திராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே

konjam-manam2-240x300

தேர்தல்கள் முடிந்துவிட்டன. இனி தமிழ்நாட்டின் கட்சிகள் பற்றிக் கொஞ்சம் தைரியமாகப்பேச முடியும்.முதன் முதலில் நான் பெங்களூர் சென்றது 1964இல். நான் பி.யூ.சி. படித்தபோது ஓர் அறிவியல் கருத்தரங்கத்திற்காக அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை, ஆனாலும் அந்தப் பெயரைச் சொன்னாலே ஏதோ கெட்ட வார்த்தையைச் சொல்வதுபோலப் பார்த்தார்கள் பெங்களூரில். குறிப்பாகக் கல்லூரிபல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்கன்னடர்கள். ஆனால் கல்லூரிகளில் அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. அலை வீசிக்கொண்டிருந்தது. அதனால்தான் 1967இல் மிக எளிதாக தி.மு.க. காங்கிரஸை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்தது.

முழு இந்தியாவிலும் தமிழ்நாட்டில்தான் திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய கட்சிகள் இருக்கின்றன. ஆந்திரத்தில் இல்லைகேரளத்தில் இல்லைகருநாடகத்திலும் இல்லை. திராவிடம் என்ற பெயரைக்கூட அங்கெல்லாம் உச்சரிக்க முடியாதுஅவ்வளவு வெறுக்கிறார்கள். (உடனே யாரும் தயவுசெய்து திராவிடர் என்ற குடும்பப் பெயரை எடுத்துக்காட்ட வேண்டாம்அதற்கெல்லாம் தனி வரலாறு இருக்கிறது.)

ஒருகாலத்தில்கால்டுவெல் ஆய்வுசெய்து நூல் வெளியிட்ட காலத்தில்இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் நிகழ்ந்த காலத்தில்உருவான கருத்துதான் திராவிடம் என்பது. அது ஒரு தனி மொழியினத்தைக் குறிக்கப் பயன்பட்டது. எந்தக் காலத்திலும் அச்சொல் ஓர் இனத்தையோநாட்டையோநாட்டு மக்களையோ குறிக்கப் பயன்பட்டதில்லை.

பழங்காலத்தில்தமிழ் என்ற சொல்லை உச்சரிக்க முடியாத வடநாட்டவர்கள்சமஸ்கிருத மொழியைக் கையாண்டவர்கள்தமிழை திராவிடம் என்ற சொல்லால் குறித்தார்கள். ஆங்கிலேயன் குமரி என்று உச்சரிக்க முடியாமல் காமரூன் என்று ஆக்கியமாதிரி. உதாரணமாகதமிழ்க்குழந்தை என்று ஞானசம்பந்தரைக் குறிக்க வந்த காலடி ஆதி சங்கராச்சாரியார்திராவிட சிசு என்றார். ஆக தமிழனுக்கு சமஸ்கிருத மொழிக்காரன் வைத்த பெயர் திராவிடன்.

இராமசாமிப் பெரியார்காங்கிரஸிலிருந்து வெளிவந்து 1925இல் திராவிடக் கட்சியைத் தொடங்கினார். ஏறத்தாழ அது நீதிக்கட்சிதான். நீதிக்கட்சிசாதிக்கேற்ப இட ஒதுக்கீடு கேட்க மட்டுமே வந்த கட்சி. அதற்கும் திராவிடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒடுக்கப்பட்டவர்கள்ஏழைகள் முன்னேற்றத்திலும் அதற்கு அக்கறை இல்லை. அதில் இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர் அல்லாத பெருந்தனக் காரர்கள்.

திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டைத்தான் குறிக்கும்திராவிடன் என்ற சொல் தமிழனைத்தான் குறிக்கும் என்றால் பெரியார் ஏன் திராவிடக் கட்சி தொடங்கவேண்டும்தமிழன் கட்சி என்றே தொடங்கியிருக்கலாமே?அண்ணாதுரை ஏன் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கவேண்டும்தமிழன் முன்னேற்றக் கழகமே தொடங்கியிருக்கலாமே? (பின்னால் திராவிடம் என்ற பெயரைப் போட்டுக் கொண்ட கட்சிகளை விட்டுவிடுங்கள். பழக்கதோஷம் என்றே இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்.) அல்லது பெரியாருக்கு மிகப் பிடித்தமான சுயமரியாதை என்ற சொல்லை வைத்து சுயமரியாதைக் கட்சி என்றே தொடங்கியிருக்கலாமேஐம்பதுகள் அறுபதுகளில்கூட பெரியார்-அண்ணா கட்சிக்காரர்களை சு.ம. ஆட்கள் என்றுதான் காங்கிரஸ்காரர்கள் குறிப்பிடுவது வழக்கம்.

அதனால்தான் “திண்ணையில் படுத்தேனும் திராவிடநாடு வாங்குவோம்” என்று சொன்ன அண்ணாதுரையால் அந்தக் கோரிக்கையை எந்த வருத்தமும இன்றி உடனே கைவிடமுடிந்தது. திராவிடநாடு என்பது தமிழ்நாடுதான் என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும். அதைத்தான் 1956இல் வாங்கியாயிற்றேஇன்னும் எந்த திராவிட நாட்டைப் போய் வாங்குவதுபெங்களூரைக் கொடு என்றால் கன்னடர்கள் விடு வார்களாஅல்லது தமிழகத்தின் ஒருபகுதியாகவே சங்ககாலம் முதல் இருந்த திருப் பதியைக் கொடு என்றால் ஆந்திரர்கள்தான் விட்டுவிடுவார்களாஅண்ணாதுரையின் முக்கியமான ஏமாற்று வேலைதிராவிட நாடு என்ற கட்டுக்கதை.

பெரியார்மிகவும் சூட்சுமமாகத்தான் பெயர் வைத்தார். அவருக்குத் தமிழ் மீதோபிற திராவிட மொழிகள்மீதோ பெரிய அபிமானம் ஒன்றும் இல்லை. தமிழ்க்கட்சிஅல்லது தமிழன் கட்சி என்று பெயர் வைத்தால்ஏ.டி. பன்னீர் செல்வம் வேண்டுமானால் அதில் சேருவார்அவர் பச்சையான தமிழர். பிட்டி தியாகராசரோ,  பனகல் ராஜாவோ,டி.எம். நாயரோ அதில் சேருவார்களாஅந்தக் காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டதில் இன்றுள்ள கேரளத்தின் சில பகுதிகள்கன்னட நாட்டின் மைசூர் வரையிலான பகுதிகள்ஆந்திரத்தின் சில பகுதிகள் எல்லாம் அடங்கியிருந்தன. ஆகஅங்கெல்லாம் இருந்தவர்களை ஒன்று சேர்க்கத்தான் என்று வைத்துக்கொள்வோமேதிராவிட என்ற சொல்லைக் கையாளவேண்டிய அவசியம் பெரியாருக்கு ஏற்பட்டது.

சரிவைத்தது வைத்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுமொழிவாரி மாநிலங்கள் பிரியும் நிலை ஏற்பட்ட பிறகுமொழியுணர்வு இந்தியாவில் எங்கும் அடிநீரோட்டமாக ஆனபோதாவது திராவிட என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கவேண்டாமா?

அங்குதான் அண்ணாதுரையின் புத்தி மட்டுமல்லம.தி.மு.க.தே.மு.தி.க. என இன்றுள்ள கட்சிகள் வரையிலும் குயுக்தி ஆட்சி செய்கிறது. தமிழகத்தில்வீட்டுக்கு வெளியே தமிழ் பேசிக்கொண்டுஆனால் வீட்டுக்குள் தெலுங்கோ கன்னடமோ மலையாளமோ பேசிக்கொண்டுமக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தவந்தாலும் தங்களைக் கன்னடர்தெலுங்கர்மலையாளி என்றே குறிப்பிட்டுக்கொண்டு வாழும் சாதிகள் அநேகம். தமிழ்நாட்டின் அசலான சாதிகளைவிடஇவர்களுக்குத்தான் பிற்பட்ட வகுப்பினருக்கானஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான சலுகைகளும் மிகுதியா கக் கிடைக்கின்றன என்பதைத் தமிழ்நாட்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவேடுகளைப் பார்ப்பவர்கள் மிக எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.

தமிழன் கட்சி என்றால் இவர்கள் யாரும் அதில் சேர மாட்டார்கள். இவர்களை ஒதுக்கவும் முடியாது. இன்றும் ஒக்கலிகர்களும்பலிஜாக்களும்நாயுடுக்களும். ஊர்த்தலைவர்களாகவும் பெரும்பான்மையாகவும் இருக்கும் கிராமங்கள் ஏராளம். அதனால்தான் தமிழன் முன்னேற்றத்தைக் கைவிட்டுஇவர்கள் எல்லோரையும் திராவிடராக ஒன்றுசேர்த்து முன்னேற்ற வேண்டிய கட்டாயம் பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் ஏற்பட்டது. இவர்களுக்குப் பின்னால் அண்ணா பெயரை வைத்துத் திராவிடக்கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆருக்கும் திராவிடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் இராமச்சந்திர மேனோன். பால நாடக சபாக்களில் நடிக்க வந்து பிறகு திரைப்படத்தின் மூலமாகத் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர். அவருக்குப்பின் கட்சித்தலைவராக வந்தவர் தம்மைச் சட்டசபையிலேயே ஓர் உயர்ந்த சாதி என்று அறிவித்துக்கொண்டவர். பிற திராவிட என்று பெயர் சூடும் கட்சிகளின் தலைவர்களையே பாருங்கள்யார் அவர்கள்எந்தெந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரியும்.

ஆகதிராவிட என்ற கட்சிச்சொல்லின் வரலாற்றைப் பார்த்தால்தமிழர்களை மேம்படுத்தாமல்தமிழ்நாட்டில் வசிக்கும்குறிப்பாக ஆதிக்கம் செய்யும்தெலுங்குகன்னடமலையாள சாதிக்காரர்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட சொல் என்பது நன்றாகப் புரிகிறது. இது பிடிக்காததனால்தான் ம.பொ.சியோஆதித்த னாரோஏன் ஈவெராவின் உறவினரான ஈவெகி சம்பத்தோ கூட திராவிட என்ற சொல்லைத் தங்கள் கட்சிகளுக்கு வைக்காமல் தமிழ் அல்லது தமிழர் என்ற சொல்லைச் சேர்த்துக் கட்சிப்பெயர் வைத்தார்கள். ஆனால் இன்று யாருக்கும் அந்தத் துணிச்சல் இல்லாமல் போனது தமிழனின் இளிச்சவாய்த்தனம். தமிழர்கள் தமிழ் நாட்டில் என்றைக்குமே சிறுபான்மையினராகத்தான் ஆக்கப்படுவார்கள்மதிக்கப் படுவார்கள் என்பதற்கும் அடையாளம்.


அறிவைத் தடுக்கும் மதங்கள்!

arivai-1

ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகள் இருக்கலாம். ஏதோ காரணத்திற்காகக் கல்கத்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கே ஒரு நிகழ்ச்சி. வங்காள மொழி நமக்கு என்ன புரிகிறது? மதம் சார்ந்ததா, இலக்கியம் சார்ந்ததா என்று நினைவில்லை. அதற்கு பூரி சங்கராச்சாரியார் அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெண்கள் சிலர் வேதப்பாடல்களைப் பாடினார்கள். வந்ததே கோபம் சங்கராச்சாரியாருக்கு! பெண்கள் எப்படி வேதத்தைப் பயிலலாம், பாடலாம் என்று மிகக் காட்டமாக உரையாற்றத் தொடங்கிவிட்டார். பெண்கள் வேதத்தைப் பயின்றதால் தான் நாடே அழிவு நிலையை எய்திவிட்டது என்றும் சொல்லிவிட்டார்.

கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலில் ஒரு நிகழ்ச்சி. ஆழ்வார்க்கடியான் என்று ஒரு வைணவன். (வைணவர்கள், முஸ்லிம்களைப் போலவே “மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்று பெயர்பெற்றவர்கள்.) அவன் திருவானைக்கா சிவன் கோயில் மதிலோரம் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு செங்கல் துண்டு அவன் தலையில் விழுந்து அடிபடுகிறது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு காக்கை அதை மதில்மேலிருந்து தள்ளியிருக்கிறது. உடனே அவன், “ஓ ஸ்ரீவைஷ்ணவக் காக்கையே, சிவன் கோயில் மதிலை இடித்துத் தள்ளுகிறாயா? செய்” என்று அதைப் பாராட்டுகிறான். மதம் மனிதனை வாழ்விக்க வந்தது, மனிதனுக்கு வழிகாட்ட வந்தது என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் வரலாற்றில் மத அடிப்படையிலான போர்கள் மட்டுமல்ல, தடைகளும், ஒடுக்குதல்களும் ஏராளம், ஏராளம். மதங்கள் அறிவை முக்கியமாகத் தடைசெய்யும் சக்திகளாக உள்ளன. இதற்குப் பிரமாதமான உதாரணங்கள் தேவையில்லை. நம் இந்தியாவிலேயே, முன் கூறிய உதாரணப்படி, வேதங்கள் பிராமணர்கள் மட்டுமே படிப்பதற்குரியவை, பெண்களும், பிற சாதியினரும் அவற்றைப் படிக்கலாகாது என்ற தடை இருந்தது. (இன்னும் இருக்கிறது!)

பழங்காலத்தில் கிறித்துவ மதத்தில் மதக்கொள்கைகளை மீறியவர்களாகக் கருதப்பட்டவர்களை மதவிசாரணைக்கு (இன்க்விசிஷன்) உட்படுத்தி அவர்களை கம்பத்தில் கட்டி உயிரோடு எரித்தார்கள். (Burning at stake). அதை நினைவூட்டும் விதமாக 1986இல் டெஹ்ரானிலிருந்து வெளியிடப்பட்ட ஃபத்வா (பார்த்த இடத்தில் தலையை வெட்டும் ஆணை), உலகத்தையே அதிர்ச்சியுறச் செய்தது. சல்மான் ருஷ்தீ எழுதிய சாத்தானின் செய்யுள்கள் என்ற நாவலுக்காக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அது. இருபதாம் நூற்றாண்டிலும் காட்டுமிரண்டித்தனமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றும் நம் நாட்டிலும், “இந்தத் திரைப்படத்தைத் தடை செய்”, “இந்த நூலைத் தடைசெய்” என்று மதவாதிகள் மத்திய, மாநில அரசாங்கங்களை அவ்வப்போது எதிர்த்துப் போராடும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மத அடிப்படைவாதிகள் என்றைக்குத் தான், எங்கேதான் இல்லை?

இவ்வாறு தடைசெய்பவர்களும், தடைசெய்ய வேண்டுபவர்களும், மற்றவர்களுக்கும் அறிவு இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள். அல்லது தங்கள் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்றோ, மற்றவர்கள் தங்களை எதுவும் செய்யக்கூடாது என்றோ பயப்படுகிறார்கள்.

arivai-7

கிறித்துவ அடிப்படைவாதத்தின் வரலாறு கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே தொடங்குகிறது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எபீசஸ் கவுன்சில் என்ற அமைப்பு, மூடநம்பிக்கைக்குரிய நூல்கள் என்று கருதியதையும், புனித பவுலின் வரலாற்றையும் (Acta Pauli) தடைசெய்தது. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் போப் ஆண்டவர், முதன்முதலாகத் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியலை வெளியிட்டார். கி.பி.1450இல் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு, அதிகாரபூர்வமற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளும் மதநூல்களும் பெருகிய காரணத்தால், திருச்சபையின் தடைசெய்யும் பணியும் அதிகமாகியது. கி.பி.1559இல் போப் நான்காம் பவுல், Index Liborum prohibitorum (தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியல்) என்பதை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின் போன்று அந்தந்த நாடுகளும் தங்கள் தடைப்பட்டியல்களை வெளியிட்டன. பதினாறாம் நூற்றாண்டு முதலாக சீர்திருத்தக் கிறித்துவம் பரவத் தொடங்கிய நிலையில், அவர்கள் கத்தோலிக்க நூல்களைத் தடைசெய்தார்கள்.

பழங்காலத்திலிருந்தே மதமும் அரசியலும் ஒன்றோடொன்று பிணைந்தவை. அந்தந்த அரசாங்கம் கடைப்பிடித்த மதத்தில் நம்பிக்கையற்றவன், நாட்டிற்கும் சதிகாரன், எதிரி என்று கருதப்பட்டான். தமிழ்நாட்டில் கூட, மதச் சண்டைகளின் எதிரொலிகளைப் பார்க்கிறோம். சமணர்கள், பௌத்தர்கள் போன்றவர்கள் அறிவுசார் மதம் சார்ந்தவர்கள். பக்தி விசுவாசம் போன்றவை அவர்களுக்குக் கிடையாது. பக்தி சார்ந்த சைவம், வைணவ மதங்கள் இந்த மதங்களை எதிர்த்து அவற்றை வேரறுத்ததையும் காண்கிறோம். வைணவர்கள் தங்கள் நிறுவனங்களில் சைவநூல்களை அனுமதித்ததில்லை. சைவர்கள் தங்கள் மடங்களில் வைணவ நூல்களை வைத்ததில்லை. இருவருமே புறச்சமய (சமண, பௌத்த) நூல்களைத் தங்கள் நூல்களில் சேர்த்ததில்லை. இப்படியே மதப்போரில் தமிழ் நூல்கள் பெரும்பாலானவை ஒழிந்தன.

தமிழ்நாட்டில் ஏறத்தாழப் பத்துப் பன்னிரண்டு நூற்றாண்டுகள் முன்பு வழங்கிய பலவேறு மதங்களின் கொள்கைகளின் பெரும்பகுதியை நீலகேசி என்ற சமணநூல் (குறிப்பாக வாமனர் எழுதிய அதன் உரை) கொண்டுதான் அறிந்து கொள்ள முடிகிறது. உலகாயதம் உட்படப் பலவேறு மதங்களின் கொள்கைகளை அது குறிப்பிட்டு அதற்கு எதிர்வாதங்களை நீலகேசி என்ற பெண்துறவியின் வாயிலாக முன்வைக்கிறது. அது குறிப்பிடும் அநேக நூல்கள் அழிந்து போனவை, இனி கண்டுபிடித்து அச்சிட இயலாதவை.

பதினெட்டாம் நூற்றாண்டளவில், ஐரோப்பாவில் தொடர்புச் சாதனங்கள் பெருகிய நிலையில் வெளியில் புலப்படா (அண்டர்கிரவுண்ட்) நூல்களின் பதிப்புகளும் பெருகின. அவற்றில்தான் நவீனக் கருத்துகளும் வெளியிடப்பட்டன. எனவே, (அந்தக் காலத்தில்) “அண்டர்கிரவுண்ட் நூல்களை படிக்காதவர்கள்-அரசாங்கத்தின் ஒப்புதல்பெற்ற நூல்களை மட்டுமே படித்தவர்கள்-அறிவில் ஒரு நூற்றாண்டு பின்தங்கியவர்கள்” என்று நூலாசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

திருச்சபை 1559இல் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியல், நான்கு நூற்றாண்டுகள் கழித்து 1966இல் நீக்கப்பட்டது. அதற்குள் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் காரணமாக, கத்தோலிக்கத் திருச்சபைக்கு அத்தடையை நிலைநிறுத்தும் வலிமையும் வசதியும் இல்லை, அந்த நூல்களில் பலவும் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் ஆயின. ஆனால் அப்பட்டியல் காலந்தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்தது என்பதில் ஐயமில்லை. கத்தோலிக்கத் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட நூல்களில், கார்ல் மார்க்ஸின் நூல்கள் மட்டுமல்ல, பெந்த்தாம், பெர்க்சன், காம்டி, டீஃபோ, டே கார்ட்டே, டிடரோ, ஃப்ளாபேர், கிப்பன், ஹாப்ஸ், ஹ்யூம், காண்ட், ஜான் லாக், மொண்டேய்ன், மில், மாண்டெஸ்க்யூ, பாஸ்கல், ரூஸோ, சேண்ட், ஸ்பினோசா, ஸ்டெந்தால், வால்டேர், ஜோலா போன்ற அறிஞர்களின் நூல்களும் அடக்கம். (இவர்களில் பெரும் பாலோர் தத்துவ அறிஞர்கள், பலர் அரசியல் அறிஞர்கள், இலக்கியவாதிகள்).

arivai-3-1024x772

அமெரிக்காவில்கூட, அந்தந்த மாநிலங்கள் தங்கள் தங்கள் தடைக் கொள்கைகளைப் பின்பற்றித்தான் வந்திருக்கின்றன. பொதுவாக அமெரிக்க அரசியலமைப்பு மத அடிப்படையில் நூல்களைத் தடைசெய்வது கூடாது என்று சொல்கிறது. மிகவும் புகழ்பெற்ற ரௌலிங் எழுதிய ஹேரி பாட்டர் நூல்கள்கூட இன்றும் சில மாநிலங்களில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல ரோல்டு டால் எழுதிய தி விட்சஸ் போன்ற நூல்களும். இவற்றைத் தடைசெய்யக் காரணம், இவை மதத்திற்குப் புறம்பான சூனியக்காரர்கள், மந்திரவாதிகள், அவர்களின் செயல்முறைகள் பற்றிப் பேசுகின்றன.

