the centre, and other characters run around him, are condemned. The novel with a centre constructs dominance. All characters in a novel should have equal importance. The novel need not have a beginning, growth or end in the customary sense. It need not aspire towards social change.
Such novels have been written by Asokamitran, S. Kandasamy and Shankara Narayanan in the eighties. But Indra Parthasarathy, Rajam Krishnan and S. Samudram have written with a view that realism is still needed. Rajam Krishnan’s novels have recorded the Tamil society in many fields. Hence her place is in the first row of the Tamil Novelists. Though Samudram’s novels have flaws in construction, his novels emphasize social justice.
Gnani also takes into account new novelists like Rajeswari Balasubramaniam. This type of ‘novel’ studies are very much needed in Tamil.

9. Why God does not die (1996)
The essays in this book have been written with the idea that upto the time when mysteries about the Universe, history and the individual life are unravelled, the concept of god gets resurrected again and again. In these studies, Gnani has used the deconstructive method gainfully.
The Periyarists and the party marxists lack any insight into how the concept of god evolved and grew. Hence they could not find success in changing the common man’s belief in god, religion and mythology. Gnani provokes a discussion about the views of Periyar and party marxists.
He takes into account his own experience of advaita in his youth. Advaita is a peak experience. When it is brought to the mundane level, it becomes socialistic in nature. Vivekananda and Bharati did thus. Christianity has found a socialistic perspective in liberation theology. Hinduism is devoid of such ideas.

10. Modernism and Postmodernism in Tamil (1997)
The first article of this book is on modernism in Tamil. Other articles are on Marxism and Tamil traditon. The party Marxists oppose both modernism and postmodernism.
Gnani says that the ideas put forward by postmodernism – text, construction, deconstruction and so on – are in no way averse to Marxism. Instead they shall enhance the Marxist study of literature. He exemplifies this by analyzing three novels – Vaadamalli by S.Samudram, Kaathugal by M.V. Venkatram and Sarithirathil padintha nizhalgal by Thamizhavan. Gnani does not approve right wing postmodernism.
The article on Tamil tradition is an elaborate study on Dravidian movement. Periyar’s movement was only one of the branches of it. Another branch was promoted by Prof. Sundaram Pillai, who emphasized Saivism. Dravida Munnetra Kazhagam (DMK) is another branch which had roots in politics. Another important branch is the Tamil National movement which grows today.

11. Puthia Darisanangal-Literary merits and Politics (1997)
When the novel Puthia Darisanangal came out, Gnani identified it as the fittest one to receive Sahitya Akademi award and wrote this to Ponneelan, the writer of the novel. Gnani also takes into account the letters that came to the Novelist and the reviews published in the magazines. Some articles were written anew. These form the content of this book.
Puthia Darisanangal is a huge novel having about 1900 pages. Such a big novel – dealing with the days of emergency (declared by Indira Gandhi in 1975) – can not be written in any other language in India. The novel is about the communal clashes which took place in the southern part of Tamilnadu in the days of emergency. The developed Nadar community and the oppressed Mallar community fought with each other violently. Political parties intervened. With more than fifty characters, the story broadens like Akanda Kaviri. The members of the Communist party of India, who were with Indira Gandhi, met with defeat. Criticisms on the right wing communists, Dalit movement and Feminism abound in the novel. It is considered one of the greatest among Tamil novels. The articles of the book establish this fact.

12.Discourses on Tamil Nationalism (1997)
India has no federal system of government. Socialism has also been dropped from its agenda. The five year plans only helped the growth of capitalists. There is no coordinated growth among the various states.The Eastern states were neglected. Democracy was weak. With the growth of the military, the Central Government’s actions meted out only exploitation and oppression on the people. The Central Governement snatched the powers of the state governments. The needs of the states regarding their language, culture and economy were not attended to. Because of reasons like these, uprisings erupted in Kashmir, Punjab and other states. The Tamil people also are in need of a rebellion for their liberation.
This book was published in association with Tamizhiam. It contains speeches by comrades P.R. Kuppusamy, K.S. Anandan, Anaimuthu, Maniarasan, Tamilnadan and S.N. Nagarajan. It puts forward the history, philosophy, culture and literature for the liberation of the Tamil race. This book is an important document in clarifying the ideas on Tamil Nationalism.

13. Tamilanban’s creativity and his views (1998)
After the little magazines Ezhuthu and Ka-cha-ta-tha-pa-ra, among those who wrote with social content and beautiful imagery, Tamilanban is an important poet. He brought out more than ten collections of poems under the influence of Vaanampadi movement. Periyarism and Marxism found expression in him. Even in poetical forums, his poetic energy did not recede. He has written beautifully on Periyar, Bharati, Bharatidasan and Mao. He has written poems on contemporary problems, which are remarkable for their Dalitist, Feminist and Environmental awareness. In his recent poetry a metaphysical outlook overrules other thoughts. He went to America, but he has only criticized its dominance over other countries. He is not a great poet, but a few elements pointing to such a kind of poetic power are found in his poems. This book expresses Gnani’s views on poetry as well as Tamilanban’s admirable qualities as a poet. Gnani enumerates the superior poems from Tamilanban’s collections. Gnani’s book makes us feel for the scarcity of such criticisms on modern Tamil poetry.

14. Marxism shall not fade (2001)
Is Marxism just a political ideology or an economic theory? If it is politics, what kind of politics is it? If it is on economics, what kind of economic views are presented in it? Is dominating over others acceptable to Marxism? Why socialism had been thrown out of Soviet union? What was the necessity for the atrocities committed in the Stalin period? Mao told that one cultural revolution is not enough, thousands are necessary. Is it true that all of us can survive only through destroying nature? Thinking on Marxism, many such questions arise in our minds. What is Marxism basically? Dominance always destroys the people who are under it as well as who dominate them. Exploitation and oppression destroy human life. We have no need for dominance in any form. We have no need for war. We have no need for competition and envy. Working and sharing are the best principles to live with. Life finds its meaning only through these principles. Man cannot afford to lose such principles. Hence Marxism shall not fade out of history. These are the main points discussed in this book.

15. Rereading Tamil literature (2001)
Old Tamil literature comprising Sangam poems, Tirukkural, Silappathikaaram, Manimegalai, Perunkathai and Kambar’s monumental epic-these all have been praised with great fervour until now. What is the reason behind this? These literatures have some life within. To bring out this living impulse, we have to employ rereading. We all have creative and critical faculty within us. Contemporary history and social relationships reside within ourselves. With these faculties, we interpret and reinterpret ancient literatures according to our views and times. We cannot read Valluvar’s or Ilango’s writings according to their times or their experiences. Parimelazhagar and others interpreted Valluvar according to their own times and experiences. We can interpret great authors like Valluvar according to our intentions. Great literatures come near us in this way. Gnani emphasizes reading according to our times in this book. This is considered an important work of Gnani.

16. From opposite angles (Philosophy, Religion and Humanity-2002)
Many questions arise when we study philosophy, religion and humanity. They intervene and oppose each other. Religion tries to interpret the meaning of life. But we have no one particular meaning. Many and many are there. Philosophy analyzes human nature. There is no single philosophy. There are many many. Religions are also many. What is the meaning of life? There are many answers to the question. But every answer contains truth in some way, partially. There is no movement without oppositions. Research also functions like this. It has no end.
There are many types of articles in this book. Gandhism or Marxism? Religion or Humanism? There is an article on J. Krishnamoorthy. An article on Bernard Shaw is also there. Gnanai says that Shaw was a scientist. The article on Shaw says that the western concept of Existentialism is also needed for us. Shall brahminism come to an end? Could we get rid of it? How can we remove the brahminism which is in our minds? Till religions are there, religous clashes shall arise. Could we get rid of religions? Is it necessary? Capitalists exploit people. But even in the socialist period exploitation might continue. When shall it come to an end? Thinking from opposite angles is a necessity for us.

17. From poetry to metaphysics (2002)
Gnani has written a lot on Tamil poetry and Tamil poets. But evaluating a particular poet is not his method. He searches for the poesy residing within the poet. There is nobody without poetic faculty. A poet finds the poesy within his mind. He surrenders himself to it. Then he could not but write poetry. Poetry springs from the unconscious. This unconscious is not a particular individual’s. As Jung says, this is the collective unconscious of the society. When a man gets into this collectivity, he loses himself. He dissolves in the society and history. Then there is only the humanity which is the oldest and original. The poet becomes a Siddha or Buddha. Sky and Earth serve him. He is the original poet. He is a philosopher. Poetry begins as poetry, but dissolves into philosophy.

18. Tamil, Tamilians and the Tamil movement (2003)
We live with great hardships like globalization. The Tamils have 5000 to 10000 years of history and tradition. How are we going to survive and save ourselves from the contemporary difficulties? How to face this question? Our Sangam literature is great poetry. How great is Tamil Grammar! Tamil music and Tamil system of medicines are really very subtle. Can any equivalence to Tamil sculptures be found? Tamil civilization is no less equal to the world’s great civilzations like the Greek and Chinese. Can we afford to lose it in today’s critical position? Tamil is not the medium of education in our schools today. Tamil is not the official language today. Even in Temples Tamil is not found. English dominates everywhere. Tamil poets like Valluvar and Ilango are not respected. There is no Tamil education. How did we end up in this pathetic situation? Shall any state power rescue us? Shall any of the Tamil movements save us? Gnani is accosted with hundreds of such questions in this book.

19. Searchings and findings from Tamil Novels (2004)
This book contains criticisms on more than forty Tamil novelists’ works. It has criticisms on writers like Ka. Naa.Su, Nakulan, Sundara Ramaswamy, Ashokamitran, Jeyakanthan, La. Sa. Ra. and M.V. Venkatram who belong to the previous generation. Gnani also analyzes the next generation writers like Jayamohan, M.G.Suresh, Shankara Narayanan, Balakumaran, Chinnappa Bharati and Ponneelan. Some Novelists are taken as a whole; while only one particular work of a few novelists is taken for analysis sometimes. When Gnani enters into a novel, he first views the characters’ experiences-how they are connected with history and contemporary society. Then he goes on to study the novelists’ point of view of history and social ideas within their ideological stances. Sometimes he goes even beyond their historical viewpoints. He questions the limited ideological standpoints of the novelists and comments that if they had augmented their ideas they would have created better novels and better characters. These articles are examples of Gnani’s minute critical faculty.

20. Tamil way of life – its path and direction (2005)
Tamil Siddhars’ Literature is the centre of whole Tamil literature. This is the main idea behind many of the articles in this book. Siddhars have no caste, no religion, no rituals. They are theists, but their gods have no form, no worship. No confusions. When we go deep into the thoughts of Valluvar, Ilango and Sathanar, we find their ideas are almost similar to Siddhars’. Kaniyan Poongunranar is also a Siddhar. Sangam poets did not give importance to private property and state power. In Bhakti literature we see that God is in the form of love, God is love, and He is bound by love. Kambar’s depiction of God is also similar to this. Tamil Aram or virtue is the only Tamil way of life. Periyar, Jeyakanthan and Pudumaippittan can also be seen only in the light of Thayumanavar and Vallalar. What is the path and direction of Tamil life, according to Gnani? Tamil way is the way of Siddhars. It is the Way of equality, Way of socialism. We don’t need discrimination of any sort. We don’t need any domination. Working and sharing are the highest virtues.

21. God, I and forty years (2006)
While studying in Annamalai University, Gnani was attracted by the thoughts of Vivekananda and Aurobindo. He studied them deeply. He felt in his meditation (Dhyanam) that he was also Brahmam. What he learnt from childhood, the ideas and images of grown up people and religionists, expressed themselves in the experience of Gnani inside and outside. This is according to the explanation given by William James. The image of the Brahmam he felt inside was a deep, dense Superior feeling. How to understand it? Even if we use scientific methods to study the Universe, history, nature and human life, the concept of God evades us as a mystery. God lives in riddles. For forty years, Gnani has the experience of searching God within and without. God is a great puzzle, it evades our search.

22. Valluvar’s ethics and aesthetics (2007)
We read Thirukkural even now, in the beginning of the twentyfirst century. The concepts of Valluvar look very contemporary. Had Valluvar faith in God? In the first Kural he worships Adhi Bhagavan. He is not a god. Then he reveres Rain. Then he praises those who have renounced their worldly desires. Then he reveres Virtue(Aram). In the two paths of virtue, the familial gets the first place. Renunciation comes only next. He loves children, venerates motherhood. He scolds false renouncers. Man can overcome his destiny. Even if you are refused a heavenly place, help others. The use of wealth is in giving away to others. If a village pond is full, it is used by all the people. Similarly, if wealth accumulates in one place, it should be used by all. Renouncing is nothing but enduring one’s sufferings. Valluvar reveres peasants. He talks about natural medicine. The king who gathers tax by torturing people is a thief. Army shall not give a king victory. For the virtuous, poverty is a beauty. One who is not affected by any kind of calamity is a virtuous man. Valluvar venerates the wise. Venerates love. Study of Tirukkural is an urgency for us all.

23. Tamil philosophy, then and now (2008)
Philoshophy is taken to be religion by many rationalists. Marxists believe that dialectics is the philosophy of Marxism. We fail to see the philosophy of life put forward by Tamil literature. Philosophy searches for a meaning for life. It is not limited to religious definitions. Rationalists and Marxists cannot find satisfaction without searching for the philosophical truth. Sekkizhar reduced Meypporul Nayanar as a Saivist. He could not see the truth inside him. Enmity does not give meaning to life. One who goes beyond enmity is a philosopher. Meypporul Nayanar behaved like one.
In this collection, two articels are important. One is on the philosophy found in Sangam literature. The next one is on Valluvar’s philosophy. The man who has renounced all his desires becomes a part of nature, like a plant, like a flower. Valluvar calls this Unchangeable Nature. Philosophy gives satisfaction to life. Kopperun Chozhan thus only conquered death. How many poets died with him and how?

24. Nigazh anthology of articles (2009)
The magazine Nigazh was started in 1983 with the help of friends. But Gnani himself brought it out individually from 1988 to 1986. Totally 32 issues. After the expulsion of Socialism from Soviet Union, Marxism lost its respect worldwide. In this situation, Tamil thinkers began talking about Periyarism, Feminism, Dalitism and Postmodernism. Gnani published articles in Nigazh which clarified that what was lost in Soviet Union was not true socialism, it was socialism which contained capitalism within it. If we expel the capitalist aspects found within contemporary Marxist thought, it shall flourish. Marxist thought which gives importance to politics and economy shall not win. It should gather ideas from movements like Periyarism. Nigazh brought out many articles through friends which support this point of view. They wrote on politics, economy, spirituality, Natural agriculture, liberation theology and so on. Literary creations, critical articles, poems, stories, research articles and reviews were published in Nigazh. Nigazh’s achievement is great in the history of Tamil little magazines. Excluding articles on literature, Gnani arranged ninety five essays on other subjects, around 1000 pages, to be published as a book by Kavya publication. Good translations were also published. Articles by thinkers around the world, which came close to Marxist thinking were also published. Gnani is happy that this collection of articles is worthy to be published in any language of the world.

25. Sangam literature, a classical view (2010)
The Indian government accepted Tamil as a classical language. This is a good opportunity to spread the greatness of Tamil, Tamil history and Tamil culture. Gnani published this book with a view of analyzing Sangam literature with a classical point of view. He presents evidences from Sangam literature, Tirukkural and Silappathikaram which expound the Tamil Virtue. Tamil Virtue only can save the Tamil race. Tamil virtue is nothing but socialism and equality, which are greatly needed now.
When the tribal Tamil society was transformed into a feuda socieity which favoured private property and state power, the equality found in the tribal community was taken as the principal value by the Tamil poets of virtue in the Sangam age. This Tamil Aram or virtuous principles has been present continuously in the minds of the Tamil poets all through the twenty centuries. This is the humanist essence found in Tamil literature. Gnani proves these, in every article found in this book. This is one of the important works of Gnani.

26. Tamil Literature-present and future (2010)
Man is the centre of any literary writing. When a protagonist is portrayed as a lover, a hero who carries out the orders of the king, a saint, or a merchant, the human essence in the centre is forgotten. The protagonist in religious literature is a Saivaite or Vaishnavaite. In the epics he is a great hero. A king who conquers many countries. All along the times, literature has depicted man like this, reducing or expanding him. But Sangam literature is an exception. In our times, man has been portrayed with his essential self. He has freed himself from religious dominance, from commerciality, from lust and other evils. He is by nature a poet himself. He loves nature. He shares himself with others. He is the worker, giver of meaning to the world, one who has dissolved himself in the universe. We have to find him in Tamil literature.

27. Vaanampadi movement, its history and learnings (2011)
In the New poetry movement of the 20th century, Vaanampadi movement founded in Coimbatore in the seventies became a turning point. In its beginning fervour, it made hundreds of youths write poetry. It grew analysing social crises in the Marxist point of view. Poets like Puviyarasu, Sirppi, Mehta, Agniputhiran, Tamilnadan actively participated in this movement. Gnani, Jana.Sundaram and Jeeva Oli joined hands with them. Formerly, in the New poetry movement started by N. Picha murthi, Ka. Naa. Su and C.S. Chellappa, a social dimension was missing, and it was added by Vaanampadi movement. It became a turning point thus. But difference of opinion split the movement. Though Vaanampadi brought out only twenty two issues, the movement is an achievement in the long history of Tamil poetry. Gnani had participated in the movement as a poet and critic. He has written about the history and teachings of the movement. This book is an evidence of Gnani’s terse critical writing.

28. Marxism and the liberation of humanity (2012)
An important article in this collection is by name, ‘What is our future-Socialism or annihilation?’ The Multinational companies bring everything in the world under their control. They destroy nature and call it industrial growth. Water, earth and air are denatured and polluted. Consumerism makes people dacoits and destroyers. These should be stopped at any cost. Natural resources are open to all humanity. They are free for every human being. Since they began to be sold, crores of people suffer for a good life. All kinds of dominance should be curbed. This is the essence of Marxism. Socialism is the only aim of Marxism. Only if we accept Marxism, we have future. Marxism is the only way for human liberation. Buddha, Jesus, Valluvar and Vallalar inspire this Aram within us.

29. Why God is not dead yet? ( )
Periayarists and Marxists have no faith in the existence of God. In Tamilnadu, though the rationalists and Marxists have tried to root out God, people have not lost faith. Gnani probes for an answer for this situation. Gnani writes about his college day experience of feeling wonderfully, ‘I am the Brahmam’ and why he left the belief in god afterwards. The mysteries found in human life and nature are the reasons behind the faith in God. Gnani examines the views of renowned religious leaders and scholars. He raises questions about the experiences of these so- called scholars. When hardships tend to increase in a society, new religious leaders and new gods are produced.

30. Why we need Tamil nationalism ( )
Tamilnadu has an ancient history and culture. But Tamil people are losing their dignity in Tamilnadu. Tamil is not the medium of instruction. Tamil is not the medium in temple worships and courts. Tamil is not the official language. In the central governance, Tamil has no place at all. Tamilians could not fight for their own race, the Tamils of the Eelam. The Tamilnadu government cannot safeguard Tamil language, Tamil people and their rights and the Natural resources of Tamilnadu. The constitution of India does not accept the sovereignity of its national races. The English who governed formerly, for their commercial needs, constructed India as an artificial state with military strength.Even now, India remains a subcontinent rather than a nation. The regional states quarrel among them. A state which has developed, exploits other states which are undeveloped. The Indian government oppressed the fight of the Kashmiris for their freedom. All powers reside only in the centre. Only by acknowledging the centre, the states can survive. Hence it is the necessity of the regional states have to fight for their liberation. Tamil people should fight for their liberation.

31. Parimaanam-collection of articles (2012)
Many changes occurred worldwide in Marxist theory during 1978 to 1985. Gnani, with a mind to discuss about these changes, with the help of a few friends, published the magazine Parimaanam. Fourteen issues came out. The last three issues were published from Chennai with S.V. Rajadurai as editor. Exhaustive articles on Soviet and Chinese varieties of Marxism, and articles written by Scholars on Indian history have been published. Critiques on Periyarism, Kamba Ramayanam and Tamil philosophy are also found. Every issue contained an editorial by name Nam Parvai (Our view). Articles on alienation theory were written by S.N. Nagarajan and S.V. Rajadurai and their interviews were also brought out. Parimanam is an individual achievment which the Party marxists could not do in India.

32. Tamil Neyam-Inside and Outside (1998-2005)
In the Tamil Neyam magazine, run by Gnani from 1998 to 2005, a feature called Akamum Puramum (Inside and Outside) took place in each issue. It talked about the social problems of the Tamils. Topics varied from Koodankulam, Sethu strait Project, Mansanto seeds, the struggles of the Eelam Tamils etc. to the achievements of some Tamil scholars. Opinions in this article were straight forward and terse. Tamil readers used to read this feature with deep interest. Gnani has recorded his inner feelings in this feature. He wrote about American power mongering, the cooperation of Indian government with that and the antagonistic behaviour of the Tamil politicians. Puthuppunal published this collection (about 250 pages) in 2013.

33. Puthupunal-Akamum Puramum (2011-2013)
After Tamil Neyam, Gnani continued the inside and outside feature in Puthuppunal magazine during 2011 and 2012. These were collected and published as a book by Puthuppunal publications.


திராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை

thiraavida-iyaaka-1

இருபதாம் நூற்றாண்டில் மூன்று இயக்கங்கள் தமிழ்நாட்டில் முதன்மைபெற்றன. அவை தமிழக இலக்கியப்போக்குகளையும் தீர்மானித்தன. தேசியம்-காந் தியம் என்பது முக்கியமான ஓர் இயக்கமாகச் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் அமைந்தது. பாரதி, வ.வே.சு.ஐயர் முதற்கொண்டு பல எழுத்தாளர்கள் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அதற்குப் பின் திராவிட இயக்கம் மதிப்புப் பெற்றது. கடைசியாகத் தமிழகத்தில் வந்த இயக்கம் மார்க்சியம்.

காந்திய இயக்கத்தினர் நாவல், சிறுகதை, கவிதைத் துறைகளில் ஓரளவு ஆக்கம் புரிந்தபோதிலும் திறனாய்வுத்துறையில் அவ்வளவாக ஈடுபடவில்லை. இருபதாம் நூற்றாண்டில் காந்தியவாதிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் எஞ்சியவர்கள் நாமக் கல் கவிஞரும் சி.சு. செல்லப்பாவும் மட்டுமே.

ஆங்கிலேயர்கள் ஏறத்தாழ இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சிக்கீழ் கொண்டுவந்தபோது, இந்தியா முழுவதும் சமஸ்கிருதக் கலாச்சாரமே நிலவுவதாக நினைத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கு ஒரு தாழ்வுணர்ச்சி ஏற்பட்டது. சமஸ் கிருதத்தை விடப் பல நூற்றாண்டுகள் பின்னர் தோன்றியவை ஐரோப்பிய மொழி கள். அவை தங்கள் கலாச்சாரத்தை இந்தியாவில் புகுத்த முற்படும்போது தாம் அடிமைகளாக இருந்து அதை ஏற்றுக் கொள்வதா என்ற எதிர்ப்புமனநிலை தோன்றியது. இதனால் தேசியவாதிகள் சமஸ்கிருதத்தின் மேன்மை, இந்திய நாகரிகத் தின் பழமை, வேதங்களின் தொன்மை, உபநிடதங்களின் பெருமை போன்ற வற்றை வலியுறுத்தலாயினர். இந்தியா முழுவதும் ஒரு சமஸ்கிருத எழுச்சி ஏற்பட்டது. இதற்கு சமஸ்கிருத மொழியிலிருந்து நூல்களை மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்ததும் உதவியது.

இந்த சமஸ்கிருத எழுச்சியை தேசியவாதம், இந்திய சுதந்திரப்போருக்கு ஆதரவாக மிக நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது. பாலகங்காதர திலகர், காந்தியடிகள், வினோபா பவே போன்ற தேசியவாதிகள் பலரும் பகவத்கீதைக்கு உரை எழுதினர். மேலும் தேசிய இயக்கம், இந்தியா என்ற கற்பனையான ஒற்றைத் தேசத்தைக் கட்டி யெழுப்பி, அதற்கு ஒற்றைத் தேசியமொழியாக இந்தியை முன்வைத்தது.

