கலக்கல்!

If you change the sequence of letters in some English words, they give rather funny (but true) expressions. For example, See these:

DILIP VENGSARKAR
When you rearrange the letters:
SPARKLING DRIVE

PRINCESS DIANA
When you rearrange the letters:
END IS A CAR SPIN

MONICA LEWINSKY
When you rearrange the letters:
NICE SILKY WOMAN

DORMITORY:
When you rearrange the letters:
DIRTY ROOM

PRESBYTERIAN:
When you rearrange the letters:
BEST IN PRAYER

ASTRONOMER:
When you rearrange the letters:
MOON STARER

DESPERATION: When you rearrange the letters:
A ROPE ENDS IT

THE EYES:
When you rearrange the letters:
THEY SEE

GEORGE BUSH:
When you rearrange the letters:
HE BUGS GORE

THE MORSE CODE :
When you rearrange the letters:
HERE COME DOTS

SLOT MACHINES:
When you rearrange the letters:
CASH LOST IN ME

ANIMOSITY:
When you rearrange the letters:
IS NO AMITY

ELECTION RESULTS:
When you rearrange the letters:
LIES – LETS RECOUNT

SNOOZE ALARMS:
When you rearrange the letters:
ALAS! NO MORE Z S

A DECIMAL POINT:
When you rearrange the letters:
IM A DOT IN PLACE

THE EARTHQUAKES
When you rearrange the letters:
THAT QUEER SHAKE

ELEVEN PLUS TWO:
When you rearrange the letters:
TWELVE PLUS ONE

AND FOR THE GRAND FINALE:

MOTHER-IN-LAW:
When you rearrange the letters:
WOMAN HITLER


மது அருந்துதல் பற்றி

அர்த்தசாஸ்திரம், கௌடில்யரால் எழுதப்பட்டது. ஆனாலும் இன்றுள்ள வடிவத்தை அது சில நுற்றாண்டுகள் பின்னால் எய்தியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்று வைத்துக்கொள்ளலாம். மது அருந்துதல் பற்றி அது சில விஷயங்களைச் சொல்கிறது. எளிதில் இன்று புலப்படாத மதுவகைகள் சிலவற்றைத் தயாரிப்பது பற்றிய சுருக்கமான தயாரிப்பு முறைகளையும் தருகிறது.

அக்காலத்தில் மதுபான வகைகள் பல இருந்தன. அவற்றுள் சில  வருமாறு: மேதகம் – நெல்லால் வடித்த மது; பிரசன்னா – மாவால் சமைத்து வாசனைச் சரக்கிட்டுச் சுவையூட்டப்பட்ட ஒருவகைக் கள்; (பிரசன்னா என்று பெயர் வைப்போர் கவனிக்கவும்!) ஆசவம் – இது விளாம்பழச் சாற்றில் செய்த மது; மைரேயம் – இது சர்க்கரை, ஆடு தின்னாப்பாளை (மேஷஸ்ருங்கம்)ச் செடியின் பட்டை, மிளகு ஆகியவற்றைக் கொண்டு வடித்த ஒரு பானம்; சஹகார சுரா – மாம்பழ மது.

மதுபானம் அரசாங்க உற்பத்திசாலைகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட வேண்டும். அவற்றின் உற்பத்தியை ஒழுங்குற நடத்துவதற்கும் குடி வகைகளின் விற்பனையையும் நுகர்வையும் கட்டுப்படுத்துவதற்கும் மதுபான மேற்பார்வையாளர் என்னும் அதிகாரி நியமிக்கப்படவேண்டும்.

தனிப்பட்டோரின் தயாரிப்பு நிலையங்களையும் மதுக்கடைகளையும் மிகவும் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். மதுக்கடைகள் வைத்திருப்போர் தங்கள் நிறுவனங்களைப் போதிய இருக்கைகள் போன்றவற்றுடன் வசதியாக வைத்திருக்க வேண்டும். அவர்கள், மது அருந்த வருவோர் அளவு கடந்து குடிப்பதைத் தடுக்கவேண்டும். மது அருந்துவோர் வெறி மயக்கத்தில் ஏதேனும் நஷ்டத்துக்கு ஆளானால், கடைக்காரர்கள் அவர்களுக்கு நஷ்ட ஈடு தருவதோடு மட்டுமன்றி, அபராதமும் கட்ட வேண்டும்.

