கொடுங் கோடரி

காட்டுக்குள் வந்த ஒரு மனிதன், தன் கோடரிக்கு ஒரு கைப்பிடி வேண்டும் என்று மரங்களிடம் கேட்டான். மரங்களும் ஒப்புக்கொண்டு ஓர் இளைய மரத்தைக் கொடுத்தன.
அவன் தன் கைப்பிடியைச் செய்துமுடித்தானோ இல்லையோ, காட்டிலிருந்த மிகப்பெரிய மேன்மையான மரங்களை வீழ்த்தத் தொடங்கினான்.
பக்கத்திலிருந்த ஓர் ஓக் மரம், தன்னருகிலிருந்த செடார் மரத்திடம் சொல் லியது: “முதல்முதலாக நாம் காட்டிய கருணையே நமக்கு அழிவைத் தந்துவிட்டது. நாம் அந்த இளைய மரத்தை அளிக்கவில்லை என்றால், நமது உரிமைளைத் தக்கவைத்துக் காலங்காலமாக நாம் வாழ்ந்திருக்க முடியும்.”
-ஈசாப் கதைகள்

உலகின் காடுகளை நாம் என்ன செய்கிறோம் என்பது நாம் நம்மை நாமே, நமக்குள் ஒருவருக்கொருவர் என்ன செய்துகொள்கிறோம் என்பதன் ஆடிப் பிரதிபலிப்புதான்.
-மகாத்மா காந்தி

பூமிக்கு என்ன நேர்கிறதோ, அதுதான் பூமியில் வாழும் மக்களுக்கும் நேர்கிறது.
-அமெரிக்க இந்திய இனத் தலைவர் சியாட்டில்.

General