இந்தியா முழுவதும் சமஸ்கிருதக்கலாச்சாரம் உண்மையில் என்றும் நிலவவில்லை, இன்றும் நிலவவில்லை. சமஸ்கிருதத்தை முற்றிலும் தவிர்த்தும் இயங்கக் கூடிய முக்கிய மொழியாகத் தமிழ் இருந்தது. சமஸ்கிருதத்தினாலேயே ஒதுக்கப்பட்ட,, ‘தேசி’ என்று சொல்லக்கூடிய நாட்டார் கலாச்சாரங்களும், பழங்குடி இனத்தவர்களின் கலாச்சாரங்களும் இருந்தன. தெற்கில் திராவிடக் கலாச்சாரம் இருந்தது. மேலும் இந்தியாவில் முஸ்லிம்களும், கிறித்துவர்களும், பார்சி போன்ற பிறமதத்தினரும் இருந்தனர். இந்தியக் கலாச்சாரம் உண்மையில் பன்முகத்தன்மையுடையது. சமஸ்கிருதம் அல்லது இந்துமதம் என்ற ஒற்றைக் கலாச்சார அடையாளம் உடையதல்ல.

எனவே தேசியத்துடன் சமஸ்கிருதமும் இந்தியும் சேர்ந்துவந்தபோது அதை ஏற்றுக்கொள்ளத் தமிழகத்தில் மனத்தடை ஏற்பட்டது. சமஸ்கிருதத்திற்கு இணையாகவோ அல்லது அதற்கும் முற்பட்டதாகவோ உள்ளதோர் கலாச்சார அடையாளத்தைக் கொண்டவர்கள் தமிழர்கள். எனவே தமிழர் தங்கள் அடையாளத்தை முன்வைக்க முற்பட்டனர். கலாச்சார அளவில் வடமொழியை எதிர்ப்பதாகவும், ஆதிக்கநிலையில் இந்தியை எதிர்ப்பதாகவும் இது அமைந்தது.

இன்னொரு வகையிலும் இந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1909இல் மிண்டோ மார்லி குழு இந்தியாவுக்கு வந்தபோது இந்தியச் சாதிகளை வகைப்படுத்த வேண்டிய நிலை உருவாகியது. சாதியடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கை எழுந்தது. பார்ப்பனர்களே எல்லாப் பதவிகளிலும் அமர்ந்திருந்த நிலையில் அடுத்தநிலையில் படித்திருந்தவர்கள் தங்களுக்குப் பதவிகளில் தக்கவாறு இடஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்டனர். தமிழகத்தில் பார்ப்பனர்-அல்லாதார் என்ற பார்வை உருவாக இதுவும் ஒரு காரணம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிந்துவெளி அகழ்வாய்வு நடத்தப்பட்டது. சர் ஜான் மார்ஷல், இதனை நடத்தியவர். ஹீராஸ் பாதிரியார் சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முற்பட் டவர். இவர்கள் இருவரும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்ற கருத்தை வலுவாக முன்வைத்தனர்.

ஏற்கெனவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ராபர்ட் கால்டு வெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி, திராவிட மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளினின்றும் (சமஸ்கிருதம் இந்தோஐரோப்பிய மொழிகளில் ஒன்று) வேறுபட்டவை, தமிழ் அதன் மூலமொழி என்ற கருத்தை முன்வைத்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கப்படலாயின. சங்கஇலக்கியங்கள் வாயிலாகத் தெரியவந்த கலாச்சாரம் முற்றிலும் வடநாட்டுக் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக, சிறந்ததாக இருந்தது.

இவை அனைத்தும் தமிழின் மேன்மையான இடத்தையும், திராவிட மொழிகளில் அதன் முதன்மையையும், சமஸ்கிருதத்தைவிட மூத்ததான அதன் கலாச்சாரத்தை யும் வலியுறுத்துவனவாக அமைந்தன.

எனவே 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்தே திராவிட நாகரிகம் பற்றிய சிந்தனையும் தமிழரின் தொன்மை பற்றிய சிந்தனையும் தமிழ்ப்பற்று மிக்க சிந் தனையாளர்களிடம் தோன்றியிருந்தன. இவ்விரண்டின் முதற்பிரதிநிதி பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை.

     ஆரியர் X திராவிடர், (ஆரியர்கள் = பார்ப்பனர், திராவிடர்கள் = தமிழர்)

     ஆரியரது மொழி சமஸ்கிருதம் X திராவிடரது மூலமொழி தமிழ்,

     ஆரியக் கலாச்சாரத்தை வலியுறுத்துவோர் பார்ப்பனர் X அதனை எதிர்ப்போர்      திராவிடர்

என்ற வகையில் இருமை எதிர்வுகள் முன்வைக்கப்பட்டன. (இன்றும்கூட பார்ப்பனர் கள் நடத்தும் உணவுவிடுதிகளுக்கும் ஆரியவிலாஸ் என்று பெயர்வைப்பதையும், பார்ப் பனர்கள் மட்டுமே ஆர்யா என்று பெயர்வைத்துக்கொள்வதையும் காணலாம். இது இன்றும் மேற்கொண்ட கொள்கைக்கு ஆதாரம் இருப்பதை நினைவூட்டுகிறது.)

இந்த எதிர்வுகளை உட்கொண்டு எழுந்ததுதான் திராவிட இயக்கம். எனவே திராவிடர் இயக்கம், பழமைவாத, மீட்புவாத இயக்கமாகக் காலத்தின் கட்டாயத்தினால் தோன் றிய ஒன்று.

ஆனால் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்குமான முரண் பழங்காலத்திலேயே தோன் றியிருந்ததை நம்மால் உணரமுடிகிறது. நக்கீரர் பற்றி வழங்கிவரும் கதை இதை உணர்த்தும். குயக்கொண்டான் என்பவன் சமஸ்கிருதம் உயர்ந்தது என்று வாதிட, நக்கீரர் தமிழே உயர்ந்தது என்று வாதிட்டும் இறந்தவனைப் பிழைக்க வைத்தும் நிரூ பித்ததாகக் கதை. இதனைத் தாழ்வு மனப்பான்மையினால் எழுந்த கதை என்றுதான் மதிப்பிட முடியும். இந்தத் தாழ்வு மனப்பான்மையை தமிழுக்கு இலக்கணம் எழுத முன்வந்தவர்களிடமும் காணலாம். இலக்கணக் கொத்து எழுதிய சாமிநாத தேசிகர் என்பவர், “ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவும் நாணுவரே அறிவுடை யோர்” என்று தமிழை இழித்துக் கூறியுள்ளார்.

’1800ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலினைப் படைத்த வி. கனக சபை, பழந்தமிழர் நாகரிகம் குறித்தும் திராவிடர் வரலாறு குறித்தும் முதன் முதலில் சிந்தித்தவர். திராவிட இயக்கத்தின் பிற முன்னோடிகள் எனப் பின்வருவோரைக் கூறஇயலும்: பரிதிமாற் கலைஞர், (பார்ப்பனராக இருந்தாலும் தனித்தமிழ் வளர்க்க முற்பட்டவர், தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை முதன்முதல் வலியுறுத்தியவரும் ஆவார்), ஞானியாரடிகள் (சைவப்பற்று மிகுந்தவராயிருந்தாலும், திராவிட உணர்வி லும் தனித்தமிழ்ச் சிந்தனையிலும் ஈடுபட்டவர், இந்தித்திணிப்பை எதிர்த்தவர்), திரு.வி.க. (தூய தமிழும் காந்தியமும் சமுதாயச் சிந்தனைகளும் வளர உழைத்தவர்), இப்படிப் பலர் தமிழகத்தில் பழந்தமிழ்ச் சிறப்பையும் திராவிட இனப்பற்றையும் வளர்த்தனர். முற்றிலும் காந்தியவாதியாக இருந்த திரு.வி.க.வும், காங்கிரஸ் இயக்கத் தில் காணப்பட்ட பார்ப்பன ஆதிக்கம் காரணமாகவே திராவிடச் சார்புக்கு மாற நேர்ந்தது.

‘திராவிட’ என்ற சொல்லை அமைப்பு ரீதியாக முதன்முதலாகப் பயன் படுத்தியவர் டாக்டர் சி. நடேசன். 1912இல் உருவாகிய சென்னை ஐக்கிய சங்கம் என்னும் அமைப்பிற்கு 1913இல் திராவிடர் சங்கம் என்ற பெயரை வைத்தவர். (திராவிடன் இல்லம் என்ற மாணவர்களுக்கான விடுதியையும் நடேசன் நடத்தினார்.) இந்தத் திராவிடர் சங்கமே நீதிக்கட்சியாக மாறியது என்று கூறுவர். 1925 காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியார் காங்கிரஸிலிருந்து பிரிந்து திராவிட இயக்கத்தைத் தொடங் கினார். (இதற்குப் பின்னணியில் வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய பாட சாலையில் உணவுப்பரிமாறலில் சாதிய நோக்கு கடைப்பிடிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் இருந்தன.)

     பழங்காலத்தில் திராவிட என்ற சொல் தமிழை மட்டுமே குறிப்பதாக சமஸ்கிரு தத்தில் கையாளப்பட்டது. அது தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுபவர்களைக் குறிக்கவில்லை. திருஞானசம்பந்தரை சங்கராச்சாரியார் திராவிட சிசு என்று குறித்தது நோக்கத்தக்கது. சமஸ்கிருதத்தின் வாயிலாக இந்த நோக்கு மலையாள, கன்னட, ஆந்திர மாநிலங்களில் பரவியிருந்ததால் அங்குள்ளவர்கள் தங்களை திராவிடர்களாக எண்ணவே இல்லை என்பது நோக்கவேண்டிய ஒன்று. ஆனால் தமிழகத்தில் மட்டும் சில ஆந்திரர்களும் மலையாளிகளும் நீதிக்கட்சியில் ஈடுபட்டிருந்தனர் (அவர்களும் திராவிட என்ற நோக்கினை ஏற்றவர்களா என்பது சந்தேகத்திற்குரியது.)

     1944 ஏப்ரல் 4இல் சேலத்தில் நடந்த மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்ற அண்ணாதுரை தீர்மானம் கொண்டுவந்தார். (சக்கரவர்த்தி இராஜ கோபாலாசாரியார் கொண்டுவந்த குலக்கல்வி முறையும் இந்தித்திணிப்பும் ஓரளவு இதற்குக் காரணங்கள். 1938இல் இதற்குமுன்பே முதல் இந்தி எதிர்ப்பு இயக்கம் தோன்றிவிட்டது.) அண்ணாவின் தீர்மானத்தை ஏற்ற பெரியார் ஈ.வெ.ரா., புதிய இயக்கத்தை ஆரம்பித்தார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து திராவிடர் கழகம் உருவாகியது. சில ஆண்டுகள் பின்னர், பெரியார் ஈ.வெ.ரா. திருமணத்திற்குப் பிறகு “கழகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகக் கழக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டன.”

     இந்நிலையை    மாற்றப் பெரியார் தலைமைப் பதவியை இராஜிநாமா செய்

     யாமல் கழகத்தில் செயலாற்றிக் கொண்டிருப்பதால் இப்பொழுதிருக்கிற நாட்டு

     நிலையில் மக்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரிதும் ஊறு பயக்கும் என்று

     இக்கமிட்டி கருதுவதால் கழகக் கொள்கைகளும் இலட்சியமும் நசுக்கப்பட்டுப்

     போகும் என்று அஞ்சுவதால் திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை

     ஏற்படுத்திக்கொண்டு செயலாற்றுவது

என்று தீர்மானம் கொண்டுவந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அண்ணா.

     சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இலக்கியநோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. பகுத்தறிவை வலியுறுத்துகின்ற சிந்தனை பெருகியது. 1930 முதல் 1965 வரை பேசியும் எழுதியும் பகுத்தறிவுக் கருத்துகளை வளர்த்துவந்தனர் திராவிட இயக் கத்தினர்.

     திராவிட இயக்கங்கள் செய்த பத்திரிகைப் பணி குறிப்பிடத்தக்கது. வடமொழி கலவாத தமிழை ஜனரஞ்சகப்படுத்தியதில் இப்பத்திரிகைகளுக்குப் பெரியபங்குண்டு. நாவல் சிறுகதை போன்ற துறைகளில் சாதனை படைக்கவில்லை என்றாலும், திரைப் படம், நாடகம், கவிதை, பத்திரிகைத் தமிழ் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தது திராவிடஇயக்கம். பட்டிமன்றம் என்ற புதிய சமூகநிகழ்வினை அறிமுகப்படுத்தியதும் திராவிட இயக்கமே.

     பெரியார் 1925ஆம்ஆண்டு குடிஅரசு வார இதழைத் தொடங்கினார் பகுத்தறிவு  எழுத்தாளர்களுக்குக் குடிஅரசு இதழ் வாய்க்காலாக அமைந்தது. 1935ஆம் ஆண்டு விடுதலை நாளிதழ் பெரியாரால் தொடங்கப்பட்டது. 1942இல் திராவிட நாடு என்ற இதழை அண்ணா தொடங்கினார். 1949இல் மாலைமணி என்ற இதழைத் தொடங் கினார். 1953இல் நம்நாடு இதழ் தொடங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியால் முரசொலி இதழ் 1942இல் தொடங்கப்பட்டது. 1963இல் அண்ணாவால் காஞ்சி என்னும் இதழ் தொடங்கப்பட்டது. தமிழ் உலகம், தனிஅரசு, தம்பி, தென்னகம், அறப் போர், தென்னரசு, அறிவுப்பாதை, போர்வாள் போன்ற வார ஏடுகளும், சமதர்மம், குயில், மன்றம், புதுவாழ்வு, குத்து£சி, பூமாலை போன்ற வார ஏடுகளும் நடத்தப் பட்டன.

     தமிழின் முதன்மையை வலியுறுத்தியவர்களில் இரு பிரிவினர் இருபதாம் நூற்றாண்டில் உருவாயினர். ஒருபிரிவினர், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்று, ஈ.வெ.ரா. பெரியாரின்பின் சென்றவர்கள். இன்னொரு பிரிவினர், சைவ சித்தாந்தக் கொள்கையே தமிழரின் தனிக்கொள்கை என்ற சிந்தனைகொண்டவர்கள். அநேகமாக இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பார்ப்பனரல் லாத புலமை/கல்வித்துறை ஆய்வாளர்கள் அனைவருக்கும் தமிழும், சைவமும் இரு கண்களாகவே இருந்தன. இவர்களை நாம் திராவிட இயக்கத்தினராக ஏற்க முடியாது என்றாலும் திராவிட இயக்கச் சார்பு கொண்டவர்கள் என நோக்கலாம். அல்லது சைவத்தமிழ் ஆய்வாளர்கள் என்று குறிக்கலாம். 1950வரை இந்த நிலை இருந்தது. அதற்குப் பின்னர், புதிய கல்வித்துறை ஆய்வாளர்கள் வந்த போது, அவர்கள் தமிழின் முதன்மையை ஏற்ற திராவிட இயக்கச் சார்பாளராக மாறினர். சைவம் பின்னுக்குச் சென்றது.

     திராவிட இயக்கச் சார்பான சைவசமயப் புலவர்கள், தமது நம்பிக்கைகளை உறுதியாக ஏற்றனர், அவர்கள் சில சமயங்களில் கம்பராமாயணத்தில் உள்ள ஆரியக் கற்பனைகளை மறுத்தும் எழுதினர். தாங்களே சமயத்தை நம்பும் இவர்கள், பிறர் நம்பிக்கைகளை மறுக்கும் முயற்சியில் ஈடுபட்டது ஏன்? சைவசமயம் தமிழரின் முதற்சமயம் என்றால், அதில்மட்டும் புராணக்கதைகள் இல்லையா? இது போன்ற கேள்விகள் இவர்களிடம் ஏன் எழவில்லை என்பது நம் சிந்தனைக்குரியது. பார்ப்பன/ பார்ப்பனிய எதிர்ப்புச் சிந்தனையுடனும் கடவுள் மறுப்புக் கொள்கையுடனும் இலக்கிய விமரிசனத்தில் ஈடுபட்டவர்களை திராவிட இயக்க இலக்கிய விமரிசகர்கள் எனலாம்.

திராவிட இயக்க முன்னோடி, சைவத்தமிழ் ஆய்வாளர்-பெ. சுந்தரம் பிள்ளை

     திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி, மனோன்மணீயம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். மனோன்மணீய நாடகத்தில் தமிழ்த்தெய்வ வணக்கமாக இடம்பெற்ற செய்யுள்தான் இப்போது சிற்சில மாற்றங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்துள்ளது. இப்பாட்டில் ‘ஆரியம்போல் வழக் கொழிந்து போகாமல் இளமையாக உள்ளது தமிழ்’ எனக்குறிப்பிடுகின்றார். ‘கன்னட மும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்’ என்று தமிழே தென்னிந்திய மொழிகளின் தாய் என்பதையும் வலியுறுத்துகிறார். தமிழ்நாட்டை திரவிடநாடு என்று குறிப்பிடுகிறார். இச்செய்யுளில் சில விமரிசனங்களும் உள்ளன.

     வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள்

     உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி

என்பதில் வடமொழியின் மனுநூல் மீதான விமரிசனம் அடங்கியுள்ளது.

     பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

     எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

என்பதில் பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களின் இயற்கையான கற்பனைநெறி வயப்பட்ட இலக்கியங்களைக் கற்றவர்கள் பொருளற்ற புராணக் கற்பனைகளை உடைய வடமொழிச் சார்பான நூல்களைப் படிப்பார்களோ என்ற விமரிசனத்தை முன்வைக்கிறார். புராணக்கதைகளையும் சாடுகின்றார். தமிழ், இயற்கையான கற்பனை நெறியில் அமைந்த இலக்கியங்களைக் கொண்டது, வடமொழி அவ்வாறல்ல என்பது உட்கிடை.

     வடமொழிப் புராணக் கதைகளில் சமஸ்கிருதத்தை உயர்த்த வேண்டுமென்று, கல்வித்தெய்வம் சரஸ்வதிக்கு வலது கண் வடமொழி எனவும், தமிழ் அவளுடைய இடது கண் எனவும் புனைந்துரைத்துள்ளனர். (வலப்புறம் உயர்வு, இடப்புறம் தாழ்வு என்ற கருத்து நிலை. இக்கருத்துநிலை பெண்ணை அடிமைப்படுத்துவதாக, சிவன்-பார்வதி அர்த்தநாரீஸ்வர உருவிலும் இருப்பதைக் காணலாம்). அதேசமயம், சரஸ்வதி கிழக்குநோக்கி அமர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். கலைமகள் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தால், அவளது வலது கண் தெற்குப்புறத்திலும், இடக்கண் வடப் புறத்தி லும்தானே அமைந்திருக்க முடியும? எனவே தென்மொழியாகிய தமிழே வாணியின் வலக்கண் என்று புலனாகிறது என்று தர்க்கரீதியாக வாதிடுகிறார் சுந்தரம் பிள்ளை.

     முதன்முதலில் திராவிடர் பெருமையைத் தமது நூல்களின் மூலமாக உணர்த்த முயன்ற இவரைத் திராவிட ஆராய்ச்சிகளின் தந்தை என்று கூறுவது பொருத்தமாகும். சென்னைக் கிறித்தவக் கல்லு£ரித் திங்கள் இதழிலே முதலில் கட்டுரைக¬ளாக வரையப்பெற்றுப் பிறகு நூல்வடிவம் பெற்ற இவரது ஆய்வுரைகள் குறிக்கத்தக்கன என்று கைலாசபதி கூறியுள்ளார். பத்துப்பாட்டு என்னும் பொருள் பற்றிப் பொது வாகவும் நெடுநல்வாடை பற்றிச் சிறப்பாகவும் சொல்லும் ஆய்வுரை The Ten Tamil Idylls  என்பது.

பெரியார் ஈ.வெ. ராமசாமி (1897-1973)

பெரியாரின் இலக்கிய விமரிசனம், அவருடைய பின்வரும் பணிகளோடு தொடர்புடையது.

1. பகுத்தறிவு-கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு.

2. சீர்திருத்தம்-எழுத்துச் சீர்திருத்தம், புராண இதிகாச எதிர்ப்பு, கலப்பு மணம், கைம் பெண் மணம், பெண்ணுரிமை.

3. ஆரிய எதிர்ப்பு-கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்கை, விழாக்கள் ஆகியவற்றை எதிர்த்தல்.

4. பொதுவுடைமைச் சார்பு-நிலவுடைமை சார்ந்த கருத்துகளை எதிர்த்தல், வர்க்கப் பிரிவு, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை எதிர்த்தல்.

5. இலக்கியம்-புராணங்கள், இதிகாசங்கள் எதிர்ப்பு, மொழி பற்றிய கருத்துகள்.

     பெரியார் ஆராய்ச்சிநூல்கள் எழுதவில்லை. சொற்பொழிவாளராகவே இருந்தவர். மக்களை நேரடியாகச் சென்று அடையவேண்டும் என்பதே அவரது நோக்கம். அவருடைய சொற்பொழிவுத் தொகுதிகள் நூல்களாக வந்துள்ளன. வே. ஆனைமுத்து வின் பெரியார் சிந்தனைக் களஞ்சியம் என்னும் தொகுப்பு முக்கியமானது.

மொழி பற்றிப் பெரியார்

     பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல. அவர் வாழ்நாள் முழுதும் ஆங்கிலத்தைக் கொண்டாடுவதையும் தமிழை இழித்துப் பேசிவந்ததையும் காணலாம். குறிப்பிட்ட இடத்தில் வாழும் மனிதர்கள் தங்கள் கருத்து களைப்பகிர்ந்து கொள்ளத் தாங்கள் உணர்வதிலிருந்து எழுந்ததே மொழி என்னும் அவருடைய கருத்து குறையுடையது. மொழி வெறும் பகிர்வுச்சாதனமாக மட்டும் அமைவதல்ல. அது பண்பாட்டையும் உருவமைக்கிறது என்ற விஷயத்தை அவர் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை.

     தொல்பழங்காலத்திற்கு முன்னரே மக்களினம் எல்லாம் கலந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பின் ஒரே மொழி உலகம் முழுவதும் பரவியிருக்கும் என்பது பெரியாரின் கருத்து. (விடுதலை 15-10-1962 தலையங்கம்). இது கத்தோலிக்கக் கிறித்துவச் சிந்தனை.

     எவ்வாறு மதமானது புகுத்தப்படுகிறதோ அவ்வாறே தாய்மொழியும் புகுத்தப்

     படுவதுதான். மொழிமீது வீணான பற்றுக் கொள்ளக்கூடாது. ஒன்றன் பயனறியாமல்

     தொடர்போ மதிப்போ பற்றோ வைக்கக் கூடாது. ஒருமொழியின் தேவை

     முக்கியத்துவம் எல்லாம் அது பயன்படுகிற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது

     எவ்வளவு பெரிய காவிய, இலக்கியங்களை உடைய மொழியாக இருந்தாலும் சரி.

     மொழி அன்றாட வாழ்வில் அறிவை வளர்ப்பதாக எப்படி உதவுகிறதோ அதைக்

     கொண்டே மொழியை அளக்க வேண்டும்.

என்று விடுதலைஇதழ்க் கட்டுரை ஒன்றில் கூறுகிறார்.

     பயனற்ற ஒன்றை முயன்று கற்பது அறிவற்ற செயல், அதனால் ஆங்கிலத்தைக் கற்கவேண்டுமே தவிர தமிழைக் கற்பதில் பயனில்லை என்றார். சாதிநோக்கிற்காக வடமொழியை இகழ்ந்த பெரியார், சாதியை வெறுத்து சமதர்மத்தை மலரச்செய்ய உதவுவது ஆங்கிலமே என்றார். ஆனால் இப்படிப்பட்டவர், இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் எப்படி மனமுவந்து ஈடுபட்டார் என்பது நம் மனத்தில் எழும் கேள்வி.