நம் நாட்டிலும் தஸ்லிமா நஸ்ரின் தலையை வாங்கவேண்டுமென்ற வேண்டுகோள் முஸ்லிம்களால் எழுப்பப்பட்டது. இவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் ஒரு பாபர் மசூதி இடிக்கப்பட்டதுபோல, வங்காள தேசத்தில், அது சுதந்திரம் பெற்ற பிறகு, ஆயிரக்கணக்கான இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டதையும், இந்துக் குடும்பங்கள் பாதுகாப்பற்று அழிவுக்குள்ளானதையும் அவர் தமது லஜ்ஜா என்ற நாவலில் சுட்டிக்காட்டியிருந்தார். நாடு கடத்தப்பட்ட அவர் ஸ்வீடனுக்குச் சென்றார். இப்போது மேற்குவங்க மாநிலம் அவரை அனுமதிக்காததால் தில்லிக்குள் வாழ்கிறார் என்று நினைக்கிறேன். இதேபோல ஈரானியப் பெண் நாவலாசிரியர் ஷார்னுஷ் பார்சிபூர் பலமுறை சிறையிடப்பட்டார், மிரட்டப்பட்டார், கடைசியில் நாட்டைவிட்டே வெளியேறினார்.

1979இல் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி தோன்றியபிறகு, ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகைக்காரர்கள் சிறையிடப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 1990 களில், எகிப்திய நாவலாசிரியர் ஃபராக் ஃபவுதா, அல்ஜீரிய நாவலாசியரும் பத்திரிகையாளருமான தாஹர் ஜௌத் ஆகியோர் மத அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டனர். 1994இல் எகிப்திய எழுத்தாளர் நக்வீப் மகபூஸ் (நோபல் பரிசு பெற்றவர்) கத்தியால் குத்தப்பட்டு மிகமோசமாக பாதிக்கப்பட்டார். எகிப்திய நாவலாசிரியர் அலா ஹமீத் மதத்திற்கு எதிரானவர் என்று சிறையிடப்பட் டார். எகிப்தின் நவால் எல் சாத்வி, மொராக்கோவின் ஃபாதிமா மெர்னீசி போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண்களை ஒடுக்கும் இஸ்லாமியக் கொள்கைகளைக் கேள்விகேட்டதால் அரசாங்கத்தின் கோபத்திற்கும் அடிப்படைவாதிகளின் கோபத்திற்கும் ஆளானார்கள்.

2005இல் ஈரானில் மட்டுமல்ல, லெபனான், பாகிஸ்தான், எகிப்து, இந்தியாவின் சில மாநிலங்கள் போன்றவற்றில் டான் பிரவுன் எழுதிய டாவின்சி கோட் போன்ற பெருவிற்பனை நூல்களும் தடைசெய்யப்பட்டன. 2007-2008இல் புல்மன் எழுதிய அதீதகற்பனை முக்கதை (ஃபேண்டஸி டிரைலஜி) கிளாஸ் காம்பஸ், சடில் நைஃப், ஆம்பர் ஸ்பைகிளாஸ் ஆகியவையும் தடை செய்யப்பட்டன. இத்தனைக்கும் இவை அனைத்தும் இலக்கியப் பரிசுகள் பெற்றவை.

arivai-4

இங்கு உதாரணமாகச் சொல்லப்பட்டவை யாவும், பற்பல நூற்றாண்டுகளாக, உலக முழுவதும் மதங்களால் நிகழ்ந்துவரும் அறிவுத்தடையை எடுத்துக் காட்டுவதற்குத்தான், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கை என்ற அளவில் மட்டுமே. காலங்காலமாகத் தடைசெய்யப்பட்டுக் கிடைக்காமல் போனவற்றில் தத்துவ நூல்கள், அரசியல் நூல்கள், நாவல்கள் போன்ற எத்தனையோ. அமெரிக்காவின் சில மாநிலங்களில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் போன்ற நாவல்கள் கூடத் தடைக்குள்ளாயின என்பது வியப்புதான்.

arivai-5

தடை செய்யப்பட்டவற்றில் அறிவியல் நூல்களும் அடக்கம் என்பது வேடிக்கையானது. உதாரணமாக, கெப்லர் போன்றவர்களின் வானியல் நூல்கள் தடைக்குள்ளாயின. கியோர்தானோ புரூனோ என்ற வானியல் அறிஞர் உயிருடன் கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டார். கலீலியோ கலீலி (தொலைநோக்கியைக் கண்டுபிடித்த இத்தாலிய விஞ்ஞானி) உலகம் உருண்டை என்று கூறியதால் அவர் நூல்கள் தடைசெய்யப்பட்டன. அவர் போப்பாண்டவரிடம் தாம் எழுதியவை அனைத்தும் தவறு என்று மன்னிப்புக் கேட்குமாறு ஆணையிடப்பட்டது. (இத்தனைக்கும் போப்பாண்டவர், அவருடைய இளமை நண்பர். அதனால்தான் இவ்வளவு குறைந்த தண்டனை!) கலீலியோ தாம் எழுதிய அறிவியல் கருத்துகள் அத்தனையும் தவறானவை, மதத்திற்கு மாறானவை என்று மன்னிப்புக் கேட்டபிறகு, உடனே தமது கூண்டுக்கு அருகிலிருந்த நண்பரிடம் இரகசியமான குரலில், “ஆனால் அவைதான் உண்மை!” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. டார்வினின் பரிணாமக் கொள்கை வெளியிடப்பட்ட காலத்திலிருந்தே எல்லா மதங்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

மதவரலாற்றாசிரியர் டேவிட் கிறிஸ்தியன் மரே என்பவர், “ஒரு கையடக்க எண்ணிக்கையிலானவர்கள், மிகப் பெரும்பான்மையோரின் கருத்துகளை எதிர்த்து அவர்களை தண்டனைக்குள்ளாக்கியதைத்தான் மதத்தின் வரலாறு காட்டுகிறது” என்று சொல்கிறார். (நம் நாட்டுத் திரைப்படத் தணிக்கைக்கும் முற்றிலும் பொருந்தும் கூற்று இது. இது பற்றித் தனியே எழுதவேண்டும்.) இவ்விதம் நோக்கும்போது எவ்வளவு எவ்வளவு அறிவுச் செல்வங்கள் சிலரால் தடைசெய்யப்பட்டு உலகிற்குக் கிடைக்காமல் போயிருக்கின்றன என்ற வருத்தம் தான் ஏற்படுகிறது.

லெவி என்ற அறிஞர் குறிப்பிடுவதுபோல, “காலம் இந்த நீதிபதிகளின் நீதியைக் கேலி செய்கிறது, மக்களின் நுண்ணுணர்வை மாற்றுகிறது.” ஏரிக்கரையின் சிறிய அரிப்பிலிருந்து சிறிய தாரையாக வெளிவரத் தொடங்கிய நீர் பின்னர் பெரிய ஆறாகவே மாறிவிடுவதைப்போல, சொற்களும் சிந்தனைகளும் தணிக்கைகளையும் மீறி உலகெங்கும் பரவுகின்றன.

arivai-6

ருஷ்தீயின் நூலின் தடையைப் பற்றிக் கேள்விப்பட்டபோது மொராக்கோ பெண் எழுத்தாளர் நாடியா தாஜி கூறினார்: “புத்தகத்தை யாரும் கொல்ல முடியாது. அது தன்னிச்சையாக வாழ்கிறது, மறைகிறது.” நூல்களிலிருந்து குரல்கள் தப்பித்து அபாய வழிகளிலும் செல்கின்றன. மோதல்கள், மாறுதல்கள், மீறல்கள், கலகங்கள் கருத்துகளில் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. கருத்துகள் காலத்தால் மாறுதல்களுக்குட்படலாம், அவை அழிவதில்லை.


சுற்றுச்சூழலும் வளர்ச்சியும்

sutruchchoolalum3

நம்மைச்சுற்றியுள்ள  நிலம்,   நீர்,  காற்று,  வானம்,  காடுகள்,   விலங்கினங்கள்,  செடிகொடிகள்,  மரங்கள்,  மக்கள்கூட்டம்  எல்லாம்  இடையறாத தொடர்பு கொண்டவை. அமீபா முதலான மிகச்சிறிய உயிரிகளிலிருந்து யானை, திமிங்கிலம் ஆகிய பேருயிர்கள் வரைமிகச் சிறிய தாவரங்களிலிருந்து பல்லாண்டுகள் வாழக்கூடிய மிகப்பெரிய தாவரங்கள் வரை இன்றியமையாத தொடர்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் தமக்குள் ஒன்றுக்கொன்று அனுசரணையாக வாழும் நிலையைமனிதர்கள் உள்ளிட்ட எல்லாப் பிராணிகள்விலங்குகள்தாவரங்கள் அனைத்தின் நல வாழ்வைக்கொண்ட மாசுபடாத இயற்கை நிலையைஒரு நல்ல சுற்றுச்சூழல் என்கிறோம்.

அனைத்து இயற்கைக்கூறுகளும்-அவை அஃறிணை ஆனாலும்உயர் திணை ஆனாலும்- ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் தன்மைதான் சுற்றுச்சூழலின் அடிப்படைத் தன்மையாகும்.

சான்றாகநிலத்தின் வளத்தைக் காத்துசெடிகொடி மரங்களுக்கு உணவு தயாரித்தல்ஒளிச்சேர்க்கை போன்ற பலசெயல்களுக்கு நீர் உதவுகிறது.

செடி,கொடி, தாவரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன. பிற தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் மனிதனுக்குமான உணவைத் தயாரிக்கின்றன.

நிலம் மக்களுக்கும், விலங்குகளுக்கும், காடுகளுக்கும், தாவரங்களுக்கும், பிற எல்லா உயிரினங்களுக்கும் உணவளிக்கிறது. அதற்கு ஈடாக நிலம் தனது தேவைகளை அவற்றிடமிருந்து பெற்றுக்கொள்கிறது.

இது ஒரு சுழற்சிச்செயல். இதில் ஏதேனும் ஒரு சுழற்சிக் கண்ணியில் மாறுபாடு ஏற்படுமானால் அது இயற்கையைக் கேடுறச் செய்வதுடன்

இயற்கையின் ஒரு பகுதியான (ஆனால் தாங்கள் இயற்கையின் ஒருபகுதி என்பதை மறந்து விட்ட) மக்களையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

இயற்கையை வெல்ல இயலுமா?:

நமது வளங்கள்செல்வங்கள் யாவுமே இயற்கையிலிருந்துதான் வருகின்றன. இயற்கையிலிருந்து பல்வேறு வகைகளில் பயன்பெற்று வருகிறோம் நாம். ஆனால்மனிதர்களின் பேராசைக்கு எல்லையே இல்லை. தானாக இயற்கையிலிருந்து கிடைக்கும் நன்மைகளால் திருப்தி அடையாமல்அல்லது தமது சிறிய முயற்சிகளால் கிடைக்கும் பயன்களினால் திருப்தி அடையாமல்இயற்கையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து,அதைச் சுரண்டிபாழாக்கிஅதனால் மகிழ்கிறார்கள் மனிதர்கள்.

இயற்கையோடு ஒத்துவாழவேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல்இயற்கை தங்களைப் பாதுகாக்கும் பெரும் சாதனம் என்ற எண்ணமும் இல்லாமல். இயற்கையோடு போராடுவது’ ‘இயற்கையை வெல்லுவது’ தான் வாழ்க்கை என்று அலைகிறார்கள். இதனால் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் பெரும் சீர்கேடுகள் பல ஏற்படுத்தக்கூடிய பொருட்களை உருவாக்குகிறார்கள்.

புதிய வளர்ச்சிக் கொள்கை!:

“புதிய வளர்ச்சிக் கொள்கை”யை இன்று உலகநாடுகள் யாவும் பின்பற்றுகின்றன. இதன் அடித்தளம் நவீன அறிவியல் அறிவும்பொருளாதார வளர்ச்சியும்வணிகரீதியாகப் பொருள்குவித்தலும் ஆகும்.

ஆனால் இவற்றிற்காக எவ்வளவு வேகமாகவும் பரந்த அளவிலும் இப் பூவுலகின் பல்வேறுபட்ட வாழ்க்கைத்தன்மையை (Bio Diversity),உயிரினங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்பொருளாதார வளர்ச்சி என்பதன் பெயரால் இயற்கையின் பல்வேறுபட்ட தன்மை பலியிடப்பட்டு விட்டது.

பெரும்பாலான நகர்ப்புற மனிதர்கள் இயற்கையிலிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் முற்றிலும் அந்நியப்பட்டுப் போய்விட்டார்கள். அடித்தள மனிதர்களோ வாழ்க்கைக்கான மூல வளங்களை இழந்து நகர்ப்புறங்களுக்கு அடிமைகளாகக் குடிபெயர்ந்து தங்களை அன்றாடக்கூலிக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதன்விளைவாக ஏற்பட்டதே சுற்றுச்சூழல் அபாயம்மனிதனின் பேராசை இயற்கைக்குச் சாவுமணி அடிக்கிறது. பூமித்தாய் வேகமாகச் சுடுகாடுநோக்கிப் பயணம் செய்கிறாள். அவளது காடுகள் செத்துக் கொண்டிருக்கின்றன. அவளது மண் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவளது நீர் வற்றிக்கொண்டிருக்கிறது.

முதல் உலகநாடுகளின் வளர்ச்சிமாதிரி (growth model):

காடு, நிலம், நீர் இவற்றை அழிப்பதன்மூலம் நாம் நமது வாழ்வின் ஆதாரங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம். முன்னேற்றம்வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்க்கையே காணாமற் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி முறையில் (growth model) இயற்கைமீதான வன்முறை பின்னிப்பிணைந்துள்ளது.

ஐரோப்பாவில் உதித்த இந்த அறிவியல் புரட்சிஇயற்கையைச் சுரண்டுவதற்கான ஒரு உபயோகப்பொருளாக மட்டுமே பார்க்கிறது. அதனால் இயற்கையின் சீர்குலைப்புக்கும் சுரண்டுதலுக்கும் எதிரான தார்மீகக் கட்டுப்பாடுகள் உடைத்தெறியப் பட்டுவிட்டன.

பொருளாதாரத்துறை அடிப்படைத் தேவைகளின் பூர்த்திவளங்களின் நிர்வாகம் என்ற அடிப்படையில் பழங்காலத்தில் இருந்தது. தொழிற்புரட்சியும், அதற்குப் பின்வந்த வணிகப் பெருக்கமும் இலாபத்தை அதிகரிக்கக்கூடிய பொருள் உற்பத்திக்கான ஒரு துறையாக அதை மாற்றிவிட்டன. தொழில்மயப்படுத்தல் இயற்கை வளங்கள்மீது அளவற்ற தாகத்தை ஏற்படுத்தி விட்டது. நவீன அறிவியல் இத்தகைய சுரண்டலைச் சாத்தியமானதாகஏற்புடையதாகவிரும்பத்தக்கதாக ஆக்கிவிட்டது. மேற்கத்தியச்சார்பில் உருவான இத்தகைய அறிவியல்-பொருளாதாரக் கொள்கை மூன்றாம் உலகநாடுகள் போன்ற பிற கலாச்சாரங்கள் மீதும் திணிக்கப்பட்டுவிட்டது. ஐரோப்பியஅமெரிக்க முன்னேற்றத்தின் (?)வடிவமே அனைவர்க்கும் பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்டு விட்டது.

காலனிய அதிகாரம் உச்சகட்டத்திலிருந்த காலத்தில் அதிகார வளர்ச்சிதொழில்மயம் ஆகியவை ஏற்பட்டபோது அவற்றை நிறைவுசெய்யும் நாடுகளாகக் காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாடுகள் பயன்பட்டன. அறிஞர் ரோசா லக்சம்பர்க் குறிப்பிடுவதுபோலமேற்கு ஐரோப்பாவில் தோன்றிய தொழில் வளர்ச்சிஅடிமைப்பட்டிருந்த நாடுகளின் நிலையான ஆக்கிரமிப்பையும்இயற்கைப் பொருளாதாரத்தின் அழிவையும் இன்றியமையாதது ஆக்கிவிட்டது.

மரங்களும் காடுகளும்-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு:

இதற்கு ஒரு சான்றாகஇந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தொடங்கியபோது எப்படி இயற்கைச் சீர்குலைவு ஏற்பட்டது என்பதை மட்டும் காண்போம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முதன்முதலில் ஆக்கிரமித்தது காடுகளைத் தான். காடுகள் இயற்கையில் வகிக்கும் பாத்திரம்நாட்டுநலனில் அது வகிக்கும் பங்கு பற்றி அவர்களுக்குத் துளியும் அக்கறையில்லை. காடுகள் மிகுதியாக இருந்தபோது ஆங்கில ஆதிக்கம் தன் தொழில்மயமாக்கத்திற்கு வேண்டிய தேவையை எளிதில் பெற்றது. அப்படியே எல்லையற்றுத் தொடரும் இந்தச் சுரண்டல் என்று அவர்கள் நம்பியதாகத் தெரிகிறது.

பல இடங்களில் சாலைகள் அமைக்கவும் இரயில்பாதைகள் அமைக்கவும் வேளாண்மைக்கும் காடுகள் இடைஞ்சல் என்று கருதி அழிக்கப்பட்டன. தேக்கு மரங்களுக்கு இராணுவத்தில் பயன்பாடு மிகுதி என்பதால் கிழக்கிந்தியக் கம்பெனி தேக்குமரங்களை ஒட்டுமொத்தமாக அழித்தது.

1807ஆம் ஆண்டுச் சட்டத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட கேப்டன் வாட்சன் என்னும் அதிகாரி தேக்குமரங்களைப் பத்தாயிரக் கணக்கில் கொன்று குவித்தான். ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்காலம் காடுகள் வீணாக்கப்பட்ட பிறகுதான் 1865இல் இந்தியாவில் முதல் வனச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தினால் காடுகளின் “அறிவியல் பூர்வமான நிர்வாகம்”தொடங்கியது. அதாவது மக்களின் உரிமை இழப்பும் காடுகளின் வீழ்ச்சியும் சட்டபூர்வமாகத் தொடங்கியது.

பணமதிப்புமிக்க மரங்கள் மட்டுமே அரசின் கவனத்தை ஈர்த்தன. காட்டின் பல்வேறு சமுதாயங்களுக்கும் (மரங்கள்,விலங்குகள்பூச்சிகள்நீர்நிலைகள்சுருக்கமாகச் சொன்னால் காட்டின் biodiversity என இன்று வழங்கப்படுகின்ற யாவுக்கும்) உள்ள உறவுநீர்மண் போன்றவற்றிற்கிடையிலுள்ள சிக்கலான சங்கிலித்தொடர்புகள் போன்ற யாவும் புறக்கணிக்கப்பட்டன. இதனால் இந்தியநாடு சுதந்திரம் அடைவதற்குள் அதன் சுற்றுச்சூழல்காடுகள் அமைப்பு சரிசெய்ய முடியாதவாறு அழிந்தது. பழங்குடி மக்களையும் இது நேரடியாகத் தாக்கியது.

தொழில்துறைக் கண்ணோட்டத்தின்படிவணிகமதிப்பில்லாத தாவரஇனங்கள் களைகள்தான். ஆனால் உண்மையில் இந்தக் “களைகள்”தான் இயற்கையின் நீர் மற்றும் பிற சத்துச் சட்டகங்களின் ஆதாரங்களாக விளங்குபவை. 1878இலும் 1927 இலும் வனச்சட்டங்கள் புகுத்தப்பட்டதை அடுத்து இந்தியாவெங்கும் அநேக சத்தியாக்கிரகங்கள் நடைபெற்றன.

புதிதாகச் சுதந்திரம் பெற்றநாடுகளில் இந்தவகை வளர்ச்சி புதிய காலனிகளைத் தோற்றுவித்தது. வளர்ச்சி என்பது காலனியச் செயல்பாட்டின் தொடர்ச்சி ஆயிற்று. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில்வளர்ச்சிச் செயல் முறைகளை நீடிப்பதன் மூலமும் அவற்றைப் பரவலாக்குவதன் மூலமும் நாடுகளின் பொருளாதாரநிலை உயரும் என்ற எண்ணம் நேரு போன்ற தலைவர்களுக்கு மேலோங்கியிருந்தது.

ஆனால் ஒருசில பத்தாண்டுகளிலேயே உண்மையான பிரச்சினையே “வளர்ச்சி”தான் என்பது புரியத்தொடங்கியது. பொருளாதார வளர்ச்சி என்பதுஎந்த ஏழைமக்களுக்கு வளர்ச்சி மிகத்தேவையோ அவர்களிடமிருந்தே வளங்களை அபகரிக்கும் புதியகாலனிய முறை ஆயிற்று. அதனால் உள்நாட்டு மேட்டுக்குடியினர் நலன்தேசிய நலன்தேசிய மொத்த உற்பத்தி (Gross National Productபோன்றவற்றின் பெயரால் நாட்டின் சுரண்டல் செய்யப்படலாயிற்று. இதனைச் சிறப்பாகச் செய்துமுடிக்க அதிகாரத்தில் உள்ளோர்க்கு மிகவலுவானதொழில்நுட்பங்கள் கைகொடுத்தன. இதனால் ஏழைகள் இன்னும் ஏழைகளாயினர். பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆயினர். தொழிலற்ற விவசாயிகள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அல்லது கொத்தடிமைகளாக மாறி அவதிக்குள்ளாயினர்.