மதுக்கடைகள் வைத்திருப்போர் தங்கள் கடைகளை ஒன்றுக்கொன்று அண்மையில் கட்டவிடலாகாது. இதனால் மக்கள் ‘மதுக்கடைகளில் ஊர்தல்’ பெரும்பாலும் தடுக்கப்படும். மதுக்கடைக்கு வெளியில் மக்கள் மது அருந்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். (அக்காலத்தில் பள்ளிக்கூடங்கள்,  கோயில்கள் போன்றவற்றின் அருகில் மதுக்கடைகள் கட்டப்படவில்லை போலும்!) மதுக்கடைகளில் குற்றவாளிகள் பெரும்பாலும் கூடுவதுண்டு, எனவே அவற்றை நன்கு கண்காணித்து வருமாறு அரசன் தன்னுடைய ஒற்றர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.

அர்த்த சாஸ்திரம் கூறும் கருத்துகளை நோக்கும்போது, மது அருந்துதல் தீமை என்பதையும்,  அதனை முற்றிலும் விலக்குதல் இயலாது என்பதையும், ஆனால் அதைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதையும் ஒப்புக்கொள்கிறது எனலாம். (ஆதாரம்-A.L. Basham, The Wonder that was India, 2nd edition, p.217.)


உமி

இந்தியாவின் வேளாண்மைக் கழிவுகளில் உமி முக்கியமானது. நெல்லிலிருந்து அரிசி குற்றும்போது உமி கிடைக்கிறது. ஆசியாவில் உற்பத்தியாகும் 770 மில்லியன் டன் உமியில் 120 மில்லியன் டன் இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது. உமியின் வர்த்தகப் பயன்பாட்டை விவசாயிகள் அறியாததால் இது வேளாண் கழிவாகக் கருதப்படுகிறது. உமியை எரிப்பது, அல்லது குப்பைக் கழிவாகக் கொட்டுவது என்ற நடைமுறையே உலகில் நிலவுகிறது. உமியை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. பருவநிலை கெடுவதற்கு இது காரணமாகிறது. உமியைத் திறந்தவெளியில் கொட்டினால், அல்லது குவித்துவைத்தால், பொது சுகாதாரம் கெடுகிறது.
உமியை வீணடிப்பதற்குப் பதிலாக கீழ்க்கண்ட வழிகளில் பயன்படுத்தலாம்.
#  உயிர்த்திரள் ஆற்றலை ( biomass power) உற்பத்தி செய்யும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை உருவாக்க உமியைப் பயன்படுத்தலாம்.
# உமியைத் தாவரங்களின் அடிப்பகுதியில் குவித்து வைத்தால் களைகள் உருவாவதைத் தடுப்பது, மண்ணின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பது, மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதைக் குறைப்பது போன்ற நன்மைகள் கிட்டும். அவை சிதைவடையும்போது மண் வளம் செழிக்கும்.
# உமியை வைத்து உயிரி-எதேனால் (bio-ethanol) தயாரிக்க முடியும். உயிரி-எத்தனால் எதிர்காலத்திற்கான மாற்று எரிபொருட்களில் முக்கியமானது. உமியிலிருந்து செலவு அதிகமின்றி உயிரி-கார்பன் தயாரிக்க முடியும். கழிவுநீர் சுத்திகரிப்பில் இந்தக் கார்பனைப் பயன்படுத்த முடியும். உமியைப் பல்வேறு வாயுக்களாக மாற்றும்போது கார்பன் மானாக்சைட், ஹைட்ரஜன், மீத்தேன் ஆகிய மூன்றையும் சமையல் வாயுவுக்கு மாற்றான எரிபொருட்களாகப் பயன்படுத்த முடியும்.
உமிச் சாம்பலின் பயன்கள் :
# உமியின் சாம்பலில் கணிசமாக உள்ள கார்பனிலிருந்து திறன்சேர் கரி (activated charcoal) தயாரிக்க முடியும்.
# உமிச் சாம்பலிலிருந்து பொசோலனா சிமெண்ட் தயாரிக்க முடியும். வர்த்தக சிமெண்ட் துகளின் அளவு 35 மைக்ரான்கள் (ஒரு மைக்ரான் என்பது 1/1000 மில்லிமீட்டர் ) இருக்கும். பொசோலனா சிமெண்ட் துகளின் அளவு 25 மைக்ரான்கள்தான். கான்க்ரீட் இடைவெளிகளை நிரப்ப வர்த்தக சிமெண்டைவிட பொசோலனா சிமெண்ட் மேலானது. மலிவானதும் கூட
#  எஃகுத் தொழிலில் சூடான செங்கற்கள் (furnace bricks) தயாரிக்க உமிச்சாம்பல் பயன்படுகிறது. இந்த செங்கற்கள் 1450 டிகிரி சென்டிகிரேட் வரை உள்ள மிக அதிக வெப்பநிலையைக் கூடத் தாக்குப் பிடிக்க முடியும்.
#  சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை பூச்சிகளிலிருந்து பாதுகாக்க உமிச்சாம்பலைப் பயன்படுத்த முடியும். மின்சாரத்தின் உதவியின்றி உமிச் சாம்பலைப் பயன்படுத்தி  அசுத்தமான குடிநீரைச் சுத்திகரிக்க முடியும். உமிச் சாம்பலைப் பயன்படுத்தி வளர்ப்புப் பிராணிகளுக்குப் படுக்கைகள் தயாரிக்க முடியும். உமிச்சாம்பலிலிருந்து தயாரிக்கப்படும் தட்டு, சல்பர் டையாக்சைடை உறிஞ்சக்கூடியது.  அதை நிலக்கரி கொதிகலனில்  கந்தகநீக்கியாகக் பயன்படுத்த முடியும்.
பூமி சூடேறுவதைத் தடுக்க இன்று பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய சிக்கலான காலகட்டத்தில் இருக்கும் நமக்குப் பசுமை ஆற்றலைப் பெறுவதற்கு உமியும் அதன் சாம்பலும் கைகொடுக்கத் தயாராக இருக்கின்றன. அதிகம் செலவு வைக்காத எளிதில் கிடைக்கும் இப்பொருட்களைப் பயன்படுத்திக் கொள்வோம்.
(ஆதாரம் : 2016 ஜூன் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் டாக்டர் அனு பிரியா மின்ஹாஸ், டாக்டர் சஞ்சீவ்னா குமாரி எழுதிய கட்டுரை, தமிழில் பேரா. ராஜு, நன்றி முதுவை ஹிதயத்)


