சாதுரியம்

பெரியோர்களின் வாழ்க்கையையும் கொள்கைகளையும் உதட்டளவில் வெகுவாகப் புகழ்ந்து பேசி, தங்கள் வாழ்க்கையில் அவற்றை ஒரு சிறிதும் பின்பற்றாமல் வாழ்கின்ற இந்திய மக்களின் நடைமுறைக்கு காந்தி ஜெயந்தி ஒரு நல்ல உதாரணம். கொள்கைகளை மதிப்பிட்டு ஏற்று நடப்பதோ புறக்கணிப்பதோ அன்றி வெறும் சொல்லளவு மரியாதையினாலும் ஊருக்கு ஊர் சந்திக்குச் சந்தி வைக்கப்படும் பொம்மைகளாலும் அவற்றிற்கு ஆண்டுக்கு ஒருமுறை இடப்படும் மாலைகளாலும் பயன் என்ன?

General