ஏரகத்துச் செட்டியார்

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை–மங்காத

சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்

ஏரகத்துச் செட்டியாரே.

இது ஒரு பழம்பாடல். மளிகைச் சரக்குகளின் பெயர்களை வைத்து, இந்த உடல் தேவையில்லை, நல்ல உள்ளம்தான் வேண்டும் என்று வேண்டும் பாடல் இது.

(ஏரகத்துச் செட்டியார்- முருகப் பெருமான், விளியாக அமைந்துள்ளது. வெங்காயம் = வெம்+காயம், வெம்மை மிக்க உடல். சுக்கானால்-சுக்குப் போல் இளைத்துவிட்டால். வெந்தயம்=வெந்த+அயம், அயச்செந்தூரம் போன்ற காயகல்ப மருந்துகள். வெம் + தவம் (வகரத்துக்கு பதில் யகரம் வந்தது என்றும் கொள்ளலாம், அப்படியானால் கடுமையான தவத்தால் ஆவதென்ன என்று பொருள்படும்) சீரகம் = சீர் + அகம், அகம் என்பது உள்ளம். பெரும் + காயம் = பெருமை மிக்க உடல். )

இலக்கியம்