புதிய வளர்ச்சிமாதிரி என்பது என்ன?:

sutruchchoolalum4
நவீன அறிவியலின்தொழில் வளர்ச்சியின்வணிக வளர்ச்சியின் கண்ணோட்டப்படிசுத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆறு பயனற்றது. அதை “வளர்ச்சி” யடையச் செய்யவேண்டும்.

வளர்ச்சியடையச் செய்வது என்பதற்கு ஓர் உதாரணம்அணைகட்டி அதன் நீர்வளத்தைப் பயன்படுத்துவது. அணைகட்டிமின்சாரம் எடுக்கலாம். அது முன்னேற்றம். ஆனால் அங்கு வாழும் மக்கள் இடம்பெயர்ந்து செத்தால் பரவாயில்லை. அதன் அருகிலுள்ள தொழிற்சாலையின் கழிவுப் பொருட்கள் அதில் கலந்துஅதை “முன்னேற்றினால்” தான் ஆறு பயனுள்ளதாக மாறும்.

இவ்வாறேஇயற்கையான காடுகளும் வியாபாரநோக்கில் ஓரினப்பயிர்களாக மாற்றப்படும்வரை பயனற்றவை.

இப்படி ஆதிக்கத்தின் புதியவடிவங்களோடு நவீனமயமாக்கல் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டது. நீர், உணவு, தீவனம், எரிபொருள் இவற்றின் பற்றாக்குறையோடு அதிகரிக்கிறது. சூழலியல் பேரழிவு அதனுடன் சேர்ந்து உலகத்தின் தெற்குநாடுகளில் பெரும் வறுமையை உருவாக்கியுள்ளது.

தேசியப் பொருளாதாரம்:

sutruchchoolalum5
தேசிய மொத்த உற்பத்தி (GNP-ஜிஎன்பி) உயர்ந்தால் நாட்டின் செல்வச் செழிப்பு அதற்கேற்றாற்போல் உயர்கிறது என்று பழைய பொருளாதார வல்லுநர்கள் கருதினார்கள். இன்று மரபான பொருளாதார வல்லுநர்களுக்குக்கூட அந்தக் கோட்பாடு பயனற்றுவிட்டது என்பது தெரியும். முன்னேற்றத்தின் அளவுகோல் என்ற முறையில் நாணயப் பொருளாதார உற்பத்திப் பொருட்கள்சேவை ஆகியவற்றை மட்டுமே அது கணக்கில் கொள்கிறது. இவை பெரும்பாலான மக்களுக்குப் பயன்படுவதில்லை. பணமும் அதிகாரமும் எங்கு குவிந்துள்ளதோ அங்கேயே இவை போய்ச் சேர்கின்றன.

தேசிய மொத்த உற்பத்திசூழலின் பேரழிவால் ஏற்படும் புதிய சுமைகள்அதனால் ஏற்படும் செலவுகள்மக்களின் வாழ்க்கைநிலை வீழ்ச்சி போன்றவற்றைக் கணக்கில் கொள்வதே இல்லை.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச் சிரியாரோ?” என்று பாரதியார் பாடினார். அறிவியல் வணிக தொழில் முன்னேற்றங்கள் அதைத்தான் செய்கின்றன. அதிக வளங்களையும் சக்திகளையும் பயன்படுத்தும் தீவிர உற்பத்திச் செயல்முறைகள்தொடர்ந்து அதிக வளங்களைச் சுரண்டுவதை உறுதிசெய்கின்றன. இத்தகைய வள அழிப்புகள் அடிப்படையான சூழல் செயல்முறைகளைப் பாதித்துசக்திகளை மீண்டும் புதுப்பிக்க இயலாதவாறு ஆக்கிவிடுகின்றன.

புதுப்பிக்க இயலாமை (entropy):

sutruchchoolalum2
உதாரணமாகஒரு காடுதன் நிலை சீராக இருக்கும்வரை பல்வேறு வளங்களைக் குறைவில்லாமல் அளித்துவரும் தன்மையுடையது. ஆனால் தொழில் ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் காடுகள் மீண்டும் புத்துயிர்ப்பு பெறக்கூடிய சக்தியையும் மீறிமரங்கள் கட்டுப்பாடின்றி வெட்டிவீழ்த்தப்படுகின்றன. காடுகள் மீண்டும் புதுப்பிக்க இயலாதவாறு மாறிவிடுகின்றன.

சிலசமயங்களில் ஒரு குறிப்பிட்ட வளத்தின் சுரண்டல்அதனோடு தொடர்புடைய வேறு இயற்கை வளங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதனாலும் இயற்கையின் புத்துயிர்ப்புத் தன்மைக்கு அபாயம் ஏற்படுகிறது. உதாரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மரங்கள் ஏராளமாக வெட்டப்படுதல்காட்டின் சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடுஆற்றுநீரின் வளத்தையும் பாதிக்கும். அதிக வளங்களை-அதிக மூலப்பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள்சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடுநீர்நிலம்காற்று ஆகியவற்றையும் மாசுபடுத்துகின்றன.

ஒரு சிறிய கணக்கு:

உணவு வேளாண்மைக் கழகம் நாளொன்றிற்கு ஒருவருக்கு 3600 கலோரி உணவு தேவை,என்று சொல்லுகிறது. உலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒரு வாரத்திற்கு 40 மணிநேரம் (5x8=40) உழைப்புச்சக்தியை அளிக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். மரம்புதைபடிவ எரிபொருள்நீர் மின்சக்திபிற எரிபொருள்சக்திஅணுசக்தி ஆகியவற்றிலிருந்து மனிதனின் உழைப்பால் விடுவிக்கப்படும் உலகளாவிய சக்தி ஒரு நாளுக்கு தற்போது எட்டுலட்சம் கோடி வாட் ஆகும். இது உலகத்தின் உணவுத்தேவையைப்போல் இருபது மடங்கு ஆகும். ஆக இருபது மடங்கு மூலவளம் இன்று வீணாக்கப்படுகிறது.

உணவுத்தேவையேயன்றிப் பிற எரிபொருள்களும் தேவைகளும் இதே 3600 கலோரி அளவுக்கு ஒருமனிதனுக்கு தேவைப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும்பத்துமடங்கு மூலவளம் வீணாக்கப்படுகிறது என்றுதான் பொருள்.

ஆனால் இங்குப் போட்ட கணக்கின்படி எல்லா மக்களுக்கும் கலோரி அளவு சராசரியாகக் கிடைப்பதில்லை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற ஆதிக்க நாடுகளிலுள்ளவர்கள் ஒருநாளுக்கு ஒருலட்சம் கலோரிக்கு மேலும் வீணாக்கு கிறார்கள். மூன்றாம் உலக நாடுகளிலுள்ள எத்தனையோ ஏழைபாழைகள் 300 கலோரிக்கும் வழியின்றி எலும்புக்கூடுகளாக வாழ்கிறார்கள்.

இப்படிச் சக்தியை வீணாக்குவதற்காகத்தான் நாம் இயற்கையைத் தேவையின்றி அழித்துக்கொண்டிருக்கிறோம். இதைத்தான் வளர்ச்சி என்கிறோம்.

வளர்ச்சி நோக்கும் வறுமை நோக்கும்:

இன்றைய நவீன பொருளாதாரம் இன்னொரு விதத்திலும் தவறானது. இக்கோட்பாட்டின்படிவறுமை இருவகைப்படுகிறது.

1. இருக்கும் ஆற்றல் போதாது – ஆற்றல் கிடைக்கவில்லை என்பவர் வறுமையில் வாடுபவர்கள்.

2. இருப்பதைப் பயன்படுத்தாமல் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு கலாச்சார ரீதியாகப் “போதுமென்ற மனமே பொன்செய்வது” என்றிருப்போரும் வறுமையில் வாடுபவர்கள் தான்.

இரண்டாவது வகை மனிதர்கள் வறியவர்கள் அல்ல. ஆனால் வளர்ச்சிக் கொள்கையாளர்கள் இவர்களையும் வறியவர்கள் என்கிறார்கள். காரணம்இவர்கள் சுயகட்டுப்பாட்டுடன் தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்ட போதிலும் சந்தைமூலம் விநியோகிக்கப்படும் வணிகப்பொருட்களை நுகராமல்சந்தைப் பொருளாதாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான்.

உதாரணமாக கொக்கோகோலா குடிக்காமல் தங்கள் தோட்டத்தின் இளநீர் அல்லது பதநீரைக் குடிப்பவர்கள் வறியவர்கள். சிமெண்ட் கட்டடங்களில் வசிக்காமல் மண்மூங்கில் கட்டடங்களில் வசிப்பவர்கள் வறியவர்கள். செயற்கை இழைத்துணி அணியாமல் பருத்தியாடை அணிபவர்கள் வறியவர்கள்.

உண்மையான பொருளாதார ரீதியில் சரியான வாழ்க்கை வாழ்பவர்கள் இவர்கள்தான். ஆனால் போதுமென்று கருதுகின்ற இந்த நல்வாழ்க்கையை வறுமையென்று கருதுகின்ற இன்றைய “வளர்ச்சிப் போக்கு” இவர்களை யெல்லாம் வறியவர்கள் பட்டியலில் சேர்த்து வேறுவகையான “வளர்ச்சியை” அடைந்தாக வேண்டுமென நிர்ப்பந்தப்படுத்துகிறது. இந்த நிர்ப்பந்தம்தான் வறுமையை உண்மையில் உருவாக்குகிறது.

வளர்ச்சிநோக்கு உருவாக்கும் வறுமை:

sutruchchoolalum7
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டுதிருப்தியுடன் வாழ்ந்து வந்த மக்களிடமிருந்து நில-நீர் வளங்களைப் பணப்பயிரின் அதிகரிப்பும்பதப்படுத்தப்பட்ட உணவின் பெருக்கமும் கைப்பற்றின.

இயற்கையின் சீற்றங்களைவிடதொழில்மயமாக்கம்உலகமயமாக்கம்தனியார் மயமாக்கல் போன்றவைதான் அதிகமான மக்களின் பட்டினிக்கும் பசிக்கும் காரணமாகியுள்ளன. ஏற்றுமதிரீதியான உயர் தொழில்நுட்பப் பயிர்கள் ஏன் பட்டினியை விளைவிக்கின்றன என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. கடன்அருகிவரும் நிலம்நீர்தொழில் நுட்பம்ஆகியவை ஏற்றுமதிக்காக ஒதுக்கப்படுகின்றன. பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கமறுத்து ஏழைகளைச் சுரண்டும் நிறுவனங்களின் கையில் இலாபம் குவிகிறது. இதற்கு நல்லதோர் உதாரணம் எதியோப்பியா.

எதியோப்பியாவில் வறுமையை (கலாச்சார நோக்கில்அங்கிருந்த “திருப்தியான எளிய வாழ்க்கையை”) ஒழிக்கத்தோன்றிய “வளர்ச்சி”தான் அங்கு உண்மையான வறுமையை உருவாக்கியது.

எதியோப்பியாவிலுள்ள ஆவாஷ் பள்ளத்தாக்கின் வளமான பாரம்பரியப் புல்வெளிகளை வர்த்தக வேளாண்மைக்கென அந்நிய நிறுவனங்களின் உதவியுடன் மாற்றியமைத்தபோது அங்கு வசித்த ஆப்பிரிக்கப் பழங்குடியினர் கட்டாய இடப்பெயர்ச்சிக்கு உள்ளாயினர். அதனால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அவர்களது கால்நடைகளும் பட்டினிகிடக்க நேர்ந்தது.

முதலில்காலனியாதிக்க நோக்கில் இயற்கைவளங்கள் வீணடிக்கப்பட்டாலும் தொழில் உழைப்பு முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டது. இயற்கைச்செல்வம் வீணடிக்கப்பட்டாலும் உழைப்பின் வளத்தை அதிகரிப்பது புத்திசாலித்தனமாகத் தோன்றியது. ஆனால் இந்தக் காலனியாதிக்க நோக்குஅனைத்து நாடுகளுக்கும்அனைத்துச் சூழல்களுக்கும் ஏற்றது என்று நினைப்பதுதான் அநியாயம்.

உதாரணமாகஅதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்குக் கிடைக்கும் நிலையிலும்,தொழிலாளர்கள் எண்ணிக்கையைக் குறைக்கத் தொழில்நுட்பங்கள் ஏன் புதிதுபுதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன?ஏற்கெனவே வளங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் அதிகமான வளங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு விட்டன. பாரம்பரியச் சமுதாயங்கள்தங்களுக்கு அவசியமற்ற தேவைகளைப் புறக்கணிக்கின்றன என்ற வகையில் “முன்னேறாமல்” இருந்தாலும்அடிப்படைத் தேவைகளைப் பொறுத்தமட்டில் அவைதான் உண்மையான வளமிக்க சமூகங்கள்.

சான்றாகஅமேசானிலுள்ள பூர்விகக் குடிமக்களின் வாழ்க்கைத்தேவைகளை நிறைவேற்ற அங்குள்ள காடுகளே போதுமானவை. அவர்களுக்குப் பாலியெஸ்டர் உடைகளும் கொக்கோகோலாக்களும் தேவையில்லை. அங்குப் புகுத்தப்பட்ட “வளர்ச்சி”தான் வறுமையை உண்டாக்கியது.

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்திலுள்ள கோண்டு பழங்குடிகளுக்கும்மலேசியாவின் ஷாரவாக் வாசிகளுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டது.

கருத்துப்புகுத்தல்:

உள்ளூர்த் தொழில்நுட்பங்கள் பிற்போக்கானவைஉற்பத்தித்திறன் அற்றவை என்று முத்திரை குத்தப்படுகின்றன. உலகளாவிய சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் சந்தைப்பொருளாதாரத்தின் மூலவளத்தேவைகள்கடும் அரிப்பை ஏற்படுத்துகின்றன என்பதைப் பலரும் அறிவதில்லை. அதனால் வளர்ந்துவரும் நாடுகளின் பத்திரிகைகளும்,திரைப்படங்களும்தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இப்படிப்பட்ட வளர்ச்சியை ஆதரிக்கின்றன,நியாயப்படுத்துகின்றன. சென்செக்ஸ் எண் உயர்வதில் நாடே உயர்ந்துவிட்டது என்று பெருமைப்படும் வித்தகர்கள் இவர்கள்தான்.

சூழலியல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் சமத்துவமின்மை பெருகுகின்றது. இத்தகைய சமத்துவமின்மையை முதலாளித்துவம் நியாயப்படுத்துகிறது. போட்டியில் ஈடுபடாதவர்களும் தோல்வியடைபவர்களும் வாழத் தகுதியற்றவர்கள் என்னும் டார்வின் தத்துவத்தை அது பயன்படுத்துகிறது. இந்தக் கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் “வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?”, “அதிகச் செல்வம் சேர்ப்பது எப்படி?” “அள்ள அள்ளப் பணம்” போன்ற நூல்கள்தான் இப்போது எழுதப்படுகின்றனஅவற்றை வணிக நிறுவனங்கள் வெளியிடுகின்றன. வணிகப் பத்திரிகைகளிலும் இத்தகைய கட்டுரைகள்தான் வெளியிடப்படுகின்றன (அதிக “வரவேற்பையும்” பெறுகின்றன) என்பதும் இன்று நோக்கத்தக்கது.


இந்தியாவில் கல்வியின் வி(நி)லை

indhiyaavil-kalviyin-nilai1
இந்தியாவில், தமிழகத்திலும் கல்வி எப்படி இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். குறிப்பாக மாதம் ரூ.100 கொடுக்கமுடியாமல் துன்பப்படும் கிராமத்து ஏழைக்கும், மறுநாள் காலை விண்ணப்பம் வாங்க, நள்ளிரவுக்கு முன்னிருந்தே தான் நல்ல நிறுவனம் என்று நம்பும் ஒன்றில் குழந்தையைச் சேர்க்கப் பள்ளி வாசலில் காத்துக்கிடக்கும் சென்னை மத்தியதர வகுப்பினனுக்கும் தெரியும்.

ஆனால் நமது கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் இந்தியாவின் மக்கள் தொகை ஈவைப் பற்றிப் பெருமைப்படுகிறார்கள். அதாவது இந்தியாவில் வேறுவித வளங்கள் இல்லாவிட்டாலும் உழைத்து ஆதாயம் தேடிக் கொடுக்கக்கூடிய மக்கள்தொகை இருக்கிறது என்கிறார்கள். ஆனால், நாம் இப்போது வைத்திருக்கும் உயர்கல்வி முறைப்படி, இந்த ஆதாயம், விரைவில் ஒரு சாபமாக மாறிவிடும். இந்தியாவில் உயர்கல்வி எப்படிப் பணமயமாக்கப்படுகிறது என்பதை விரைவில் அரசாங்கம் நன்கு கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது. இப்போது விட்டுவிட்டால் பின்னால் பிடிக்கமுடியாது.

thaniyaar-palligal5
இந்தப் பணத்தில் பெரும்பகுதி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும்தான் செல்கிறது. அவர்கள்தானே எல்லா நிறுவனங்களையும் கையில் வைத்திருக்கிறார்கள்?

எங்கள் காலத்தில் கல்வி என்பது மேன்மையான நற்றொழிலாக (புரொஃபெஷன்) இருந்தது. ஒரு பள்ளியையோ கல்லூரியையோ ஏற்படுத்துவது ஒரு புனிதச் செயலாகக் கருதப்பட்டது. அப்போதெல்லாம் தலைக்கூலிக் கட்டணமோ (கேபிடேஷன் ஃபீ) கட்டாய அன்பளிப்புகளோ (டொனேஷன்கள்) முதுகெலும்பை முறிக்கும் மிகுதியான கட்டணங்களோ கிடையாது. தனிப்பட்ட டியூஷன்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு போதித்த ஆசிரியர்கள் தோல்வியடைந்தவர்களாக கருதப்பட்டார்கள்.

இன்று கல்வி ஒரு பெரிய பெருவணிகமாக மாறிவிட்டது.

குழந்தை விளையாட்டுநிலை-ப்ரிகேஜி-ரூ.36,000 முதல் 60,000 வரை

கேஜி வகுப்புகள்-ரூ.30,000 முதல் 5 லட்சம் வரை டொனேஷன், ரூ.2000-10000 மாதக்கட்டணம்

11ஆம் வகுப்பு-ரூ.2 முதல் 5 லட்சம் வரை அன்பளிப்பு, கட்டணம் வேறு

மருத்துவம்-ரூ.30-60 லட்சம் டொனேஷன்

மருத்துவம்-பிஏஎம்ஸ் முதலிய பிற-ரூ.3-8 லட்சம் அன்பளிப்பு

பொறியியல்-ரூ.2-6 லட்சம் அன்பளிப்பு

நிர்வாகம் (எம்பிஏ)-ரூ.2-10 லட்சம்

மருத்துவம்-உயர்கல்வி (பிஜி)-ரூ.1-4 கோடி

நிர்வாகம் (பிஜி-உயர்கல்வி)-ரூ.10-20 லட்சம் அன்பளிப்பு

இப்படிக் கல்வி இன்று விற்கப்படுகிறது. விலைகொடுக்க முடிந்தவர்கள் இவற்றில் கல்வி பெறலாம். இல்லையென்றால் எப்படியோ போங்கள், உங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்று அரசாங்கம் சொல்கிறது. இம்மாதிரிக் கல்வி விற்கப்படுவதால் சமூகத்திற்கு எவ்வளவு செலவாகிறது என்பதை சுமாராகக் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

சமூகத்திற்கு ஆகும் செலவு:

பெரிய நகரங்களில் அன்பளிப்பு அதிகம். கான்வெண்டுகள், ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்கள், நல்ல தரமான கல்வியளிக்கும் நிறுவனங்களில் சேர்க்க எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் இம்மாதிரி நிறுவனங்கள் குறைவு, அதனால் பணத்தோடு அதிகாரமும் அரசியல் தொடர்பும் இணைந்தவர்கள் இவற்றைப் பெறுகிறார்கள். இது சமூகத்தில் ஒரு வளைந்த போக்கை (skew) ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் இப்போது 125 கோடி மக்கள்தொகை. 2013இல் 1000 பேருக்கு 2.5 குழந்தைகள் பிறக்கின்றன என்று அரசு அறிக்கை சொல்கிறது. அதாவது ஆண்டுக்கு இரண்டரைக் கோடி கூடுதலாக மக்கள் தொகையில் சேர்கிறது.

125 கோடிப்பேரில், 30% நகர்ப்புற வாசிகள். அதாவது 37.5 கோடிப்பேர் இந்தியாவில் நகரங்களில் வசிக்கிறார்கள்.

ஓராண்டில், 1000 பேருக்கு 2,5 குழந்தைகள் வீதம் பிறக்கின்றன என்றால் நகர்ப்புறங்களில் பிறக்கின்ற 75 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி வசதி தேவை. இவர்களில் 80% கீழ்மத்தியதர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முனிசிபல், அரசு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். அங்கு இந்த அன்பளிப்பு, தலைக்கூலி கொடுமையெல்லாம் இல்லை.