     சமூகத்தில் மொழிபற்றி வழங்கிவரும் இருவிதக் கருத்துகளைக் காணலாம். ஒருவிதநோக்கு, மொழி கருத்துணர்த்துவதற்கும் வாழ்க்கையில் பலவிதமான பயன் பாடுகளுக்குமான கருவியே என்பதாகும். இதனைக் கருவிநோக்கு (Instrumental outlook)எனலாம். இப்படிப்பட்டவர்கள் நமக்கு ஆங்கிலம் பயன்படுமானால் அதனையே தாய் மொழியாக வைத்துக்கொள்ளலாமே என்று சொல்பவர்கள். ஆங்கிலப் பள்ளிகளையும் ஆங்கிலக் கல்வியையும் வலியுறுத்துபவர்கள். நம்நாட்டில் பெரும்பாலான பார்ப்பனர் களிடமும் மேட்டுக்குடி மக்களிடமும் இத்தகைய நோக்கே உள்ளது. பெரியாரின் நோக்கு இதிலிருந்து வேறுபட்டதன்று. மொழிபற்றிய வெற்றுக் கூச்சல்கள் கூடாது, அதனால் மொழி வளராது என்ற அளவில் பெரியாரது கருத்துகளை நாம் உடன்படலாம்.

     இன்னொருவித நோக்கு கலாச்சார நோக்கு (Cultural outlook). மொழி வெறும் கருவியல்ல. நமது கலாச்சாரத்தை நமக்குள் உருவாக்குகின்ற ஒன்று. மொழியின்றிக் கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது இல்லை. எனவே நமது பண்பாட்டை நாம் அறிந்து போற்றவும் அதனைக் கடைப்பிடிக்கவும் மொழி என்பது மிக முக்கியமானது. கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்தது மொழி என்பதால் நமது வாழ்க்கையோடும் இரண்டறக்கலந்த தொடர்புடையது. இம்மாதிரி நோக்குதான் பெரியாரைத் தவிர்த்த ஏனை திராவிட இயக்கத்தவர்களுக்கு இருந்தது. எனவே தமிழுக்காக உயிரும் கொடுப் போம் போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள். இந்தி எதிர்ப்பில் ஈடுபட் டார்கள். பாவாணர் முதல் பெருஞ் சித்திரனார், குணா வரை இத்தகைய நோக்கில் ஊறியவர்கள்.

     இந்தப் பார்வையின் கிளைத்தேற்றங்கள் பின்வருமாறு அமையும்:

1. மொழி நமது கலாச்சாரத்திற்கு ஆதாரமானது. எனவே அதைப் பிறமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து காக்கவேண்டும். இல்லாவிட்டால் அது அழிந்துவிடும்.

     (அதனால்தான் மொழிக்காவலர், முத்தமிழ்க்காவலர் போன்ற காவல்காரச் சொற்களை விரும்பிப்பட்டங்களாக ஏற்றார்கள் திராவிட இயக்கத்தினர்)

2. மொழி அழிவதிலிருந்து காப்பாற்றவேண்டுமென்றால் புதிதுபுதிதாகச் சொற்களை உருவாக்க வேண்டும். அவை தனித்தமிழ்ச் சொற்களாக அமையவேண்டும்.

     (இதன் விளைவாகத் தமிழுக்கு நல்ல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. குறிப்பாக முப்பதுகளின் இறுதியில் சென்னைமாகாணத் தமிழ்ச்சங்கம் கலைச்சொல்லாக்கத்தில் ஆற்றிய பணி சிறப்பானது).

     மூன்றாவதான ஒரு சிந்தனைப் போக்கும் உள்ளது. அதுதான் மிகவும் முக்கியமானது. மொழியின்றிச் சிந்தனை இல்லை. ஒருவன் குழந்தைப் பருவத்தில் சிந்திக்கத் தொடங்குவதே மொழியின் வாயிலாகத்தான். மொழியற்ற விலங்குகளுக்கோ, அல்லது ஓநாய்மனிதன் (நாகரிகமின்றி விலங்குகளுக்கு மத்தியில் காட்டில் வளர்ந்த மனிதன்) போன்றவர்களுக்கோ சிந்தனை என்பது கிடையாது. அடிப்படை உள்ளுணர்வுகள் (basic instincts) மட்டுமே உண்டு. பசி, பாலியல் நாட்டம், எதிரிகளிடம் பயம் போன் றவை அடிப்படை உணர்வுகள். எனவே மனிதன் மனிதனாக இருப்பதில் சிந்தனை-பகுத்தறிவு மிக முக்கியமானது. பகுத்தறிவை உண்டாக்குவது மொழி. ஃப்ராய்டுக்குப் பின்வந்த லக்கான் போன்ற பின்னமைப்புவாதிகள், மனிதன் சமூகத்திற்குள் புகுவதே மொழியின் வாயிலாகத்தான் என்று கூறியுள்ளனர். எனவே மொழியில்லையேல், சிந்த னையில்லை, சமூகம் என்பது இல்லை, பண்பாடு இல்லை, சுருங்கச் சொன்னால் எதுவுமே இல்லை.

எழுத்துச் சீர்திருத்தம்

     மொழியும் எழுத்தும் ஒன்றே எனப் பலர் நினைக்கின்றனர். அது தவறு. ஒரு மொழியைப் பலர் பலவிதமான எழுத்துமுறைகளால் எழுதலாம். அதனால் மொழி மாறுபடுவதில்லை. எந்த எழுத்து வகையில்-லிபியில் எழுதினாலும் மொழி தனது தனித்தன்மையைப் பெரும்பாலும் இழப்பதில்லை. சமஸ்கிருதம், கிரந்தம், நாகரி, ரோமன் முதலிய எழுத்து வடிவங்களில் இன்று எழுதப்படுகிறது. ரோமன் லிபியில் படிக்கும் ஒருவன் தான் சமஸ்கிருதம் படிப்பதாக உணர்கிறானே ஒழிய ஆங்கிலமோ, ஜெர்மனோ படிப்பதாக நினைப்பதில்லை. இதற்குக் காரணம் மொழி என்பது லிபி யில் (எழுத்துவடிவத்தில்) இல்லை,

     (இன்று தமிழ்வாக்கியங்களையும் ரோமன் எழுத்துவடிவில் எஸ்எம்எஸ் அல்லது மின்னணுஅஞ்சல் போன்றவற்றில் அனுப்பும் வழக்கம் வந்துவிட்டதால் இந்தக் கருத்து இக்கால இளைஞர்களுக்கு எளிதில் புரியும்.)

     மேலும் லிபி அல்லது எழுத்துமுறை அல்லது வரிவடிவம் என்பது காலத் திற்குக் காலம் மாறி வருவது. தமிழின் எழுத்துமுறை எப்படியெல்லாம் மாறிவந்திருக் கிறது என்பதை ஐராவதம் மகாதேவன் போன்ற எழுத்து வல்லுநர்கள் பல நூல் களில் விளக்கியுள்ளார்கள். பெரியார் எழுத்தைப்பொறுத்தவரையில் மிகவும் முன் னேற்றமான கருத்துகளைக் கொண்டிருந்தார். அதனால் எழுத்தமைப்பில் சில சீர்திருத் தங்களைச் செய்தார். அவை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இலக்கிய விமரிசனம்

     தமிழிலக்கியம் எல்லாமே பார்ப்பனரின் வருகைக்குப் பின்னர் இயற்றப் பட்டதே. தமிழனுக்கு என்று தனித்த இலக்கியம் ஒன்று கூட இல்லை என்பது பெரியார் கருத்து. சங்க இலக்கியத்திற்குப் பிறகு தமிழரின் நாகரிகம் பண்பாடு கலை போன்றவற்றைக் காண்பது அரிது. நமக்கு இருக்கும் இலக்கியங்கள் எல்லாம் கடவுள் தன்மையைப் புகுத்தக்கூடியதாக, மடமையை வளர்க்கக் கூடியதாக, அறிவைப் பாழாக்கக்கூடியதாக, நம்மை மானமற்றவராக்கி இழிவு படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. நமது இலக்கியங்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கின்றன என்கிறார். சில சமயங்களில் பெரியாரின் வாதங்கள் நகைச்சுவையாகவும் இருக்கும்:

     பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ்படித்துச் சாமி

     யானவர்கள். தமிழ் படித்தவனெல்லாம் சாமியானானே தவிர எவனும் பகுத்தறிவு

     வாதியாகவில்லை.

     சங்கஇலக்கியம் பற்றிப் பெரியார் அதிகம் பேசவில்லை. அவர் அதிகமாகக் குறைகூறாத ஒரே இலக்கியம் திருக்குறள்தான்.

திருக்குறள் பற்றிப் பெரியார்

     வள்ளுவர் யார், எந்தக் குலதைச் சார்ந்தவர் என்று நிச்சயமாகக் கூறமுடி

     யாது. வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர்; ஆரியக் கருத்துகளைக் கண்டிப்பவர்;

     அவைகளை வெறுப்பவர் என்றுதான் நமக்குத் தெரிகிறது…குறளாசிரியர்

     கடவுளையும் மோட்ச நரகத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. குறளில் அறம்

     பொருள் இன்பம் என்ற அளவில்தான் காணமுடியுமே தவிர, வீடு-மோட்சம்

     பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை…திருக்குறளின் முதல் அத்தியாயத்தில்

     கடவுள் வாழ்த்து என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக்

     கொள்கைகள் இடம்பெறவில்லை. கடவுள் வாழ்த்து கூறப்படும் பத்துப்

     பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர் கடவுள் என்ற சொல்லைக் கையாள

     வில்லை…வள்ளுவர் கடவுள் வாழ்த்து பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு

     நற்குணத்தை வைத்து அந்தப்படியாக நடக்கவேண்டும் என்பதாகவே பத்துப்

     பாட்டிலும் பத்துவிதமான குணங்களைக் கூறினார்

என்பவை பெரியாரின் கருத்துகள்.

     குறள் முக்காலத்திற்கும் முழுவதும் பொருந்துமென்பது தவறு. இக்காலத்திற்கு ஒவ்வாதனவும் சில அதில் உண்டு; குறளில் காணப்படும் அனுபவ உண்மைகளும், அறிவுப் பண்புகளும், இழிவுநீக்க முயற்சிக்கும் முன்னேற்ற முயற்சிக்கும் பெரும் ஆதரவு தரக்கூடியனவாய் உள்ளன. திருக்குறளில் ஆபாசத்திற்கு இடமில்லை. பாவம் என்பதற்காக பயப்படும் கோழைத்தனமான கருத்துகளுக்கு இடமில்லை. அதனால் தான் அதைக்காட்டிப் பிழைக்கமுடியாது எனக் கருதினர் ஆசாரியர். அதனால் திருக்குறள் அதிக செல்வாக்குப் பெறமுடியாது போயிற்று. திருக்குறள் பெருமையை அடையாததற்குக் காரணம், அது ஒரு திராவிட நூல் என்பதால்தான். குறளிலும் ஆரி யத்திலுள்ளது போலச் சில காட்டுமிராண்டிப் பண்புகள் உள்ளன. மூடநம்பிக்கையும் நிறைந்துள்ளது என்றும் பெரியார் கூறுகிறார்.

சிலப்பதிகாரம் பற்றி

     சேரன் செங்குட்டுவன் மாடலன் என்னும் மறையவனின் சூழ்ச்சிவலை

     யில்சிக்கி ஆரியத்திற்கும் ஆரியமடமைக்கும் மண்டியிட்டவன் ஆனான். ஆரியப்

     படையை வென்ற சேரனால் ஆரியப் பஞ்சாங்கத்தை வெல்லமுடியவில்லை.

     சிலப்பதிகாரத்தால் தமிழகம்பெற்ற பயன் யாது? ஆரியத்தை வென்ற வீரமா?

     ஆரியத்தின் முன் வீழ்ந்த வீழ்ச்சியா?

     கண்ணகி சாபமிட்டு மதுரையை எரிக்கும்போது ஆரியர்களைத் தீ எரிக்கக்

     கூடாது என்று கட்டளையிடுகிறாள்.  இது எப்படிப்பட்ட சூழ்ச்சி?

     சிலப்பதிகாரமானது போன ஜன்மத்தையும் வருகிற ஜன்மத்தையும் கூறி

     தலைவிதியைக் காட்டி மனிதனை இழிவுக்கு அழைத்துச் செல்கிறது. முட்டாள்

     தனமான கற்பையும் பெண்ணடிமைத் தனத்தையும் வலியுறுத்தும்

     சிலப்பதிகாரம் நமக்குத் தேவையா?

     பாண்டியன் விசாரணை செய்து தண்டனை கொடுத்தான் ஆனால் கண்ணகி

     விசாரணை எதுவும் புரியாமல் அப்பாவி மக்களைக் கொல்கிறாள். அவள்

     எப்படிக் கற்புக்கரசியாவாள்? வணங்குவதற்கு உரியவள் ஆவாள்? தெய்வம்

     ஆவாள்? பாண்டியன் குற்றவாளி என்பதுதானே சிலப்பதிகாரக் கதையாக

     உள்ளது? தமிழனைக் குற்றவாளியாக்கிக் காட்டுவதுதான் தமிழர் பண்புகூறும்

     இலக்கியமா?

இப்படியெல்லாம் வினவும் பெரியார் தமக்கே உரிய முறையில் சுருக்கிச்சொல்லி விடுகிறார்: “சிலப்பதிகாரம் விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்”.

     கம்பராமாயணத்துக்கும் சிலம்புக்கும் இந்த நாட்டில் மதிப்பு இருக்கிறது என்றால் இந்த

     நாட்டு மக்களுக்கு அறிவும் இல்லை, மானமும் இல்லை, இன உணர்ச்சியும் இல்லை

     என்றுதானே பொருள்…இவைகளின் தன்மையே இப்படி இருந்தால், இவைகளைத்

     தாங்கி நிற்கும் தேவாரம், திருவாசகம், திருமறை, பிரபந்தம், பெரியபுராணம் முதலிய

     குப்பை கூளங்களின் யோக்கியதை எப்படி இருக்கும்?

இராமாயணம் பற்றி

     பெரியாருடைய இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூல் 1930இல் வெளி வந்தது. இராமாயணப் பாத்திரப் படைப்பின் ஆபாசத்தைச் சுட்டிக்காட்டுவதாக அந்நூல் உள்ளது.

     புத்தநெறி, ஓரளவிற்கு அறிவூட்டுவதாக அமைந்ததால் அதை அழிததுத் தம் நெறியைப் புகுத்தவே இராமாயணக் கதை உருவாக்கபட்டது. புத்தருக்குப் பின்னரே இராமன் கிருஷ்ணன் போன்ற கதைகள் உருவாக்கப்பட்டன.

     கம்பராமாயணம் வெறும் பொய்க்களஞ்சியம். அதன் கற்பனை சிற்றின்ப சாக ரம். ஒருவிதத்தில் இது ஒரு காமத்துப்பால். அதன் நடப்பு காட்டுமிராண்டித் தனத்தின் உருவம்.

1. இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தமானதோ நடந்த நடப்புகளைக் கொண்டதோ அல்ல.

2. காட்டுமிராண்டிக் காலத்திய உணர்ச்சியைக் கொண்டது. ஆரியப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.

3. கோர்வையற்றது. முன்னுக்குப் பின் முரணாக உள்ளது, மனிதப் பண்பிற்கு ஏற்றதல்ல.

4. உண்மையான வீரமும் யுத்த முறையும் இல்லாது கற்பனைவீரமாக உள்ளது.

5. அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தொடர்பில்லை. தேவர்கள் இராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கமில்லை. பாத்திரங்களின் வயது முரண்பாடாக உள்ளது.

6. ஆதாரங்களும் பொருத்தமாகத் தரப்படவில்லை. பாத்திரங்களின் சக்தி சில நேரங்களில் காணாமல் போகிறது.

7. இராமாவதாரம் இராவணனைக் கொல்வதற்கே உருவானது போல் உள்ளது.

     பெரியார் இராமாயணத்தைப் பற்றிக்கூறிய செய்திகள் யாவுமே வான்மீகியின் இராமாயணத்தை அடியற்றி உள்ளனவே தவிரக் கம்பரைப் பற்றியனவாக இல்லை.

புராணங்கள் பற்றி

     புராணம் என்றாலே பொய். கிறுக்கியல் மூளைகளின் படைப்பே புராணங்கள். அக்கிறுக்கியல் மூளைக்கு மதம் என்னும் கள் ஊற்றிச் சாதிநலம் என்னும் தேளையும் கொட்டவிட்டால் அந்த மூளை எப்படிச் செயல்படுமோ அப்படிச்செயல்பட்டதன் வெளிப்பாடே புராணங்கள்.

     கந்தபுராணக் கதையும் இராமாயணக் கதையும் ஒரே அடிப்படைக் கருத்தை உடையதாகும். ஒன்றை ஆதாரமாக வைத்துப் பிறிதொன்று இயற்றப்பட்டுள்ளது. இப்படிச் சொல்பவர், தமது நகைச்சுவைப்பாணியில் சொல்கிறார்:

     மக்கள் காட்டு மிராண்டிகளாய் வாழ்நதபோதே உருவாக்கப்பட்ட கடவுளே சிவன்.

     விஷ்ணு சிறிது நாகரிகமடைந்தபின் உருவாக்கப்பட்ட கடவுள். எனவே சிவன்

     முந்தியவன். அதனால் கந்தபுராணமே இராமாயணத்தைவிட முந்தியதாகும்.

கலைகள்

     கலை கலைக்காகவே என்ற கொள்கையைப் பெரியார் ஏற்கவில்லை. கலை மக்களுக்காக இருக்கவேண்டுமென விரும்பினார். மக்களிடம் மறைந்திருக்கும் அறிவை வெளிப்படுத்தவும் தமக்கு வேண்டியவற்றைக் கற்கவும் து£ண்டுவனவாகக் கலைகள் அமையவேண்டும். கற்கத்தகுந்தவைகளையும் அறியவேண்டியவைகளையும் தொகுத்துத் தருவதே கலைகளின் பணியாக இருக்க வேண்டும்.

     கலையானது வெறும் இன்பமூட்டுவதாகமட்டும் அமைந்துவிடக்கூடாது. மக்கள் முன்னேற்றத்திற்காகவும், சமூகமுன்னேற்றத்திற்காகவும் உழைத்திடுவனவாகத் திகழ்தல் வேண்டும்.

     நம் கலைகளெல்லாம் மூடநம்பிக்கைகளையும் முட்டாள்தன்மைகளையும் விளைவித்து அவ்விளைவின் பயனைப் பார்ப்பனரின் ஏகபோகமாக்கி அதனால் ஆரியப் பார்ப்பனரின் மேலாதிக்கத்திற்கு நல்ல கொழுகொம்புகளாக மாற்றப் பட்டுவிட்டன.

     நாடகக்கலை பிற கலைகளைப் போல வெறும் பொழுதுபோக்கிற்காகவோ காமம் போன்ற சுவையுணர்வுகளுக்காகவோ இருநதுவிடக்கூடாது. நாடகம் என்பது ஒருவிஷயத்தைத் தத்ரூபமாய் நடித்துக்காட்டுவதோடு மக்கள் நடத்தைக்கு வழிகாட்டி யாகவும் ஒழுக்கங்களைக் கற்பிப்பதாகவும் இருக்க வேண்டும்.

     புராணக்கதைகளைக் கலைத்துக்காட்டியதிலும், கலை மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கினைத் தமிழ் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்ததிலும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் சமகால வாழ்க்கைக்குமான தொடர்பினைக் கேள்வி கேட்டதிலும் பெரியாரின் முக்கியத்துவம் உள்ளது.

     பாரதியையும் பெரியார், கிறுக்கன் பாரதி என்றுதான் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் கருத்துநிலையை அதன் இலக்கியங்கள் பெருமளவு வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அதனைத்தீர்மானிக்கவும் செய்கின்றன. பெரியார் அவ்வளவு து£ரம் இலக்கியத்தின் இன்றியமையாமையைக் குறித்துச் சிந்திக்க வில்லை. அவர் இலக்கியப் புலவரோ படைப்பாளியோ அல்ல. என்றாலும் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதன் தேவையை ஓரளவு அவர் உணர்ந்திருந்தார்.

அண்ணாதுரை (1909-1969)

     தி.மு.க. என்னும் கட்சியைத் தொடங்கி 1967இல் ஆட்சியைப் பிடிக்க வைத்தவர் பேரறிஞர் என்று போற்றப்பட்ட அண்ணா. தமிழ் மொழி, இலக்கியம், இனம், நாடு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் உணர்வூட்டினார். சிறந்த பேச்சாளராகவும் ஓரளவு நல்ல எழுத் தாளராகவும் திகழ்ந்தார். பத்திரிகைக் கட்டுரைகள், நாடகம், திரைக்கதை, அரசியல் தமிழ், கடித இலக்கியம் என அவரது உரைநடைப் பணி பரந்துபட்டது. எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்துள்ளார். அதனால் அறிஞர் அண்ணா என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.

     உரைநடையில் புதிய இலக்கிய வடிவங்கள் பலவற்றை அண்ணா அறி முகம் செய்தார். ஊரார் உரையாடல், அந்திக் கலம்பகம், கார்ட்டூனாயணம் என்பவை அவற்றுள் சில. மாலைப்பொழுதில், திண்ணையிலும் குளத்தடியிலும் மரத் தடியிலும் ஆண்கள் ஊர்வம்பு அளப்பதுண்டு. இதனை ஊரார் உரையாடல் என அண்ணா வெளியிட்டார். அரசியல், சமுதாயநிலை பற்றி இவற்றில் விளக்கமாகப் பேசுவார். பெண்கள் ஓய்வுநேரங்களில் ஒன்றுகூடி ஊர் வம்பு அளப்பர். இதனை அந்திக் கலம்பகம் என்ற பகுதியாக ஆக்கினார். இவற்றில் மக்கட்பண்புகளையும் அரசியல் போக்குகளையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் அறிவியல் செய்திகளையும் எழுதி னார். அரசியல் கார்ட்டூன்களை வைத்து நகைச்சுவையாகக் கார்ட்டூனாயணம் என்ற பெயரில் எழுதினார்.

     அண்ணாவின் கட்டுரைகள் இலக்கிய மணம் உடையவை. அவரால் தமிழகத் தில் இதழ்கள் படிப்போர் எண்ணிக்கை பெருகியது. அண்ணாவின் எழுத்தினால் இதழ்ச் செய்திகள் இலக்கிய வடிவமாயின. தலையங்கம், கட்டுரை, சிறுகதை, புதினம், உரையாடல், கடிதம், என்னும் வடிவங்களில் சமுதாய, பொருளாதார, இலக்கியச் சிந்தனை களை அளித்தார். நாடகத்திற்குப் புத்துயிர் அளித்தார். நீதிதேவன் மயக்கம், கண்ணீர்த் துளி, இரக்கம் எங்கே, கல்சுமந்த கசடர் என 46 நாடகங்கள் எழுதினார்.

     சில நாவல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அண்ணாவின் மொத்தப்படைப்புகளாக சுமார் 1235க்குமேல் உள்ளன. இவை பதிப் பிக்கப்பட்டவை மட்டுமே. இன்னும் பல அவருடைய குறிப்பேடுகளில் உள்ளன. இதழ்களில் ஆசிரியர் என்ற முறையில் அவர் தீட்டிய இதழுரைகள் இரண்டாயிரத் திற்கும் மேல் என்பர். மேடைப்பொழிவுகள் கிடைப்பவை 200 இருக்கலாம். சட்ட மன்றச் சொற்பொழிவுகள் 1760 என பி. இரத்தினசபாபதி குறிப்பிடுகிறார்.

