நம் நாடு!

1. மக்கள் பட்டினியாக வாழ்ந்து செத்துப் போவார்கள், ஒருவேளை உணவுக்குக் கொத்தடிமைகளாக இருப்பார்கள். ஆனால் ராணுவத்திற்கும் போலீசுக்கும் அரசாங்க வருமானத்தின் மிகப்பெரும்பகுதி செலவிடப்படும்.
2. அரிசி கிலோ 50 ரூபாய் விற்கும், பருப்பு கிலோ 200 ரூபாய் விற்கும், ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கும்.
3. பீட்சாக் கடைக்கு ஆர்டர்செய்தால் உடனே வீடு தேடிவரும். நேரில் போய்க் கூப்பிட்டாலும், ஆம்புலன்சோ, போலீசோ வரவே வராது.
4. காலணிகள் ஏசி ஷோரூமில் விற்கும், காய்கறிகள் கீரைகளோ நடைபாதையில், புழுதியில் விற்கப்படும்.
5. பெரிய மால்கள், கட்டடங்கள் ஓர் ஆண்டில் கட்டி முடிக்கப்படும், ஆனால் சிறிய பாலங்கள் பழுதுபார்க்கப்பட ஆறேழு ஆண்டுகளாவது ஆகும்.
6. எலுமிச்சைப் பழ ஜூஸ் கேட்டால், செயற்கை வேதிப் பொருளோடுதான் கிடைக்கும். ஆனால் பாத்திரம் கழுவும் சோப்பு, ‘ரியல் லெமன் சேர்ந்தது’ என்று விற்கப்படும்.
7. திரைப்படம் பார்க்க நிறுவனங்கள் லீவு விடும், ஆனால் உடல் நலிவு, காய்ச்சல் என்றாலும் தற்செயல் விடுப்பு விண்ணப்பம் முன்னாலேயே(!) தரவேண்டும், பலசமயம் கேட்டாலும் கிடைக்காது.
8. கார் வாங்கக் கடன் 0%இலும் கிடைக்கும், ஆனால் கல்விக்கடன் 12%இல், கெடுபிடியில்தான் கிடைக்கும்.
9. எந்த ஒரு தர்மஸ்தாபனத்துக்கும், ஏழைகளுக்கும் உதவாத ஒரு பணக்காரன், ஒரு கிரிக்கெட் டீமையே வாங்கிவிட முடியும்.
10. கோடிகோடியாக ஏமாற்றி தேடப்படும் குற்றவாளிகளை ரிசர்வ் வங்கிக்கே கவர்னராகப் போடச் சொல்லுவார்கள்.

தினம்-ஒரு-செய்தி