உழைப்பாளர் தினம்!

எல்லா முதலாளிகளும் கையில் சாட்டையை வைத்துக் கொண்டு ஒரு நாளுக்கு பன்னிரண்டு மணி நேரம் முதல் பதினாலு மணி நேரம் (ஐடி தொழிலாளர்கள் உள்பட) வேலை வாங்கும்போது, எட்டு மணிநேர உழைப்பைக் கொண்டுவந்த தினம் என்று எல்லா மடத் தலைவன்களும் பாராட்டுகிறார்கள். போங்கடா நீங்களும் உங்கள் மே தினமும். பொய், பொய், எங்கும் கலப்படமற்ற பொய். அம்பானிகளிடமும் எலான் மஸ்குகளிடமும் உலகத்தை விற்றுவிட்டு உழைப்பாளர் தினம் பற்றிப் பேசக் கேவலமாக இல்லை?

என்னதான் தீர்வு? யோசியுங்கள் உழைக்கும் பெருமக்களே. முதலாளிகள் நீங்கள் யோசிக்க அவகாசம் தர மாட்டார்கள். இருந்தாலும் உண்ணும்போது, சிலவேளை ஓய்வுகளின் போதாவது உங்கள் நிலை பற்றி யோசியுங்கள்.

(இங்கு எட்டுமணி நேர உழைப்புக்குக் கூலி வாங்கி இரண்டுமணி நேர உழைப்பை அளிக்கவும் மேல்கூலி வாங்கும் அரசு கைக்கூலிகளைப் பற்றிப் பேசவில்லை!)

General