     ஆரியமாயை, நாடும் ஏடும், ஏ தாழ்ந்த தமிழகமே, நிலையும் நினைப்பும், தீ பரவட்டும், கம்பரசம், போன்ற நூல்களிலும், திராவிட நாடு, காஞ்சி, போன்ற இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளிலும் இலக்கியவிமரிசனங்கள் உண்டு.

     அண்ணாவின் காலத்திற்குமுன் இதழ்களில் மணிப்பிரவாளமும் கொச்சை மொழியும் ஆங்கிலக்கலப்பும் ஆட்சிசெய்தன. விடுதலை, குடிஅரசு, திராவிடநாடு இதழ்களில் தொடர்ந்து எழுதி இந்நிலையை மாற்றினார் அண்ணா. இதழ்களில் செய்திகள், இலக்கியவடிவம் பெறத் தொடங்கின. இதழியல் எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற நெறிமுறை உருவானது. இதனால் இதழ்கள் படிப்போர் எண்ணிக்கை அதிகமானது.

     தலையங்கம், கட்டுரை, சிறுகதை, புதினம், கற்பனை உரையாடல், கடிதம், இசைப்பாடல், கருத்துரை, திறனாய்வு, குறிப்புகள், கார்ட்டூன் போன்ற பகுதிகளில் சமுதாய, பொருளாதார, இலக்கியச் சிந்தனைகளை வழங்கியுள்ளார். சௌமியன், வீரன், குறும்பன், பரதன், துரை, சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, காலன், சம்மட்டி, பேகன், வழிப்போக்கன், வேலன், சிறைபுகுந்தோன், பாரதி, கொழு, நக்கீரன், கிராணிகன், சாவடி, பித்தன் போன்ற  புனை பெயர்களில் எழுதியுள்ளார். ஒரு முழு நேர அரசியல்வாதி என்னும் நிலையில் அவர் செய்த இந்தப் பணிகள் மிகப் பெரியவைதான்.

மொழி எளிமை அவர் வற்புறுத்திய ஒன்று.

     இலக்கியம் கோபுர உச்சியிலிருந்து குப்பைமேட்டுக்கு வரத் தயாராக

     இருக்கவேண்டும். கற்றோரும் மற்றோரும் பண்டிதரும் பாமரரும் பணக்

     காரனும் ஏழையும் படித்துணரும்பாங்கிலே எளிய நடையிலே இயற்கைக்

     கருத்துகள் கவின்பெற எடுத்துரைத்தும், ஏடுகள் எழுதப்படவேண்டும்.

என்று கூறும் அண்ணா நம்நாட்டு இலக்கிய கர்த்தாக்கள் இதற்கு நேர்மாறாகச் செய்து விட்டனர் என்கிறார். பகுத்தறிவற்ற தன்மையுடனே நம் இலக்கியங்களைப் பண்டிதர்கள் உருவாக்கினர். இதனால் சிற்றறிவுடையோர் நூல்களைப் படித்துச் சிந்திக்க முடியாவண்ணம் ஆகிவிட்டது என்று அவர் கூறினாலும், இது முழுவதும் ஏற்கக்கூடிய கொள்கை அல்ல. ஓர் அரசியல்வாதி, சமூகசீர்திருத்தவாதி என்ற அளவில் இது சரி.

     இலக்கியங்களுக்கு உரைஎழுதும்போது அவ்வுரை எளிதாகப் புரியும்படி இருக்க வேண்டும். ஆனால் நம் இலக்கிய உரைகள் மூலநூலைவிடப் பன்மடங்கு கடினமாகத் திகழ்கின்றன என அண்ணா கூறுகிறார்.

     நாட்டின் நிலை நவிலா ஏடு மாளட்டும். இலக்கியம் இறக்கட்டும். கலை

     கலையட்டும். நமக்கு வேண்டுவது ஏட்டைப் புரட்டினால் நாடு, நாட்டின்

     மக்கள், மக்கள் வாழ்க்கை, நாகரிகம், இன்னபிறவும் தெள்ளிதின் விளங்

     குதல் வேண்டும்.

என்பதில் இலக்கியத்தின் சமகாலத்தன்மையை வலியுறுத்துகிறார்.

     ஒரு காலத்திய ஏடுகள் பிறிதொரு காலத்தில் நிலைக்கும் கருத்திற்கும்

     பொருந்தாவெனின் அவை மாற்றப்பட வேண்டும். அந்தந்த காலத்திற்

     கும் கருத்திற்கும் ஒத்த ஏடுகள் உண்டாக்கப்பட வேண்டும். மக்கள் உள்

     ளத்தில் உண்மையை உள்ளவாறு ஊட்டும் ஏடுகள்தான் தேவை. மடமை

     யை மடியவைக்க வழிகோலும் வழிகாட்டும் வளம் பொருந்திய காவியங்

     கள், கதைகள்தான் தேவை. அங்ஙனமில்லாத ஏடுகள் நமக்கு வேண்டாம்.

புதிதாக உருவாக்கும் ஏடுகளை நம் விருப்பத்திற்கு ஆகலாம். பழைய ஏடுகளை மாற்றுவது எப்படி?

     நாவலர்களும் பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலுபக்கமும் வேலிகள் அமைத்து அங்கே எட்டாத அளவிற்கு எழுப்புச் சுவரை எழுப்பி “உள்ளே ஆடுது காளி, வேடிக்கை பார்க்க வாடி” என்பதுபோலத் “தொல்காப்பியத்தைப் பாரீர்! அதன் தொன்மையைக் காணீர்!” என்று கூறினால் அதனிடம் யார்தான் போவார்கள் என்று சங்க இலக்கியத்தைப் பண்டிதர்கள் ஒளித்துவைத்து விட்டதாகக் கூறுகிறார் அண்ணா.

     தொல்காப்பியத்தைச் சிறுசிறு நூல்களாக வெளியிடவேண்டும். சங்க இலக்கியங்களைச் சிறுசிறுபகுதிகளாக வெளியிடவேண்டும். எல்லோர் வீடுகளிலும் இந்நூல் கள் இருக்க வகைசெய்யவேண்டும் என்பது 1947ஆம் ஆண்டிலேயே அண்ணா சிந்தித்த ஒன்று.

     சங்க இலக்கியப் பாடல்களின் செய்திகளைப் புராணக் கதைக¬ளாக மாற்றி யிருக்கிறார்கள். சான்றாக, மேடையில் நடிக்கப்படும் வள்ளி திருமணத்தைக் கூறலாம். வேட்டைக்குச்செல்லும் தலைவைனைப் பெண்ணொருத்தி கண்டு காதல்கொள்கிறாள். யானையன்று பிளிற அவள் அவன் தோள்களில் சாய்கிறாள் என்பது குறிஞ்சிப் பாட்டின் செய்தி. இச்செய்தியே மதச்சாயம் பூசப்பட்டு வள்ளி திருமணம் ஆகியுள்ளது என்று மானிடவியல்நோக்கில் விமரிசனம் செய்கிறார்.

     ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பு அகம் புறம் என்னும் அமைப்புகள் இரண் டினை அறிந்து அவை மக்கட்குத் தேவை என்பதால் புலவர் இயற்றினர். கட்டற்ற களியாட்டத்திற்கு அல்ல. இல்லற இன்பம் குறைவற்றதாக இருத்தல் வேண்டும். வாழ்க்கை ஒரு கலை. அதனை மக்கள் உய்த்து உணரவேண்டும் என்பதற்காகவே சங்கப்பாடல்கள் இயற்றப்பட்டன என்ற கருத்தையே பின்னர் வ.சுப.மாணிக்கம் உளவியலின் துணையோடு தமது தமிழ்க்காதல் நூலில் நிரூபித்துள்ளார்.

     புராணங்களை அண்ணா பலநிலைகளில்நோக்கித் தம் விமரிசனக் கருத்து களை இதழ்களில் எழுதியுள்ளார். குறிப்பாகக் கம்பராமாயணம் திராவிட இயக் கத்தினரால் வன்மையாகச் சாடப்பட்டுள்ளது. இதற்கு அண்ணாவும்விலக்கல்ல. நடைமுறை வாழ்விற்கு ஒத்துவராத ராமாயணத்தைச் சாடுவதில் அண்ணா உறுதியாக இருந்தார்.

     கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கின்றனர் எனப்பழி

     கூறுகின்றனர். கம்பரின் இராமாயணமும் சேக்கிழாரின் பெரியபுராண

     மும் கலை என்று கருதும் அன்பர்கள் ஒரு பெரியாரின் பெயரால்,

     அண்ணாவின் பெயரால் அக்கலை அழிந்துபடும் என்று கூறுவரானால்,

     அத்தகைய கலை கலை ஆகாது. அத்தகைய கலை இருந்தாலும் பயன்

     இல்லை. எமது கலையிலே புரட்சியை  உண்டாக்க விழைகின்றோம்.

என்று தீ பரவட்டும் நூற்கட்டுரையில் சொல்கிறார். ஆனால் புரட்சி உண்டாக்க அண்ணாதுரையிடம் இருந்த திட்டம் அல்லது கொள்கை என்ன?

     இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கொளுத்துவதனால் நமது இலக் கியம் அழிந்து விடாது. கம்பர் எழுதியுள்ள முறை தமிழர் ஆரியத்தை ஏற்றுக் கொள் ளத் து£ண்டுகோலாகவும் தமிழினம் ஆரிய இனத் தலைவனிடம் தோற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளச் செய்வதாகவும் இருப்பதனால் அந்நூலைப்படிக்கும் தமிழினம் அழிந்து விடும் என்கிறார். இலக்கியத்தை வெறும் கருத்துநிலையை மட்டும் வைத்து மதிப்பிட்டது அண்ணாதுரை செய்த தவறு.

     தேவபாடையில் இதனை மூவர் செய்தனர் மூவருள் முதல்வரான வால்மீகியது நூலை நான் மூலமாகக் கொண்டேன் எனக் கம்பர் கூறுகிறார். இங்கே வடமொழி யைக் கம்பர் எப்படி தேவபாடை எனலாம்? ஆரியரால் தேவபாடை எனக் கூறப் படும் வடமொழி எனக் கூறாது கம்பரே ஏற்றுக்கொண்டு கூறுவது தமிழரைத் தாழ்த்துவதல்லவா? பண்டிதர்கள் கம்பரை எந்தத் திறமைக்காகப் புகழ்கின்றனரோ அதே திறமையே தமிழர் கெட வழிசெய்தது.

     கதையிலே வரும் பாத்திரங்களின் மனப்பாங்கையும் செயலையும்விளக்

     குவதிலே கம்பர் மிக சமர்த்தர் என்றுரைப்பர் அறிஞர்கள். அந்தச்

     சமர்த்துதான் குற்றம்குறைகொண்ட ஆரியரைத் தலைவராக்கி வணக்கத்

     துக்குரியவராக மாற்றியது.

வான்மீகி இராமாயணத்தில் குற்றம்குறை கொண்ட பாத்திரங்களைக் கம்பர் ஆரியத் தலைவராக்கி நல்லவர்களாகக் காட்டுகிறார். இது நாம் ஆரிய இனத்தவரை வணங்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டது போலல்லவா உள்ளது?

     இராமன் கடவுளாக்கப்பட்டும் சீதை கற்புக்கணியாக்கப்பட்டும் இராவணன் இரக்கமில்லா அரக்கனாக்கப்பட்டும் அனுமன் ஆண்டவனாக்கப்பட்டும் வாலி கொடியவனாகக் கொல்லப்பட்டும் கூறப்படுவதில் கம்பர் ஒரு ஆழ்வாராகவே மாறி விட்டார் என்றல்லவா தோன்றுகிறது?

     இராவணன் சீதையைக் கவர்ந்தது காமத்தினாலன்று, போர்மரபு முறையி னாலே என்கிறார். அக்காலப் போர்களிலே ஆநிரைகளைக் கவர்தல், மாதரை எடுத் தல், கோட்டையைத் தாக்குதல் என்பன முறைகள். தன் தங்கையை மானபங்கம் செய்த பின்னர் இராமனைப் போருக்கிழுக்க இராமனிடம் எஞ்சியிருந்த விலை மதிக்கக்கூடிய பொருள் சீதை மட்டுமே ஆகையால் சீதையை எடுத்துச் சென்றான்.

     இராவணன் சீதையை பர்ணசாலையுடன் து£க்கிச் சென்றதைச் சுட்டிக்காட்டி இராவணன் பெருந்தன்மையுடன் நடந்துள்ளான் என்கிறார். இராம இலக்குவர்கள் சூர்ப்பணகையை மானபங்கப்படுத்த, இராவணன் சீதையைத் தொடாது து£க்கிச் சென் றதே அவனது உயர்வைக் காட்டுகிறது.

     இராமனைவிடப் பண்பில் உயர்ந்தவன் பரதனே. அதனால் தான் இராமனின் பாத அணிகளைத் து£க்கிச்சென்றான். கற்புக்கு உதாரணமாக அகலிகை சொல்லப்படு கிறாள். ஆனால் அவள் சிறந்த கற்புடையவள் அல்ல என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. இப்படிப்பட்ட பெண் முன்னால் இராமன் விழுந்துவணங்கியதை எடுத்துக் காட்டி அவன் பண்பினை மதிப்பிடுகிறார். அகலிகையின் மனத்தில் தவறில்லை, அதனால் அவள் கற்புடையவள் என்று இராமன் நினைத்திருக்கலாம். அவ்வாறாயின் அதே அளவுகோலை ஏன் தன்மனைவி சீதைக்குப் பயன்படுத்தவில்லை?

     கம்பராமாயணம் வெறும் பொய்க்களஞ்சியம். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் சிற்றின்ப சாகரம்; நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவம் என்கிறார். தமிழர் தம்மை இகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகக் கம்பர் சீதையைக் கற்புப் பெண் ணாகப் படைக்கிறார். சங்கப் புலவர்களையும் தமிழ் மன்னர்களையும் கடவுளாக்கிப் பார்க்காத பொழுது வடஇந்திய இராமனைக் கடவுள் ஆக்குவது தவறு.

     இராமாயணத்திலுள்ள வீரம் காதல் நட்பைவிட நல்ல சான்றுகள் தமிழி லக்கியத்தில் உள்ளன. கம்பராமாயணம் முழுக்க்வும் ஆபாசமாகவே உள்ளது. பெரிய புராணம் அதிகமான பக்தியை ஊட்டி மக்களை ஏமாற்றுகிறது. தொழில் ஜாதிப் பாகு பாட்டை வலியுறுத்துகிறது. சீர்திருத்தக் கருத்துகள் சிறிதுமில்லை.

     கம்பராமாயணத்தில் ஆபாசச் செய்திகளை அண்ணா தொகுத்துக் கம்பரசம் என்னும் நூலாகப் படைத்தார். எந்தெந்த இடங்களில் ஆபாசச் செய்திகள் மிகுந்துள்ளன என்பதைத் தொகுத்தார்.

 பத்துப்பாடல்களுக்கு ஒரு முறையாவது கம்பர் பெண்களைப் பற்றி வருணிக்கிறார். அயோத்தியிலுள்ள மக்களெல்லாம் அயோக்கியர்களாகவும் காட்டுமிராண்டிக ளாகவும் உள்ளனர். அயோத்தி வீரர்கள் ஓடத்தில் செல்லும் போது பெண்களின் மறைவிடங்களைக் கண்டு மகிழ்கின்றனராம். (குகப்படலம், பாடல் 56). நடிப்புக்கலை யில் சிறந்த நடனப் பெண்கள் தங்கள் உடலை அலங்கரித்து பஞ்சணையில் ஆடவரை அழைக்கின்றனர்.

 அனுமனிடம் இராமன் தன் மனைவி எப்படியிருப்பாள் என்று கூறும் போது சீதையின் முழு உடலமைப்பையும் வருணிக்கிறான். சீதையின் வெளி உடலமைப்பை மட்டும் வருணிக்காது மறைவிடங்களையும் வருணிக்கிறான்.

     வாராழி கலசக்கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தன்

     தாராழிக் கலைசார் அல்குல் தங்கடற்கு உவமை தக்கோய்

என்பதுபோன்ற வருணனைகள் கம்பனில் ஏராளம்.

     உலகிலுள்ள எந்தப் பித்தனும் வெறியனும்கூட தன் மனைவியின் மறைவிடத்தை

     வேறொருவனிடம் வருணிக்கமாட்டான். அங்ஙனம் வருணிக்கும் கதாநாயகனை

     எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக்கவியும் சித்திரிக்கவில்லை.

     சீதையும் இராமனும் காட்டுவளம் காணச் செல்கிறபோது இயற்கைக் காட் சிகளை வருணிக்காது இராமன் சீதையின் உடலழகை வருணிக்கிறான். இராமன் சீதையை நோக்கும்போது அவளது கண்ணை மட்டும் நோக்காது உடலுறுப்புக்களைப் பார்த்து ரசிக்கிறான். கடவுளின் அவதாரமும் அயோத்தியின் மன்னனாகப் போகின்ற வனுமாகிய இராமனுடைய மனமே இவ்வாறு உள்ளது!

     இராமன் பட்டாபிஷேகத்திற்கு அரண்மனை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங் குள்ள இயற்கைக்காட்சிகளைக் கம்பர் பெண் உறுப்புகளோடு உவமைப்படுத்துகிறார். செவிலித்தாயரின் கால்களில் கன்னியர் படுத்திருக்கின்றனர். தெங்கின் குரும்பை போன்று செவிலித்தாயரின் மார்பமைப்பும் தாமரைமலர் போன்று கன்னியரின் மார் பமைப்பும் உள்ளது.

     இராமன் வில்லொடிக்கும்போது சீதையின் மேகலை கீழேவிழுவதைக் கம்பர் வருணிக்கிறார். இராமன் கானகம் செல்லும்போது அயோத்திப் பெண்களெல்லாம் அழுகின்றனர். அவர்களது கண்ணீர் அருவிகள். மலைகளைத் தாண்டி கடலைச் சேர்வது போலப் பெண்களின் உடல்மேல் ஓடுகிறதாம்.

     அதர்மத்தை வீழ்த்தி தர்மத்தைத் தழைக்கச் செய்ய அவதரித்த ஆண்டவன்

     வரலாற்றில் இந்த வர்ணனையா? கடவுள் கதையில் தேவாரம் இருக்கலாம்,

     பக்தி ரசம் சொட்டலாம், தேவரகசியங்கள் வெளியிடலாம். இதையெல்லாம்

     விட்டு காமரசத்தைக் கொட்டுவது முறையா?

என அண்ணா கூறுகிறார். வள்ளுவரும் தம் அனுபவத்தால் உலகம் வியக்கும் இலக் கியம் படைத்தார். ஆனால் கம்பரோ சொந்த நாட்டின் வரலாறும் சொந்தக் கற்பனை யும் மொழி பெயர்ப்பும் அல்லாத ஒன்றைப் படைத்துள்ளார்.

     பெரியபுராணம் பற்றியும் இறையடியார்களின் பத்தித்திறம் பற்றியும் அண்ணா பின்வருமாறு கூறுகிறார். பெரிய புராணக் கதைகளைப்படிப்பதனால் மக்களின்அறிவு பாழ்படுகிறது. பெரியபுராண அடியவர்களின் கதைகளிலுள்ள கடவுள் கருத்துகள் அறிவீனமாக உள்ளன. பெரியபுராணம் வருணாசிரம தர்மத்தைப் போதிக்கிறது. பகுத்தறிவைப் பாழ்செய்வதாகவே இக்கதைகள் உள்ளன. ஜாதியையும் தொழிற்பாகு பாட்டையும் வலியுறுத்துகிறது.

     சமரசம் போதிக்கிறது பெரியபுராணம் என்கின்றனர். புலையனேனும்

     சிவனடியாராக இருந்தால் மோட்சம் பெறுவர் எனக்கூறுகிறது. புலை

     யனேனும் – இதிலுள்ள உம் எதைக் குறிக்கிறது? ஜாதியிலே ஏற்றத்

     தாழ்வு இருக்கிறது, எனவேதான் தாழ்ந்தோரும் பக்தி செய்தால் முக்தி

     பெறலாம் என்கிறது.

     பெரியபுராணக் காலத்துக்குப் பின் நாட்டில் செல்வம் குறைந்துபோயிற்று. பாடுபடுவோர் பட்டினி கிடக்கின்றனர். பாடுபடாத பார்ப்பனர்கள் செழுமையில் வாழ்கின்றனர். மக்கள் கிடைக்கின்ற பொருள்களையெல்லாம் பக்திக்காகச் செல விடுகின்றனர்.

     செல்வம் கொடுத்த தமிழகத்திலே பட்டினிக் குரல். தங்கச் சிலைகள் கோயி

     லிலே. வைரமுடிகள் அவைதம் சிரங்களிலே. சிங்கத் தமிழன் செத்து வீழ்ந்தான்

     பாதையிலே. பஞ்சத்தால். பக்தியையும் சிவத்தையும் உண்டாக்கிய ஏடன்றோ

     என்று கொண்டாடுகிறார்கள் பெரிய     புராணத்தை. ஆனால் அதை நாட்டிலே

     பரப்பி மக்களையும் மன்னரையும் நீறுபூசிகளாக்கிய பிறகு நாடு செழித்ததோ?

     வளம் வளர்ந்ததோ? இல்லை. கிடைத்ததை எல்லாம் ஆலயத்திருப்பணிக்கும்

     அம்மையப்பன் திருவிழாவிற்கும் செலவிட்டு மக்கள் ஓய்ந்தனர்.

     அன்பை போதிக்கும் பெரியபுராணத்தில் சிவபெருமானுக்குப் பிடித்தது மனித உயிர்களே. இறைவனை நேசித்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று பக்தியை வலியு றுத்தும் பக்தனிடம் சீர்திருத்தத்திற்கு ஏது வேலை?

     சிவலிங்கத்தின் கண்ணில் இரத்தம் வடிந்தது என்பதை ஏற்கஇயலாது. கருவில்

     உருவான உடலில்தான் இரத்தம் வடியும். கல்லில் கட்டையில் செம்பில் இரத்

     தம் உருவாகும் என்பது கற்பனையே.

     கடல்நீரை எங்கு மொண்டாலும் உப்புநீராக இருக்கும். பெரியபுராணத்

     தில் சமணர்களைப் பற்றி எங்கு பேசப்பட்டிருந்தாலும் அங்கெல்லாம் அவர்

     களை இழித்தும் பழித்தும் திட்டியும் அன்றோ பேசப்பட்டிருக்கிறது? மறந்

     தேனும் ஒரு சொல்கூட அவர்கள் செய்த நன்மைக்காக அவர்களைப் பாராட்

     டும் குறிப்பு இல்லையே? இப்படிப்பட்ட ஒரு நூலுக்குப் பெரிய புராணம்

     என்ற பெயரைக்காட்டிலும் சமணர் வசைப்புராணம் அல்லது குண்டர்

     புராணம் என்று வைத்திருக்கலாமே?

என்று திராவிடநாடு இதழின் கட்டுரைகளில் எழுதியுள்ளார்.

     அண்ணாவின் விமரிசனக்கருத்துகளின் சாராம்சம் இதுதான்: தமிழறிஞர் களிடம் பற்றின்மையே தமிழ்வளராமைக்குக் காரணம். வாழ்க்கையை உயர்த்த மொழி உதவுகிறது. தமிழரைப்போல் தமிழ்ப்பற்றற்றவர்களை வேறெங்கும் காண இயலாது. இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும். நமது இலக்கியங்கள் வாழ்க்கைக்குப் பொருந்தாதவையாக உள்ளன. சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன.

     பெரியார் இலக்கியத்தில் புலமைக்கல்வி பெறாதவர், எனவே அவரது நோக்கு வெறும் கதைகள் சார்ந்ததாக இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அண்ணா நன்கு படித்தவர். தமிழிலக்கியப் பரப்பு முழுவதையும் ஓர் இலக்கிய மாணவன்போல் அறிந்திருக்க மாட்டார் என்றாலும் சங்க இலக்கியத்தின் முக்கியமான பகுதிகள், சிலப் பதிகாரம், கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள் போன்ற முதன்மையான தமிழிலக்கியப் பகுதிகளை அவர் நன்கு படித்திருப்பார் என நாம் நினைக்கமுடியும். அண்ணாவின் ‘ஏ தாழ்ந்த தமிழகமே!’ பாரதிதாசன் கவிதைகளின் இலக்கியச் சிறப்பு பற்றிய சொற்பொழிவு.

