முரண்பாடு

உலகில் வாழ்வதற்குப் பலவித வழிகள் உள்ளன. ஒருவனேகூட அந்தந்த சமயத்திற்கு ஏற்றாற்போல
வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பழமொழிகள் இந்த முரண்பட்ட தன்மையை நன்கு பிரதிபலிக்கின்றன. உதாரணத்திற்குச் சில ஆங்கிலப் பழமொழிகளைச் சுட்டிக்காட்டலாம்.

‘காத்திருப்பவர்களுக்குத்தான் நல்லவை யாவும் கிடைக்கின்றன’ என்பது ஒரு பழமொழி. All good things come to those who wait. இதேபோல் நிதானத்தை வலியுறுத்தி slow and steady wins the race என்ற பழமொழியும் இருக்கிறது. ஆனால் பாருங்கள், Time and tide wait for none என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. காத்திருப்பதா, உடனே செயலில் இறங்குவதா?

Wise men think alike என்று ஒரு பழமொழி. Fools seldom differ என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. ஆகமொத்தம், விவேகிகளோ, முட்டாள்களோ எல்லாரும் ஒரே மாதிரி யாகத்தான் சிந்திக்கிறார்கள் போலும்!

Do it well or not at all என்று ஒரு பழமொழி சொல்கிறது. எதையும் நன்றாகத்தான் செய்ய வேண்டும். இல்லையெனில் வேண்டாம். ஆனால் Half a loaf is better than none என்றும் ஒரு பழமொழி சொல்கிறதே?

சந்தேகம்தான் ஞானத்தின் தொடக்கம் என்பது ஒரு பழமொழி. Doubt is the beginning of wisdom. ஆனால் Faith will move mountains என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. நாம் எதைத் தேர்ந்தெடுப்பது, சந்தேகத்தையா, விசுவாசத்தையா?

இப்படிப்பட்ட பழமொழிகள் வாழ்க்கையின் முரண்பட்ட தன்மையை நாம் புரிந்து கொள்வதற்கு முதன்மையாகத் துணைசெய்கின்றன.

தினம்-ஒரு-செய்தி