கல்வித் திருநாள்

இன்று கலைமகள் நாள். (சரஸ்வதி பூசை அல்லது ஆயுத பூசை). கலைமகள் என்பவள் கல்விக்கும் கலைகளுக்கும் (both process and the products) உருவகம். கலைமகள் நாளான இன்று பலரும் தங்கள் நூல்களை பூசையில் வைத்துப் படைக்கின்றனர். அவற்றைப் படிக்கலாகாது என்றும் சொல்கின்றனர். மறுநாள்தான் அவற்றை எடுக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். இது தவறான கருத்து. கலைமகள் நாளன்றுகூடக் கல்வி பயிலாதவன், நூல்களைப் படிக்காதவன், வேறு என்று படிக்கப் போகிறான்? ஆகவே தவறாமல் இன்றேனும் உங்களுக்குத் தேவையான அல்லது மனத்துக்குப் பிடித்த நூலைப் படியுங்கள்.

தவளத் தாமரை தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே.

(சகலகலாவல்லி மாலை)

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநூற்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந்நாவில் நின்று
காக்கும் கருணைக்கடலே சகலகலா வல்லியே.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய் உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
நாட்டும் வெள்ளோதிமப்பேடே சகலகலா வல்லியே.

சொல்விற்பனமும் அவதானமும் கல்விசொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய் நளினாசனம்சேர்
செல்விக்கரிதென்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப்பெருஞ்செல்வப் பேறே சகலகலா வல்லியே.

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்-வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடென்னைச்
சரியாக வைத்த சரசுவதி தாயே. (கம்பர்)


கீழடி அகழ்வாய்வு

எழுத்தாளர் சு. வேங்கடேசனிடமிருந்த வந்த ஒரு மின்னஞ்சலை ஆதாரமாகக் கொண்டு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 5300 தொல்பொருட்களுடன் இரண்டு லாரிகள் மைசூருக்குச் செல்லப்போவதாக திரு. வேங்கடேசன் தெரிவித்துள்ளார். அவருடைய கூற்று பின்வருமாறு.