     கலை வாழ்க்கைக்குப் பயன்படுவதாக அமையவேண்டும் என்ற அடிப்படையி லேயே இலக்கியத்தை மதிப்பிடுகிறார். ஆரியர்களின் கொள்கைகள், தமிழருக்கும் அவர்களது பண்பாட்டிற்கும் ஏற்புடையவை அல்ல என்பதனால் எதிர்மறையாக மதிப் பிடுகிறார். மக்களைச் சிந்திக்க வைத்தல், பகுத்தறிவைப் பயன்படுத்தத் து£ண்டுதல் என்ற அளவில் அண்ணாவின் கருத்துகள் ஏற்புடையனவே ஆகும்.

     ஆனால் அவரது இலக்கிய விமரிசன நோக்கு ஏற்புடையதன்று. தமிழிலக்கியத் தைப்போல (அல்லது வடமொழி இலக்கியத்தைப்போலவே) ஏராளமான புராணக் கதைகள் கிரேக்க-ரோமானிய மொழிகளில் உள்ளன. இங்குள்ளவற்றை விட ஆபாச மான வருணனைகளும் அவற்றில் உள்ளன.

     ஆண்களின் நோக்கிலிருந்து பெண்களை வருணித்தல் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் காணப்படும் வருணனைப் பொது இயல்பு. இதற்குக் காரணம், உலக முழுவதுமே ஆணாதிக்கம் நிலைபேறு கொண்டிருப்பதுதான்.

     அறிவியல் பார்வை தோன்றாத நாட்களில், தெய்வங்களையும் தேவர்களையும் பேய்களையும் மக்கள் நம்பிய அந்நாட்களில், இம்மாதிரிப் புராணக் கதைகள் தோன்று வதில் ஆச்சரியமில்லை. அமைப்பிய அறிஞரான லெவிஸ்டிராஸ், இம்மாதிரிப் புரா ணக் கதைகளை ஆதிஅறிவியல் என்ற மதிப்புத் தந்து நோக்குகிறார்.

     பழங்கால மனிதன் மனத்தில் எழுந்த அறியவேண்டும் என்ற ஆசையைத்தான் புராணக்கதைகள் காட்டுகின்றன. இருத்தல் சார்ந்த வினாக்களுக்கு ஏதோ ஒருவகை யில் அக்கால அறிவுக்கேற்றவாறு அளிக்கப்பட்ட விடை என்றுதான் புராணக்கதை களைக் கொள்ள வேண்டுமே தவிர, இக்கால நோக்கில் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என விமரிசனம் செய்வதில் பொருளில்லை.

     கலையில் எது ஆபாசம்-எது அழகு என்ற முடிவற்ற கேள்வி ஒன்று உண்டு. கலைத்திரைப்படங்களிலும் நிர்வாணக்காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றைவைத்து அத்திரைப்படங்களை ஆபாசமானவை என எவரும் முடிவுகட்டுவதில்லை. அதுபோல உலகத்திலுள்ள அனைத்துமொழிக் காப்பியங்களிலும் உடல் சார்ந்த வருணனைகள் உண்டு. அவற்றை வைத்து அவை ஆபாசமானவை, மனத்தைக் கெடுப்பவை அல்லது பண்பாட்டைக் கெடுப்பவை என்று சொல்லி விடமுடியாது.

     இந்தக் கேள்வி ஏறத்தாழ இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பிளேட்டோவின் மனத்தில் எழுந்து, கவிஞர்களை நாடுகடத்தவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். சாக்ரடீஸ், இங்கர்சால் போன்றோரின் அறிவு மரபின் கூறுகளை ஏற்றுக்கொண்ட திராவிட இயக்கத்தினரும் இதே கேள்விகளுக்கு இதே விடைகளை மொழிந்ததில் ஆச்சரியமில்லை.

     பத்தாயிரம் பன்னிரண்டாயிரம் பாடல்கள் வாயிலாகப் பெரிய கதை ஒன்றைக் காவியகர்த்தா படைக்கும்போது அதன் பாவிகம், மொத்தச் செய்தி என்பனவற்றைக் காணவேண்டுமே தவிரத் தனித்தனிப் பகுதிகளாகப் பார்க்கக் கூடாது என்பது முக்கியமானது. மேலும் மிகச் சிறந்த புலமையாளர்கள் தவிர வேறு எவரும் எளிதில் கம்பரை அணுகிவிட முடியாது. கம்பரை முழுதும் கற்கும் திறன்படைத்த திறமை யாளர்கள் இத்தகைய வருணனைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள் என உறுதியாகச் சொல்லலாம். மாறாக, அனைத்துப் பொதுமக்களும், கற்றவரும் கல்லாதவரும்-மன முதிர்ச்சியற்றவர்கள் உட்பட இன்றைய திரைப்படங்கள் (இப்போது தொலைக்காட்சித் தொடர்கள் உட்பட) போன்ற ஊடகங்களாலேயே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் ஆபாசப்போக்கின்றிப் பார்த்துக்கொள்வதே முக்கியமானது.

     அண்ணாவின் இலக்கிய விமரிசனப் பார்வையை நாம் குறைகூற வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. எனினும் இலக்கியத்தில் பகுத்தறிவுநோக்கும் தேவையான ஒன்றேயாகும். இன்றைய இலக்கியம் படிப்பவர்களுக்கு அது இன்னும் மிகுதியாகத் தேவை.

     இன்றும் இதேபோலப் புராணக்கதைகளைக் கருத்துமாற்றமின்றி எடுத்தாண்டு கொண்டிருக்கும் சாதியக்கட்சிகளால் உள்ளன. (இன்றும் இராமன்கட்டிய பாலம் பாக் ஜலசந்தியில் இருக்கிறது என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அதனால் பகுத்தறிவுநோக்கு இன்று மிகுதியாகவே தேவைப்படுகிறது). அறிவியல் நோக்கு என் பது வாழ்க்கையில் முக்கியமானது. இவ்விதத்தில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்பு முதன்மையானது. திராவிட இயக்கம் கொண்டிருந்தவை போன்ற நோக்குகளை இப்போது நாட்டார்வழக்காற்றிலும் மானிடவியலிலும் பயன்படுத்துவதைக் காணலாம்.

     அண்ணாவின் கம்பரசம் நூலுக்கு அக்காலத்திலேயே பல எதிர்நூல்கள் உருவாயின. சான்றாக, கு. பாலசுப்பிரமணிய முதலியார் என்பவர் எழுதிய கம்பரச மறுப்பு (1951) என்னும் நூலைக் கூறலாம்.

திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பிறர்

     1947-60 காலப்பகுதியில் திராவிடப்பார்வையிலான திறனாய்வு தீவிரமடைந் தது. பெரியாரைப் பின்பற்றிப் புராண இதிகாச காவியங்களில் காணப்படும் கடவுட் கொள்கை, ஆபாசவருணனைகள் ஆகியவற்றைக் கண்டிக்கும் ஆய்வுநூல்கள்பெருகின. பெரியாரையும் அண்ணாதுரையையும் தவிர்த்த ஏனை திராவிட இயக்கத்தினரின் பார்வைகள் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம், பாரதிதாசன் படைப்புகள் ஆகிய இலக்கியங்களில் மட்டுமே குவிந்திருந்தன. சில சமயங்களில் சங்க இலக்கியத்தைச் சேர்த்துக்கொண்டனர், பிற இலக்கியங்கள் பற்றி அவர்கள் கவலைப்படவும் விமரிசனம் செய்யவும் இல்லை.

     ஆங்கிலப் பேராசிரியராக விளங்கியவர் மு. சி. பூரணலிங்கம் பிள்ளை. அவர் தமிழ் இலக்கிய வரலாற்றையும் எழுதியுள்ளார். திராவிட இயக்கக் கருத்துகளை ஏற்று, இராவணப் பெரியார் என்னும் நூலை வரைந்துள்ளார். பா.வே. மாணிக்கநாயக்கர், கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்னும் நூலை எழுதியுள்ளார்.

     இ.மு. சுப்பிரமணிய பிள்ளை (1896-1975), பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க வர். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுக் குடிஅரசு இதழில் சந்திரசேக ரப் பாவலர் என்னும் புனைபெயரில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். தமிழ்த்தாய் என்ற பெயரில் காலாண்டு இதழ் ஒன்றையும் நடத்தினார். சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் உருவாகத் துணைநின்றவர். தமிழ்க்கலைச் சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டவர். தமிழ்மொழியின்மீது இவர் வைத்த பற்று அளவற்றது. தமிழ் மொழி உலக மொழி, தமிழரே உலகின் முதல் மக்கள், சைவசமயமே தமிழரின் முதல் சமயம் என்று நம்பினார். இராமாயணத்தில் ஆபாசம் இவரது முக்கியமான நூல் (1929). வடமொழிப் புராணங்கள் இராமன் பிறக்கக்காரணமாகக் கூறும் கதைகள் திருமாலின் தகாத வாழ்வைச் சித்திரிப்பவை. இராமனின் பிறப்பு புனிதமற்ற ஒன்றே யாகும். ஆனால் இராமனை நாம் புனிதனாக வழிபடுகிறோம். தசரதன் யாகம் புரிவதில் யாகத்தின்போது முனிவர்களுக்குத் தன் மனைவிகைளக் கொடுக்கிறான். அதனாலேயே இராமன் சகோதரர்கள் பிறக்கிறார்கள். இராமாயண பாரதக் கதைகள் தமிழர்களுடைய தன்மான வாழ்வைக் கெடுப்பன..

     கைவல்ய சாமியார்,          பெரியாரின் குடிஅரசு இதழில் கடவுள் புராணம் வேதம் சாத்திரம் மூடநம்பிக்கை போன்றவற்றைப் பற்றித் தொடர்ந்து எழுதிவந்தார். மதங் களைக் ‘கட்டுடைத்’துள்ளார். சைவ வைணவ இலக்கியங்களெல்லாம் உயர்ந்த நோக்க மின்றி எழுதப்பட்டவை என்கிறார். பௌத்த சமண சமயங்கள் நமதுநாட்டில் தழைத்த பொழுது அச்சமயங்களை அழிக்க நமது மக்கள் உள்ளத்தில் மோக உணர்வை எழுப்பக்கூடிய நூல்களை எழுதினர். பாமர மக்கள் எதைச் சொன்னால் நம்புவர் என்பதை அறிந்து அதற்கேற்ப இலக்கியங்களைப் படைத்தனர்.

     பெண்களைச் சிறையெடுக்காத தெய்வங்கள் உண்டா? ஒழுக்கத்துடன்

     நடந்த     ரிஷிகள் உண்டா? இப்பொழுது பக்தியோடு அவைகளைப் படிக்

     கிறார்கள். இலக்கிய இலக்கணத்துடன் பிரசங்கமும் செய்கிறார்கள். இவை

     யெல்லாம் பௌத்த சமண மதங்களைத் தொலைக்க ஏற்பட்டனவே.

என்று திராவிட நாடு இதழில் எழுதினார். குடிஅரசு இதழில் எழுதியது இது:

     புராணங்களிலுள்ள கதைகளில் தெய்வாம்சம் இருக்கிறது என்றும் நீதி

     இருக்கிறது என்றும் ஜனங்களிடையே பார்ப்பனர்கள் கூறிவருகிறார்கள்.

     இராமன் பூமியில் பிறப்பதற்கான காரணங்களைப் புராணங்கள்

     சொல்வதை அவர்கள் படித்துப்பார்க்கவேண்டும். அந்நியப்பெண்ணை

     (துளசி என்பவளை) அனுபவித்ததற்காக விஷ்ணுவுக்குக்கிடைத்த தண்ட

     னையே இராமாவதாரம். இது பிராமணரின் ஆதிக்கம் எங்கும் தடை

     யில்லாமல் நிலைநிறுத்திக் கொள்ள எழுதப்பட்டதாகும்.

தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கத்தை அவர் முற்றாக நிராகரித்தார்.

     இராமாயணக் கதைள், பாரதக்கதைகள், சைவவைணவ புராணங்கள் எல்லா வற்றிலும் காணப்படும் கதைகளை விமரிசிக்கிறார்.

     இராமாயணம் காட்டும் வீரத்தினால் நாம் கற்றுக்கொண்டவை யாவை?

     இராம பஜனை, நாமசங்கீர்த்தனம், துளசிமாலை, உண்டியல், பெருமாள்

     பிரசாதம் இவைகளெல்லாம் சேர்ந்த மோட்சம். மேலும் அந்நியரால் அடியும்

     உதையும் குத்தும்பட்டு அங்குமிங்கும் ஓடி ராமா அரங்கா எனக்கூப்பாடு

     போட்டுக் கட்டியழுவதற்கு வீரத்தன்மை வந்ததே யல்லாமல் மனிதனுக்கு

     மனிதன் சமமாக நிற்கும் வீரம் வரவில்லை.

     இன்று நாட்டார் வழக்காற்று விமரிசனம் எழுதுபவர்களுடைய அடிப்படைக் கூறுகள் இவரிடம் உள்ளன.

     அகத்தியர் தெய்வத்திடமிருந்து தமிழைக் கற்றுக்கொண்டு அதை உருவாக்கி

     னார் என்ற கதை ஏற்புடை யதன்று. ஒரு மொழி என்பது சமூகத்தின்

     வெளிப்பாடு. தனிமனிதர் ஒருவர் ஒருமொழியை எக்காலத்திலும் உருவாக்க

     இயலாது.

என்று அறிவியல்பூர்வமாக வாதிடுகிறார்.

     இந்துமதமும் தமிழரும், பெரியபுராண ஆராய்ச்சி போன்ற நூல்களை எழுதியவர் ஈழத்தடிகள். திராவிட நாடு, குடி அரசு இதழ்களில் கட்டுரைகள் வரைந் துள்ளார். திராவிட இயக்கத்தின் வழக்கமான கருத்துகளே இவரிடமும் எஞ்சியுள்ளன.

     வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார், சிலப்பதிகாரமும் ஆரியக்கற்பனையும் என்ற நூலை 1951இல் எழுதினார். “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஐயர் ஒருவர் புகழ, அவரைப் பின்பற்றிய போலித்தமிழரும் புகழ்வாராயினர். ஆரியப் பண்பாட்டினைப் பரப்பும் நூலை அவர்கள் புகழாது வேறு யார்தான் புகழ்வது?” என்று கேட்கிறார் அவர்.

     இப்படிப்பட்டஆராய்ச்சிகளைப் பெரியாரே தோலுரித்துக்காட்டியிருக்கிறார்.

     இது சாதிக்கேற்ற ஆய்வு. சுப்பிரமணிய ஆச்சாரியார் பொற்கொல்லர் வகுப்பைச்

     சேர்ந்தவர் என்பதால் சிலப்பதிகாரத்தை வெறுக்கிறார், ஆர்.கே. சண்முகம் செட்டி

     யார் வணிக வகுப்பைச் சேர்ந்தவர் ஆதலின் சிலப்பதிகாரத்தைப் பாராட்டுகிறார் என்கிறார் பெரியார்.

     பாரதிதாசன்(1891-1964) கட்டுரைகள் ‘மானுடம் போற்று’ என்னும் தலைப்பில் வெளி வந்துள்ளன. ‘பாரதிதாசன் பேசுகிறார்’ என்ற நூலிலும் அவரது கட்டுரைகள் உள்ளன. தாம் நடத்திய குயில் இதழுக்காகவும் பல கட்டுரைகள் எழுதி வெளி யிட்டார். திருக்குறளின் ஒரு பகுதிக்கு திராவிட இயக்கநோக்கில் உரை எழுதினார். பலவேறு திராவிட இயக்க இதழ்களிலும் எழுதிவந்தார். குயில் போன்ற பத்திரிகை களை நடத்தினார். வழக்கமான திராவிட நோக்கு எழுத்துதான் இவருடையது. தமிழ்ப் புலவர்கள் புதிதாக இலக்கியம் படைப்பதில்லை. எதையாவது மொழிபெயர்ப்பது, பிற நூல்களைக் குறைசொல்வதுமட்டுமே தம்வேலையாகக் கொண்டுள்ளனர். கம்பராமாய ணத்தையும் பெரிய புராணத்தையும் விட்டால் அவர்களுக்கு வேறு ஒன்றுமில்லை என்று கடிந்து கொள்கிறார்.

     தமிழ் இலக்கியத்தில் ஜாதியும் மதமும் ஆரியரால் புகுத்தப்பட்டவை.

     இதனால் தமிழ்மொழியும் இலக்கியமும் அழிந்து கொண்டிருக்கின்றன.

     சமயச்சார்புடைய கதைகளும் இலக்கியங்களும் கலை அல்ல. இழிவான

     கதைகளை எங்ஙனம் கலை என்று கூற இயலும்? தென்னகத்தவரை

     அரக்கராக, குரங்கினமாகக் குறித்த இராமாயணம் நம்மை இழிவு

     படுத்துகிறது.

     திருக்குறளில் அந்தணர் என வரும் சொல்லிற்குத் துறவறத்தார் எனப்பொருள் தருகிறார். அந்தணர் என்போர் பார்ப்பனர் அல்ல. ஆதி பகவன் என்ற தொடரில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முப்பண்புகளின் ஒன்றுபட்ட நிலைதான் ஆதி எனப் படுவது. பகவன் என்பது பகல் எனப் பொருள்படும். இதற்கு மதச்சாயம் பூசுவது தவறாகும்.

     பகுத்தறிவு நோக்கிற்கேற்ப, காலத்திற்கேற்ப, பழைய இலக்கியங்களை பாரதி தாசன் மாற்றி வாசித்து நாடகங்கள் இயற்றியுள்ளார். திறனாய்வு என்ற முறையில் அவர் அதிகமாகப் பணிசெய்யவில்லை. இம்மாதிரி மாற்றி வாசிக்கும் இலக்கியப் படிப்பு இன்று பின்னமைப்பியர்கள், பெண்ணியவாதிகள் போன்றோரால் மிக முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. வெறுமனே புராணக்கதைகளைக் கண்டிக்கும் நோக்கினைவிட இது மேம்பட்ட நோக்காகும்.

     திராவிடச் சார்பாளர்கள் அனைவரும் கம்பராமாயணத்தை எதிர்த்தனர். பாரதி தாசனும் அவ்வாறே என்றாலும் தமிழ்க்கவிஞன் என்ற முறையில் அவர் மனநிலை வேறாக இருக்கிறது. டி.கே.சி.யின் கம்பராமாயணப் பதிப்பைப் பற்றி அவர் கவலைப் படுவதைப் பாருங்கள்.

     கோவையிட்ட கம்பனது  செய்யுளிலே முக்காலும்  கோணல் என்றே

     கம்பனார் பதினோரா யிரம்பாட்டில் முக்காலும்  கழித்துப்போட்டு

     நம்பினால் நம்புங்கள்  இவைதான்கம்பன் செய்யுள்என அச்சிட்டு

     வெம்புமா றளிக்கையிலும்  மேவாத செயல்இதனைச் செய்ய இந்தக்

     கொம்பன்யார் எனக்கேட்க ஆளிலையா புலவர்கூட்டந் தன்னில்

எனக் கேட்கிறார் பாரதிதாசன்.

     பாரதிதாசனைப் பாராட்டி எழுந்த நூல்களில் கா. கோவிந்தனின் இலக்கிய வளர்ச்சி (1955), சாமி.பழநியப்பனின் குழந்தை இன்பம் (1956) ஆகியவை குறிக்கத் தக்கவை. இவற்றுக்குப் பின்னர்தான் சாலை இளந்திரையனின் திறனாய்வு நூலான ‘புரட்சிக்கவிஞர் கவிதைவளம்’ வெளிவந்தது.

     குத்து£சி குருசாமி, குடிஅரசு, ரிவோல்ட், இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். உலகத்திலேயே மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பவை சமயஇலக்கியங்களே. முன்னேற்றத்தின் முதற்படியில் காலெடுத்து வைக்கும்போதே சமய இலக்கியம் எனும் பேய் காலைத் தள்ளிவிடுகிறது. மத இலக்கியங்களால் ஒழுக்கமோ ஒழுங்குமுறையோ அன்போ அறிவோ வளர்வ தில்லை. பகுத்தறிவையும் தன்னம்பிக்கையையும் சமத்துவஅறிவையும் அடிப்படை யாகக் கொண்டு அடைய வேண்டிய ஒன்றை மூடநம்பிக்கையாலும் தன்னம்பிக் கையில்லாத் தன்மையாலும் பெற இயலாது. வடமொழிக்கதைகளையும் புராணங் களையும் நமது சமய இலக்கியத்திலிருந்து தள்ளிவிட்டால் அதில் மிஞ்சுவது எதுவுமில்லை என்று 1929 அளவிலேயே குடிஅரசு இதழில் கருத்து வெளியிட்டவர்.

     அ. பொன்னம்பலனார், 1928ஆம் ஆண்டுமுதல் திராவிட இயக்கத்தில் பங்கேற்றவர்.

     நமது இலக்கியங்கள் ஜாதியத்தையும் மதத்தையும் மதவெறியையும் து£ண்டி

     யுள்ளன. எண்ணாயிரம் சமணர்களைக் கொன்ற மதம் உண்மையான மத

     மில்லை. அதன் இலக்கியம் நல்ல இலக்கியமாக இருக்கமுடியாது. கல்வி

     யறிவு, ஆராய்ச்சியறிவு ஊட்டுவ தற்கு பதிலாக மூடநம்பிக்கையையும் வீண்

     பக்தியையும் வளர்க்கிறது. சமண பௌத்த மதக்கொள்கைளை அழிக்கவே

     சைவ வைணவ இலக்கியங்கள் தோன்றின. சமணர்கள் பாரதமக்களே.

     வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. பாரதத்தில் அஹிம்சையை நிலை

     நாட்ட ஆரியரோடு போராடியவர்கள். ஆரிய வேதங்களையும் வேள்வியையும்

     உயிர்க் கொலையையும் எதிர்த்து நின்றவர்கள்.

     சேக்கிழார் பல உண்மைகளை மறைத்து பொய்யைப் பரப்பியுள்ளார். சிவன்

     ஒரு சமூகத்தின் தலைவனாக நின்று மற்றொரு சமூகத்தை அழிக்கநினைப்பது

     கடவுள் தன்மையாக இல்லை. அநபாய மன்னன் சமண சாதுக்களை ஆதரித்த

     தால் சேக்கிழார் தாம் இயற்றியதை சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்

     தார் என்று பொய்க்கதை கூறி மன்னனை மயக்குகிறார்.

     திருநாவுக்கரசர் சமணத்திற்கு எதிராகச் சூழ்ச்சி செய்தவர் என்கிறார். மதுரை மன்னனுக்கு நோய் ஏற்படும்படி செய்ததும் சிவபெருமானால் நோய் நீங்கியது என்பதும் சம்பந்தர் மங்கையர்க்கரசி செய்த சூழ்ச்சியாகும்.

     எல்லா இன மக்களையும் சைவத்திற்கு இழுக்க சம்பந்தர் சிறு தெய்வ வழி பாட்டை ஆதரிக்கிறார். கோயில்களில் பலியிடல், வழிபாடுகள் நடக்கின்றன. நாவுக் கரசர் இதனை எதிர்க்கிறார். ‘தில்லைக்கோயிலில் பலியிடுதல் நடக்க ஏற்பாடு நடந்தது. நாவுக்கரசர் எம்பெருமானுக்கு பலியிட்டு வழிபாடா? நான் சென்று தடுப்பேன்Õ என்று தில்லை செல்கிறார். கோயிலினுள் அவரைக் கொலை செய்கிறார் ஞானசம்பந்தர். மக்களிடம் இவர் உயிரோடு மேலுலகம் எய்தினார் எனக் கதைகட்டிவிடுகின்றனர். இதைத்தான் சிதம்பர ரகசியம் என்றார்கள். சம்பந்தர் மணக்கோலத்தில் இருக்கின்ற போது சமண முனிவர்கள் அவர் வீட்டைச்சுற்றி நெருப்பு வைக்கின்றனர். அதனால் சம்பந்தர் மணக்கோலத்தில் மேலுலகம் சென்றார் எனக் கூறப்படுகிறது.