மேற்கூறிய குழந்தைகளில் 20% பேர்-15 லட்சம் பேரின் பெற்றோர்தான் டொனேஷன் தரத் தயாராக இருப்பவர்கள். சென்னையில் ரூ.30,000 முதல் 5 லட்சம் வரை அன்பளிப்புத் தரத்தயாராக இருக்கிறார்கள். அதுவும் ஆங்கிலக்கல்வி மட்டுமே தேவை, தமிழ் வேண்டாம் என்று கூறி. சராசரி ஒரு பிள்ளைக்கு ரூ.1 லட்சம் என்று வைத்துக்கொண்டால், ஆண்டுக்கு ரூ.15000 கோடி கல்விநிறுவனங்களை நடத்தும் முதலாளிகளிடம் சேர்கிறது. நாம் கொடுக்கும் பணம் நல்ல பணம்தான், ஆனால் அது முதலாளியிடம் சென்றவுடனே கருப்புப் பணமாகிவிடுகிறது. ஏனென்றால் யாரும் எந்தத் தொகைக்கும் கணக்குக் காட்டப் போவதில்லை.

2. 11ஆம் வகுப்பு அடுத்தநிலை. நல்ல கல்லூரியைத் (பிறமாநிலங்களில் தனிக் கல்லூரிகளில்தான் 11-12ஆம் வகுப்புகள் உள்ளன. தமிழகத்தில் என்றால் ஹையர் செகண்டரி பள்ளிகள். இவற்றில் நல்ல நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், குறைந்தது ரூ.2-5 லட்சம் தேவை.

சென்னையில் ஒரு லட்சம் சீட்டுகள் இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் அன்பளிப்பு இன்றிச் சேர்ந்துவிடுவார்கள். பிறருக்கு மேனேஜ்மெண்ட் கோட்டா. இது இருக்கும் இடங்களில் 15% என்றால், 15000 சீட்டுகள். ரூ.2 லட்சம் சராசரி அன்பளிப்பு என்றால், 300 கோடி கருப்புப் பணம். இந்தியா முழுவதும் பம்பாய் தில்லி போன்ற பெருநகரங்கள் உள்படக் கணக்கிட்டால், இந்தத் தொகை ரூ.10,000 கோடி வரும் என்கிறார்கள்.

3. கல்லூரிகள்:

indhiyaavil-kalviyin-nilai3
மருத்துவத்திற்கு மட்டும் இந்தியாவில் 50000 இடங்கள் உள்ளன. நுழைவுத்தேர்வுகள் மூலம் 60% நிரப்பப்படுகிறது. மீதியிருக்கும் 40%, மேனேஜ்மெண்ட் இடங்கள், என்ஆர்ஐ இடங்கள். சராசரியாக ஒரு சீட்டுக்கு 40 லட்சம் அன்பளிப்பு என்று வைத்துக் கொள்வோம். 50000 மாணவர்களில் 40% இருபதாயிரம் பேர். ஓராண்டுக்கு 8000 கோடி இவர்களால் சேரும் பணம். இது எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டுமே.

BDS, MDS, BHMS, BAMS, BPT, MPT, D Pharm, B Pharm, M Pharm, B.Sc, PBC, GNM, M.Sc (Nursing)போன்ற பிற படிப்புகளுக்கு ரூ.3-8 லட்சம் வரை வாங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இது இங்கே கணக்கில் சேர்க்கப்படவில்லை.

பொறியியல் கல்விக்கு இந்தியா முழுவதும் ஏறத்தாழ 15 லட்சம் இடங்கள். 3350 பொறியியல் கல்லூரிகள். தமிழகத்தில் மட்டும் 2.36 லட்சம் இடங்கள். ஆந்திராவில்தான் பொறியியல் கல்லூரிகளும் இடங்களும் மிக அதிகம்-3.40 லட்சம் இடங்கள்.

இவர்களில் 20% பேர் நிச்சயமாக மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்பவர்கள்-சுமார் 3 லட்சம் இடங்கள். ஓர் இடத்திற்கு ரூ.3 லட்சம் சராசரி என்றால், ரூ.90000 கோடி.

நிர்வாகத்துறை, பிபிஏ, பிஎம்எஸ்-மொத்தம் 1,50,000 இடங்கள். நல்ல நிறுவனங்களைப் பற்றி மட்டுமே இங்குப் பேசுகிறோம். 20% மேனேஜ்மெண்ட் கோட்டா. ஒரு சீட்டுக்கு ரூ. 2 லட்சம். மொத்தம் ரூ.600 கோடி,

மேற்பட்டப்படிப்பு-எம்டி, எம்எஸ்-இவற்றிற்கு 11000 இடங்கள் உள்ளன, 300க்கு மேற்பட்ட கல்லூரிகள் இவற்றை நடத்துகின்றன.

இவற்றில் சேர்பவர்களில் 50 விழுக்காடு அகிலஇந்தியக் கோட்டா, 25 விழுக்காடு மாநிலக் கோட்டா. மீதமுள்ள 25% 2800 இடங்கள். சராசரி 1 கோடி ஒரு சீட்டுக்கு விலை வைத்தாலும் 2800 கோடி. மாநில, மத்திய கோட்டாக்களும் அரசியல் வாதிகளால் விற்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்தது. அதைப் பற்றியும் இங்கே பேசவில்லை.

நிர்வாகம்-எம்பிஏ-2 லட்சம் இடங்கள். எம்பிஏ படிப்பில் 80% இடங்கள் அவ்வளவாகப் பிரபலமாகாத கல்லூரிகளில் இருக்கின்றன. என்றாலும் இவற்றிலும் குறைந்தது இரண்டுலட்சரூபாய் கட்டணம் வசூலிக்கவேபடுகிறது.

ஐஐஎம்(IIMs-Indian Institute of Managements)களில். 20000 இடங்கள் உள்ளன. இவற்றில் டொனேஷன் கிடையாது, கட்டணம் பிறவற்றை விட அதிகம். பிற 20000 இடங்கள், இவற்றுக்கு நிகரான நிறுவனங்களில் உள்ளன. 8-20 லட்சம் ரூபாய்க்கு ஓர் இடம் வீதம் விற்கப்படுகின்றன. சராசரி 10 லட்சம் ஒரு சீட்டுக்கு அன்பளிப்பு என்றாலும் 2000கோடி.

இப்போது மொத்தத்தைக் கூட்டிப் பார்ப்போம்.

ஜூனியர் கேஜி-15000 கோடி

பதினொன்றாம் வகுப்பு-10000 கோடி

எம்பிபிஎஸ்-9000 கோடி

பிஇ/பிடெக்-9000 கோடி

நிர்வாகம்-2600 கோடி

மருத்துவம்-2800 கோடி

ஆக மொத்தம் 48400 கோடி

இது இந்திய ஜிடிபியின் அளவில் 0.8%.

இது மனிதவள மேம்பாட்டுத் துறைக்குச் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 73,5% (2013-14) சென்ற ஆண்டு மனித வள மேம்பாட்டுத் துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ. 65867 கோடி.

மேலும் பல படிப்புகளிலும் அன்பளிப்பும் தலைக்கூலியும் உண்டு. அவற்றை இங்கே நாம் சேர்க்கவில்லை.

சரி, இந்தப் பணமெல்லாம் எங்கே போகிறது?

அதிகாரபூர்வமாக கல்வி நிறுவனங்கள் வாங்கும் அன்பளிப்புகளுக்கோ தலைக்கூலிப் பணத்துக்கோ கணக்குக் கிடையாது (இது முற்றிலும் கருப்புப்பணம்). ஆகவே அரசாங்கத்தின் வருமானத்திலோ கணக்கிலோ அதிகாரபூர்வமாக இந்தப்பணம் என்பதே கிடையாது.

கல்வித்துறையில் மட்டும் உருவாகும் கருப்புப் பணம் இது.

நமது கல்வித்துறை எப்படி வளர்ச்சியடைகிறது என்பதை இதுவரை எந்த அரசாங்கமும் கண்காணிக்காமல் விட்டது, நம் இந்திய சமூகத்தின் பெரும்பகுதிக்கு எப்படித் தீங்கிழைக்கிறது என்பதைக் காணலாம்.

இந்தப்போக்கு இந்திய சமூகத்தில் தாறுமாறான விலகல்களை, ஏறுமாறுகளை, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது, இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்குத் தீங்கும் ஏற்படுகிறது. முக்கியமான ஏறுமாறுகள் சிலவற்றைக் காண்போம்.

1. வரி ஏய்ப்பு-இந்தப் பெரும் பணத்திற்கு இந்திய அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்படுவதில்லை. இந்தியப் பொருளாதாரம் முழுவதுமே கருப்புப் பணம் நிறைந்ததுதான். ஆனால் இந்தக் கல்வித்துறை அன்பளிப்புகள், எதிர்காலத் தலைமுறையின்மீது மிகுந்த சீர்கேடுகளை ஏற்படுத்தக்கூடிய கருப்புப் பணம் உருவாக்கும் எந்திரம்.

2. ஒழுங்கான இடைவெளிகளில் (ஆண்டுதோறும்…) தனிமனிதர்களிடமிருந்து வாங்கப்படும் பணம் சிலரது கைகளில் குவிகிறது. தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி அளிக்கவேண்டுமென்பது மத்தியதர வகுப்பினரின் கவலை. எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் தங்கள் எதிர்காலச் சேமிப்பிலிருந்து அன்பளிப்பாகக் கொடுத்து, பலவேறு கல்விநிறுவனங்களில் இடம்பெறத் தயாராக இருக்கிறார்கள்,

3. இந்தப் பணம் ரியல் எஸ்டேட்டில் குவிக்கப்படுகிறது. தேர்தல்களுக்குச் செலவிடப்படுகிறது. அல்லது வெளிநாட்டு வங்கிகளில் சேமிக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் ஓர் ஆக்கமற்ற துறை. வளர்ச்சியற்ற துறை. (வாங்கிப்போட்டால் அவ்வளவுதான். தொழிற்சாலைகள் போல ஆக்கம், விளைவு, உற்பத்தி போன்றவை கிடையாது.) இது மட்டுமல்ல, செயற்கையாக இது நிலங்களின் விலைகளை ஏற்றி அங்கும் விலைவாசி உயர்வையும் செயற்கையாக ஏற்படுத்தி, பணவீக்கம், பணவிலகல் உருவாகும் நிலையை ஏற்படுத்துகிறது.

வெளிநாடுகளுக்கு இந்தப் பணம் சென்றாலோ, இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மாறாக, அந்தந்த வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு இது உதவிசெய்கிறது. இந்தியா ஏழைநாடாக இருக்கும்போது, நாம் ஸ்விட்சர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வளர்ச்சிக்கு உதவிசெய்ய வேண்டுமா?

5. படிப்புக்குச் செலவிடும் பணத்தை மாணவர்கள் ஒரு முதலீடாக நினைக்கிறார்கள். இதுதான் மிகப் பெரிய பாதிப்பு. இந்த முதலீட்டை எப்படியாவது உடனடியாக (பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பே) எடுத்துவிடவேண்டுமென்று நினைக்கிறார்கள். இது ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கமற்ற செயல்களை உருவாக்குகிறது. எப்படியாவது போட்ட பணத்தை எடுத்துவிடவேண்டுமென்று, உதாரணமாக ஒரு கட்டடக்கலைப் பொறியாளர் என்றால், அதிகக் கட்டணம் வசூலித்தல், லஞ்சம் வாங்குதல் போன்றவை நிகழ்கின்றன. (இதன் விளைவை இப்போதுகூட நாம் சென்னையில் இடிந்து விழுந்த இரண்டு பலமாடிக் கட்டடக் குடியிருப்புகளில் கண்டோம்.)

இன்று மருத்துவத்துறை முற்றிலும் இப்படித்தான் இயங்குகிறது. கட்டுப்பாடற்ற, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த முடியாத மாஃபியா கும்பல்.

6. பணத்தைக் கொடுத்துவிட்டால் மாணவன், பட்டம் என்பது தனக்குக் கட்டாயம் கிடைக்கவேண்டிய ஒன்று, தான் படித்துவாங்கவேண்டியது என்று நினைப்பதில்லை. பணம் கட்டியாயிற்று, ஆகவே மூன்றாண்டுகளோ, நான்காண்டுகளோ போனால் நமக்கு வேலை கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை. அதனால் ஆசிரியர்களும் ஒழுங்காகச் சொல்லித்தருவதில்லை, மாணவர்களோ படிப்பதேயில்லை. இப்படிப்பட்ட நிலையில் கல்வித் தரம் எங்கிருக்கும்? கல்வி கேள்விக்குறியாகிறது.

7. இந்தக் கருப்புப் பணத்தில் ஓரளவு பங்குவர்த்தகத்திலும் (ஷேர் மார்க்கெட்), சந்தைப்பொருள் வர்த்தகத்திலும் (கமாடிட்டி மார்க்கெட்) முதலீடு செய்யப்படுகிறது. நம் நாட்டின் சந்தைப்பொருள் வர்த்தகம்தான் முக்கியமாக உணவுப்பொருள்களின் விலையேற்றத்துக்குக் காரணமானது. உணவுப்பொருள்களைச் சட்டத்துக்குப் புறம்பாகக் குவித்துவைப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் உணவுப்பொருள்களில் திடீர் திடீரென்று விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. நாம் வெங்காயம் இந்த மாதம் ரூ.100 கிலோ விற்கிறதே என்று கவலைப்படுகிறோம், சிலமாதங்களில் ரூ.20க்கும் வந்துவிடுகிறது. இவையாவும் மிக நுணுக்கமான அரசியல் ஆதரவுடனே செய்யப்படுகின்றன.

8. இந்தப் பணம், இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் பணத்தில் ஏறத்தாழ 73.5 என்று முன்பே சொன்னோம். இந்தப் பணத்தை ஒரே ஒரு ஆண்டுக்கு மட்டும் அடிப்படைக் கல்வித்துறையில் (பிரைமரி அல்லது பேசிக் கல்வி) செலவிட்டால், இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் நல்ல வசதியுள்ள அடிப்படைக் கல்வி நிறுவனங்களைத் திறந்து நடத்த முடியும்.

அரசாங்கத்தின் கடமைகள்:

indhiyaavil-kalviyin-nilai5
1. மனிதவள மேம்பாட்டுத்துறை-இந்தக் கொள்ளையை எப்படி நிறுத்துவது என்பதை இந்தத் துறைதான் யோசிக்கவேண்டும். கல்வியை முன்னேற்றவும், தரமான போதனையை அளிக்கவும் கல்வித்தரத்தை உயர்த்தவும் எப்படி கொள்கைகளை உருவாக்கி ஆற்றலை நெறிப்படுத்துவது என்பது பற்றி இவர்கள் சிந்தித்தால் நல்லது. குறிப்பாக முற்றிலும் தனியார் மயமாகிவிட்ட கல்வியைச் சற்றேயாவது சரிப்படுத்தியே ஆக வேண்டும். இப்போதே நம் கல்வி வெறும் மனப்பாடக் கல்வியாகி, ஆக்கபூர்வமான சிந்தனையை உருவாக்காமல் சந்தி சிரிக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு இருக்கும் சிந்தனையறிவுகூட இங்கே பட்டம் வாங்கியவர்களுக்கு இருப்பதில்லை.

2. உடல்நல அமைச்சகம்-வெகுமக்களுக்கு நல்லமருத்துவத்தை அளிக்கும் விதமாக டாக்டர்களின் கொள்ளை மாஃபியாவை எப்படித் தடுப்பது, சுற்றுச்சூழலை எப்படி மேம்படுத்துவது என்பதுபற்றி இவர்கள் சிந்திக்கவேண்டும்.

3. நிதி அமைச்சகம்-மனிதவள அமைச்சகம், உடல்நல அமைச்சகம் இவற்றால் எதுவும் செய்ய இயலாவிட்டால் குறைந்தபட்சம் நிதி அமைச்சகம் இந்தக் கொள்ளையை அதிகாரபூர்வமாக்கி அதன்மீது வரியை விதிக்கவாவது செய்யட்டும். 33% கார்ப்பரேட் வரி என்றால், வருடத்துக்கு ரூ.16,000 கோடி வரி கிடைக்கும். இதனைக் கல்வித் துறை மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்.

4. பிரதமர் அமைச்சரகம்-நரேந்திர மோடியோ அல்லது வேறு எவரோ, யார் பிரதமராக இருந்தாலும் அவருக்கு இந்தநிலை தலைவலிதான். இந்த ஒன்றை மட்டும் கட்டுப்படுத்தினாலே (எப்படி என்று தம் ஐஏஎஸ் அதிகாரிகளையெல்லாம் வைத்து மண்டையை உடைத்துக்கொள்ளட்டும்) சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பல ஏற்றத்தாழ்வுகளையும் சீரின்மைகளையும் கட்டுப்படுத்தலாம்.


தமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா? ஒரு பாமரனின் எண்ணங்கள்

thamil-desiyam3

கல்லூரியில் படிக்கும் காலத்தில் (1960களின் இடைப்பகுதி) எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் திராவிட தேசியம்தான். அப்போது தமிழ்த் தேசியம் என்ற தொடர் இப்போதுள்ள அர்த்தத்தில் வழக்கில் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கட்சி என்ற ஒன்றை ஈ.வெ.கி.சம்பத் தொடங்கியபோது நாங்கள் மகிழ்ச்சிதான் அடைந்தோம். காரணம், அவர் ஒரு நேர்மையான தலைவர் என்பது எங்கள் கணிப்பு.  திராவிடநாடு இல்லை என்பது கொஞ்ச நாளிலேயே தெரிந்துவிட்ட பிறகு, தமிழ்நாடுதான் எங்கள் சிந்தனையில் முதன்மையான அக்கறையாக நின்றது. தமிழ் நாட்டில் உள்ள அனைவரும்-ஜாதி வேறுபாடின்றிப் படிக்கவேண்டும், முன்னேற வேண்டும், தமிழகம் தொழில்வளர்ச்சி கொண்ட, எல்லாரும் வேலை வாய்ப்புப் பெறுகின்ற ஒரு நாடாகத் திகழவேண்டும், தமிழ்நாட்டில் வறுமை இருக்கலாகாது என்பது போன்ற ஆசைகள்தான் இருந்தன.

ஏறத்தாழ 1970 வாக்கில் சிப்காட் திட்டங்கள் தொடங்கப்பட்டன. பெரிய, சிறிய தொழிலகங்கள் கொண்ட அகன்ற நிலப்பகுதிகளில் வந்த தொழிற்பேட்டைகள் அவை. பெரும்பாலும் தமிழ்நாட்டு எல்லைகளிலேதான் சிப்காட்டுகள் அமைக்கப்பட்டன. உதாரணமாக இராணிப்பேட்டை (ஆந்திர எல்லை), ஓசூர் (கருநாடக எல்லை) போன்ற இடங்கள். பிஎச்இஎல் போன்றவற்றின் புதிய தொழிற்பேட்டைகளும் அப்படித்தான். ஏன் எல்லைப்புறங்களில் அமைக்கிறார்கள் இவற்றை என்று எங்களுக்குக் கவலையாக இருந்தது. அயல்மாநிலக்காரர்கள் பிழைக்கவேண்டும் என்பதற்காகவே தமிழகஅரசு தொழில்துறை நடத்துகிறதா?

அந்தக் காலத்திலேயே வேலூர் சிஎம்சி மருத்துவமனை மலையாளிகள் கையில் இருந்தது. சென்னையின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை. தென்சென்னை பணக்காரர்கள் வாழும் இடம் என்றும், வடசென்னை ஏழைகள் வாழும் இடம் என்பதும் பொதுவான கருத்து. வடசென்னையில் தமிழர்கள்தான் ஏழைகளாக, கூலிகளாக, மீன்பிடிப்பவர்களாக என்றெல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் வாழும் பகுதிகள் இன்றும் சேரிகளாக இருக்கின்றன. ஆனால் வட சென்னையில் இன்றும் தம்புசெட்டித்தெரு, லிங்கிசெட்டித்தெரு போன்றவற்றிற்குச் சென்று பாருங்கள். வடநாட்டு சேட்டுகளும், மார்வாடிகளும், குஜராத்திகளும், பிறவட மாநிலங்களின் பணக்காரர்களும் மட்டுமே கொழிக்கும் இடம் அது.

