இதற்குப் போய் துப்பறிவதா?

ஒருமுறை லண்டனின் புகழ்பெற்ற துப்பறிபவர் ஷெர்லக் ஹோம்ஸும் அவருடைய பிரசித்தமான நண்பர் வாட்சனும் வெளியூர் சென்றனர். அங்கு அவர்கள் கூடாரம் அமைத்துத் தங்கவேண்டியிருந்தது. களைத்துப் போயிருந்த அவர்கள் கூடாரத்தில் நன்றாகத் தூங்கிவிட்டனர். விடியல் ஏறத்தாழ மூன்று மணி இருக்கும். ஹோம்ஸுக்கு விழிப்பு வந்தது. வாட்சனை எழுப்பினார். “மேலே என்ன தெரிகிறது பார்?” என்றார். வாட்சனும் நன்றாகப் பார்த்தார்.

“வானம் தெரிகிறது. கோடிகோடி நட்சத்திரங்கள் தெரிகின்றன.”

“சரி, அதிலிருந்து என்ன தெரிகிறது?”

“நிறைய கேலக்ஸிகள், ஒருவேளை அவற்றில் கிரகங்கள்கூட இருக்கலாம்.”

“சரி, வேறென்ன தெரிகிறது?”

“வானியல்படி, ரிஷபத்தில் சனி இருக்கிறது.”

“அப்புறம்?”

“நட்சத்திர நிலைப்படி பார்த்தால், நேரம் மூன்றேகால் இருக்கும்.”

“அப்புறம்?”

“கடவுள் மிகவும் சக்திவாய்ந்தவர், இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறார்.”

“அப்புறம்?”

“நாளைக்கு, நாள் நல்ல வெயிலாக இருக்கும் என்று தெரிகிறது. சரி, திருப்பித் திருப்பி இவ்வளவு கேட்கிறாயே ஹோம்ஸ், உனக்கு என்ன தெரிகிறது?”

“அட முட்டாள் வாட்சன், நம் கூடாரத்தை எவனோ திருடிக்கொண்டு போய் விட்டான் என்று தெரிகிறது.”

தினம்-ஒரு-செய்தி