இவைபோன்று பெரிய புராண நிகழ்ச்சிகளுக்குத் தம் மனம்போனபோக்கில் பொன் னம்பலனார் விளக்கம்கூறியுள்ளார்.

     பொதுவாகப் பழங்காலத்தில் ஒவ்வொரு மொழியையும், இனத்தையும் சார்ந்தே தேசியத்தன்மை (அப்பெயரால் அப்போது அறியப்படாவிட்டாலும்) சார்ந்த சிந்தனை இருந்தது. விவிலியத்திலும் எகிப்தியர்களை வென்று, அவர்களிடமிருந்து இஸ்ரேலியர் கள் தப்பிவந்தனர் என்ற கதையையும், அவர்களுக்குக் கடவுள் உதவி செய்தார் என்ற கற்பனையையும் காணலாம். இங்கும் சமணர்கள் என்ற வேற்றினத்தாரை அழிக்கக் கடவுள் உதவிபுரிந்துள்ளதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

     புலவர் குழந்தை (1906-72), இராவண காவியம் படைத்தவர். தொல்காப்பியக் காலத் தமிழர், யாப்பதிகாரம், தொடையதிகாரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பாரதிதாசன் செய்தது போன்ற ஒரு மறுவாசிப்பையே புலவர் குழந்தையும் இராமா யணக் கதையில் செய்துள்ளார் என்ற அளவில் இது பாராட்டத்தக்கது. ஆனால் இராவணன் திராவிடர் தலைவன் என்பதற்கோ, தாடகை தமிழ்ப்பெண் என்பதற்கோ தக்க ஆதாரங்கள் இல்லை.

     திராவிடர்களை வெற்றிகொண்ட ஆரியர்கள் தஸ்யூக்கள் என்று அவர்களை அழைத்தனர். இராவணன் சூர்ப்பநகை முதலிய புராணப் பாத்திரங்களுக்கு இக்கருத் தைப் பொருத்திப் பார்த்தல் இயலாது. ஓர் இனம் இன்னொரு இனத்தை வெற்றி கொள்ளும்போது அவர்கள் சார்பாகக் கதைகள் படைக்கப்படுகின்றன என்ற பொது நோக்கில் மட்டுமே இவற்றைப் பார்க்கவேண்டும். தனித்த மனிதர்களைச் சார்த்தி நோக்குவதற்கு வரலாற்று ஆதாரங்கள் தேவை. ‘திருக்குறளும் பரிமேலழகரும்’ என்ற நூலில் வர்ணாசிரமக் கொள்கைகளுக்குத் திருக்குறள் உடன்பாடானதல்ல என்பதை விளக்கியுள்ளார்.

     கா. அப்பாத்துரை (1907-89), தென்னாட்டுப் போர்க்களங்கள், தென்மொழி, தென்னாடு, உலக இலக்கியங்கள், மொழி உரிமை போன்ற நூல்களைப் படைத்துள் ளார். கலை, இனம், நாகரிகம், வரலாறு, சமயம், தத்துவம் முதலியவை குறித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அப்பாத்துரையின் தென்மொழி, உலக இலக்கியங்கள் ஆகிய நூல்களில் சில மதிப்பீடுகள் உண்டு.

     உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்களே ஆவர். உலக வரலாற்றில் வேறுஎந்த மொழிக்குமில்லாத இளமை, தமிழுக்கு உண்டு. மனித இலக்கியமாகவும் உலகிலுள்ள எல்லாச் சமயங்களின் பொது இலக்கியமாகவும் திகழ்கிறது தமிழ் இலக்கியம். சங்க இலக்கியம் கண்ட தமிழகம் இன்றைய தமிழகத்திலிருந்து மிக உயர்ந்திருந்தது. யாருக்கும் அடிபணியா இலக்கியமாக விளங்கியது சங்க இலக்கியம்.

     அன்றைய தமிழர்கள் வெறும் உழவர்களாகவும் நாட்டுப்புறத்தவராகவும் இல்லாமல் சிறந்த செல்வந்தர்களாக விளங்கினர். சங்கத்தமிழருடைய இசைக் கருவிகள் இன்று நாம் காணும் இசைக்கருவிகளைவிட உயர்ந்தவை. அவர்களுடைய ஆடைஅணிகளும் உயர்ந்தவைகளே. இடைக்காலத்தில் இருந்ததுபோல் அன்று அடிமை     யாக இருக்கவில்லை. கடற்கோளினால் நம் பழம் இலக்கியங்கள் பல அழிந்துவிட சிலப்பதிகாரம் நமக்குக் கிடைத்திருப்பது நாம் பெற்ற பேறு. தமிழக மறுமலர்ச்சிக்கு உதவிய ஏடுகளில் தலை சிறந்தது சிலப்பதிகாரமே. தொல்காப்பியம், சங்கஇலக்கியம், திருக்குறள் இவைகளை விட சிலப்பதிகாரத்தில் மறுமலர்ச்சிக் கருத்துகள் மிகுந்துள்ளன. புதுமலர்ச்சிக்கு உரிய பல விதைகள், து£ண்டுதல்கள் சிலப்பதி காரத்தில் உள்ளன. கம்பராமாயணமும் பெரிய புராணமும் நமக்கு அமிழ்தமாகவோ மருந்தாகவோ அமையவில்லை. இரண்டும் இருவேறு வகையில் நமக்கு ஊறு செய்பவையாகும்.

     சங்ககாலம் பற்றிய பொற்காலப் பார்வையை இவ்வாறு பிறரைவிட காத்திரமாக அப்பாத்துரை முன்வைப்பதைக் காணலாம். அதேபோலச் சிலப்பதி காரத்தைப் பற்றிய இவரது கருத்தும் மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

     கம்பரிடம் சொற்சுவை பொருட்சுவையைக் காணலாம். அவை பாமர மக்களி டமிருந்து கவிதையைப் பிரிக்கின்றன. ஆனால் சிலப்பதிகாரம் அப்படியன்று. குடிமக் களைக் காப்பியத்தோடு இணைக்கிறது. சிலப்பதிகாரம் நாகரிகத்தின் ஊன்று கோலாக வும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்கிறது. கம்பராமாயணத்திற்கு முற்பட்ட இலக்கியப் பெருமையை மக்கள் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக இராமாயணம் புகுத்தப்பட்டது. சிந்தாமணி, கம்பராமாயணத்தைவிட எளிதாகக் கேட்பவர்களைப் பிணிக்கக்கூடியது.

     10ஆம் நூற்றாண்டில் சிந்தாமணிக்கு இருந்த புகழைக்கண்டு கம்பராமா யணத்தையும் பெரியபுராணத்தையும் படைத்தனர். சிந்தாமணி மக்களிடையே பரவாத தாலேயே இவ்விரண்டும் தனிப்பெரும் நூல்களாகத் திகழ்ந்தன.

     பெரியபுராணம், கம்பராமாயணத்தைப்போல ஆரியமாயைக்கு இடம்தர வில்லை. தமிழுக்குச் சிறுமையை அளிக்கவில்லை என்று கூறும்போது பிற திராவிட இயக்கத் திறனாய்வாளர்களுக்கு முரண்படுகிறார்.

     இராவணன் இராமனின் எதிரி மட்டுமல்ல, ஆரிய முனிவர்களின் எதிரியும்

     கூட. காரணம், வேள்விகளுக்கு இராவணன் எதிர்ப்புத் தெரிவித்தான்.

     சி. இலக்குவனார், 1910ஆம் ஆண்டு பிறந்து 67 ஆண்டுகள் வாழ்ந்தவர். பள்ளிகளிலும் கல்லு£ரிகளிலும் பணியாற்றியுள்ளார். தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக் கொண்டவர். குறள் நெறி என்ற தனித்தமிழ் இதழை நடத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைசென்றார். பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி, தமிழ்மொழி, போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

     தமிழரின் வாழ்க்கை மரபுகளையும் இலக்கிய மரபுகளையும் காப்பதற்காகவே தொல்காப்பியம் படைக்கப்பட்டது. ஆரியரின் ஆதிக்கம் தொல்காப்பியத்தில் தெரிகி றது. சிவனை முதற்கடவுளாகக் கொண்ட வழக்கம் தொல்காப்பியர்காலத்தில் இல்லை. தொல்காப்பியரின் காலத்தை இலக்கியத்தின் பொற்காலம் எனலாம். இடைக் காலத் தில் இலக்கியங்கள் புராணங்களாக மாறிவிட்டன. கடவுட்பாடல்களே இலக்கிய மாயின. இதனால் மக்கள் பக்தர்களாக மாறினர். தொல்காப்பியரின் அறிவியல் சிந்த னை மறைந்து மூடநம்பிக்கைகளும் வீண்பக்தியும் தோன்றின.

     ஓதலும் து£தும் உயர்ந்தோர் மேன என்ற நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் சிலர் முதலிரு வருணத்தாரே என்று கூறுவர். வேளாளர் ஒழிந்தோர் என நச்சினார்க் கினியர் கூறுவர். காரணம் உரையாசிரியர்கள் காலத்தில் நால்வகை வருணம் செல் வாக்குப் பெற்றது. தொல்காப்பியர் காலத்தில் இல்லை. எனவே தொல்காப்பியர் வேளாளரைத் தாழ்ந்த குலத்தவர் என்று ஒதுக்கியிருக்க இயலாது முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை என்று கூறக்காரணம் பெண்ணை அடிமைப்படுத்துவதன்று. ஆண்கள் பெண்களுடன் வெளியூர் சென்றுவிட்டால் சொந்த நாட்டிற்குத் திரும்பிவர மாட்டார்கள். பெண்கள் வீட்டிலிருந்தால்தான் சொந்தநாட்டிற்கு வருவர். அதற்கா கவே தொல்காப்பியர் இவ்வாறு கூறியுள்ளார். .

     தொல்காப்பியர்காலச் சிந்தனையெல்லாம் மறைந்து மூடப்பழக்கவழக்கம் மலர, இடைக்கால பக்தி இலக்கியங்கள் காரணமாயின என்று சி. இலக்குவனார் கூறுகிறார்.

     ஞா. தேவநேயப்பாவாணர் (1902-81) மொழிஞாயிறு எனச் சிறப்பிக்கப்படுப வர். இவரும் தனித்தமிழ் இயக்கத்திற்கு ஊக்கமளித்தவர். தமிழ்மொழி இலக்கணம், சொல்லாராய்ச்சியில் ஈடுபட்டு எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்தவர். .

     தமிழரின் கொடைமடத்தைப் பாவாணர் இகழ்கிறார். கொடைமடப்பண்பினால் தான் தமிழர்கள் ஆரியர்க்கு அடிமையாயினர். ஆரியர்கள் தமிழரின் பண்பைப் பயன் படுத்திக் கோயில்களில் இடம்பெற்றுவிட்டனர். பல காணி நிலங்களைத் தானமாகப் பெற்றனர்.

     சிலப்பதிகாரத்தில் ஆரியத் தாக்கம் உள்ளது. பார்ப்பனியத்தைப் பரப்புவதற் கென்றே சிலப்பதிகாரம் படைக்கப்பட்டது என்கிறார். மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிடக் கண்ணகி கோவலன் திருமணம் நடந்தது. கண்ணகியின் தோழி தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணாவாள். மாதவியிடம் கௌசிகன் வசந்தமாலை என் னும் பார்ப்பனர் பணிபுரிந்தனர். மாடல மறையோன் செல்வாக்கு சிலம்பு முழுவதும் உள்ளது. பாண்டியன் நெடுஞ்செழியன் திருட்டுத்தொழில் புரிந்த வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறையிலிட, பூசாரி கோயிலைப் பூட்டினான். பார்ப்பனர் போராடி னர். இறுதியில் பாண்டியன் வார்த்திகனை விடுதலைசெய்தான். அவன்காலில் விழுந் தான். எனினும் பார்ப்பனர் கோபம் தணியவில்லை. இச்சம்பவத்தினால் பார்ப் பனரின் செல்வாக்கு புரிகிறது. கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது தவறு. பார்ப்பனரே மன்னன்மீது உள்ள கோபத்தில் மதுரையை எரித்தனர் எனப் பாவாணர் கூறுகிறார்.

     மு. அண்ணாமலை திராவிட இயக்கம் சார்ந்த சிந்தனையாளர்களில் குறிப் பிடத்தக்கவர்.    பேராசிரியராகப் பணியாற்றியவர். 1928ஆம் ஆண்டு செட்டிநாடு கொத்தமங்கலத்தில் பிறந்தவர். அலை, இமயவரம்பன் என்னும் புனைபெயர்களில் எழுதியவர். நல்ல கவிஞர். மலரும் புனலும், தாமரைக் குமரி, அதிசயக் காதலி போன்ற கவிதைத் தொகுதிகளாக அவர் கவிதைகள் வெளிவந்தன. பொன்னி இதழ் வழி எழுதத் தொடங்கிய இவருடைய சிறிய, ஆனால் சிறந்த நூல், நச்சினார்க்கினியர் என்பதாகும். இதுவே உரையாசிரியர்கள் பற்றித் தமிழில் எழுந்த முதல் திறனாய்வு. குற்றம்-நிறை இரண்டையும் சீர்து£க்கிப் பார்க்கும் நூல். மறைமலையடிகளும் திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் நச்சினார்க்கினியரை அவர்தம் வடமொழிச் சார்புடைய கருத்துகளுக்காகக் கண்டித்துவந்துள்ளனர்.

     நச்சினார்க்கினியரை முழுக்க முழுக்கத் தள்ளிவிட வேண்டும்

     என்று தொடங்குவது அறிவுலகிற்கு ஒவ்வாத செயலாகும்.

     காணும் எல்லாவற்றையும் Ôநன்று நன்றுÕ என அப்படியே வாங்

     கிக் கொள்ளும் சிந்தனையற்ற வறட்டுக்கும்பலையும் நான் சேர்ந்

     தவனல்லன். அவர்கருத்துகள் அத்தனையையும் அப்படியே நான்

     ஏற்றுக்கொள்ள நான் என்ன மொத்த வியாபாரியா? அதற்காக

     Ôநச்சினார்க்கினியர் தமிழைக் கெடுத்துவிட்டார்Õ என்ற பல்லவி

     யைத் திருப்பித் திருப்பிப் பாடும் உதவாக்கரைக்கூட்டத்தைச்

     சேர்ந்தவனும் நானல்லன்.

     இந்த மேற்கோள் இவரது நடுநிலைப்பாங்கான விமரிசனத் தன்மையைக் காட்டக்கூடியது. நச்சினார்க்கினியரின் உரைச்சிறப்புகளை விளக்குகின்ற அதே நேரத் தில், ÔÔஒரு விமரிசகர் உரையாசிரியர் வடிவில் வெளிப்படுமபோது எப்படித் தடுமாற் றம் நிகழ்கிறது என்பதைக் காட்டியுள்ளேன்ÕÕ என்கிறார். Ôவள்ளுவர் தனித்தன்மைÕ என்ற நூலையும் ‘கம்பன் கெடுத்த காவியம்’ என்னும் நூலினையும் எழுதியுள்ளார். அநுமன் து£தன் எனக் கூறப்படுது பொருந்துவதாக இல்லை. து£தனுக்குரிய வேலை களைச் செய்யாது சீதையைத் திருட்டுத்தனமாகச் சந்தித்தல், இராவணனைச் சந்திக்காமை, இலங்கையை அழித்தல் இவையெல்லாம் து£தனுக்குரிய செயல் அல்ல. இராவணன் அம்புபட்டு இறந்துகிடக்கிறான். உடல் முழுக்க காயம். சீதைமேல் கொண்ட காதல் அவனுடலில் எங்கும் தங்கிவிடக்கூடாது என்பதற்காகவே இக் காயங்கள். இவ்வுவமை பொருத்தமானது. ஆனால் இவ்வுவமையைக் கூறுவது இராவ ணன் மனைவி. அவள் தன் கணவன் இறந்திருக்கும் நேரத்திலும் சீதையின் அழகை வருணிக்கிறாள். இராமனை ஒரு வார்த்தைகூட இகழவில்லை. இந்நிகழ்ச்சிகள் யாவும் பொருத்தமுடையவையாகத் தோன்றவில்லை.

     கைகேயியை அனுதாபத்துக்குரியவளாக முதலில் படைத்த கம்பர் இறுதியில் அவளை வெறுப்பதுபோல் அமைக்கிறார். இது கம்பரின் நடுநிலையற்ற தன்மையைக் காட்டுகிறது. கம்பர் சில பாத்திரங்களை உயர்த்தியும், சில பாத்திரங்களைத் தாழ்த்தி யும் காட்டுகிறார். அளவுக்கதிகமான கற்பனைப் பாடல்களால் வாசகரைச் சலிப்படை யச் செய்கிறார். தேவையான இடங்களில் கற்பனை வளத்தைக் கூட்டுவதை விட்டு விட்டு எல்லா இடங்களிலும் புனைவது அழகாக இல்லை. கம்பரின் யாப்பு வன்மை விருததப்பாக்களை அமைத்த முறை, புதுமையிலும் புதுமையாக உள்ளது. கம்பர் ஒருசில குறையுடையவராயிருப்பினும், கவித்திறத்தால் உயர்ந்து நிற்கிறார்.

     1940களின் இறுதியில் வெளியான கலையும் வாழ்வும் (க. அன்பழகன்), புதிய பாதை (இரா. நெடுஞ்செழியன்), விருந்து (மு. அண்ணாமலை), புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் (முல்லை முத்தையா), கவிஞரின் கதை (மணி) போன்ற நூல்களில் பாரதிதாசன் கவிதைகள் பற்றிய நலம் பாராட்டல்கள் இடம்பெற்றன. திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களான, பொன்னி, திராவிடநாடு, உண்மை போன்ற இதழ் களிலும் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன.

     திராவிடஇயக்கப்பார்வை பன்முகப்பட்டது என்பதற்கு அப்பாத்துரை, மு. அண்ணாமலை போன்றோரின் பார்வைகள் சான்றுதரும். பெரியார் சிலப்பதிகாரத் தையும், பெரியபுராணத்தையும் ஏற்கவில்லை. அப்பாத்துரை, இவையிரண்டையும் நல்லிலக்கியங்களாக ஏற்றுக் கொள்கிறார். அண்ணாதுரை முதற்கொண்டு திராவிட இயக்கத்தினர் கம்பராமாயணத்தை எதிர்த்தபோது அண்ணாமலை அதைப் பாராட்டி யிருக்கிறார்.

     ப. கண்ணன், பகுத்தறிவு என்ற மாதஇதழை நடத்தினார். வீரவாலி என்னும் நூலை எழுதியுள்ளார். வாலியை வீரமிக்கவனாகவும் இராமனைக் கோழையாகவும் காட்டி எழுதப்பட்டநூல் இது. இராமன் ஒளிந்துநின்று வாலியைக் கொன்றது சரியா என்ற கேள்வி உண்டு, வாலியை எதிர்ப்படுபவர்கள் தங்கள் பலத்தில் பாதியை இழந்துவிடுவர் என்ற புராணக்கதை உள்ளது. அதனால் இராமன் மறைந்து நின்று அம்பெய்தான். இதில் இராமனின் இயலாமை வெளிப்படுவதை உணரலாம். சுக்கிரீ வனுக்காக வாலியைக் கொலைசெய்த இராம அவதாரத்தை மனிதர்களை மீட்க வந்தவன் என்று கூற முடியுமா? இராமாயணம் என்பது ஆடுமாடு மேய்த்துவந்த ஆரியர்கள் நம் நாட்டில் நுழைந்தபொழுது திராவிடர்களுக்கும் அவர்களுக்கும் நடந்த போராட்டச் சித்திரிப்பே ஆகும். திருவாரூர் தங்கராசுவும் ஏறத்தாழ இதே போன்ற கருத்துகளைக் கூறியுள்ளார்.

     கலைஞர் கருணாநிதி, திராவிட இயக்கத்தின் தொடக்ககாலத்திலேயே அதிக ஈடுபாடு கொண்டு பெரியார் அண்ணா இவர்களோடு நெருங்கிப்பழகி, திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராக இன்று வாழ்பவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திரைக் கதை என்று படைப்பிலக்கியத் துறையில் ஈடுபட்டவர். சங்கத்தமிழ் தொல்காப்பியப் பூங்கா முத்துக் குவியல் குறளோவியம் எனப்பல நூல்களைப் படைத்துள்ள போதிலும் திறனாய்வு நோக்கு இவற்றில் இல்லை. இவரும் சில மறு வாசிப்புகளை வைத்துள்ளார். குறளோவியத்தில் தாழ்ந்தமக்களைத் தலைவர்களாகக் கொள்ளுகிறார். சிலப்பதிகாரக் கதையையும் பகுத்தறிவு முறையில் மாற்றி அமைத்துள் ளார். சான்றாக, மதுரையை எரித்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு சரிந்து விழுந்து குடிசை பற்றிக் கொள்வதாக அமைப்பதைக் காட்டலாம்.

     முடியரசன் (1920-1998), பாரதிதாசன் பரம்பரையில்வந்த கவிஞர். 1940இல் திராவிட இயக்கத்தில் இணைந்தவர். போர்வாள், கதிரவன், குயில் முதலிய இதழ் களில் எழுதினார். வீர காவியம், பூங்கொடி, காவியப் பாவை என்னும் நூல்களை இயற்றியுள்ளார். கவிதையில் வரும் சொல்லழகை அது தரும் அழகுநோக்கி மூன்று வகையாகப் பகுக்கலாம். ஏற்ற இடத்தில் ஏற்ற சொல்லை அமைப்பத ஒருவகை. இதனைச் சொல்லாட்சி என்பர். சொல்லும் சொல்லால் பிற குறிப்புகளும் பெறுமாறு அமைட்பபது மற்றொரு வகை. இதைச் சொல்நயம் என்பர். ஒரு சொல் பல பொருளை உணர்த்தி நிற்பது மூன்றாம் வகை. இதனை இரட்டுற மொழிதல் என்பர். முதல் இரண்டு வகையாகிய சொல்லாட்சியும் சொல்நயமுமே கவிதக்கு மிகச் சிறந்தன என்று கவிதை இன்பம்-சொல்லழகு என்னும் கட்டுரையில் கூறுகின்றார்.

     இடைக்காலப் புலவர்கள் இயற்றியவையெல்லாம் சமயக்காப்பியங்களே. அவை களால் எப்பயனும் இல்லை. மணிமேகலை தமிழ் உணர்வை வளர்க்கிறது. அறிவையும் நீதியையும் தர்மத்தையும் வலியுறுத்துகிறது. தொல்காப்பிய அமைப்பு முறை வேறு எந்த மொழி நூலிலும் இல்லாத அளவு சிறப்பானது.

     வீண் தமிழ்ப்பற்று கொண்டு முழங்குபவரைத் தமிழ் வாணிகர் எனக் குறிப்பிடு கிறார். இலக்கண வரையறைகளுக்கு உட்படாத புதுக்கவிதைகளை அடியோடு வெறுக் கிறார். பழமையைப் பாராட்டுபவர், இடைக்கால இலக்கியங்களை வெறுப்பவர். நவீன இலக்கியங்களில் கனவுத்தன்மை சார்ந்த-ரொமாண்டிக் படைப்புகளை மட்டுமே இவர் போற்றுகிறார்.

