பதினாறும் பதினேழும்

சென்ற ஆண்டு (2016) பலவகைகளிலும் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் (விளையாட்டுத் துறை ஒன்றைத் தவிர) துயரம் மிக்க ஆண்டாகவே சென்றது. சென்னை வெள்ளம் தொடங்கி, ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு வரை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரை எல்லாம் துயரங்களே. குறிப்பாக அனைவர்க்கும் உணவளிக்கும் உலகத்தின் அச்சாணியாகிய விவசாயிகளின் எண்ணற்ற தற்கொலைகளும், சொந்தப் பணத்திற்காகக் கியூவில் நின்று உயிரிழந்தோரின் மரணங்களும் இதுவரை உலகம் காணாதவை.
இந்த 2017ஆம் ஆண்டேனும் உலக மக்களாகிய நமக்கு நன்மைகளைக் கொண்டுவரும் என்று நம்பிக்கையுடன் “ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா, உறுதி கொண்ட நெஞ்சினாய் வா, வா” என்று பாரதியைப் போல வரவேற்போம்.

தினம்-ஒரு-செய்தி