இவர்களைத் தவிர, ஏற்கெனவே நான் சொல்லி வருகிற மாதிரி, தமிழகம் ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்ததால்,இங்கு ஊருக்கு ஊர் தெலுங்கர்கள், கன்னடர்கள் வாழ்கிறார்கள். மலையாளிகளின் வரவு பழங்காலத்தில் குறைவுதான். டீக்கடை என்றாலே நாயர் என்பது பிரசித்தம். அங்கங்கே மலையாள ஜோசியர்கள், மந்திரவாதிகள் இருப்பார்கள். இப்போது எழுபது வருடங்களாகத்தான் கேரளத்தின் பெரிய படையெடுப்பு. முதலில் சினிமாத்துறை, பிறகு பார்த்தால் எத்தனை கேரள நகைக்கடைகள், எத்தனை முத்தூட், மணப்புரம் அடகுக்கடைகள், எவ்வளவு நிறுவனங்கள் அவர்களிடம்? இதுபோலச் சென்னையில் இருக்கும் தெலுங்குச் செட்டிகளின் கடைகளைக் கணக்கெடுத்துப் பாருங்கள். இன்று தமிழ்நாட்டின் பொருளாதாரம் தமிழர்களிடம் இல்லை. மலையாளிகளிடமும் தெலுங்கர்களிடமும் வடநாட்டவர்களிடமும் சிக்கியிருக்கிறது. இது ஒரு புறம்.

thamil-naagarigam2

இப்போது தமிழ் தேசியத்திற்கு வருவோம். தேசம் என்பது சமூகவியலில் ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் கொண்ட ஓர் இனம் வாழும் நாடு என்று சொல்லப்படுகிறது. இப்போது தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலை உண்டா? தமிழ்நாட்டில் பூர்விகக் காலத்திலிருந்து வாழும் தமிழர்கள் மட்டுமே இருக்கவேண்டும், வந்தேறியவர்களெல்லாம் சென்றுவிட வேண்டும் என்று சொல்லமுடியுமா? தமிழ் தேசியம் பேசுவதில் தலையாய பிரச்சினை இதுதான். இதேபோன்ற பிரச்சினை வேறுவடிவத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்ற போது ஏற்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை மட்டும் பிரித்துக்கொண்டு பாகிஸ்தானாகப்- புதிய நாடாக மாற்றினார்கள். அங்கிருந்த இந்துக்களையும் சீக்கியர்களையும் கொடுமைப்படுத்தித் துரத்தினார்கள். ஆனால் இந்தியாவிலிருந்து நாம் முஸ்லிம்களை அப்படிக் கொடுமைப்படுத்தித் துரத்தியிருக்க முடியமா? அவர்கள்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஊருக்கு ஊர் இருக்கிறார்களே? எங்கள் நாடு எங்கள் மொழி இதுதான் என்று சொந்தம் கொண்டாடுபவர்களை என்னதான் செய்வது?

thamil-desiyam1
இந்தப் பிரச்சினைக்குத்தான் காந்தி உயிரையும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரே இனம் வாழும் நாடு (பாகிஸ்தான் போன்றவை) பிழைத்துக் கொள்வது எளிது. பல இனங்கள் வாழும் தேசம் (இந்தியா), பலவற்றில் விட்டுக் கொடுத்துத்தான் போகவேண்டியிருக்கிறது. இதுதான் அன்றிலிருந்து இன்றுவரை நிலைமை. இதேநிலைதான் வேறுவடிவத்தில் தமிழகத்தில் இருக்கிறது. இங்கு இனம் என்பதை மதம் என்று அர்த்தப்படுத்தாமல், பிற திராவிட மொழிகள் பேசும் மக்கள் என்று கொண்டு பாருங்கள். கன்னட நாட்டில் பெங்களூர், மைசூர் தவிர கிராமப்புறங்களில் தமிழர்கள் இல்லை. இருப்பினும் மிகமிகச் சிறுபான்மை. ஆந்திர நாட்டிலும் அப்படித்தான். கேரளத்திலும் அப்படித்தான். அதனால்தான் காவிரிப்பிரச்சினை ஒருசமயம் சூடானபோது, தமிழர்களைக் கன்னட நாட்டிலிருந்து பத்தாண்டுகளுக்கு முன்பு (பாகிஸ்தான் இந்தியர்களைச் செய்ததுபோல) அடித்துத் துரத்தினார்கள். ஆனால் தமிழகத்தில் ஊருக்கு ஊர் இவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள். ஆகவே “பல இனங்கள் வாழும் தேசம் பலவற்றில் விட்டுக்கொடுத்துத்தான் போகவேண்டியிருக்கிறது. இதுதான் அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தின் நிலை.”

தமிழ்தேசியம் தனித்தமிழ் இயக்கத்திலிருந்தும் திராவிட இயக்கத்திலிருந்தும் தோன்றியது என்று விக்கிபீடியா முதலான அண்மைக்காலப் பதிவுகள் வரை குறிப்பிடுகின்றன. திராவிட இயக்கத்தின் சுயநல நோக்கம் முன்பே பதிவு செய்யப்பட்டது. தனித்தமிழ் இயக்கம் என்பது சாத்தியமா?

thamil-naagarigam1

தமிழ்த் தேசியம் என்ற சொல்லில் இருக்கும் தேசம் என்ற சொல்லே வடமொழிச்சொல்தான். வடமொழிக் கலப்பு ஆதிகாலத்திலிருந்து, நமது ஆதிநூலான தொல்காப்பியத்திலிருந்து இருக்கிறது. தொல்காப்பியம் செய்யுள் எழுதுவதற்கான சொற்களில் ஒன்றாக வடசொல்லைக் குறிப்பிடுகிறது. அவ்வாறானால் அந்த அளவு வடமொழியாளர்கள் தமிழகத்தில் பழங்காலத்திலேயே கலந்துவிட்டார்கள் என்பதுதானே அர்த்தம்?

ஆனால், பிற திராவிடமொழிகளின் தனித்தன்மை வடமொழியால் அழிந்து போன மாதிரி தமிழின் தனித்தன்மை அழியவில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால் இன்று தனித்தமிழைக் கையாள முடியாது.

முதல் காரணம், உலகத்தின் அறிவுப்பெருக்கம், ஒரு மணிக்கு ஆயிரக்கணக்கான சொற்களின், தொடர்களின் தேவையை வேண்டி நிற்கிறது. தனித் தமிழ்வாதிகள், ஆயிரம் நாட்களுக்கு ஒரு சொல்வீதம் தமிழில் சேர்க்கிறார்கள். அது பெரும்பாலும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை, அல்லது ஏற்கப்படப் பலகாலம் ஆகிறது. மொழியின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடை தனித்தமிழ். தொல்காப்பியரே, இளங்கோவடிகளே, சங்கப்புலவர்களே தனித் தமிழைக் கையாளவில்லை, வடமொழிக் கலப்பை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்?

மொழிக்கு அடிப்படை தொடர் அமைப்பே தவிரச் சொற்கள் அல்ல என்பது மொழியியல் கற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் தனித்தமிழ் இயக்கம் தொடரமைப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சொற்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது.

thamil-desiyam2
இதை விளக்க ஓர் உதாரணம் சொல்லலாம். “உடுது துரடத்தைக் கருண்டது”* என்று நான் ஒரு “மடத்தனமான” தொடரை உருவாக்குகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பொருள் புரியவில்லை என்றாலும் தமிழ்த்தொடரின் அமைப்பில் இந்த மூன்று சொற்களும் உள்ளன என்று சொல்லிவிடுவீர்கள். காரணம் என்ன? முதல் சொல்லில் வரும் து-விகுதி, இறுதிச் சொல்லில் வரும் து-விகுதியோடு பொருந்தி ஏதோ அஃறிணை எழுவாய் “உடுது” என்பதான தோற்றத்தை உருவாக்குகிறது. இரண்டாவது சொல்லில் வரும் இரண்டாம் வேற்றுமைக்கான ஐ-விகுதியும், புணர்ச்சி வல்லொற்றும் (க்), தமிழுக்கே உரியவை. இரண்டாம் வேற்றுமைக்குப் பின் வல்லெழுத்து மிகும். மூன்றாவது சொல், ஓர் அஃறிணை வினைமுற்று போன்று காட்சியளிக்கிறது. (கருண்டது என்பது சுருண்டது என்பதுபோல இருக்கிறது.) ஆக, இந்த வாக்கியத்திற்குச் சொல்லளவில் பொருள் இல்லையென்றாலும், தொடரமைப்பு தமிழ் என்று உங்களுக்குப் புரிந்துவிடும். மொழி என்பது இம் மாதிரி, தொடரமைப்பில் உள்ளதே அன்றி சொற்களில் அல்ல. (இங்கு கையாளப்பட்ட மூன்று சொற்களுக்கும் அர்த்தமே இல்லை.) அதனால்தான் இடைக்காலத்தில் வெறும் சமஸ்கிருதச் சொற்களை இட்டு, ஆனால் தமிழின் வாக்கிய அமைப்பில் மணிப்பிரவாளம் என்ற ஒரு தனிநடையை உருவாக்க முடிந்தது.

இன்று நம்மிடையே முஸ்லிம்கள், கிறித்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெயரெல்லாம் வட எழுத்துகள் மிகுதியாகக் கொண்டவையாக உள்ளன. வட எழுத்துகளை விலக்கவேண்டாம், சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவற்றுக்கு மட்டும் கிரந்த வடிவங்கள் (ஜ, ஷ, ஹ, ஸ, க்ஷ) தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவற்றை விலக்கமுடியாது.

ஜார்ஜ் என்பதை சார்ச்சு என்று எழுதினால் கேலிக்கூத்துதான். நான் என் “பத்திரிகை தலையங்கம்” என்ற நூலில் இருபதாண்டுகளுக்கு முன்பே காட்டிய உதாரணம் போல, ரஷீத் என்பதை கிரந்த எழுத்துகளை நீக்கி எழுதினால் “இரசீது” என்றாகும். சொல் முக்கியமா, அர்த்தம் முக்கியமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். தனித்தமிழ் அர்த்தத்தைவிடச் சொற்களை முதன்மையாகக் கருதுகிறது.

நாட்டார் வழக்காறுகளிலும் வடசொற்கள் சேர்ந்துதான் இருக்கின்றன. அவற்றை விலக்க முடியாது. அதுபோலத்தான் தமிழகத்தில் சேர்ந்துவிட்ட பிற மாநில, பிற மொழிக்காரர்களையும் விலக்குவது சாத்தியமல்ல. நாம் செய்ய வேண்டியது, தமிழர்களை, தமிழ்மொழியை முன்னேற்றவேண்டும் என்பதைத் தான்.

தமிழகம் இன்று தனி நாடாவதும் இயலாது. “நாடா வளத்தன நாடு” என்றார் வள்ளுவர். இது தேசத்திற்கான அவரது வரையறை. ஒரு நாட்டில் பெரும்பாலும் எல்லா வளமும் இருக்க வேண்டும். தண்ணீர் முதலாக எல்லாவற்றிற்கும் பிறரிடம் கையேந்தும் நாம் (பிறரை) நாடாத வளம் கொண்டவர்களாக எப்படி இருக்க முடியும்?

இது உலகமயமாக்கல் காலம். அமெரிக்கக் கம்பெனிகள் நம் சிற்றூர்களில் வந்து கிளைகள் திறக்கின்றன. பொருளாதாரப் பிரதேசங்கள் (எகனாமிக் சோன்ஸ்) என்ற பெயரில் நிலங்கள் அயல்நாட்டவர்க்கும், அயல் மாநிலத்த வர்க்கும் எவ்வளவோ தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டன. மீதி இருக்கும் நிலம், விவசாயத்துக்கும் வேண்டாம், நிலத்தடி நீருக்கும் வேண்டாம் என்று “நகர்”களாக “பிளாட்” போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டின் தமிழர் அமைப்புகள் அரசுமயமாக்கப்படுகின்றன. (உதாரணம், பச்சையப்பன் அறக்கட்டளை, அண்ணாமலைச் செட்டியார் நிறுவனங்கள்). ஆனால் தமிழை அறவே அகற்றும், வெறுக்கும் தனியாரது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் முதலியன தமிழ்நாட்டு அரசினாலேயே வரவேற்கப்படுகின்றன.

இந்த லட்சணத்தில் என்னய்யா தமிழ்த் தேசியம்? இவற்றையெல்லாம் மாற்றுவதற்கான போராட்டங்களை உருவாக்கத்தான் தமிழ் தேசியம் பேசுகிறோம் என்றால், போராட்டக் காலங்கள் முடிந்து விட்டன. ஆனானப்பட்ட மார்க்சியர்களே (பொதுவுடைமைக்காரர்களே) பெரிய அளவிலான தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்களை இனிமேல் நடத்தமுடியுமா என்று கவலைப்படுகிறார்கள். அவரவர் வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டுமே போராட்டம் நடத்திப் பிழைக்கவேண்டிய காலமாக இது மாறிவிட்டது. வயிற்றுப் பிழைப்புக்காகப் படிக்கும் மொழியையே தன் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறான் தமிழன். ஆங்கிலத்தையே தாய்மொழியாக ஏற்றுக்கொண்டால் என்ன என்று என்னிடம் எத்தனையோ ஆங்கிலப் பேராசிரியர்கள் சண்டை போட்டிருக்கிறார்கள்.

மக்கள் ஒன்றாக இருந்தால் மிக எளிதில் தீர்த்துவிடக்கூடிய தமிழ்நாட்டுப் பிரச்சினைகள்கூட இன்று பிரம்மாண்ட உருவெடுத்து மத்திய அரசிடம் கையேந்தும் (அல்லது “கடிதம்” ஏந்தும்) பிரச்சினைகளாக மாறிவிட்டன. முல்லைப் பெரியாறு, காவிரிநீர், மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு போன்ற அனைத்தும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால் மிக எளிதில் தீர்க்கக்கூடியவை. இம்மாதிரிப் பிரச்சினைகளில் அயல் மாநிலங்களில் நடிகர்கள்கூடப் பங்கேற்று மக்களுக்கு உற்சாகம் அளிக்கிறார்கள். ஆனால் வாய்-வயிறு போராட்டத்தைத் தாண்டிச் சிந்திக்கும் தமிழ்மக்கள், இம்மாதிரிப் பொதுப் பிரச்சினைகளுக்குக் குரல் எழுப்பிப் போராடக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் எங்கிருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இங்கு காலங்காலமாக வாழும் தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் இந்த நாட்டின் மூலவளங்களை அனுபவிப்பதற்கு மட்டுமே தயாராக இருக்கிறார்களே தவிரப் போராடுவதற்குத் தயாராக இல்லை. அது தான் நமக்கும் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது.

thamil-desiyam4
இன்று தமிழகம் தன்னளவில் மட்டுமே ஒரு தேசமாக வாழும் பண்பை இழந்துவிட்டது. தனித் தமிழ்நாட்டினால் தீர்க்கமுடியாத ஏராளமான சிக்கல்கள் இன்று உள்ளன.

அவ்வாறானால் இனி நாம் செய்யக்கூடியது என்ன? அமெரிக்காவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருக்கின்றன. ஆனால் அவை தன்னாட்சி பெற்றவை. (நமது தமிழ்ச் சிந்தனையின்படி “மாநில சுயாட்சி” பெற்றவை.) அமெரிக்கா சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கு மட்டுமே வாஷிங்டனின் வெள்ளை மாளிகை அரசியல். பிற யாவும், அந்தந்த மாநிலங்களினால் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன. இம்மாதிரி மாநிலசுயாட்சி இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தேவை. இந்தியாவுக்குப் பொதுவான இராணுவம், அயலகத்துறை, பொதுப்பொருளாதாரம், நதிகள் உட்பட்ட நில-நீர் அமைப்புகள், கல்வி போன்றவை மைய அரசிடம் இருக்கலாம், பிறதுறைகள் யாவும் மாநில அரசுகளிடமே இருக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும்,

பிற மாநிலங்களுக்கோ, மைய அரசுக்கோ தொடர்பு கொள்ளுதல் இந்த எந்திர (மொழிபெயர்ப்பு)க் காலத்தில் ஒரு பெரிய விஷயமே அல்ல. இதற்குக் கூடப் பயன்படாவிட்டால் மொழிபெயர்ப்புத் துறைதான் எதற்கு?

நாம் சுதந்திரம் பெற்றபோதே இங்கிலாந்தின் அரசியல் அமைப்பையும் நீதிமுறை அமைப்பையும் ஏற்றுப் பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை வி.ஆர். கிருஷ்ணய்யர் உட்பட்ட சிந்தனையாளர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளின் ஃபெடரல் அமைப்பினை ஏற்றிருந்தால் இந்தியாவின் பிரச்சினைகள் எத்தனையோ எளிதாகத் தீர்ந்தி ருக்கும்.

இப்போதே சர்வதேச அளவிலான புள்ளிவிவரங்கள் தமிழ் அழிகின்ற மொழி என்றுதான் குறிப்பிடுகின்றன. மேற்கண்டமாதிரிச் சில அடிப்படை மாற்றங்களைச் செய்தால் எதிர்காலத்தில் தமிழ்நாடு வாழும், தமிழ்மொழி வாழும் என்று எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் சந்தேகந்தான்.


பறக்கின்றன பட்டங்கள்!

parakkindrana-pattangal1

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம். திருச்சியில் கல்லூரி வாழ்க்கை. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம். எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள். “மாவீரன் நெப்போலியனே வருக”. எப்போது பிரெஞ்சு மாவீரன் நெப்போ லியன் உயிர்த்தெழுந்தார் என்று எனக்குச் சந்தேகம். என் மாணவர்கள் என் அறியாமையைக் கண்டு சிரித்தார்கள். “சார்இந்த நெப்போலியன் நடிகர். நம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர். இந்த ஆண்டு விழாவுக்கு செயின்ட் ஜோசப் கல்லூரியில் அவரை அழைத்திருக்கிறார்கள்.” நான் கேட்டேன், “இவர் நடிகர்தானேஎப்படி மாவீரன் ஆனார்?” வீரனாக நடிப்பவனெல்லாம் மாவீரனாவள்ளலாக நடித்தால் வள்ளலாசெத்துப் போவதாக ஒருவன் நடித்தால் உண்மையிலேயே செத்துப்போய்விட்டானாஇதுகூடப் புரியாமலா படம் பார்க்கிறார்கள்?தொழுநோயாளியாக ஒருவன் நடித்தால் உண்மையிலேயே தொழுநோயாளியா அவன்நடிப்புக்கும் நிஜ வாழ்க்கைக்கும் என்னதான் சம்பந்தம்?

ஆனால் இப்படித்தான் அரசியல்வாதிகளும், நடிகர்களும் தங்கள் பிம்பத்தைக் கட்டுகிறார்கள். போலியை நிஜம் என்று நம்பவைக்கிறார்கள்.

மிகைப்படுத்தல் நம் வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் ஊறிக்கிடக்கிறது. (தமிழர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம் என்பது இதற்கு ஒரு காரணம்.) இல்லாவிட்டால் வெள்ளைத்தோல் இருந்ததாலேயே நம் நாட்டுக்குள் நுழைந்த ஆங்கிலேயர் பிரெஞ்சுக்காரர் போன்றவர்களை துரை என்று அழைத்திருப்பார்களா?அவர்களுக்கு அடிமைப்பட்டிருப்பார்களாசாதாரணப்

பூசாரிகளைக் கூட சாமி என்று அழைப்பவர்கள்தானே நாம்?

பொது அரங்கில் தோன்றி விட்டால் சாதாரணமானவர்களைக்கூட மிகப்பெரிய அடைமொழிகள் தந்து அழைப்பது அதனால்தான் சாத்தியமாகிறது. மேடையில் அமர்ந்திருப்பவர் ஓரிரு கவிதைகள் எழுதியிருப்பார். வரவேற்பவர் கூசாமல் அவரைத் தமிழ்நாட்டின் மாபெரும் கவிஞர்எழுத்தாளர் என்பார். மேடையில் மட்டும்தான் என்றல்ல,பத்திரிகைகளும் இதற்குத் துணைபோகின்றன. அடுத்த நாள் செய்தி வெளியிடும் உள்ளூர் செய்தித்தாள் மாபெரும் கவிஞர் இன்னார் ….தலைமை தாங்கினார் என்றே செய்தி வெளியிடும். பிறகு அவரே எல்லா இடங்களிலும் அதைப் போட்டுக் கொள்வார்.

இப்படித்தான் ஒருகாலத்தில் டாக்டர் என்ற பட்டத்தைக் (கௌரவத்திற்காக அளிக்கப்படுவது) கொஞ்சமும் படிக்காதவர்களெல்லாம் போட்டுக்கொண்டு சிரிப்பாய்ச் சிரித்தது. அரசியல்வாதிகளும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்களும் எவ்விதத் தகுதியும் இல்லாமல் டாக்டர் என்று தங்கள் பெயருக்கு முன்னால் கூசாமல் போட்டுக்கொள்வதைப் பார்த்ததனால்ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் முனைவர் என்றே தங்களை அழைத்துக்கொள்ளலானார்கள். (நல்லவேளைஇதில் மருத்துவத்தொழில் சார்ந்தவர்களைச் சேர்த்துக் குழப்ப வில்லை.)

நல்ல கவிதைகளே எழுத அறியாத ஒருவர் தன்னைப் பெருங்கவிக்கோ என்று தானே அழைத்துக்கொண்டது மிக நன்றாக எனக்குத் தெரியும். கூசாமல் தன் நூல்களிலும் அப்படியே போட்டுக் கொள்வார். பிறகு எல்லாரும் அப்படியே அவரை அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

திரைப்பட நடிகர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. எனக்கு ஏற்படும் வியப்புயார் இந்த அடைமொழிகளை எப்போது தருகிறார்கள் என்பதுதான். திடீர் திடீரெனப் பட்டங்கள். அடைமொழிகள் சேர்க்கப்பட்டு விடுகின்றன. உதாரணமாகஎந்தப் படத்திலிருந்துதான் வைகைப் புயல்,இளைய தளபதி போன்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டனஒருவேளை இவர்களின் இரசிகர் மன்றங்களைக் கேட்டால் தெரியவரும் போலும். ஏன் சேர்க்கிறார்கள்என்ன பலன் இவர்களுக்கு என்பதெல்லாம் என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு எளிதில் புரிவதில்லை.