     இரா. நெடுஞ்செழியன் (1920-2000), திராவிட இயக்கக் கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். உரிமைப்போர், மதமும் மூடநம்பிக்கையும், திராவிட இயக்க வரலாறு போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளில் உவமைநயம், பகுத்தறிவு நெறியே பண்பட்ட நெறி போன்ற இலக்கியக் கட்டுரைகளை மன்றம், திராவிட நாடு, உண்மை, இதழ்களில் எழுதினார். மொழிப்பற்றும் இலக்கியப் பற்றும் கொண்டவர்.

     நாகரிகத்தின் தோற்றமாக வளர்ந்த மொழி தமிழ். வேகமாக முன்னேறிய

     தமிழனின்அறிவு இரண்டாம் நூற்றாண்டுக்குப்பின் நின்றுவிடக் காரணமாக

     அமைந்தது மூட நம்பிக்கையும் குருட்டு பக்தியுமே. அவற்றைப் போதித்தவைகள்

     பக்தி இலக்கியங்களும் புராணங்களும். போர், காதல், என்ற வாழ்க்கை முறை

     மாறி தவம், வரம், என்ற நிலை உருவாகி யாகத்திலும் யோகத்திலும் தன்

     சிந்தனையைச் செலுத்தத் து£ண்டியது புராணங்களே.

     சங்க இலக்கியங்கள் மனிதநலச் சிந்தனையின் முழு வளர்ச்சியாய் உள்ளன.

     ஐம்பூதங்களின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறது என்பதை வலியுறுத்துகிறது

     சங்க இலக்கியம், உயிரும் ஆன்மாவும் அழிவற்றது என்ற மதவாதிகளின் கூற்றை

     சங்க இலக்கியம் மறுக்கிறது. மூடப் பழக்கவழக்கத்திற்கு எதிரானது சங்க

     இலக்கியம், தொல்காப்பியம் உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டது என்பதை

     ஏற்பதில்லை. திருக்குறளும் இதே கருத்துகளையே வலியுறுத்துகிறது. பதினெண்

     கீழ்க்கணக்கு நூல்களுள் சிற்சில இடங்களில் ஆன்மிகம் தலைது£க்கினாலும்

     பகுத்தறிவையே வளர்க்கின்றன. சித்தர்களின் பாடல்கள் பொதுஅறிவையும்

     பகுத்தறிவையும் ஊட்டி ஜாதி, மதம், கடவுளை கண்டிக்கின்றன.

     பெரியபுராண அடியார்களில் அதிகத்துன்பத்திற்குள்ளான அடியார்கள் பிரா மணர் அல்லாதாரே. பிராமணர் மேம்போக்காகவே சோதிக்கப்பட்டு பரமபதம் அடைந்துள்ளனர். தாழ்ந்த சாதியினர் கடுந்துன்பப் பட்டுள்ளனர். திருவிளையாடல் புராணத்தில் தாயைப் புணர்ந்து அதுகண்டு சகியாத தந்தையைக் கொன்ற பார்ப் பனனின் பாவம் தீர்ந்துவிடுகிறதாம். மனிதத்தன்மையற்ற செயலையும் பார்ப்பனன் செய்தால் அவனுக்கு மன்னிப்பு உண்டு என்பதைத்தான் புராணங்கள் வலியுறுத்து கின்றன என்பது அன்பழகனின் நோக்கு. புராணக்கதைகளைப் பற்றி அன்பழகன் எழுப்பும் வினாக்கள் சுவையாக உள்ளன. இவற்றில் வெளிப்படும் பகுத்தறிவு நோக்கினை நாம் இரசிக்கலாம். மேலும் இன்றைய தலித்திய விமரிசன நோக்கிற்கு ஆதாரமான சில பார்வைகள் அவரிடம் உள்ளன.

     புலவர் ந. இராமநாதனின் கவிஞரும் காதலும் என்ற நூல் பாரதிதாசன் பற்றிய திறனாய்வு நூல். பாரதிதாசன் கவிதைகளில் மரபும் புதுமையும் என்னும் நெல்லை ந. சொக்கலிங்கத்தின் நூலும் நன்கு அமைந்தது. மு. அண்ணாமலையின் இலக்கிய மேடையிலும் பாரதிதாசன் பற்றிய மதிப்பீடு உண்டு.

     பகுத்தறிவியக்கம் சார்ந்த பிற திறனாய்வாளர்களில் பெருஞ்சித்திரனார் போன் றோர் தென்மொழி இதழில் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. வெ. வரத ராசனின், தமிழும் தேனும், வ. சுப்பிரமணியனின் வாழ்வியற் கவிஞர்கள் ஆகிய வையும் பாரதிதாசன் பற்றியவை. புலவர் குழந்தையின் தொல்காப்பியர் காலத் தமிழர் என்ற நூலில் பகுத்தறிவாளர் கொள்கைச் சார்புத் திறனாய்வைக் காணலாம். தென்மொழி, குயில், உண்மை, தென்னகம், மன்றம், பகுத்தறிவு போன்ற இதழ்களில் பாரதிதாசன் பற்றிய இரசனைக் கட்டுரைகளைச் சிலர் வரைந்தனர்.

     வே. ஆனைமுத்து (1925), 1976இல் மார்க்சியபெரியாரிய-பொதுவுடைமைக் கட்சியையும் 1978இல் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையையும் அமைத்தார். சிந்தனையாளன் என்னும் இதழையும் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் ஆங்கில இதழை யும் நடத்தினார். பெரியார் களஞ்சியம் என்னும் பெருநூலைத் தொகுத்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்த வழக்கமான திராவிடப் பார்வையையே இவர் வலியுறுத் துகிறார்.

     சிலப்பதிகாரத்திலேதான் முதல்முதல் சமயக்கருத்துகள் புகுந்தன. மணிமேகலை யில் அது வளர்ந்தது. பெரும், சிறு காப்பியங்களில் மதக்கருத்துகள், தாராளமாகப் புகுந்தன. கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம் போன்றவை புண்ணிய நூல்களாகக் கருதப்படும் அளவுக்கு சமயவெறி நாட்டில் வளர்ந்துவிட்டது. இங்ஙனம் சமயம் கலந்த இலக்கியமாகத் தமிழிலக்கியம் மாறியதால் இலக்கியத்தின் உண்மைக் கருத்துகளை அறிஞர்கள் ஆய்ந்துகூறத் தயங்கினர். இதுபோன்ற நூல்களில் குறை காண்பது தம்குறை என ஏற்றுக்கொண்டனர். தழுவல் இயல்புகொண்ட உயிரினங்களே இன்றும் வாழ்கின்றன. இலக்கியமும் அவ்வாறே. திருக்குறளில் தழுவல் தன்மை சமயம், மொழி, நாடு கடந்து நிற்பதால், அழியா இலக்கியமாய் உள்ளது. சிலப்பதிகாரம் தொடங்கி எல்லா இலக்கியங்களும் மதப்பிடியில் சிக்கியுள்ளன என்பது போன்ற கருத்துகள் இவரிடம் வெளிப்படுகின்றன.

     கொண்டல் சு. மகாதேவன் 1925இல் கொண்டல்வட்டம் திடல் என்னும் ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக திராவிட மாணவர் செயலாளராக விளங் கினார். 1948இலேயே எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசியவர். கண்ணகியின் மணம் காதல் மணமாகும், குலமகளிர் கோவலனைப் பாராட்டும் முறை குலமரபு என்றே கொள்ள வேண்டும். கோவலன் ஒரு சமூக அடிமையாகக் காட்டப்பட்டுள்ளான்.

     கானல்வரிப் பாட்டு காதல் போட்டியல்ல, கலைப்போட்டியே ஆகும். கலையின் மீது ஆர்வம் கொண்ட கோவலனால் கலையை மதிப்பிடத் தெரியவில்லை. கலைவழி மாதவியின் கண்கள் அசைய, அவ்வசைவைக் காதல்வலையாகப் புரிந்து கொண்டான். இறுதியில் காதலால் அவள்அழும்போது இது கலையினால் வரும் உணர்ச்சியற்ற கண் ணீர் என நினைக்கிறான். செங்குட்டுவன் இமயம் நோக்கிப் படையெடுத்தது, கண்ண கிக்காக அல்ல, கனகவிசயர்மீது கொண்ட பகைமைநோக்கியே என்பன போன்ற கருத்

துகளை வழங்கியுள்ளவர் இவர்.

     ஏ.பி. ஜனார்த்தனம்    அண்ணாதுரை படைப்புகள் பற்றிய ஆய்வினை முதன் முதலில் தொடங்கி வைத்தவர். அண்ணாவின் நாடகங்கள் பற்றிய ஆய்வு இவரது முனைவர்பட்ட ஆய்வாக அமைந்தது. அண்ணாவின் நடை பற்றி விரிவாக எழுதி யுள்ளார்.

     ந. சஞ்சீவி, சிலம்புத்தேன், சிலப்பதிகாரப் பெண்டிர், ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்ற பல நூல்களை எழுதியவர். மருதிருவர் பற்றிய நூலும் குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வரங்குகள் நடத்தி, பல்கலைப் பழந்தமிழ், தெய்வத்தமிழ், சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள் போன்ற பல நூல்களையும் வெளியிட்டவர். இலக்கிய இயல் அ-ஆ என்பது இவரது கோட்பாட்டு நூல். மா.கி. தசரதன், வேதங்களும் புராணங்களும் மக்களைப் பிரித் தாளுகின்றன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழுணர்வை ஊட்டுகின்றன. சங்க இலக்கியம் ஒரு சில மேட்டுக்குடியினர் கையில் உள்ளது. பழம்பாடல்களைப் பாராட் டினால் மட்டும் தமிழ் வளராது. சிவன் படைத்த மொழி எனப் பேசிக்கொண் டிருப்பதாலும் குமரிக்கண்டம், சிந்து சமவெளி நாகரிகச் சிறப்பு, மன்னர்களின் வெற்றி போன்றவைகளைப் பேசினால் தமிழ் வளராது என்கிறார்.

     சங்க இலக்கியம் முழுதுமே மனித வாழ்வுக்குத் தேவையான உயர்ந்தகொள்கை களை உடையதாக உள்ளது. சங்க காலத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத் தப்பட்டனர். ஆண்களின் அறிவை மயக்கி, தீயவழி செலுத்தும் இயல்புடையவர்கள் பெண்கள்-மாயப்பிசாசு என்றெல்லாம் இடைக்காலத்திலேதான் பெண்கள் இகழப் பட்டனர். தமிழ்மண்ணில் வேற்றுநாட்டு மொழியோ பண்போ பரவாமல் தமிழ்ப் பண்பு தன் தனித்தன்மையுடன் விளங்கிய நாட்களில் ஆணுக்கு இருந்த உரிமையும் உயர்வும் பெண்ணுக்கும் சமுதாயத்தில் இருந்துவந்தது. ஆனால் வடவருடைய கூட் டுறவு ஏற்பட்ட பின்னர்தான் பெண்ணடிமைத்தனம் என்ற புன்மை ஏற்பட்டது. பரிமேலழகர் ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற குறளுக்குப் பொருள் எழுதும்போது-தன் மகனைச் சான்றோன் எனப் பிறர்கூறக்கேட்ட தாய் என்று எழுதுகிறார். காரணம் பெண் இயல்பாய்த் தானாக உணரும் ஆற்றல் அற்றவள் என்ற சிந்தனை பரவியிருந்த காலம் அது. இடைக் காலத்தில் எழுந்த புராணங்கள் எல்லாம் பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் அடிமையாகவுமே படைத்துள்ளன.

திராவிட இயக்கச் சார்பும் பிற சார்புகளும் கொண்ட சில அறிஞர்கள்

சாமி. சிதம்பரனார் (1900-1961)

     மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் 1923ஆம் ஆண்டு பண்டிதர் பட்டம் பெற்றவர். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ஓராண்டுக்காலம் பணியாற்றினார். பெரியாரின் குடிஅரசு இதழைப் படித்துப் பகுத்தறிவுக் கொள்கையில் பெரும் ஈடுபாடுகொண்டார். சுயமரி யாதை இயக்கத்திலும் நீதிக்கட்சியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 1928 முதல் குடிஅரசு இதழில் கடவுள் மதம் ஜாதி புராணம் சாத்திரம் மூட நம்பிக்கை போன்றவற்றைக் கண்டித்துஎழுதினார். தொல்காப்பியத் தமிழர், ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன், பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், வள்ளுவர் வாழ்ந்த தமிழகம், பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை போன்ற எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.

     சாமி. சிதம்பரனார், சரஸ்வதியிலும், இன்னும பல ஏடுகளிலும் எழுதிவந்த பகுத்தறிவியக்கம் சார்ந்த முற்போக்குத் தமிழ் அறிஞர். இவர் பிற திராவிட இயக்கத்தி னர் செய்ததுபோல கம்பராமாயணம் போன்ற பழைய இலக்கியங்களைக் கண்மூடித் தனமாகச் சாடவில்லை. வடிவ அடிப்படையிலான இலக்கியப் பார்வையுடன் எழுதி னார். வள்ளுவர் காட்டிய வைதீகம், சிலப்பதிகாரத் தமிழகம், மணிமேகலை காட்டும் சமுதாய நிலை, என்றாற்போல சமூகப் பின்னணிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். ஆழ்வார்கள் அருள்மொழி, சங்கப்புலவர் சன்மார்க்கம், இலக்கியம் என்றால் என்ன, சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம் போன்ற இவரது நூல்கள் சிறப்பானவை. இவர் தம் இரசனைச் சிறப்புக்கு இவரது கம்பராமாயணப் பதிப்பு எடுத்துக்காட்டு. பிற நூல்களை சமூகப்பார்வைகள் என்று சொல்லலாம்.

     மொழி என்பது ஒருநாட்டின் மக்கள் அறிவு வளர்ச்சி பெறுவதற்கும் நாகரிகமடை வதற்கும் முதன்மையான காரணமாக இருப்பது. தமிழ்மொழியை மட்டும் படித்த ஒருவர் குறுகியஅறிவுகொண்டு மதவேற்றுமை வகுப்பு வேற்றுமை பாராட்டுகின்றார்.

     தொல்காப்பியத்தில் சாதி என்னும் சொல் மக்களைக் குறிக்கவில்லை. தண்ணீரில் வாழும் உயிரினங்களைத்தான் குறிக்கிறது. பிற்காலத்தில்தான் இச்சொல் மனிதப் பிரிவுகளைக் குறித்தது. தொல்காப்பியர் ஆண் பெண் சமத்துவத்தை விரும்ப வில்லை. ஆண்கள் பல பெண்களை மணந்துகொள்ளலாம், விலைமாதருடன் கூடி வாழலாம் என்பது சங்க இலக்கியத்திலும் உண்டு. ஆண்பெண் வேறுபாட்டைப் பழம் இலக்கியங்கள் போற்றியதையே இது எடுத்துக்காட்டுகிறது.

     பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பயனற்ற செய்திகள் பல உள்ளன. திருக்குறள் நாலடியார் தவிர மற்ற அறநூல்களினால் எந்தப் பயனும் இல்லை. சோம்பேறி வேதாந்தங்களையே அவை போதிக்கின்றன. ஐம்பெரும் காப்பியங் கள் சமண புத்த மதத்தை போதிக்கும் கதைகளே. தமிழ்மொழியிலுள்ள இலக்கி யங்கள் புராணங் களாகவும் சமயநூல்களாகவும் நீதிநூல்களுமாகவே உள்ளன. ஒருநூல் அந்நாட்டு மக்களுக்குப்பயன்படும் விதத்தில் நாட்டு மொழியில் வெளி வந்தாலொழிய அந்நூலினால் எந்தப் பயனுமில்லை. இம்மாதிரி திராவிட இயக்கத்தின் கருத்துகளை அப்படியே எடுத்துரைத்தாலும், கண்மூடித்து£ற்றுவதையோ போற்றுவதையோ இவரது நூல்களில் காணமுடியாது. மேலும் இவரது இலக்கியப் பார்வையும் நடையும் திராவிட இயக்கத்தின் பார்வை, நடையைவிட மார்க்சிய இலக்கிய நோக்கிற்கு அணுக்கமானது.

சாலை. இளந்திரையன்

     புரட்சிக் கவிஞர் கவிதைவளம் (1964) என்ற நூல் அக்கால எல்லை வரை வெளிவந்த பாரதிதாசன் திறனாய்வுகளில் முக்கியமானது. புதுமையானது. பகுப்பு முறைத் திறனாய்வும் பதிவுநவிற்சித் தன்மையும் கலந்தே காணப்படுவது. நிறைகளை யும் குறைகளையும் ஒரு விரிந்த பார்வையில் இயம்பி மதிப்பீடு செய்வது. இந்நூல் சாலை. இளந்திரையனை ஒரு முக்கியமான திறனாய்வாளராக நிறுவியது.

     அடுத்து இரு ஆண்டுகளில், இவருடைய தமிழில் சிறுகதை, சிறுகதைச் செல்வம் ஆகிய இரண்டும் வெளிவந்தன. முன்னது சிறுகதை பற்றிய அறிமுக நூல். இலக்கிய உலகில் நுழைய விரும்பும் இரசிகனுக்கு ஒரு தக்க வழிகாட்டி. பின்னது, இருபது எழுத்தாளர்களின் சிறுகதைகளை அறிமுகம் செய்யும் பாராட்டு நூல். இந்நூல் முன்னுரையில் சாலை. இளந்திரையன் கூறுகிறார்:

     சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் நமது வாசகர்களில் பெரும்பாலோர்க்கு இன்னும் சரிவரப் பிடிபடாததால், எது நல்ல சிறுகதை என்ற கேள்விக்கு அவர் களால் சரியானபதில் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இந்தநிலை நீடித்தால், அவசர கால வாழ்வின் து£துவனாகிய திருவாளர் பத்திரிகை, எதையெதையோ சிறுகதைகள் என்று மக்களிடம் கூறி நிலைநாட்டி விடுவார். அப்படி அவர் செய்து விட்டால், அதன்பிறகு நமது மக்களை நல்ல இலக்கிய ரசிகர்களாக்குவது முடியாத காரிய மாகவே போய்விடக்கூடும்.

     இந்நூலின் தோரணவாயில்என்ற முன்னுரை, 1966 வரை தமிழ்ச் சிறுகதைத் திறனாய்வின் வரலாற்றையும் அளிக்கிறது. இந்நூல் முதல் வரிசைத்தரம் உள்ள இருபது சிறு கதைகளின் அறிமுக விமர்சனக் குறிப்புகள் என்கிறார் சாலை. மேற்குறிப்பிட்ட மூன்று நூல்களின் பின்னணியில் பார்க்கும்போது தர நிர்ணயம் செய்யும் நல்ல மதிப்பீட்டாளராகச் சாலை மலர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அவர் ஒரு புலமையாளராக இருப்பினும் நல்ல திறனாய்வாளராகியிருக்கிறார்.

      புதுத்தமிழ் முதல்வர்கள், புதுத்தமிழ் முன்னோடிகள் என எழுதிய இரு நூல்க ளும் தற்கால இலக்கிய வரலாற்றுப் பாங்கானவை என்றாலும் அவற்றில் திறனாய்வுக் குறிப்புகள் மிகுதியாக உண்டு.

ம.பொ. சிவஞானம்

     ம.பொ.சி. 1945 அளவில் எழுதத்தொடங்கியவர். இவருடைய முதல் இலக்கிய நூலான சிலப்பதிகாரமும் தமிழரும் 1947இல் வெளிவந்தது. இதன்பின் ஏறத்தாழ இலக்கியம் பற்றிய நாற்பது நூல்களை ம.பொ.சி. வெளியிட்டுள்ளார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூல் பாராட்டுமுறைத் திறனாய்வு. இளங்கோவின் சிலம்பு, உலக மகாகவி பாரதி. இவ்வளவு நூல்கள் எழுதினாலும் அவரை ஒரு ஆழமான திறனாய்வாளராக எண்ணமுடியவில்லை. காரணங்கள் இரண்டு. ம.பொ.சி யின் நூல்களில் சொற்கள் வீணாக்கப்படுகின்றன. ஒரு தொடரில் சொல்லவேண்டிய கருத்தினை, ஒரு அத்தியாயம் எழுதிச் சொல்வார். இரண்டாவது, இவருடைய ஆய்வு, மரபுவழிவந்த பாராட்டுத் திறனாய்வு குணம் காணல் மட்டுமே. பெரும்பாலும் நவீன விளக்கவுரை எழுதிப் பாராட்டிவிட்டுச் சென்றுவிடுவது இவரது இயல்பு. கம்ப ராமா யண ரசனைக்கு ஒரு டி.கே.சி. என்பதுபோல, சிலப்பதிகார ரசனைக்கு ஒரு ம.பொ.சி. என்று பேசப்படும் நிலை சாதாரணப் படிப்பறிவு உடையோர்இடையே சிலப்பதிகார ரசனை வளர்வதற்கு ம.பொ.சி. எவ்வளவு உதவிசெய்தார் என்பதை விளக்குகிறது.

     1945ஆம் ஆண்டிலிருந்து ம.பொ.சி. பல இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். 1950களில் மட்டும், கண்ணகி வழிபாடு, வள்ளுவர் வகுத்தவழி, இலக்கியச் செல்வம், இளங்கோவின் சிலம்பு ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. 1960களில் பாரதியும் ஆங்கிலமும், எங்கள் கவி பாரதி, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, வள்ளலாரும் பாரதியும், உலகமகாகவி பாரதி போன்றவை வெளிவந்தன. 1970களில் இலக்கியங் களில் இனஉணர்ச்சி, கலிங்கத்துப்பரணி திறனாய்வு, திருக்குறளில் கலைபற்றிக் கூறாததேன், சிலப்பதிகார யாத்திரை, சிலப்பதிகாரத் திறனாய்வாளர், சிலப்பதிகார ஆய்வுரை, சிலப்பதிகார உரையா சிரியர்கள் சிறப்பு, திருவள்ளுவரும் கார்ல் மார்க்சும் போன்ற நூல்களை எழுதி யுள்ளார். விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழகத்தில் பிறமொழியினர் போன்ற பிற நூல்களையும் எழுதியுள்ளார்.

     தொல்காப்பியப்பொருளதிகாரம் வறட்டு இலக்கணமாக இல்லாமல் தமிழினத் தவரின் வாழ்க்கைநெறியை இலக்கியமாக்கிக் காட்டுகிறது. தொல்காப்பியம் தொகுப்பு நூலே அன்றிப் படைப்புநூல் அல்ல. புதிதாக எதுவும் எழுதப்படவில்லை. முன்னி ருந்த வகைகளைத் தொகுத்துள்ளார். தொல்காப்பியக் களவியல் வெறும் நாடகவழக் கேயன்றி நாட்டு நடப்பல்ல. தொல்காப்பியர் வடபுலத்திலிருந்து வந்தவரா அல்லது தமிழராஎன்ற வினாவுக்குத் தொல்குடியைச்சேர்ந்த தமிழர் என்று சொல்கிறார். வீடு பேறு பற்றிய சிந்தனை வடக்கிலிருந்து வந்ததே. சங்க இலக்கியத்தில் இச்சிந்தனை இல்லை.

     சிலப்பதிகாரம் முதன்மையாக ஒரு பிரச்சார இலக்கியம் எனலாம். அதுவும் அரசியல் பிரச்சாரமாகும். அந்தஅரசியல், தமிழினவழிப்பட்டது. மணிமேகலை மக்கள் இலக்கியமாக இல்லாது மதஇலக்கியமாக உள்ளது. மணிமேகலை சிலப்பதிகாரத்திற்கு இணை நூலன்று, தனி நூல். களப்பிரன் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டை போதிக்க இனஒருமைப்பாட்டை வளர்க்க சமயவேற்றுமை கடந்த சமுதாய உறவை வலியுறுத்தத் தோன்றிய நூல் முத்தொள்ளாயிரம். நந்திக்கலம்பகத்தில் நந்திவர்மனை ஓட்டிய வர லாற்றுச் செய்திகள் முலாம் பூசப்பட்டுள்ளன. அது வரலாற்று இலக்கியமன்று. அது கட்டுக் கதையே.