“அந்த இடமும், பொருட்களும்தான் இனி தமிழகத்தின் வரலாற்றுக் கால நிர்ணயத்தை அளவிடும் அடிப்படைத் தரவுகள். அந்தத் தரவுகள், தமிழக நாகரிகத்தின் காலத்தை இன்னும் பின்னோக்கித் தள்ளுவதாக இருக்கும். இன்றைய அரசியல் சூழலில் இந்தச் செய்தி பலருக்கு ஏற்புடையதல்ல. தரவுகளைத் தன்னழிவுக்கு விடும் அரசியல் ஒன்றும் புதிதல்ல. எல்லாக் காலங்களிலும் அது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக்குழுச் சமூகமாகத்தான் வரையறுத்தார்கள். சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் போல ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள் கருத்தின் அடிப்படை.

“இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அவற்றைக் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அந்தக் கருத்துக்கு உயிர் இருந்தது. ஆனால் இன்று கீழடியில் கண்டறியப்பட்ட தரவுகள் அந்தக் கருத்தைத் தகர்த்திருக்கின்றன. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கிறது. கீழடியில் இருப்பது அழிந்துபோன ஒரு பெரும் நகரம். நகர நாகரிகத்தின் அனைத்துத் தடயங்களும் முதன்முறையாக அங்கு கண்டறியப்பட்டுள்ளன. எண்ணற்ற கட்டிடங்களின் தரைத்தளங்கள், நீண்டு செல்லும் மதில் சுவர்கள், முத்துக்கள், தந்தத்தால்ஆன பல்வேறு பொருட்கள், சதுரங்கக் காய்கள், எண்ணிலடங்கா மணிகள், வணிகர்களின் எடைக் கற்கள், நெசவுக்கான தக்கை என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். இதுவரை 71 தமிழ் பிராமி எழுத்துகள் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்றுமொழிப் பெயர்களும் உள்ளன.

“ஆப்கானிஸ்தானத்து பகுதியைச் சேர்ந்த சூது பவழத்தாலான மணிகளும், ரோமாபுரியைச் சேர்ந்த மட்பாண்டங்களும், வட இந்தியப் பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் ஊடறுத்துப் பாயும் பெருநகரமாக இது இருந்துள்ளது. தொழிற்சாலை. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அகழ்வாய்வு முடிவுறும் தறுவாயில் அதுவரை கிடைத்த பொருட்களை வைத்து இது நகரத்தின் குடியிருப்புப் பகுதியென எல்லாரும் உறுதிசெய்தனர். ஆனால் இந்த ஆண்டு அகழ்வாய்வுப் பணி அதற்குச் சில அடி துரத்திலேதான் நடந்துள்ளது. அங்கு கிடைத்துள்ள தடயங்கள் எல்லாம் பெரும் தொழிற்சாலை இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

“வரிசைவரிசையான கால்வாய்கள், அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள். அந்தத் தொட்டிகளுக்குள் தண்ணீர் உள்செல்லவும் வெளிச்செல்லவுமான அமைப்புகள். அந்த கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறிதும் பெரிதுமான ஆறு உலைகள். கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள், மூன்று விதமான வடிகால் அமைப்பு, மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் இவையெல்லாம் முதன்முறையாகக் கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிடுவதற்குத் தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந்தியாவிலோ வேறு இடங்களே இல்லை. கீழடியில் இருக்கும் தொல்லியல் மேடு சுமார் 110 ஏக்கர் பரப்பைக் கொண்டது. அதில் அகழ்வாய்வு நடந்திருப்பது வெறும் 50 சென்ட் நிலப்பரப்பளவுதான்.

“மீதமிருக்கும் பெரும்பகுதியில் ஆய்வுகள் தொடருமேயானால், இந்த நகரத்தில் இருந்த பல்வேறு பகுதிகளை நம்மால் கண்டறிய முடியும் என்கின்றனர், இவ்வாய்வை நடத்திக் கொண்டிருக்கிற அம்நாத் இராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர்.