ஒருவேளை நடிகர்களும் அரசியல்வாதிகளும் (முன்பு உதாரணம் காட்டிய கவிஞரைப்போலத்) தாங்களே சொல்லி ஏற்பாடு செய்து இம்மாதிரி பட்டங் களையும் அடைமொழிகளையும் போடச்செய்கிறார்கள் என்றுதான் தோன்று கிறது. அவரவர்களுக்கு என எழுதப்படும் திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போதும் (சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்..உலகநாயகனே….) அந்தந்தப் பட்டப்பெயராலே நடத்தப்படும் தொலைக் காட்சிச் சேனல்களைப் (கேப்டன் டிவி…) பார்க்கும்போதும் இது ஊர்சிதமாகிறது.

இந்த வியாதி அநேகமாகத் திரைப்படங்களில் சிவாஜி கணேசன்எம்.ஜி.ஆர். காலத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. அரசியலில் எம்.ஜி.ஆரின் காலத்திலிருந்து என்று உறுதியாகவே சொல்லலாம். ஏறத்தாழ 1968-70 காலம் வரை அநேகமாக எம்.ஜி.ஆரின் எல்லாத் திரைப்படங்களிலும் புரட்சி நடிகர் என்ற அடை மொழியை மட்டுமே காணலாம். பிறகு திடீரெனப் புற்றீசல்போலபுரட்சித் தலைவர்மக்கள் திலகம்,பொன்மனச் செம்மல்கொடை வள்ளல் இப்படிப் பெருகிப்போயின. நல்ல வேளையாக சிவாஜி கணேசனுக்கு இப்படிப் பெருக வில்லை. நடிகர் திலகம் ஒன்றுதான் நிலைத்தது.

parakkindrana-pattangal6

புரட்சித்தலைவர்புரட்சித்தலைவி இதெல்லாம் பழையவை. இதுவே சிந்திக்கும் மனத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாகத்தான் இருக்கும். எந்தப் புரட்சியை இவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள்எந்தப் புரட்சியைப் பற்றியாவது குறைந்தபட்சம் படித்தாவது இருப்பார்களா?புரட்சி என்றால் படித்தவர்களுக்கு ரஷ்யப் புரட்சிசீனப்புரட்சி,பிரெஞ்சுப்புரட்சி என்றுதான் நினைவுக்கு வரும். பட்டம் தருபவர்களுக்கோ (பெறுபவர்களுக்கும்தான்) சாரதாஸ் புரட்சிஜெயச் சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் புரட்சிலலிதாஸ் ஜுவல்லரி புரட்சிக்குமேல் மனக் கண்முன் தோன்றாது என்று நினைக்கிறேன். இன்று போடப்படும் பட்டங்கள்,அடைமொழிகளைப் பார்த்தால் கேலிக்கூத்தாக இருக்கிறது.

parakkindrana-pattangal3

காதல் இளவரசன்சூப்பர் ஸ்டார்இயக்குநர் சிகரம் என்றெல்லாம் பட்டங்கள் சந்தி சிரிக்கின்றன. உலகின் மிகச் சிறந்த கலைத் திரைப்படங்களை எடுத்த இங்மார் பெர்க்மன்அகிரா குரோசேவா,ஃபெலினிஅவ்வளவு ஏன்சார்லி சாப்லின் முதல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வரைஇன்றைய சிறந்த இயக்குநர்கள் வரை-இவர்களைப் போன்றவர்களையெல்லாம் இயக்குநர் சிகரங்கள் என்று யாரும் போட்டதில்லை. (அவர்களும் போடச் சொன்னதில்லை). இதற்குமேல் கேப்டன்தளபதிஇளைய தளபதி என்றெல்லாம் வேறு. எந்தப் படைக்கு அல்லது (குறைந்தபட்சம்) விளையாட்டு அணிக்குத் தலைமை தாங்கினார் இந்தக் கேப்டன்எந்தப் படைக்குத் தலைமை தாங்கி தளபதிஇளைய தளபதி ஆனார்கள் இவர்கள்சொந்தப் பெயர்களே மறைந்துபோகும் அளவுக்கு இந்தப் பட்டங்கள் ஆட்சி செய்கின்றன.

parakkindrana-pattangal5

இதைவிடக் கொடுமைஅன்னைதாய்அம்மா போன்ற பொதுப் பெயர்களும் கலைஞர் போன்ற சிறப்பு அடைமொழிகளும் பட்டங்களாக மாற்றப்படுவது. என் நண்பர் ஒருவர் இலயோலா கல்லூரியிலிருந்து வெளியிடப்பட்ட சிலம்பு என்ற பத்திரிகையில ஒருமுறை எழுதினார். “ஆழமான கருத்துகள் இல்லாமல் அலங்கார வார்த்தைகளோடும் அணிகளோடும் ஒருவர் பேசினால் அவரில் பலர் மயங்கிவிடுகின்றனர். கீழ்த்தட்டு மக்களிடம் ரொம்பவும் இயல்பாக உள்ள அழகியல் கூறுகளின் வெளிப்பாடுதான் அலங்கார வார்த்தைகளும் அணிகளும் ஆகும்.

parakkindrana-pattangal4

உதாரணமாகவிஜயகாந்த் சண்டைபோடும்போதுவில்லனை சும்மா தோசைமாதிரி புரட்டியெடுக்கிறானுல்ல என்று இயல்பாக வெளிப்படும் வார்த்தைகள்தான் இலாபம் சம்பாதிக்க முயலும் ஊடகங்களால் புரட்சிக் கலைஞர் என்று மாற்றப்படுகிறது.” இரண்டு இடங்களிலும் கோளாறு. புரட்டியெடுக்கிறான் என்று பாராட்டும் நம் சாதாரண மக்களுக்கு புரட்டியெடுப்பதும்புரட்டப் படுவதும் நடிப்பு என்று தெரியாமல் போனதென்னஅடுத்த கோளாறுஇந்தப் பாராட்டை அடைமொழியாக மாற்றும் ஊடகங்கள்,நடிகர்கள்இரசிகர் மன்றங்கள்… (இன்னும் வேறு யார் யார்?)

அந்த நண்பரே மேலும் சொன்னார்: “போலித்தன்மைகளைப் பலநிலைகளில் கொண்ட மனித அனுபவமானது,சினிமா நாயகர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் பேச்சிலுள்ள அப்பட்டமான போலித்தன்மைகளோடு கைகுலுக்கிக் கொள்கிறதோ என்று தோன்றுகிறது.” மெய்யாகவே இருக்கலாம். ஆனால் இந்தத் தன்மை ஏன் தமிழ்நாட்டுக்கு மட்டும் (சில சந்தர்ப்பங்களில் இந்தியா முழுமைக் கும்) சொந்தமாகப் போனதுஏன் பக்கத்திலுள்ள ஈழத்தில்கூட இந்தத் தன்மை இல்லைபோலித்தனம் என்பதென்ன தமிழனுக்கு மட்டும் தனிச்சொத்தா?

நமது நிலவுடைமைசார்ந்த அடிமை மனப்பான்மை இதற்குக் காரணம் என்றும் தோன்றுகிறது. கீழ்சாதிக்காரன் மேல்சாதிக்காரனைச் சாமி என்று கும்பிடுவதற்கும்இடுப்பில் துண்டைக் கட்டி நடப்பதற்கும் இதுதான் காரணம். கீழ்சாதியினரிடம் மட்டுமல்லதமிழர் எல்லாரிடமுமே இந்த மனப்பான்மை இருக்கிறது. இல்லாவிட்டால் சாதாரணமாக நீதிபதி அல்லது நடுவர் என்று அழைக்கப்பட வேண்டியவர் நீதியரசர் ஆவானேன்எல்லாரையும் அரசராகவும் அரசியாகவும் மந்திரியாகவும் பார்த்தே நமக்குப் பழக்கம். அரசாங்கச் சேவை (அதாவது மக்கள் சேவை) யிலிருக்கும் ஒருவரைக்கூட அரசர் என்று தூக்கிவைத்தால் அப்புறம் என்ன இருக்கிறது?

அரசியல்திரைப்படம் இவற்றிற்கு அடுத்தபடியாக மக்கள் மிகவும் உயரத்தில் வைத்துப் பார்ப்பது கிரிக்கெட் நாயகர்களை. கிரிக்கெட் ஒரு சூதாட்டம். (அன்றைக்கும்தான்இன்றைக்கும்தான். இது ஏதோ ஐபிஎல் காரணமாக ஏற்பட்ட வியாதி அல்ல. அந்தக் காலத்தில் சரியாகப் பந்தை அடிக்காமல் கவாஸ்கர் போன்ற கட்டைபோட்ட நாயகர்களே காசுவாங்கிவிட்டு அப்படிச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. பலபேர் மீது வழக்கும் உண்டு.) பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறுவது தெரியாமல்கிரிக்கெட் நாயகர்களைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடுவது கேலிக் கூத்து.

தலைமை வழிபாட்டை உருவாக்கும் பெருவியாதி பட்டங்களையும் அடைமொழி களையும் சேர்ப்பது. அரசியல்வாதிகளாக இருந்தாலும் அவர்கள் நம்மால்நம் சேவைக்காகச் சில ஆண்டுகள் பதவியில் வைக்கப்படுபவர்கள். (பிரதமர் மோடியாக இருந்தாலும் சரிஉள்ளூர்க் கவுன்சிலராக இருந்தாலும் சரி.) அதிகாரிகள் என்றால் மக்களுக்குப் பணிசெய்ய (ஆங்கிலத்தில் கவுரவமாக சிவில் சர்வீஸ்பப்ளிக் சர்வீஸ் என்று சொல்லிக்கொள்வார்கள்) ஏற்பட்டவர்கள். (யூனியன் அல்லது ஸ்டேட்) பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி வேலைக்கு வந்தவர்கள் வேலையில் சேர்ந்தவுடனே பப்ளிக்கை மறந்துபோவது நம் நாட்டின் துரதிருஷ்டம்.

இந்தத் தலைமை வழிபாட்டினால்தான் எங்கு பார்த்தாலும் லஞ்சமும் ஊழலும் தாண்டவமாடுகின்றன. தொழிலைக் குறித்த அடைமொழிகளைச் சேர்ப்பதில் தவறில்லை. பிரதமர் மன்மோகன்பொறியாளர் நமச்சிவாயம்மின்வாரியத் தலைவர் சிவராமன் என்பதுபோல. ஆனால் மக்கள் நாயகன் பொறியாளர் நமச்சிவாயம் என்று சேர்க்காதீர்கள். அங்குதான் ஏற்படுகிறது தவறு. இனி மேலாவது இந்த நிலை மாறினால் நன்றாக இருக்கும். (மாறுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.) படித்தவர்களுக்கும்ஊடகங்களுக்கும்செய்தித் தாள்களைச் சேர்ந்தவர்களுக்கும்திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். யாராக இருந்தாலும்தயவுசெய்து யாருக்கு முன்னும் எந்த அடைமொழியையும்பட்டத்தையும் சேர்க்காதீர்கள்.


மொழிப்பிரச்சினை-ஒரு நோக்கு

mozhippirachchanai-3
இந்தியா பலமொழிகள் பேசப்படும் ஒரு தேசம் என்கிறார்கள். (இந்தக் கூற்று சற்றே விவாதிக்கப்பட வேண்டியது.) ஒரு தேசம் என்பதற்கு ஒரு மொழிஒரு கலாச்சாரம்ஓர் இனம் என்பது அடிப்படைத் தேவை. இந்தியாவிலோ பல மொழிகள்பல கலாச்சாரங்கள்பல இனங்கள். வேண்டுமானால்பல கலாச்சாரங்கள் சேர்ந்த ஒரு நாடாக (தேசமாக அல்ல) அமைந்தது இந்தியா என்று கூறலாம். தேசம் என்பதை “நேஷன்” என்போம்நாடு என்பதை “கண்ட்ரி” என்போம். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. உதாரணமாகசிலப்பதிகாரக் காலத்தில்சேரநாடு இருந்தது,சோழநாடு இருந்ததுபாண்டியநாடு இருந்தது. ஆனால் இவையனைத்தும் சேர்ந்தது தமிழ் தேசம்‘. இந்தக் கருத்து சிலப்பதிகாரக் காப்பியத்தில் உள்ளதனால்தான் அதை தேசியக் காப்பியம் என்கிறார்கள்.

இந்தியா ஒரு தேசம் என்று ஏற்காவிட்டாலும்கூடபழங்காலத்திலிருந்தே அருகருகில் இருப்பதன் காரணமாகஒரு மொழி பேசுபவர்கள்இன்னாரு மொழி பேசுபவரிடம் கலந்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயம் மிகப் பழங்காலத்திலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது. இன்னும்கேட்டால் காலப்போக்கில் மிகுதியாகியிருக்கிறது. இந்தியாவில் அரசியலமைப்புப்படி ஆட்சிமொழிகளாகப் பதினெட்டு மொழிகளும் சாகித்திய அகாதெமியின் அங்கீகாரப்படி இலக்கிய வளமுள்ள மொழிகளாக இருபத்திரண்டு மொழிகளும் ஏற்கப்பட்டுள்ளன.

இன்று இந்தியாவில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு-நதிப்பிரச்சினைவேலை வாய்ப்புப் பிரச்சினைவளர்ச்சிப் பிரச்சினை போன்ற பலவற்றிற்கு அடிப்படை மொழிப்பிரச்சினை. பெல்காம் மராட்டியர்களுக்குச் சொந்தமானதா,கன்னடர்களுக்குச் சொந்தமானதா போன்ற இடப்பிரச்சினைகள் உட்படப் பலவற்றிற்கும் அதுதான் காரணம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து போன்ற ஒரே மொழி பேசப்படுகின்ற நாடுகளில்கூடஅவர்கள் தங்கள் தேவைக்கேற்ப பிரெஞ்சுஜெர்மன்லத்தீன்கிரேக்கம் போன்ற பல மொழிகளைப் பயிலுகிறார்கள். இருபத்திரண்டு மொழிகள் இருக்கின்ற நம் நாட்டில் பிறமொழிகளைப் பற்றிய அறிவு எவ்வளவு இன்றியமையாதது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவே இந்தியர் ஒவ்வொருவருக்கும் மூன்று நான்கு மொழியறிவு இருப்பது நன்மையே தரும். அவற்றை முறையாகப் படிப்பதும் நல்லதுதான்.

பலமொழியறிவு வேலைவாய்ப்புக்கு மட்டுமல்லபண்பாட்டு வளர்ச்சிக்கும் பரந்த மனப்பான்மைக்கும் பிறரைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் அவசியம். தன் ஊருக்குள்ளாகவே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவனுக்கும்அதே ஊரில் பிறந்தாலும் பலமொழியறிவு பெற்றவனுக்கும்அந்த ஊரிலிருந்து பலவேறு பிரதேசங்களுக்கும்அயல்நாடுகளுக்கும் சென்று சுற்றிவந்தவனுக்கும் நிச்சயமாகப் பண்பாட்டு நோக்கில் பாரதூரமான வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒரு மொழியறிவு என்பது மொழியை அறிவது மட்டுமல்ல,ஒரு கலாச்சாரத்தையும்பண்பாட்டையும் புரியவைப்பது அது. மற்றொருவித வாழ்க்கை முறையைச் சொல்லித் தருவதுமற்றவன் ஏன் நம்மைவிட வேறுபட்டு இருக்கிறான்வாழ்க்கை நடத்துகிறான்வேறுபட்டுச் சிந்திக்கிறான். அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லித் தருவது.

ஆகவே என்னைப் பொறுத்தவரை தமிழர்கள் நான்கு மொழிகளேனும் கற்கவேண்டும் என்று பரிந்துரை செய்வேன். அது அவரவர் தேவைக்கும் தொழிலுக்கும் ஏற்ப அமையலாம். உதாரணமாகதமிழில் பக்தி இலக்கியத்தைச் சொல்லித் தருகின்ற ஒரு பேராசிரியர்தமிழுடன் ஆங்கிலம்சமஸ்கிருதம்இந்தி ஆகிய மூன்றையும் படிப்பது பயனுடையதாக இருக்கும். நவீன சமூகவியல் தத்துவக் கருத்துகளைக் கற்றுத்தரும் பேராசிரியராக இருந்தால் பிரெஞ்சுஜெர்மன் படிப்பது பயனுடையது. திருச்சியில் ஜாபர்ஷா தெரு முழுவதும் செயற்கைக் கற்கள் உற்பத்தியும் வியாபாரமும் நடப்பது எனக்குத் தெரியும். அவர்கள் வியாபாரத்துக்கென சூரத்,பம்பாய் என்று அலைபவர்கள். அவர்களுக்கு மராட்டிகுஜராத்தி தெரிந்தால் நல்லது. எதுவுமே இல்லைநான் விவசாயி என்பவன்கூட சமஸ்கிருதத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது நல்லது. மனத்தை விரிவுபடுத்த பலமொழிக்கல்வி ஒரு பயனுள்ள சாதனம்.

ஆனால் இங்கே ஒரு தெளிவைச் சொல்லிவிட வேண்டும். எத்தனை மொழிகள் படித்தாலும்முதலில் தாய்மொழியே முதன்மையானது. தாய்மொழி வழிக்கல்விதான் உண்மையான படைப்பாற்றலையும் கண்டுபிடிப்பறிவையும் ஆக்கசக்தியையும் உருவாக்கக்கூடியது. இது இன்று சரிவர இல்லாததனால்தான் தமிழ்நாட்டில் வெறும் மனப்பாடப் பொம்மைகள் உருவாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து இருநூற்றுக்கு ஆயிரத்துநூற்றுத் தொண்ணூறுக்கு மேல் மதிப்பெண் வாங்கி வெளிவருபவர்களையும் பார்க்கிறோம். ஒரு பதினைந்து இருபதாண்டுகளாகப் படித்து வெளியில்வந்த மாணவர் கணக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி மதிப்பெண் வாங்கியவர்களெல்லாம் வெறும் வயிற்றுப் பிழைப்புப் பொறியியலாளர்களாகவும் மருத்துவர்களாகவும் ஆனதன்றி வேறு என்ன ஆனார்கள்இதுவே போதும்இதற்குமேல் சமூகம் வேண்டாம்,நாடு வேண்டாம்இனம் வேண்டாம்படைப்பாற்றல் வேண்டாம் என்று தமிழ் நாட்டவர் நினைப்பதனால்தான் ஆங்கிலத்துக்கு முதன்மையும்மனப்பாடக் கல்விமுறையும் நடைமுறையாகிவிட்டன.

mozhippirachchanai-4
இன்னொரு தெளிவையும் சொல்லவேண்டும். பல மொழிகள் கற்பது ஆரோக்கியமானது. ஆனால் பிறமொழிகள் ஓர் இனத்தின்மீது ஆதிக்கம் செய்ய விடலாகாது. இந்தியைக் கற்கவேண்டும் என்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஒன்றுஅது தமிழைவிட மேம்பட்டது என்ற கருத்து உருவாகக்கூடாதுஅது தேசியமொழி என்று கூறக்கூடாது. இரண்டாவதுதாய்மொழியைத் தவிர வேறு எந்தமொழியைக் கற்பதும் தன்ஆர்வத்தினால் (வாலண்டரியாக) இருக்க வேண்டுமே தவிரக் கட்டாயமாக்கக்கூடாது.

mozhippirachchanai-5
வடமாநிலத்தவர்கள்-குறிப்பாக மையமாநிலத்தவர்கள் எனப்படுவோர் (மத்தியப்பிரதேசம்ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம்பிஹார் போன்றவை இதில் அடங்கும்) இந்தியை மட்டும் படித்தால் போதும்தாங்கள் வேறு எந்த மொழியையும் உள்படப் படிக்கமாட்டோம் என்கிறார்கள். இந்த மனப்பான்மைதான் பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. இந்தியா ஒரே தேசமாம்ஆனால் உ.பி.க்காரன் ஒரே மொழிதான் படிப்பானாம்ஆனால் தமிழ்நாட்டுக்காரன் தாய்மொழியாகத் தமிழ்வேலைக்காக ஆங்கிலம்தேசபாஷை என்பதற்காக இந்தி,வேலைக்காக இன்னும் ஏதாவது ஒரு மொழி என்று படிக்கவேண்டுமாம். ஏன் இந்த வேற்றுமைபாரபட்சம்?தமிழன் இந்தி படித்தால்இந்திக்காரன் நான்கில் ஒரு தென்னாட்டு மொழியாவது படிக்கட்டுமேஆந்திராக்காரன் வங்காளி படித்தால்வங்காளத்தவன் மலையாளமாவது படிக்கட்டுமேஇன்று லக்னோவில் இருப்பவன் இந்தியில்-தன் தாய்மொழியில்-ஐஏஎஸ் எழுதி எளிதில் வெற்றி பெறமுடியும். ஆனால் தமிழன் ஆங்கிலத்திலோ,இந்தியிலோ எழுதியாக வேண்டும். இரண்டுமே அவனுக்குத் தாய்மொழியல்லபிறமொழிகள்.

