மதமான பேய்

திருக்குறள் அரிய நூல் என்கிறோம். அத்தகைய குறளே புறச்சமயத்தைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டது எனக்கருதித் “தீக்குறளைச் சென்று ஓதோம்” என்று பாடினார் கவியரசி ஆண்டாள். திருப்பள்ளியெழுச்சி பாடிய விப்ரநாராயணர், சமணர் சாக்கியர் போன்றோர் தலைகளை “அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மா நகருளானே” என்று பாடினார். பெரும் பக்தர்களாக மட்டுமன்றிக் கவி வல்லவர்களாகவும் இருந்தவர்களே இப்படி என்றால் அக்காலச் சாதாரண மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?
இன்றைய நமது தோழர்களோ என்றால், இத்தனையையும் உண்மையில் செய்துகாட்டியே தீருவேன் என்கிறார்கள். மக்கள் எப்போது நல்ல மனநிலை பெற்று நிம்மதியாக வாழுவது?

தினம்-ஒரு-செய்தி