“1964இல்பத்துப்பாட்டு ஆராய்ச்சியை மிக விரிவாகச் செய்து முடித்த தமிழ்ப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார், பழந்தமிழ் இலக்கியங்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, சிலப்பதிகாரம் மற்றும் திருவிளையாடல் புராணம் ஆகியவற்றின் அடிப்படையில், “சங்ககால மதுரை என்பது இன்றுள்ள மதுரையல்ல, நமது இலக்கியக் குறிப்புகளின்படி அது திருப்பூவணத்துக்கு நேர் மேற்கிலும் திருப்பரங்குன்றத்துக்கு நேர் கிழக்கிலும் அமைந்திருக்கவேண்டும். அதனை ஆய்வுகளின்மூலம்தான் கண்டறிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“அவரது குறிப்பு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பெரும் உண்மையை நெருங்க வழிகாட்டுகிறது. சங்க இலக்கியம் சொல்லும் அதே புவியியல் அமைப்பில்தான் இன்று அகழ்வாய்வு நடக்கும் இடம் இருக்கிறது. இவ்வளவு துல்லியமான புவியியல் ஆதாரமும், எண்ணிலடங்கா தொல்லியல் ஆதாரங்களையும் இணைத்துப் பார்க்கையில் இதுவே சங்ககால மதுரையாக இருப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாக என்னைப்போன்ற பலரும் கருதுகிறோம்.

என்ன செய்ய வேண்டும்?

“110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், பழந்தமிழ் நாகரிகத்தின் பேரடையாளங்களைத் தனது மார்போடு இறுக அணைத்து வைத்திருக்கிறது. அவற்றை இழந்து விடாமல் இவ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும். மாநில அரசும் இங்கு அகழ்வாய்வுப் பணியைத் தொடங்க வேண்டும். இவற்றையெல்லாம் விட மிக அவசரமாகச் செய்யவேண்டிய ஒரு பணி, கள அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்குவது. அது உருவானால்தான், இங்கு கண்டறியப்பட்டுள்ள இந்தத் தொல்பொருட்கள் எல்லாம் பார்வைக்கு வைக்கவும் பாதுகாக்கவும் படும். இல்லையென்றால் மத்திய அகழ்வாய்வுப் பிரிவின் கிட்டங்கி இருக்கிற மைசூருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, சாக்கு மூட்டைகளுக்குள் இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இருக்க வேண்டி வரும். கள அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய தொல்லியல் துறை தயாராக இருக்கிறது.

“அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. இந்தக் கசப்பான உண்மையைச் சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு கூட்டததில் நான் பேசினேன்.

“கூட்டம் முடிந்ததும் என்னருகே வந்த ஒரு இளைஞர், “அய்யா, நான் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். என் பெயர் கரு. முருகேசன். தமிழ்தான் எனக்குச்சோறு போடுகிறது. அகழ்வாய்வு நடக்கும் அதே கிராமத்தில் எனக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. நான் அதனை மனமுவந்து தர முன்வருகிறேன். இவ்வரலாற்று பொக்கிஷத்தை எப்படியாவது காப்பாற்றி இங்கு காட்சிப்படுத்துங்கள்” என்று கண்கலங்கக் கூறினார்.

“ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களோ, அல்லது இருந்தவர்களோ, யாரேனும் தமிழ் தங்களுக்குச் சோறு போட்டது என்று நம்பினால் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முன்வாருங்கள். மைசூரை நோக்க லாரிகள் புறப்பட இன்னும் சில நாட்களே இருக்கின்றன.”


அறக்கட்டளைச் சொற்பொழிவு

பேராசிரியர் பூரணச்சந்திரன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

வரும்  செவ்வாய்          27-09-2016        அன்று

காலை 9 மணிக்கு

பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக மையக் குளிர் அரங்கத்தில் நிகழ உள்ளது.

‘மொழியியலும் இலக்கியவியலும்’

என்ற தலைப்பில்

பேராசிரியர் இரா. சம்பத்  (PILC, Puducherry)

உரையாற்றுகிறார்.

அனைவரும் வந்து பயன் பெறுக என்று அழைக்கிறேன்.

(அழைப்பிதழ்  முக நூலில்  வெளியிடப் பெற்றுள்ளது.)