     நந்திக்கலம்பகம் பண்ணோசையும் பொருள் செறிவும் உடைய சிறந்த

     இலக்கியமாகும். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ஒருசிறிதும் அது உதவி

     புரியவில்லை. என்றாலும், தமிழ்மொழி வளர்ச்சியற்றுக்கிடந்த பல்லவர்

     ஆட்சிக்காலத்தில் பிறந்த ஒரேஒரு சமூகஇலக்கியம் என்ற வகையில் அதற்கு

     வரலாற்றில் தனி இடம் உண்டு.

என்பது நந்திக்கலம்பகம் பற்றி இவரது கருத்தாகும். கலிங்கத்துப் பரணி சிலப்பதி காரத்துக்குப் பின் தோன்றிய வரலாறு தழுவிய இலக்கியமாகும். தமிழர் என்ற இனக் கண் கொண்டு பார்த்தால் தமிழினத்திற்குத் தேவையற்ற இலக்கியமாகும்.

     கலிங்கத்துப்பரணியில் கடைதிறப்பு காமரசம் நிறைந்தததாக உள்ளது. கடவுள் வாழ்த்தை அடுத்துக் காமத்தை ஊட்டும் கடைதிறப்பு தேவையற்றது. இதனை சுடு காட்டுப் புராணம் என்றும் செயங்கொண்டாரை காமரசம்வழங்கிய முதற்புலவர் என்றும் கூறலாம். பக்தி இலக்கியமான திருப்புகழிலும் நாயகநாயகி பாவனையில் பாடப்பட்டுள்ள பிரபந்தங்கள் சிலவற்றிலும் காம உணர்வூட்டும் செய்திகளே இடம் பெறுகின்றன.

     ம.பொ.சி.யின் திறனாய்வில் மிக நீண்ட விளக்கங்கள், செறிவின்மை, மரபுவழி வந்த பாராட்டுமுறை போன்ற குறைபாடுகள் உள்ளன. இவை தன்மை ரீதியானவை. சமயக்கருத்துகளையும், அரசியல் கருத்துகளையும் இலக்கியத்தில் பொருத்திப்பார்த்தல், ஆகியவை உள்ளடக்க ரீதியானவை. அவருடைய இலக்கியக் கண்ணோட்டம், இன வுணர்வு, தமிழ்ப்பற்று, சமுதாய விழிப்புணர்ச்சி ஆகிய தளங்களின்மீது அமைந்தது. வெறும் இலக்கிய அழகுக்காக மட்டுமன்றி, சமுதாயத்தை உயர்த்தும் கருத்தாக்கம் இருந்தால் மட்டுமே அவர் ஒரு நூலைப் பாராட்டுகிறார்.

     பல்வேறு வகையான இலக்கியங்களையும் திறனாய்வு செய்ததில் இவர் திராவிட மரபில் தனித்தன்மைபெற்றவராக உள்ளார். பாரதியார் நூல்கள், சிலப்பதி காரம், வள்ளலார் பாக்கள் ஆகியவற்றைத் திறனாய்வு செய்தவர்களில் முக்கியமானவ ராக இருக்கின்றார். குறிப்பாகச் சிலப்பதிகாரத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதால் சிலம்புச் செல்வர் என்ற சிறப்பு இவருக்கு வாய்த்து.

மயிலை. சீனி. வேங்கடசாமி

     1925முதல் திராவிடன் இதழாசிரியராகப் பணியாற்றியவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். குடிஅரசு, திராவிடன், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்ப்பொழில் இதழ்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். சங்ககால அரசியல், பத்தொன்பதாம் நூற்றாண்டுத்  தமிழ் இலக்கியம், தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள், இறையனார் களவியல் ஆராய்ச்சி, சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் போன்றவை அவரது சில முக்கிய நூல்கள். சிறந்த வரலாற்றாசிரியராகவும் வரலாற்று நெறிப்பட்ட திறனாய் வாளராகவும் திகழ்ந்துள்ளார்.

     முச்சங்கங்கள் வெறும் கற்பனையே என்று ஸ்ரீனிவாசய்யங்கார், வையாபுரிப் பிள்ளை போன்றோர் கூறுவதை இவர் மறுக்கிறார். பொய் என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் இவை பற்றிக் கூறப் படும் ஆண்டுக்கணக்குகளே. இவற்றில் கூறப்படும் மன்னர்கள் எண்ணிக்கை, அவர் களது ஆட்சிக்காலம் முதலியனவும் நம்பக்கூடியனவாக இல்லை. மன்னராட்சிக் காலத்தை வைத்துச் சங்கத்தைப் பொய் என்பது சரியன்று என்பது இவர் கருத்து.

     முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்னும் நூற்பாவுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் மாறுபட்ட உரைகள் தருகின்றனர். இளம்பூரணர் கடல்வழி என்று கூற, நச்சினார்க்கினியர் மூன்று தன்மையில்-அதாவது ஓதல், தூது, பொருள் காரண மாகப் பிரியும்போது பெண்ணுடன் செல்வதில்லை என்று பொருளுரைக்கிறார். நச்சினார்க்கினியர் உரை தவறெனக்கூறுகிறார் வேங்கடசாமி.

     பத்தினிச்செய்யுள் என்று ஒரு பழங்கதைச் செய்யுள் உள்ளது. சிலப்பதிகாரத் திற்கு இதுவே மூலம் என மு.இராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் கூறினர். இதை மறுத்து இரண்டிற்கும் தொடர்பில்லை எனக் காட்டியுள்ளார். பத்தினிச்செய்யுள், வீரன் ஒருவன் கையில் மணிக்கடகத்துடனும் கட்டாரியுடனும் இறந்துகிடப்பதைக் காட்டுகிறது. சிலப்பதிகாரக் கோவலன் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. மதம்கொண்டயானையை அடக்கியபோதும் கோவலன் கையில் ஆயுதம் இல்லை. நகர் என்றால் அரண்மனை என்றபொருளும் உண்டு. மதுரை நகரம் எரிந்தது எனச் சிலம்பில் கூறுவது முழுநகரத்தைக் குறிக்கவில்லை, அரண்மனை எரிந்தது என்பதையே இது குறிக்கிறது.

     செங்குட்டுவன் தன் தாயை கங்கைக்கு நீராட்டச்சென்ற செய்தி பொய் என நீலகண்ட சாஸ்திரி கூறுவதை வேங்கடசாமி மறுத்துள்ளார். தன் தாயின் உருவச் சிலையை அல்லது எலும்பைக் கையில்கொண்டு நீராட்டச் சென்றான் என்று பொருள் கொள்ளலாம். முழுதும் இச்செய்தி பொய்எனக் கூறவியலாது.

     சங்கப்பாக்களில் ஒரு முலை இழந்த பெண் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. வேறெங்கும் இத்தொடர் பயன்படுத்தப்படவில்லை. கண்ணகி தன் மார்பைச் சிதைத் தாள் என்ற கதை பொருத்தமாக இல்லை. இது ஒரு வழக்கிறந்த நிகழ்வாகலாம்.

     நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் தன் காதல் கைகூடாதபோது தன் கொங்கையைப் பிய்த்தெறிந்தாள் என வருகிறது. இதன்பொருள் கணவனோடு அனுபவிக் கும் இன்பவாழ்வு அழிந்துவிட்டது என்பதே. எனவே முலை குறைத்தல் வழக்கு கணவன் இல்லாமையையும் இன்பவாழ்வு போனது என்பதையும் குறிப்பிடும் வழக்கே என்கிறார்.

     திராவிடஇயக்கம் சார்ந்த நோக்கில் ஆய்வுகளைச் செய்துவந்தவர், பிறகு கருத்தியல் நிலையில் மாற்றம் எய்தியிருக்கிறார் என்பதை வேங்கடசாமியின் எழுத்துகள் வாயிலாக நன்கு காணமுடிகிறது.

     திராவிட இயக்கப் பார்வைகள் எதிர்மறையாக இருந்த காரணத்தினால் அப் பார்வைகள் மதிப்புப் பெறாமல் போயின. அதனால் அவ்வியக்கத்தின் பங்களிப்பும் பாராட்டப்படாமல் போயிற்று. இலக்கிய வரலாற்று நூல்களில் திராவிட இயக்கப் பங்களிப்பு பெரும்பாலும் சேர்க்கப்படுவதில்லை. அந்த அளவுக்கு இன்னும் மதம் நமது மனங்களில் ஆட்சிசெய்கிறது என்று காணலாம். மறைந்த சி.சு. செல்லப்பா, இன்று திறனாய்வுகள் எழுதும் ஜெயமோகன் போன்றோர் ஒரு கையசைப்பில் திராவிட இயக்கச் சார்பாளர்களைப் புறந்தள்ளிவிடும் அளவில் ஆழமற்ற எழுத்து களைக் கொண்டிருந்தது திராவிட இயக்கம்.

     திராவிட இயக்கக் கருத்துகள் பல எதிர்வினைகளை உருவாக்கின. சான்றாக, இராமாயணத்தில் வருணிக்கப்படும் அரக்கர்கள் தமிழரே என்ற கருத்து பரவலாயிற்று. இதை மறுத்து, அரக்கர் தமிழரா என்ற நூலை இரா.பி. சேதுப்பிள்ளை எழுதினார். இராவணன் பிரமனுடைய மரபில் வந்த பார்ப்பனன் என்றும், இராமன் அரச குலத்தவன் ஆனதால் சத்திரியன் என்றும் அவர் வாதிடுகிறார். இதற்கு சூர்ப்பநகை இராமனுடன் செய்யும் விவாதம் சான்றாக அமைகிறது என்கிறார். கம்பராமாயணம் பற்றிய விரிவான விவாதம் உருவாக திராவிட இயக்கம் காரணமாக அமைந்தது.

     திராவிட இயக்கத்தினர் இலக்கியத்தில் மேற்கொண்ட அணுகுமுறை மிக எளிமையானது. குறுக்கல்வாதம், எளிமைப்படுத்தல் ஆகியவை திராவிட இயக்க எழுத்துகளின் குறைகள். சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் பாராட்டுதல், காப்பியங்கள்-புராணங்களிலுள்ள கட்டுக்கதைகளின் ஒவ்வாமையையும், தீங்குகளை யும் எடுத்துரைத்தல், பாரதிதாசன், புலவர் குழந்தை, போன்ற திராவிட இயக்கக் கவிஞர்களைப் பாராட்டுதல் என்பவற்றில் அது அடங்கிவிடும். இவற்றை மீறிச் செயல் பட்டவர்கள் மிகவும் குறைவு.

     சமூகத்தில் சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர். சாதிமுறைக்கு அடிப்படை சமயமே என்பதனால், சமயம், கடவுள் போன்ற கருத்தாக்கங்களையும், இவற்றை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் என்ற முறையில் பார்ப்பனியத்தையும் எதிர்த்தனர். மூடநம்பிக்கைகளும் பார்ப்பனியக் கருத்துகளும் எந்த இலக்கியத்தில் இடம்பெற் றிருந்தாலும், எதிர்த்தனர். செல்வாக்குப் பெற்ற நூல் என்ற வகையில் கம்ப ராமாயணம் மிகுதியான தாக்குதலுக்கு உள்ளாயிற்று. பாரதியாரையும் ஒரு பார்ப்பனக் கவிஞன், வைதிகக் கவிஞன் என்று நோக்கியதால், அவரையும் புறக்கணித்தனர்.

     மதமும் மூடநம்பிக்கைகளும் ஆட்சிசெய்யும் ஒருசமூகத்தில் மதத்தைத் தோலுரித் துக்காட்டினர் என்பது முதன்மையாக திராவிட இயக்கம் செய்த நன்மை. பலசமயங்களில் சமூகவியல், மானிடவியல் நோக்குகளில் மதத்தையும் மதம்சார்பான நூல்க ளையும் நோக்கியுள்ளனர். இவை ஆரம்ப நிலையின என்றாலும், பின்னால் பெண்ணிய, தலித்திய, வரலாற்றியத் திறனாய்வுகள் வளர்வதற்குப் பயனுள்ளவையாக இருந்தன.

     இலக்கியக்கட்டுரைகள் என்னும் கட்டுரைவகையினை மிகுதியாகக் கையாண்டவர்கள் இவர்கள். உரைநடை வளர்ச்சியிலும், பத்திரிகைத் தமிழ் வளர்ச்சியில் திராவிட இயக்கத்தினரால், பெரும்பாலும் வடமொழிகலவாத எளிய து£ய தமிழ்நடை ஒன்று பத்திரிகைகளுக்கு இசைவாக உருவாயிற்று. அதேசமயம், திராவிட இயக்கத் தினரிடம் காணப்பட்ட மிகைஉணர்ச்சிப்பாங்கு இந்த நடையைச் சிறுமை கொண்ட தாக்கியது. நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் திராவிட இயக்கத்தினரின் பங்கினைக் குறைத்து மதிப்பிடஇயலாது. திராவிடஇயக்கத்தினர் முன்னெடுக்கவில்லை என்றால் பம்மல் சம்பந்தமுதலியாரின் நாடகங்களோடு தமிழ்நாடக வளர்ச்சி நின்று போயிருக்கக்கூடும்.

     புலவர்கள், தமிழாசிரியர்களிடம் திராவிட இயக்கத்தின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. தமிழ் ஆய்வில், ஏற்புநிலையில் சில இருமைஎதிர்வுகளை திராவிட இயக்கம் உருவாக்கியது. பதிப்புத்துறையில் சி.வை.தாமோதரம் பிள்ளை X உ.வே.சாமி நாதையர் என்ற இருமை செயல்பட்டது. சங்கஇலக்கியம் X கம்பராமாயணம், பாரதிதாசன் X பாரதியார் என்ற விதமாக எதிர்முனைகள் முக்கியமாகச் செயல்பட்டன. திராவிட இயக்கம் சார்ந்தோர், சமூகப் பார்வை நோக்கில் பாரதியைப் புறக்கணித்து, பாரதிதாசனை உயர்த்திப் பிடித்தனர். மார்க்சிய முற்போக்கு அணியினர், பாரதியை அவருடைய முற்போக்குப் பார்வைகளுக்காகவும், தேசிய நோக்குக்காகவும் பாராட்டினர். குறுகிய இன, மொழிப் பார்வையில் இலக்கியம் படைத்தவர் என்று பாரதிதாசனைப் புறக்கணித்தனர். பாரதிதாசன் மறைவுக்குப் பின்னர், 1970 அளவில் இம்முரண் பாடுகள் மறைந்தன. எனினும் இன்றும் தனித்தமிழாளர்களால், தமிழ்ப் பற்றாளர் களால் பாரதிதாசனே பாரதியைவிடச் சிறந்த கவிஞர் என மதிக்கப்படுகிறார். இரச னையாளர்களால் பாரதி உயர்ந்தவர் என மதிப்பிடப்படுகிறார்.

     பல்கலைக்கழகங்களில் மிகமுக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய பேராசிரியர்கள் மு. வரதராசனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகிய இருவரும். இவர்கள் பொதுநோக்கில் திறனாய்வு செய்வதுபோல் தோன்றினாலும், இருவருடைய நூல் தேர்வு என்பதன் வாயிலாகடச் சார்புகள் வெளிப்படுவதைக் காணலாம். சான்றாக, மு.வ., ஒருபோதும் கம்பராமாயணம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டதில்லை. (அதேசமயம் நேரடியாகக் குறைகண்டதும் இல்லை. தனிப்பட்ட முறையில் பாராட் டியும் இருக்கிறார்.)

     தெ.பொ.மீ.யும் கம்ப ராமாயணத்தைப் புறக்கணிக்கவில்லை. என்றாலும் சிலப்பதிகார ஆய்வில் ஈடுபட்டது போன்று விரிவாக அதில் ஆய்வில் இறங்கவில்லை. சங்கஇலக்கியச் சார்பானவர்கள், கம்பராமாயணச் சார்பானவர்கள் என்ற பிரிவுகள் கல்வியாளர்களிடையே இன்றுவரை காணக்கிடப்பதற்கு இந்நோக்கு காரணமாகிவிட்டது. திராவிடக் கருத்துகளை மறைமலையடிகள் போன்ற சைவர்கள் ஓரளவு ஏற்ற துண்டு. இவர்களிடமும் தேவாரம் X திவ்யபிரபந்தம் என்ற எதிர்நிலை செயல்பட்டது. இந்த மரபும் இன்றுவரை ஆய்வாளர்களிடம் தொடர்கிறது.

     பொதுவாக, திராவிட இயக்க ஆராய்ச்சியாளர்களிடம் நாம் காணக்கூடிய குறைகள் பல உள்ளன. இயங்கியல் முறையில் அவர்கள் ஆய்வு செய்யவில்லை. மதம் என்பதை ஓர் அழிவுச் சக்தியாகவும் மூடநம்பிக்கையாகவும் மட்டுமே கண்டனர். சிற்சில கருத்துபேதங்கள் இருந்தாலும், தமிழ் இலக்கியம் பற்றி அவர்களுடைய கருத்துகள் ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன. உள்ளடக்கத்தை நோக்குதல் மட்டு மே அவர்களிடம் உள்ளது. உருவஆய்வில் அறவே ஈடுபடவில்லை. உள்ளடக்கத்திலும் அறநோக்கத்தை முதன்மைப்படுத்திக் காணும் நோக்கு உள்ளது.

     கொச்சையான மார்க்சியப் பார்வை, இலக்கியத்தை வர்க்க அரசியலாக மட்டும் நோக்கியதை ஒத்த ஒரு பார்வையே திராவிடப் பார்வையும். திராவிட இயக்கத்தில் சாதிய அரசியலின் இடமும் மார்க்சிய இயக்கத்தில் வர்க்க அரசியலின் இடமும் ஏறத் தாழ ஒரேமாதிரியானவை.

     திராவிட இயக்கம் சார்நத ஆய்வுகள், எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாலும், உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தியதாலும், திறனாய்வுக்கான சிறந்த நிலையை எட்ட முடியவில்லை. நேர்முகமாக எழுந்த திறனாய்வுகளும் வெறும் பாராட்டுகள் என்ற அளவில் நிற்கக்கூடியவையே. எனினும் அதனால் தனித் தமிழ்க் கொள்கை வலுப்பெற்று, து£ய தனித் தமிழ்ப் பண்பாட்டையும், மொழியையும் பிரதி பலிப்பவை என்ற நிலையில் சங்க இலக்கிய ரசனை வளர்ச்சி பெற்றது.

     1960-70 காலப்பகுதியிலேயே பகுத்தறிவாளர் திறனாய்வு பாரதிதாசன் நூல்களின் திறனாய்வு என்ற நிலைக்கு ஒடுங்கிவிட்டது. பிற கவிஞர்கள், எழுத்தாளர்கள் மதிப்பிடப்பட்டது மிகவும் குறைவு. 1970-80 காலப்பகுதியிலும் இந்நிலையே நீடித்தது. 1971இல் பல இதழ்கள் பாரதிதாசன் நினைவு சிறப்பு மலர்கள் வெளியிட்டன. 1980-2000 காலப்பகுதியில் தனித்த திராவிட இயக்கத் திறனாய்வு என்பதை வே. ஆனை முத்துவும் அவருடைய கருத்தியலோடு தொடர்புடைய ஒரு சிலரும் மட்டுமே செய்து வந்தனர். மற்றப்படி திராவிட இயக்கத் திறனாய்வு என்பது இல்லாமற்போய், அதன் கொள்கைகளை மார்க்சிய இயக்கத்துடன் சேர்த்துப் பார்க்கும் நிலை உருவாயிற்று. மூடநம்பிக்கை சார்ந்தனவற்றை எதிர்க்கும் பகுத்தறிவுத் திறனாய்வு கைவிடப்பட்டு, சாதி பற்றிய, பெண் அடிமைத்தனம் பற்றிய பெரியாரின் கொள்கைகள் மட்டும் ஏற்கப்பட்டு, பெரியாரியம் என்று நோக்கப்படும் நிலை உருவாயிற்று.

     திராவிட இயக்கத்தின் எழுத்தும் பேச்சும் எல்லாநிலையிலும் மக்களைச் சிந்திக்க வைத்துள்ளன. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெரும்பாலானோர் நேரடியாக இயக்கப்பணி ஆற்றாவிடினும் இயக்கத்தாக்கம் பெற்று அதனைத் தம் எழுத்தில் காட்டியுள்ளனர். வெளி அரசியலில் மட்டுமன்றி, மக்கள் உள்ளத்திலும் மிக நுட்பமான நிலையில் திராவிட இயக்கத் தாக்கம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

     திராவிட இயக்கத் தாக்கம் பெற்ற பேராசிரியர்கள் 1960-90 காலப்பகுதியில் மிகுதியாகப் பல்கலைக்கழகங்களிலும் கல்லு£ரிகளிலும் பணியாற்றிவந்தனர். முதல் தலைமுறையைச்சேர்ந்த சி. இலக்குவனார் முதலாக, க. த. திருநாவுக்கரசு, இரா. தண்டாயுதம், பொன். கோதண்டராமன் போன்றவர் வழியாக, எழில் முதல்வன், தா.வே. வீராசாமி, மெ. சுந்தரம் எனப் பலரைப்பட்டியலிடஇயலும். தமது இளமைப் பருவத்தில் திராவிட இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டுப் பிறகு தமிழ் படித்துப் பேராசிரி யர்களாகவும் ஆசிரியர்களாகவும் ஆன அனைவரும் இப்பட்டியலில் வருவர். ஆனால் இவர்களது திறனாய்வுமுறை கல்வித்துறைசார் திறனாய்வாகும்.

     வானம்பாடி இயக்கத்தினராக-மார்க்சியச் சார்பானவர்களாக வெளிப்பட்ட கவிஞர்களும் திராவிட இயக்கத் தாக்கம் பெற்றவர்களே. அவர்களது கவிதைகளில் எல்லாம் திராவிட இயக்கச் சிந்தனைகள் வெளிப்படுவதைக் காணலாம். சான்றாக அப்துல் ரகுமான், முடியரசன், மீரா, புவியரசு, சிற்பி, மேத்தா, தமிழன்பன் போன்றோ ரைக் குறிப்பிட முடியும். தலித் இயக்கங்களின் பேச்சும் எழுத்தும்கூட திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்ற ஒன்றாகப் பலசமயங்களில் அமைந்துள்ளது.

     அறுபதுகளின் இறுதிக்குள் திராவிட இயக்கத்தின் கருத்துகள் பின்பற்றுவோர் இன்றி வெறும் முழக்கங்களாக எஞ்சி இற்றுப்போயின. பொதுவாக, அமைப்பியம் முதலான இயக்கங்கள் தோன்றியதிலிருந்து ஆசிரியன் இறந்துபோனான், ஆசிரியனுக் கும் நூலுக்கும் தொடர்பில்லை போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கோஷங்கள் ஒருவகையில் உண்மையானதை திராவிட இயக்கம் காட்டுகிறது. தமிழ் நாட்டில் அதீதமான பிம்பங்களின் கலாச்சாரத்தினை உருவாக்கியதும் திராவிட இயக்கமே. பெரியார் ஒருவரைத் தவிர, திராவிட இயக்கச் சார்பான கொள்கைகளை உருவாக்கியவர்கள், அவற்றைப் பரப்புவதற்கான நூல்கள் எழுதியவர்கள், அவற்றைப் பின்பற்றுவதில் சற்றும் அக்கறை காட்டவில்லை. ஆகவே ஆசிரியன் வேறு, நூல்கள் வேறு என்பது உண்மையாகிவிட்டது. திராவிட இயக்க நூல்களைப் பொறுத்தவரை ஆசிரியன் இறந்து போனான் என்பது முற்றிலும் உண்மை. தாங்கள் கூறியவற்றைத் தாங்களே நம்பாதவர்களை-தங்கள் வாழ்க்கை வேறு, தங்கள் கொள்கை வேறு என்று ஆனவர்களை, வேறு என்ன பெயர் சொல்லி அழைப்பது?