மும்மொழித்திட்டம் என்பதை நடைமுறைப்படுத்தினால்இந்தியா முழுவதும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு சில மாநிலங்களில் ஒரு மொழி படித்தால் போதும்இன்னும் சில மாநிலங்களில் இருமொழி படித்தால் போதும்வேறுசிலவற்றில் மூன்று மொழிகள் படிக்கவேண்டும் என்பது சரியான முறை அன்று. இதற்குக் கல்வி மத்தியஅரசின் பொறுப்பில் இருக்கவேண்டும். மாநில அரசு இதில் தலையிடக்கூடாது. ஒரு மலையாளி மலையாளம்இந்திஆங்கிலம் என மூன்று மொழி படித்தால்ஒரு மத்தியப்பிரதேசக்காரனும் இந்தி,ஆங்கிலம்தென்னாட்டு மொழி ஒன்று என மூன்றுமொழிகள் படிக்கவேண்டும். கண்டிப்பாக வடக்கிலுள்ளவர்களுக்குத் தென்னகத்து மொழி ஒன்று கற்பிக்கப்பட வேண்டும். தெற்கில் இருப்பவர்கள் இந்தியோ,வேறு எந்த வட மாநிலத்து மொழியோ ஒன்று கண்டிப்பாகக் கற்கவேண்டும்.

இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. மூன்று தலைமுறைகளுக்குமேல் ஒரு பகுதியில் தங்கினால் அந்தப் பகுதியின் மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டியதும் அவசியம். மூன்று தலைமுறைகள் என்பது ஏறத்தாழ நூறாண்டுகள். உதாரணமாகமூன்று தலைமுறைக்கு மேல் நிலையாக மைசூரிலோ பெங்களூரிலோ நிலையாகத் தங்கி வீடுவாசலோடு வாழும் தமிழர்கள் கன்னடத்தைத்தான் தாய்மொழியாகக் கொள்ளவேண்டும். பம்பாயில் ஐந்து தலைமுறையாக வாழும் பிஹார்க்காரன்மராட்டியையே தன் தாய்மொழி எனக் கற்கவேண்டும்,குறிப்பிட வேண்டும். இதில் போய்ப்போய் வருபவர்கள் (floating population) பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நிலையான சொத்து-பழைய காலச் சொற்படி ஸ்தாவர ஆஸ்தி என்பதின்றி அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் பணிக்காக அலைபவர்களை இதில் சேர்க்கத் தேவையில்லை. ஒரு தமிழன் அசாமுக்குப் போய் அரசுப்பணி செய்யலாம். அவன் தன் பணிக்காலம் முழுவதையும் அங்கே கழிததுவிட்டுபிறகு தமிழகத்திற்குத் திரும்பிவந்தால் அவனை அசாமிப் பட்டியலில் சேர்க்கமுடியுமாஆனால் அங்கேயே வீடு வாங்கி,பிள்ளைகளுக்கும் அங்கேயே வேலைவாங்கிக்கொடுத்துஅங்கேயே நிலையாகத் தங்கிஅவன் தலைமுறையினர் அங்கு வாழத்தொடங்கினால் அவர்களை அசாமியர்களாகவே கருதவேண்டும்.

இன்றைய மக்கள் கணக்கெடுப்பு முறையில் இந்தக் கணக்கீட்டைச் செய்வது எளியது. இது தேசிய இனப்பிரச்சினைச் சவாலுக்கு ஒரு தீர்வாகவும் அமையும்.


மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள்

marabanu
மரபணுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரித்த உணவுப்பொருள்கள்-காய்கறிகள், கீரைகள், கிழங்குகள் முதலியன நம்நாட்டில் எவ்வித எதிர்ப்புமின்றி நுழைந்துவிட்டன. இவற்றைக் கேள்வி கேட்க ஆளில்லை. நாம் தினந்தோறும் வேலையுடனும், பசியுடனும், உழைப்புடனும், ஊழல்போன்ற மோசமான சமூக நிலைகளுடனுமே போராடிக்கொண்டிருக்கும்போது இதில் எப்படிக் கவனம் செலுத்தமுடிகிறது? மேலும் உணவுப்பொருள்களின் விலைகளும் ஏறிக்கொண்டே செல்கின்றன.

இந்த ஆண்டு பணவீக்கம் மிக அதிகமாகச் சென்றதற்கு வெங்காய விலைதான் காரணம் என்கிறார் நிதியமைச்சர், ஆனால் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தான் இல்லை. இம்மாதிரி நிலைமைகளின் மத்தியில் வாழுகின்ற மத்தியதர வர்க்கத்தினர், மரபணுப் பொறியியலில் உருவான உணவா? அல்லது இயற்கையாக உருவான உணவா? என்பதில் எல்லாம் என்ன அக்கறை காட்டப்போகிறார்கள்?

இந்த நம்பிக்கையில் தான் மரபணுத் தொழில் நுட்பக் குழுமங்கள் செயற்கை உணவுப்பொருள்களைத் தயாரித்து நம்மிடையில் சந்தடியில்லாமல் விடுகின்றன. இவற்றால் எவ்வளவோ பாதிப்புகள் நிகழலாம். இவற்றை நாம் கேள்வி கேட்டுத்தான் ஆகவேண்டும்.

maramapnu-stil-2
உதாரணமாகக் காலங்காலமாகப் பழங்கள் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் இப்போது மரபணு மாற்றத்தால் உருவான ஆப்பிள்கள், பப்பாளிகள், மாதுளைகள் போன்றவை தான் கிடைக்கின்றன. (சிலசமயம், இயற்கைப் பழங்களோடும் சேர்த்து, இரண்டு வகையான பழங்கள் கடைகளில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.) சென்னை, பெங்களூர் முதலாகச் சிறுநகரங்கள் வரை ரிலையன்ஸ், மோர் போன்ற பெருங்குழுமங்கள் நடத்தும் கடைகளில் இப்படிச் செயற்கையாகத் தயாரான பழங்கள் மட்டுமே கிடைக்கின்றன. (உங்களுக்கு எப்படி சார் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம், அதற்கு பதில் சொல்வதற்கு முன், இப்படி எந்த வித லேபிலும் இன்றி-இது இயற்கையா, செயற்கையா என்ற அறிவிப்புக்கூட இன்றி, விற்பதுதான் இலாபம் கொள்ளையடிக்கும் பெருங்குழுமங்களுடைய வேலை என்பதைச் சொல்லிவிடுவோம்.

maramapnu-stil-3
வழக்கமாக நான் பப்பாளிப்பழம் சாப்பிடுபவன். அதில் கரிய நிறமுள்ள விதைகள் மிகுதியாக உள்ளே இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் சிலகாலமாக நான் வாங்கி உண்ணும் பப்பாளிகளில் விதைகளே இருப்பதில்லை. வெறுமையாக இருக்கும் உட்கூடு. விசாரித்த பிறகுதான் தெரிந்தது – இது செயற்கைப் பப்பாளி என்று. இதுபோலத்தான், சிவப்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதே, இதுதான் நல்ல ஆப்பிள் என்று நம்பி வாங்கிவிடாதீர்கள்.

மரபணுப் பொறியியல் என்றால் என்னஅது எவ்விதம் செய்யப்படுகிறது?

ஒரு மீனைத் தக்காளியுடனோ, அந்துப்பூச்சியுடன் கோழிக்குஞ்சையோ ஒரு விவசாயி கலப்பின வளர்ப்புச் (ஒட்டுச்) செய்வதாகக் கற்பனை செய்யுங்கள். அபத்தமான சிந்தனையாக இருக்கிறதே என்கிறீர்களா? இது இயலாதது என்று நமக்குத் தெரியும், காரணம் இயற்கை இதை அனுமதிப்பதில்லை. ஆனால் இன்று மரபணுப் பொறியியலாளர்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஓர் உயிரியின் பாரம்பரிய வரைபட வார்ப்பினை மாற்றுவதன் வாயிலாக.

maramapnu-stil-4
மரபணுப் பொறியியலுக்கு 25 வயதுதான் ஆகிறது. வாழும் உயிரிகளின் டிஎன்ஏ அல்லது பாரம்பரிய அமைப்பை மாற்ற விஞ்ஞானிகளை அனுமதிக்கிறது இந்தத் தொழில்நுட்பம். அவர்கள் டிஎன்ஏவின் இழைகளையோ, ஓர் உயிரியின் டிஎன்ஏ விலிருந்து குறித்த மரபணுக்களையோ வெட்டவும், முழுமையாகத் தொடர்பே அற்ற வேறொரு உயிரியின் டிஎன்ஏ -வுக்குள் அவற்றை ஒட்டவும் செய்கிறார்கள். மனிதன், விலங்குகள், பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சணங்கள், தாவரங்கள் போன்ற முழுமையாக வேறுபட்ட இனங்களிலிருந்து மரபணுக்களைக் கலப்படம் செய்யும் இந்த முறைக்குப் பலவேறு பெயர்கள் உண்டு-நவீன உயிர்த்தொழில் நுட்பம், மரணுத் தொழில்நுட்பம், மரபணு மாற்றம், மரபுக்குறுக்கீட்டு மறுசேர்க்கைத் தொழில்நுட்பம். மரபணுக்களின் அடுக்கினைக் கலைத்துப்போட்டு இதுவரை இல்லாத புதிய உயிரிகளைப் படைக்கும் செயலாக இது சொல்லப்படுகிறது. இப்படித்தான் நாம் பழங்களில் மீனின் மரபணுக்களையோ, தாவரங்களில் அல்லது வைரஸ்களில் பூச்சிகளின் மரபணுக்களையோ, மீன்களில் கோழியின் மரபணுக்களையோ, பன்றிகள் அல்லது ஆடுகளில் மனித மரபணுக்களையோ, பலவாறாகக் காண முடிகிறது.

maramapnu-stil-5
புதுச் செல்லில் படையெடுப்பற்கோ அல்லது மரபணுத் துப்பாக்கி மூலமாக மரபணுவைப் புதுச் செல்லில் செலுத்துவதற்கோ செய்கின்ற மாற்றம், ஒரு பாக்டீரியத்தை அல்லது  வைரஸை  மரபணுவுக்கு வாகனமாகப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. (இது உயிரியல் தொழில்நுட்பத் தொழில்துறையினர் செய்வதை அவ்வளவு துல்லியமாக எடுத்துரைப்பதல்ல. சுமாரான விவரிப்புதான்.) எந்த மரபணுப் பொறியியலாளரும் டிஎன்ஏவில் எங்கே புதிய மரபணு செருகப்படப் போகிறது என்பதைச் சொல்ல இயலாது. இது ஒரு குருட்டுத்தனமான, மாமரத்தின் கீழிருப்பவன், மாங்காய்க்குக் கல்லெறிவது போன்ற செயல். விழுந்தால் மாங்காய், விழாவிட்டால் கல்லோடு போயிற்று.

இடையில் ஒரு குறிப்பு-மரபணுப் பொறியியலுக்குள் நாம் செல்வதற்குமுன் டிஎன்ஏ என்றால் என்ன என்று சற்றே தெரிந்துகொள்வோம்.

டிஎன்ஏ: வாழ்வின் குறியமைப்பு:

ஒவ்வொரு தாவரமும், மனிதரும் அல்லது விலங்கும் ஒன்றிலிருந்து மற்றது வேறுபடுவதற்குக் காரணம், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான டிஎன்ஏ (டிஆக்ஸி ரிபோநியூக்ளியிக் அமிலம்) என்ற மரபணு வரைபடம் இருப்பதுதான். தன் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு உயிரியும் இதைப் பெறுகிறது. ஓர் உயிரி வளர்வதற்கும், செயல்படுவதற்கும் அல்லது வாழ்க்கையைக் காப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்குமான முழுமையான தகவல்களின் தொகுப்பு இது. இந்தத் தகவல்கள், நடைமுறையில் உடலின் எல்லாச் செல்களிலும் காணப்படுகிறது. டிஎன்ஏவின் பகுதிகளில்-மரபணு என்று சொல்லப்படுபவற்றில்-குறிகளாக அமைந்துள்ளன. பாரம்பரியத்தின் அலகுகளான இவையே ஓர் உயிரியின் எல்லாச் சிறப்புப் பண்புகளையும் நிர்ணயிக்கின்றன. காக்கையா அல்லது சிட்டுக்குருவியா, பூவின் நிறமா, அல்லது உங்கள் தோற்றமா-எல்லாம் நிர்ணயமாவது இவற்றினால்தான். மரபணுக்கள், புரோட்டீன்களை உருவாக்கவும் செய்கின்றன. புரோட்டீன்கள்தான் நம் வாழ்க்கையின் அடிப்படைப்பொருள். உடலைக் கட்டும் தசைகளுக்காக, நாளமுள்ள, நாளமற்ற சுரப்பி நீர்களுக்காக,  நமது ஆற்றல்நிலைகளைச் செயல்படுத்த, உடல் இயக்கங்களுக்காக, இன்னும் சிந்திப்பதற்காகக் கூட இப்படிப் பல காரணங்களுக்காக எல்லா உயிரிகளுக்கும் புரோட்டீன்கள் தேவை.

maramapnu-stil-6
ஆனால் டிஎன்ஏவைப் பற்றி மிகக் குறைவாக-அதன் செயல்பாடுகளில் 3.5% தான் தெரியும் என்று அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மீதியிருப்பது ஒதுக்கப்பட்ட பகுதி (ஜங்க் டிஎன்ஏ எனப்படும்.) மனித மரபணுத்தொகுதி எழுதியறியப்பட்ட போதிலும் எப்படி மரபணுக்கள் செயல்படுகின்றன, தமக்குள் இடைவினை புரிகின்றன என்பது பற்றிய பகுதி இதுதான்

மரபணுப்பொறியியல்மாற்ற உணவு என்றால் என்ன?

தாங்கள் பாடப்புத்தகத்தில் கற்றுக்கொண்டதை மரபணுப் பொறியியலாளர்கள் நாம் உண்ணும் உணவில் செயல்படுத்திப் பார்க்கிறார்கள். அந்த உணவுகளின் பண்புகளை மேம்படுத்துவதாக அல்லது முழுமைப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். உதாரணமாக, கடுங்குளிரைத் தாங்கமுடியாத தக்காளிகளை எடுத்துக் கொள்வோம். ஆர்க்டிக் நீரிலும் உயிர்பிழைத்திருக்கும் மீன்களையும் பாருங்கள். ஆர்க்டிக் குளிரைத் தாங்கக்கூடிய மரபணு ஒன்றைத் தட்டை மீன்களில் விஞ்ஞானிகள் கண்டனர். அந்த மீனிலிருந்து அந்த மரபணுவை மட்டும் வெட்டி, தக்காளியின் டிஎன்ஏவில் ஒட்டினார்கள்.

maramapnu-stil-7
இந்தப் புதிய தக்காளி கடுங்குளிரைத் தாங்க வல்லது. அதனால் நீண்டகால வளர்ச்சிப்பருவம் அதற்கு உண்டு. ஆனால் இந்த மரபணுப்பொறியியல்மாற்ற தக்காளியை நம்மால் சாதாரணத் தக்காளியிலிருந்து பிரித்துக் கண்டறிய முடியாது. மீன்களின் பக்கத் துடுப்புகளுடனோ செதில்களுடனோ தக்காளி வந்தால் அல்லவா நமக்குத் தெரியும்?

பல வாரங்களுக்கு அழுகாத, பூச்சிகளைத் தாங்கக்கூடிய தக்காளியைப் பாருங்கள். (பெங்களூர் தக்காளி என்று இதற்குப் பெயரிட்டிருக்கிறார்கள் கடைக்காரர்கள். நம் ஊர்த் தக்காளி, நாட்டுத்தக்காளியாம்.) களைக்கொல்லிகளையும், வைரஸ்களையும், பூஞ்சணத் தாக்குதல்களையும் தடுக்கக்கூடியவை இவை. அதேபோலப் பெரிய அளவில் உள்ள, பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருக்கக்கூடிய பழங்களையும் காய்களையும் பாருங்கள். விவசாயிகள், கப்பல்காரர்கள், உணவு விளைவிப்பவர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோர்க்கு இவ்வகைப் பண்புகள் பிடித்திருக்கின்றன. அவற்றால் அதிக இலாபம் பெறமுடியும். ஆனால் இவ்வகை உணவு நமக்கு நல்லதா என்பது முறறிலும் வேறு விடயம்.

உதாரணமாக, மரபணுப்பொறியியல்மாற்ற உணவுகள் பல வாரங்களாக ரிலையன்ஸ், ஹெரிடேஜ், மோர் போன்ற பெருங்கடை அலமாரிகளில் இருந்தபோதும், அவை புதியவை என்பது போலக் காட்சியளிக்கின்றன. நன்கு சிவப்பாகவும் புதியதாகவும் காணப்படும் அவற்றில் எந்த ஊட்டச்சத்தும் மிஞ்சியிருக்காது. அழுகவியலாத் தக்காளிகளில் பாக்டீரியாக்களின் மரபணுக்கள் உள்ளன. இவை எதிருயிரிகளுக்குத் தடுப்புச் சக்தியை அளிக்கின்ற

குளிர்தாங்கும் தக்காளிகளைச் செய்கிறார்களேஎப்படி?

maramapnu-stil-8
விஞ்ஞானிகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாவிலிருந்து மரபணுப் பொருள்களின் துணுக்குகளை எடுத்துக்கொள்கிறார்கள். இவற்றிற்கு ஊக்கி (புரோ மோட்டர்), பிளாஸ்மிட் என்று பெயர்கள். இவை ஓரினத்திலிருந்து (மீன் என்று வைத்துக்கொள்வோம்) மற்றோர் இனத்திற்கு (தக்காளிச் செடிக்கு) ஒரு மரபணுவை மாற்றுவதற்கு உதவும். வைரஸ்களும் பாக்டீரியாவும் மரபணுவைக் கடத்திச் சென்று தாவரத்தின் டிஎன்ஏவில் செருகுவதற்காகப் பயன்படும் கடத்திகள். (குறிப்பு: ஊக்கி (புரோமோட்டர்) என்பது, தாவரம் வெளிமரபணுவைத் தன் சொந்தமரபணுவாகக் கருதி ஏற்றுக்கொள்ள வைக்கும் தந்திரத்தைப் புரிகிறது. டிஎன்ஏவுக்குத் துணைக்கருவியாகச் செயல்படுகின்ற டிஎன்ஏவின் வட்டவடிவத் துணுக்கு, பிளாஸ்மிட்.

அக்ரோபாக்டீரியம் என்பது தாக்குதல்சக்தி வாய்ந்த பாக்டீரியம். இது தாவரங்களில் கழலைகளை ஏற்படுத்தும். பிளாஸ்மிக்குள் ஊக்கியும் குளிரெதிர்ப்பு மரபணுவும் செருகப்படுகின்றன. இந்தப் பிளாஸ்மிட், அக்ரோபாக்டீரியத் துக்குள் வைக்கப்படுகிறது. இந்தப் புதிய பிளாஸ்மிடுடன் சேர்ந்த புதிய பாக்டீரியம் மில்லியன்கள் கணக்கில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

ஒரு தட்டிலுள்ள தாவரசெல்களில் மேற்கண்ட அக்ரோபாக்டீரியா பற்றித் தொற்றிக் கொள்கின்றன. குளிரெதிர்ப்பு மரபணுவையும் ஊக்கியையும் (மற்றும், எதிருயிரித் தடுப்பு மரபணுவையும்) தாவர டிஎன்ஏவுக்கு மாற்றிவிடுகின்றன. தாவர செல் பிரியும் போது, ஒவ்வொரு தாவரசெல்லும் புதிய அந்நிய மரபணுக்களைப் பெறுகிறது. இவற்றில் ஒவ்வொன்றும் பின்னர் ஒரு முழுத்தக்காளிச் செடியாக வளர்க்கப்பட முடியும்.

வாசனை-ருசித் தக்காளி வகை ஒன்று 1994இல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும் குறைகள் இருந்தன. அது மிக மிருதுவாகவும் எளிதில் அடிபடக்கூடியதாகவும் இருந்தது. செடியும் உறுதியாக இல்லை. நுகர்வோர் அதன் விசித்திரமான உலோகச்சுவை பற்றிக் குறைகூறினார்கள். அதனால் 1994 இல் ஃபுளோரிடா மாகாணத்தில் அந்தத் தக்காளியின் முழு விளைச்சலும் பயன் இல்லாமல் போனது. கடைசியாகத் தோல்வி என ஒப்புக்கொள்ளப்பட்டு, கைவிடப்பட்டது.

அதேபோலப் பூச்சியெதிர்ப்புப் பருத்தி ஒன்று 1997 இல் அறிமுகமாயிற்று. இது தனக்குள்ளேயே பூச்சிக்கொல்லியை உருவாக்கிக்கொள்ளவல்லது. அமெரிக்க நாட்டில் இலட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டபோது, செடிகளிலிருந்து பருத்திப்பந்துகள் தானாகவே உதிர்ந்துவிட்டன. விவசாயிகள் அமெரிக்க அரசாங்கத்திடம் கேட்ட இழப்பீடு ஒரு மில்லியன் டாலரையும் தாண்டியது.