பதிவுகள் 19-09-2016

பதிவுகள் 19-09-2016

கன்னட நாட்டில் வெறியாட்டம் நடந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டும் உடமையிழந்தும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஓடிவந்த நிலையில் தமிழகத்தில் உலகத்துக்கே எடுத்துக்காட்டான முறையில் எந்த ஒரு அசம்பாவிமும் அற்ற அமைதியான பந்த் ஒன்று நடந்து முடிந்தது. மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து கர்நாடகாவை விசாரணைக்கு உட்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான செய்தி.
1991இலும் இதுபோலவே மிக மோசமான பாதிப்பு நடந்தது. ஆனால் எந்த அரசும் இது பற்றிக் கவலைப் படுவதில்லை.
மத்திய அரசு முன்வந்து காவிரிப் பிரச்சினையைத் நிரந்தரமாகத் தீர்த்தால்தான் உண்டு. எத்தனை நாளைக்குத்தான் இடைக்காலத் தீர்ப்புகளையும் ஆணையங்களின் பரிந்துரைகளையும் உச்சநீதிமன்ற வழக்குகளையும் நம்பிக் கொண்டிருக்க முடியும்? ஆனால் அவ வாழ்வுடைய அரசியல்வாதிகள் இதற்கெல்லாம் பயன்பட மாட்டார்கள். மீனவர் பிரச்சினை எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது? நிரந்தரமாகத் தீர்ப்பதில் யார் அக்கறை காட்டுகிறார்கள்? இன்னும் இதுபோல எத்தனையோ…
””””””””””””””””””””””””
தமிழகத்தைவிட்டு சுற்றுலாவுக்காகக் காரில் பிற மாநிலங்களுக்குச் சாதாரண, அமைதியான சமயங்களில் செல்லும்போதுகூட பகீரென்றுதான் இருக்கிறது. இதை உணராதவர்கள் இருக்க முடியாது. இதுதான் இந்திய ஒற்றுமை.
மாநில எழுத்துகள் இட்ட பதிவெண்களை (TN, AP, MH, KA இதுபோல) வாகனங்களுக்குத் தருவதற்கு பதிலாக IN என்று மட்டுமே எழுத்துகள் இட்ட, காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, அருணாசல் முதல் கட்ச் வரை, நாள் வரிசைப்படி எண்ணிட்ட பதிவெண்களை வழங்கினால் உடனடித் தாக்குதல்கள் குறையும். மேலே சொன்ன பகீர் உணர்ச்சியும் குறையும். லாரி முதலிய வாகனங்களும் அதிகத் தாக்குதலுக்கு உள்ளாகாது.கணினி வாயிலாகத் தகவல்அடிப்படைகள் பகிர்ந்து கொள்ளப்படும் இந்நாட்களில் இது ஒன்றும் கடினமல்ல.
”””””””””””

கர்நாடகாவில் தமிழ்ப்படங்களை ரிலீஸ் செய்வது பிரச்சினைதான், இப்போதோ தமிழ் சேனல்களையே தடைசெய்திருக்கிறார்கள். ஆனால் நம்மூர் பிழைப்பு கேபிள்களோ கர்நாடக சேனல்களைத் தடைசெய்யவும் இல்லை (எங்கள் ஊரிலேயே கேபிள் டிவியில் கன்னட சேனல்கள் வருகின்றன) அதைவிட மோசம், நம்மூர் பிழைப்புத் தொலைக்காட்சிகள் இப்போதுதான் மும்முரமாகக் கன்னட நடிக நடிகையர் நடித்த படங்களை தினமும் போட்டுக்கொண்டிருக்கின்றன. (மானம் சூடு சுரணை…)  எத்தனையோ நாட்களாக இந்துமய நிகழ்ச்சிகளும் மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளும் வடநாட்டு சீரியல்களும், பிற மொழி டப்பிங் படங்களும் இவற்றில் வாடிக்கைதான். ஆனால் சந்தர்ப்பம் அறிந்துகூட இவற்றால் நடந்துகொள்ள முடியவில்லை! தமிழர்கள் சினிமாப் பைத்தியங்கள், எது கிடைத்தாலும் அள்ளி விழுங்குவார்கள் என்ற மனப்பான்மை முக்கியமாக…கேட்டால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பார்கள், பாவம்.


