உடல்நலம் காக்க அன்றாடம் ஒரு சாறு

திங்கட்கிழமை
☕வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்துக்
குடித்தால் நாக்கு தூய்மையாகும் ; கபம் நீங்கும்.

செவ்வாய்க்கிழமை
☕ கடுக்காய்ப் பொடியும் பனங்கற்கண்டும் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும்.

அறிவன் (புதன் )கிழமை
☕ தூதுவளை, கர்ப்பூரவல்லி, துளசி மூன்றையும் சமஅளவு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது. சளி இளகி மலத்துடன் வெளியேறிவிடும்.

வியாழக்கிழமை
☕ சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்துப் பொடிசெய்து , ஒரு தேக்கரண்டி போட்டுப் பனங்கற்கண்டுடன் கொதிக்க வைக்கவேண்டும். வடிகட்டிக் குடித்தால் செரிமானம் ஆகும், வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

வெள்ளிக்கிழமை
☕வெந்தயம், கொத்துமல்லி சமஅளவு சேர்த்து வறுத்துப் பொடிசெய்து , ஒரு தேக்கரண்டி போட்டுப் பனங்கற்கண்டும் உப்பும் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

காரி (சனி )க்கிழமை
☕ முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் , உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்புச் சத்து கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை
☕சுக்கு மல்லிச் சாறு (காப்பி) குடிக்கலாம்.

  • சூலூர் பாவேந்தர் பேரவை

சமூகம்