பூரணச்சந்திரன் அறக்கட்டளை – இரண்டாம் நாள் பயிலரங்கம்

முதல் அமர்வில் முதல் உரையாகப் பேரா. பூரணச்சந்திரனின் “உரைநடைப் புனைவின் அடிப்படைகள்” என்பது அமைந்தது.

பின்னர் இலக்கியத்தில் உள்ள நுண்அரசியலைப் பற்றி, குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களும் பெண்களும் எவ்விதம் படைக்கப்படுகின்றனர் என்பது பற்றிப் பேராசிரியர் காசி. மாரியப்பன் நகைச்சுவை படப் பேசினார்.

அடுத்து காலையில் தமிழ் நாவலைப் பற்றியும் மாலையில் தமிழ்ச் சிறுகதை பற்றியும் திரு. இராமசாமி பேசினார். இடையில் மாணவர்களின் சில படைப்புகளை வாசித்துக் கருத்துரை அளித்தார்.

நேற்று மாணவர்களுக்குத் தந்த பணி சிறுகதை எழுதுவது. அதைச் சிலர் செய்திருந்தனர். ஆனால் சிறுகதை வடிவம் பொதுவாக மாணவர்களுக்குச் சிக்கல் தருவதாகவே அமைந்திருந்தது. பலரும் ஐம்பதாண்டு நிகழ்ச்சிகளை, வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்களை எல்லாம் சிறுகதை என எழுதினர்.

அவற்றைப் பூரணச்சந்திரன் விமரிசனம் செய்து எப்படி எழுத வேண்டும் என எடுத்துரைத்தார். திரு. இராமசாமி, ஐந்து தலைப்புகளை அளித்து அவற்றை மறுநாள் கவிதையாக்கி வருமாறு மாணவர்களுக்கு வேலையளித்தார்.

General