பதிவுகள் 16-09-2016

“பண்டை இந்திய அரசுகளில் நல்ல கட்டமைப்பும் இறுக்கமான நிர்வாகமும் இருந்த போதிலும் அரசுகளுக்கிடையிலான தொடர்புகளில் அவற்றை ஒத்த ஒழுங்கான முறை எதுவும் இல்லை. அங்கு உள்ளார்ந்த அராஜகமே இயல்பாகக் காணப்பட்டது. மௌரியப் பேரரசர் ஆட்சிக்காலம் தவிர பிற காலங்களில் இந்தியாவில் அரசியல் ஒற்றுமை என்பது இருந்தததே இல்லை”
என்று ஏ. எல். பாஷம் என்னும் சரித்திரப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். (The Wonder That was India, இயல் 3 இறுதிப்பகுதி)
இதில் “பண்டை” என்பதற்கு பதிலாக “இன்றைய” என்றும் “அரசு” என்பதற்கு பதிலாக “மாநில அரசு” என்றும் போட்டுப்பாருங்கள். இன்று வரை இது உண்மைதான். பழங்காலத்தில் தன்னளவில் அரசாங்கத்தில் தங்கள் நன்மையை மட்டும் கவனித்துக் கொண்டு பக்கத்திலே இருந்த நாட்டு மக்களைக் கொடுமைப்படுத்தியதுபோன்ற அதே சம்பவங்கள்தான் இப்போதும் இந்தியாவில் நடக்கின்றன. இன்னும் இந்தியா ஒரு நாடாகவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் ஒற்றுமையை உருவாக்குவதில் இந்திய மத்திய அரசாங்கம் (காங்கிரசோ, ஜனதாவோ எதுவாயினும்) ஆதியிலிருந்தே தவறிவிட்டது. இப்போதும் தவறியே வருகிறது.
””””””””””””””””””””
ஏதோ தன் நாட்டில் தவறே நடக்காதது போலவும் தமிழ்நாட்டில்தான் கன்னடர் கொடுமைப் படுத்தப்படுவதுபோலவும் இரு நாட்களுக்கு ஒருமுறை கன்னட முதலமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு “தமிழ்நாட்டில் கன்னடரைக் காப்பாற்றுங்கள்” என்று கடிதம் விடுகிறார். இதெல்லாம் எதிர்காலத்துக்கான வரலாற்றுப் பதிவுகள். எப்போதும் கடிதம்விடும் தமிழக முதலமைச்சர் மௌனம் சாதிக்கிறார். இடையில் கன்னடர்களின் பேயாட்டம் தொடர்ந்து நடக்கிறது. உண்மையில் எங்கே என்ன நடக்கிறது என்று சித்தராமையாவுக்குத் தெரியாதா? கேட்பதற்கு ஆளில்லை.
”””””””””””””””””””””””
சுப்பிரமணியம் சுவாமி என்ற பொருளாதார மேஜை–சாரி, மேதை, தமிழ்நாடு தன் நீர்ப் பங்கீட்டு உரிமையைக் கைவிட்டுக் கடல்நீரைக் குடிக்கலாம் என்கிறார். ஏன் கர்நாடகாவில் (அரபிக்) கடல் இல்லையா? அங்கே உள்ளவர்கள் அந்த நீரைக் குடிக்க மாட்டார்களா? லண்டனில் படித்த இந்த மாமேஜைக்கு அரசுகளிடையே உள்ள நீர்ப்பங்கீட்டு விகிதாசாரம் பற்றி ஒன்றுமே தெரியாதா? பாவம்.


சுயசார்பு

நாமே வேளாண்மை செய்து நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதே தன்னிறைவு விவசாயம் என்று நம்மாழ்வார் சொல்வதுண்டு.
இப்போதெல்லாம் கடைகளில் வரும் எண்ணெய்கள் பாரபின் குரூட் ஆயில் கழிவுகள் கலந்துதான் விற்பனைக்கு வருகின்றன என்பதை நாம் அறிவோம்.
நாமே நம் வீட்டுத்தேவைகளுக்கு எண்ணெய் தயாரித்துக் கொள்ளலாமே என யோசனை தோன்றியது.
எங்கள் தோட்டத்தில் விளையும் தேங்காய்களை இதுவரை வெளியே விற்றுவிடுவேன். இம்முறை எண்ணெய் தயாரித்து விடுவது என முடிவெடுத்தேன்.
எங்கள் தோட்டம் வளமான மண் உடையது. அவ்வப்போது சாண உரம்மட்டுமே போடுவோம். 20 ஆண்டுக்கும் மேலான பழமையான மரங்கள் என்பதால் தேங்காய் நல்ல அடர்வாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேங்காய்களை உடைத்து இரண்டுநாள் வெயிலில் காயவைத்து சிறு கத்தியால் தோண்டினால் சில்லு தனியாகவும், பருப்பு தனியாகவும் வந்துவிடும்.
தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு மாதம் வெயிலில் காயவைத்தேன். நன்றாக காய்ந்து கொப்பரை ஆனதும் செக்கில் கொடுத்து எண்ணெய் ஆக்கி விட்டேன்.
நூறு தேங்காய்க்கு 12 லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைத்தது. அதில் மீந்த தேங்காய்ப் பிண்ணாக்கைச் செக்குக்காரரே எடுத்துக்கொண்டதால் ஆட்டியதற்குக் கட்டணம் வாங்கவில்லை.
இப்போது என் வீட்டுச் சமையலுக்கு சுத்தமான, மணமான, கலப்படமில்லாத தேங்காய் எண்ணெய் தயார்! நீங்களும் முயற்சி செய்யலாமே நண்பர்களே!


யதார்த்தம் 1

நேற்று தற்செயலாக, ஒரு பால் பண்ணை வைத்திருக்கும் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
ரொம்ப நாளாக எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்.
“முன்னெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய … பசும்பாலுடன் எருமைப் பாலைக் கலந்து விற்பது சாதாரணமாக நடக்கக் கூடியது. தண்ணீர் கலப்பார்கள்..சொல்ல வேண்டியதே இல்லை”
“திருவல்லிக் கேணியிலும் மயிலாப்பூரிலும் மாம்பலத்திலும் தெருக்களில் எல்லாம் மாடுகள் நின்னுக்கிட்டிருக்கும். அந்தக் காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. கோனார்களிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான டிமாண்ட் மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு நிறைய பால் பவுடர்கள் புழக்கத்தில் இருந்தன..
“ஆனால் இப்போ எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம். விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை. என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் லாஜிக் இடிக்குதே!..
“கண்ணு போட்டாத் தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே … எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ?”
“” தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்..”
“அப்படின்னா ”
” 20 % தாங்க மாட்டுப் பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் பேக்டரி இருக்குதே .. தெரியாதா? இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டுப் பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பணும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்?”
“எந்தத் தண்ணிய ஊத்துவீங்க?”
“ஹி .. ஹி .. ஊருணி, குளம், கம்மாத் தண்ணி தான்.. பின்ன அக்குவாபினா வாங்கியா ஊத்த முடியும்?”
“இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ?”
“பாப்பாங்க”
“அப்புறம்?”
“பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப.…”
“சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படித்தானா ?”
“அப்படி சொல்ல முடியாது…அதெல்லாம் ரேசியோ கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவுதான்.. ஆனா மாட்டு பால் 20% – 30% தான் தம்பி.. அது போக டிடர்ஜெண்ட்டு, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ”
“சின்னப் புள்ளைங்க இந்த பாலை குடிச்சா… யோவ்…
சோயாவுக்கே நிறைய சயிடு எபெக்டு இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா, அலர்ஜி, Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன இம்பாலன்ஸு்…”
“அதுக்கு?”
“நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா?”
“நீங்கதான் பசு மாடு வளர்க்கணும்….சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே../வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட்., பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட்…கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட்…கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட்…இப்படி நிறைய இருக்கே…..
“முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆஸ்பத்திரிலேயும் போய் பாருங்க… எத்தனை பேரு…”
“நான் முன்னாடி சாமி கும்பிட மாட்டேன் .. தி.க. குடும்பம் தம்பி.. இப்போ நான் கும்பிடாத கடவுள் இல்ல… பயம் தம்பி…பயம்!”