ஏன் இந்த மரபணுப்பொறியியல்மாற்ற பயிர்கள் முழுமை அடைய முடியாது?

மரபணுப்பொறியியல்மாற்ற உருவாக்கங்களின் உள்ளார்ந்த முக்கியக் குறை, அவற்றின் உருவமைப்பிலுள்ள நிலைத்தன்மையின்மை (இன்ஸ்டெபிலிடி). (இங்கிலாந்தின் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த) மரபியலாளர் டாக்டர். மே வான் ஹோ கருத்துப்படி, இம்மாதிரித் தாவரங்களின் மூலக்கூற்று மரபியல் தகவல்கள் எதுவும் நிலைத்தன்மையைக் காட்டவில்லை. செயற்கை மரபணுக் கட்டமைப்புகள் வேறு மரபணுப் பொருள்களுடனும், தவறான முறையில் உடையவும் சேரவுமான இயல்பைப் பெற்றுள்ளன என்று இதற்கு அர்த்தம். இதன் விளைவு, புதிய, முன் கணிக்கமுடியாத சேர்க்கைகள்.

மரபணு மாற்றிய மரபணு மாற்றப்பட்ட தாவரச்சேர்க்கைகளின் நிலையின்மை விஞ்ஞானிகளால் நன்கு அறியப்பட்ட ஒன்று. மமா தொழில்துறை இது ஒரு தொடரும் பிரச்சினை என்று ஒப்புக்கொள்கிறது. அடுத்தடுத்த சந்ததிகளில், இந்தத் தவறுகள் பெருக்கமடைகின்றன. நாம் விரும்பாத, தாறுமாறான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக எல்லா உயிர்களிலும் ஒன்றிசைந்து இருந்துவருகின்ற இயற்கையான, நிலைத்த மரபணுச் சேர்க்கைகளுக்கு இது முரணாக உள்ளது.

மரபணு மாற்றப்பட்ட தொழில் நுட்பம் எவ்வளவு சரியானது?                           

maramapnu-stil-9-300x123
மரபணுக்களைச் செருகும் முறைகள், முன்பே சொன்னதுபோல, வந்தால் சரி, போனால் போகட்டும் என்ற நிலையில்தான் உள்ளன. ஒருமுறை சரியான சேர்க்கையைப் பெற ஆயிரக்கணக்கான முறை போடவேண்டியுள்ளது. அப்படி வெற்றிபெறுபவையும் கட்டுப்பாடற்ற, எதிர்பாராத முடிவுகளைத் தருகின்றன. விஞ்ஞானிகள் முடிவுகளைக் கட்டுப்படுத்த இயலாத, முன்னுணர முடியாத நிலையில்தான் உள்ளனர். உதாரணமாக, வளர்ச்சி ஹார்மோன் ஒன்றின் மனித மரபணுவை எலிகளுக்குள் செலுத்தியபோது, மிகப்பெரிய எலிகள் உண்டாயின. அதே மரபணுவைப் பன்றிகளுக்குள் செலுத்திய போது மிகப் பெரிய பன்றிகள் உருவாகவில்லை, மாறாக, நோயுற்ற, வளர்ச்சி குன்றிய, மாறுகண் கொண்ட,  மலட்டுப் பன்றிகள்தான் கிடைத்தன.

ஏன் இப்படி?

டிஎன்ஏ, மரபணுக்கள் பற்றிய அறிவியலும் அவற்றின் பணிகளும் இன்னும் நன்கு தெளிவாகவில்லை. உயிர்த்தொழில்நுட்ப ஆதரவாளர்கள் சொல்வதைப் போலன்றி, அவர்கள் தொழில்நுட்பம் தவறான, காலத்துக்கொவ்வாத யூகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இடையில் ஒரு தகவல்: நாம் மரபுவழி வந்த நமது நாட்டு மக்காச் சோளத்தை உண்பதை அறவே விட்டுவிட்டோம். பெரிய நகரங்களில் அது கிடைப்பதே இல்லை. மாறாக, ஸ்வீட் கார்ன், பேபி கார்ன் போன்ற பெயர்களில் எல்லாம் இறக்குமதியான மரபணு மாற்றப்பட்ட சோளங்கள்தான் கிடைக்கின்றன. அவை எப்படிச் செய்யப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

உயிர்த்தொழில்நுட்பச் சோளத்தைச் செய்தல்:

சில பூச்சிகளுக்குக் கடுமையான விடமான ஒரு புரோட்டீனை உருவாக்குகின்ற பசிலஸ் துரிஞ்சியென்சிஸ் என்பதிலிருந்து விஞ்ஞானிகள் ஒரு மரபணுவைப் பிரிக்கின்றனர். இதை மாற்றியமைத்து, வேதிமுறையில் இதனை ஓர் எதிருயிரித் தடுப்பு மரபணுவில் இணைக்கின்றனர்.

இந்த மரபணுக்கள் மிகநுட்பமான 24 காரட் தங்கப் பொடியில் சேர்க்கப்பட்டு, கால்அளவு பிளாஸ்டிக் தட்டில் பரப்பப்படுகின்றன.

ஒரு வலைத்தடுப்பின்மீது இந்தத் தட்டு ஜீன் துப்பாக்கி ஒன்றினால் வீசப்படுகிறது. அப்போது மரபணுவைக் கடத்தும் துகள்கள் சென்று சோள செல்கள் அல்லது விதைக்கருக்கள் உள்ள தட்டின் மீது விழுகின்றன.

புதிய மரபணுக்கள் சில சோளச் செல்களுக்குள் சென்றுசேர்கின்றன. இவற்றைக் கண்டறிய, விஞ்ஞானிகள் இவற்றில் எதிருயிரித் தடுப்பு மரபணு கொண்டவற்றைத் தவிரப் பிற செல்களை அழித்துவிடும் எதிருயிரி ஒன்றைச் சேர்க்கின்றனர்.

இந்த மாறிய செல்கள் புதிய தாவரங்களாக முதிர்கின்றன. எல்லாச் செடிகளும் அல்ல இப்படிப்பட்ட ஒருசில செடிகளும் அவற்றின் சந்ததிகளும் பூச்சிக்கொல்லிப் புரொட்டீனை உற்பத்தி செய்கின்றன. இவற்றிலிருந்துதான் விதைகள் உருவாக்கப்பட்டு இப்போது நாம் விரும்பி உண்ணும் பேபிகார்ன், ஸ்வீட் கார்ன் போன்றவை உண்டாக்கப்படுகின்றன.

முன்பு மரபணு மாற்றப்பட்ட இணைப்புகள் தாறுமாறாக விளைவுகளை உண்டாக்குகின்றன என்று பார்த்தோம். அதற்குக் காரணம் என்ன?

“மரபணுக்கள் என்பவை எளிய குறியமைப்புகளை உடையவை, ஒரு குறித்த பண்புக்கு ஒரு மரபணுக்குறி மட்டுமே உண்டு” என்ற எளிமையான, குறுக்கல் வாதச்சிந்தனையின் விளைவு இது. ஓர் உயிரியின் டிஎன்ஏவை உடைத்து அதற்குள் ஓர் அந்நிய மரபணுவைச் செருகுதலாகிய செயல் எதிர்நோக்க இயலாத எதிர்பாராத விளைவுகளைக் கொண்ட வெடிப்புகளையும் மாற்றங்களையும் உண்டாக்குகிறது.

இயற்கையில், மரபணுக்கள் ஒன்றாக, ஒன்றுசேர்ந்து, ஒழுங்காகச் செயல்படுகின்றன, தங்களுக்குள்ளாகவும் ஒழுங்கமைப்பினாலும் பாதிக்கப்படுகின்றன. விஞ்ஞானிகள் நினைப்பதுபோல ஒரு மரபணு மட்டும் தனித்துச் செயல்படுவதில்லை. இந்த அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால், சோதனைகள் நோய்பட்ட பன்றிகள் அல்லது பச்சை சால்மன் மீன்கள் போன்ற தாறுமாறான முடிவுகளைத் தருவதுதான் தொடரும்.

மரபணுப்பொறியியல்மாற்ற உணவுகள் இயற்கை உணவுகளைப் போன்றவையே என்று விளம்பரம் செய்யப்படுகிறதேஇந்தக் கூற்று உண்மையா?

maramapnu-stil-10
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் மரபாக இயற்கை உணவைப் பதப்படுத்துவதன் (ரொட்டி, பீர் அல்லது ஒயின், பதப்படுத்திய தயிர், பாலடை போன்றவை செய்தல்) மற்றும் இயற்கை வளர்ப்பின் விரிவாக்கமே மபொ என்று கூறுகின்றன.

நீங்கள் எவ்வளவு ஒட்டுவளர்ப்புச் செய்தாலும், உங்கள் வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கும் தக்காளியில் மீன் அல்லது பூச்சியின் மரபணுப் பொருள் வரவே முடியாது. நாம் இயற்கையாகக் கிடைக்கின்ற ஈஸ்ட்டு போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துகிறோம். மனிதனாக உருவாக்கிய, செயற்கையாக மாற்றப்பட்ட மரபணுக்களை ரொட்டி, பாலடை, ஒயின் போன்றவை செய்வதற்கு யாரும் பயன்படுத்துவதில்லை. பண்ணைகளில் ஒரே அல்லது ஒரேமாதிரியான இனத்திலிருந்துதான் ஒட்டு வளர்ப்புச் செய்யத் தேர்ந்தெடுக்கிறோம்.

மரபு வளர்ப்பு நவீன மரபணுப்பொறியியல் தொழில்நுட்பங்கள்:

மரபான வளர்ப்பு முறை பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாக வருவது. அதற்கு யாரும் உரிமை (பேடண்ட்) கொண்டாட இயலாது. மரபு வளர்ப்பிலும் சந்ததிகள் தங்கள் பெற்றோரிடமிருந்து வேறுபடத்தான் செய்கின்றன, ஆனால் அவற்றின் பண்பு வேறுபாடுகள் மிகக் குறைவு.

நவீன மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று அல்லது மிகச்சில மரபணுக்கள் புகுத்தப்பட்டு, அவற்றிலிருந்து செயற்கையான வளர்ச்சியைச் செய்து, அவற்றிலிருந்து விதைகளை உருவாக்கி, பிறகு பயிர் என்ற நிலைக்கு வருகிறது.

இவற்றிலும் சந்ததிகள் தங்கள் பெற்றோரிடமிருந்து வேறுபடுகின்றன, அவற்றின் பண்பு வேறுபாடுகள் மிகப் பெரிய அளவில் உள்ளன.

தாவரங்கள், பிராணிகள், பாக்டீரியா, வைரஸ்கள், மனிதன் போன்ற முற்றிலும் தொடர்பற்ற உயிரிகளிலிருந்து மரபணுப் பொருள்களை ஆய்வகங்களிலும் சோதனைக் குழாய்களிலும் கலப்பதை மரபணுப் பொறியியல் செய்கிறது.

இந்த இரு முறைகளும் எவ்வளவு வேறுபட்டவை என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

செயற்கை முறையில், புதிய டிஎன்ஏவில் அந்நிய மரபணுக்களைச் செருகுவதற்கு பாக்டீரியாக்களையும் வைரசுகளையும் வைத்து மரபணுப் பொறியியலாளர்கள் அவற்றில் தாக்கி நுழைதலையும், படையெடுப்பையும் நடத்துகிறார்கள்.

இயற்கை வளர்ப்பில் (தாவரங்கள் அல்லது பிராணிகள்) இரு பெற்றோரிடமிருந்தும் டிஎன்ஏ முழுமையாக அப்படியே குரோமோசோம் வடிவில் செல்கிறது. இயற்கையாக ஒழுங்கமைத்த சங்கிலிகள் உடையாமல், ஒருங்கிசைவுடன் உள்ளன.

ஆனால் மரபணுப்பொறியியல்மாற்ற சந்ததியில் இயற்கைச் சங்கிலிகள் எதிர்நோக்கவியலாத வழிகளில் குலைக்கப்பட்டு, மறுஅமைப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.

மபொ பழங்களும் காய்கறிகளும் முற்றிலும் தொடர்பற்ற இனங்களிலிருந்து (பூச்சிகள், விலங்குகள், பக்டீரியா, மனிதர்களிலிருந்தும்) டிஎன்ஏக்களைக் கொண்டுள்ளன என்பது அவற்றை இயல்புக்கு மாறானவை ஆக்குகிறது. அவ்வாறில்லை என்றால், உயிர்த் தொழில்நுட்பக் குழுமங்கள் ஏன் அவற்றிற்கு உரிமை பதிவு செய்து, அவற்றைப் பயன்படுத்த ராயல்டி (உரிமத்தொகை) பெற்று, பல்வேறு நாட்டு விவசாயிகளையும் பல்வேறு முரண்பாடுகள் கொண்ட ஒப்பந்தங்களுக்கு ஏன் உடன்படுத்தவேண்டும்?

உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள், மபொ உணவுகள், இயற்கை உணவுகளுக்குச் சமமானவை என்று கூறுவது ஏன்?

இந்த உணவுகளை உருவாக்க மிகப் பெரிய அளவு பணம் முதலிடப்படுகிறது. பிற போட்டியாளர்களுக்கு முன்னரே பாதுகாப்பான சந்தைகளில் தங்கள் விளைபொருள்களைத் தள்ளிவிட இந்தக் குழுமங்கள் விரைகின்றன.

உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்களின் விளக்கம் இப்படிச் செல்கிறது:

“ஒரு மரபணுப்பொறியியல்மாற்ற உணவின் மாற்றப்பட்ட பெரும்பான்மைப் பண்புகள் அதே போன்ற இயற்கை உணவின் பண்புகளுக்கு ஒத்தவையாக இருந்தால், அந்த மபொ உணவு இயற்கை உணவைப் போன்றே, எல்லா விதங்களிலும் இருக்கவேண்டும்”.

இந்த விளக்கம் தர்க்கத்துக்கு முரணானது. நான்கு கால்கள், மீசைகள், ஒரு வால், இரு காதுகள், உடல் முழுவதும் மயிர் போன்ற ஒரே மாதிரிப் பண்புகளைக் கொண்டுள்ளதால், ஒரு நாயும் எலியும் சமமாகிவிடுமா?

விலங்குகளையும் மனிதர்களையும் பயன்படுத்தி, மிகுதியான செலவு பிடிக்கின்ற, காலவிரயம் செய்கின்ற, நீண்டகாலச் சோதனைகளின் தேவை இன்றியே தங்கள் விளைபொருள்களை எவ்வளவு விரைவாக விற்கமுடியுமோ அவ்வாறு விற்பதற்காக உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்கள் மேற்கண்ட சமன்மை வாதத்தை மிகச் சாதுரியமாக பிரச்சாரம் செய்துவருகின்றன. துரதிருஷ்டவசமாக, நம்நாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் தொழிலகங்கள் கண்டுபிடித்த இந்த “சாராம்சச் சமன்மை”யின் சட்ட நிபுணத்துவ நுட்பத்தை ஒப்புக்கொள்கின்றன. நுகர்வோரும் ஏமாற்றப்படுகிறார்கள். அதை அரசாங்கமும் ஏற்றுக் கொள்கிறது. பெரிய பெரிய முதலாளிகள்

அதனால் மரபணுப்பொறியியல்மாற்ற விளைபொருட்கள் உணவுப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், கடுமையான நீண்டகாலச் சோதிப்புகள், அடையாளப்படுத்துதல் (அதாவது இவை செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்று லேபல் இடுதல்) உட்பட்ட செயல்களைத் தவிர்த்து வந்துவிடுகின்றன. நம் நாட்டில் நுகர்வோருக்கு எந்தவிதப் பாதுகாப்புமே இல்லை.

இந்தக் கட்டுரை தொடரும் . . .

மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள் (முன் கட்டுரையின் தொடர்ச்சி)

marapanu-stil-1

(மபொ-மரபணுப் பொறியியல்,     மமா-மரபணு மாற்றப்பட்ட)

நம் நாட்டிலும் ரிலையன்ஸ், மோர், ஹெரிடேஜ் போன்ற பெருநிறுவனங்கள் கடைகளை நடத்தத் தொடங்கிய போதே மமா உணவுப் பொருள்கள் மிகுதியாக நாட்டில் பெருகிவிட்டன. தனியாக அடையாளமிடப் படாததால் மக்கள் தாங்கள் மபொ உணவுகளை உண்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் இன்றும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பீட்சா, பர்கர் போன்ற உணவுகளில் மமா நஞ்சு மிகுதி.

இதற்கு மேல் நமது அரசாங்கம் வால்மார்ட் போன்ற அமெரிக்கக் குழுமங்களைச் சிறிய அளவிலான கடைகள் வைக்கவும் அனுமதி அளிக்கிறது. அமெரிக்கா தான் மபொ நஞ்சுகளின் தாயகம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏற்கெனவே மான்சாண்டோ குழுமத்தின் விதைகளை வாங்கிப் பயிரிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது அரசாங்கம். இதுவரை கிரீன் பீஸ் போன்ற சில தனி அமைப்புகளே இவற்றை எதிர்த்து வருகின்றன. மக்களுக்கு இதுபோன்ற விசயங்கள் தெரியவும் இல்லை, அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கைப் போராட்ட நிலையில் இவற்றின்மீது அக்கறையும் இல்லை.

மபொ உணவுகள் பாதுகாப்பானவையா?

1989 -இல் ஒரு புத்தம்புதிய கொள்ளைநோய் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவியது. அதற்கு பலியானவர்கள் கடுமையான தசை வலியாலும் மிக அதிக எண்ணிக்கையிலான இரத்த வெள்ளை அணுக்களாலும் பாதிக்கப்பட்டனர். பக்கவாதம், நீண்டகால நரம்பியல், இதயப் பிரச்சினைகள், தோலில் வலிமிக்க வீக்கங்களும் வெடிப்புகளும், தன்னிச்சையான நோயெதிர்ப்புக் குறைபாடுகள், ஒளியைத் தாங்கமுடியாமை போன்றவை அவர்களைப் பீடித்த மற்ற சில அறிகுறிகள்.  சில மாதங்களுக்குள், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 5000 பேரில் 37 பேர் இறந்தனர், 1500 பேர் நிரந்தரமாக ஊனமாயினர். மருத்துவர்கள் இந்த வலிமிக்க, உயிருக்கு ஆபத்தான இரத்தச் சீர்கேட்டுக்கு ஈசனோ ஃபீலியா-மையால்ஜியா குறைபாடு என்று பெயரிட்டனர். அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை.

marapanu-stil-2
பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் குறிப்பிட்ட உணவுக்கடைகளில் விற்கப்பட்ட ஓர் உணவுச்சேர்க்கையை ட்ரிப்டோஃபன் என்பதை உண்டனர் என்று கடைசியாக நோய்க்கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்தது. இந்த ட்ரிப்டோஃபன், ஒரு ஜப்பானியக் குழுமத்தினால் (ஷோவா டெங்கோ-ஜப்பானின் மூன்றாவது மிகப்பெரிய வேதிக் குழுமம் அப்போது) செய்யப்பட்ட மபொ உணவு என்பதை மேலும் செய்த ஆய்வுகள்  கண்டுபிடித்தன.

எனவே சந்தேகமின்றி ஒரு மபொ உணவு, உடல் நலத்துக்கு பாதுகாப்பானது என்று கூறமுடியாது. நமது பாரம்பரிய இயற்கை உணவுகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்பட்டுச் சேகரித்த அனுபவத்தினால் பாதுகாப்பானவை என்று நமக்குத் தெரியும். மாறாக இந்தப் புதிய தொழில் நுட்பம் நீண்டகால விளைவுகள் ஏற்படுவதைக் கணிப்பதில்லை. மபொ உணவுகள், விரும்பத்தகாத பக்கவிளைவுகளைத் தருபவையாக இருக்கக்கூடும். சில பத்தாண்டுகளுக்கு முன்னர், இப்படித்தான் டிடிடி -யினை உண்ட பசுக்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆரோக்கியத்துக்கு மாறான அந்த விளைவுகளைக் கண்டுபிடிக்கப் பல ஆண்டுகள் ஆயிற்று.

marapanu-stil-3
மபொ டிரிப்டோஃபனின் விசயத்தில், அதை மேலும் உற்பத்தி செய்ய ஒரு பாக்டீரியத்தில் நான்கு மரபணுக்கள் செருகப்பட்டன. அந்த மரபணுக்கள் உண்டாக்கிய என்சைம் பாக்டீரியத்தின் வேதியமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் அது மேலும் மேலும் இந்த அமினோ அமிலத்தை உற்பத்தி செய்யலாயிற்று. அந்த அமிலம் புதிய வேதி மாற்றங்களைப் பக்கவிளைவாக ஏற்படுத்திப் புதியதொரு கூட்டுப்பொருளை உருவாக்கியது. அது டிரிப்டோஃபனை ஒத்ததாக இருந்தாலும் மனிதர்களுக்கு மிகுந்த நச்சுப்பொருள். புதிதாக உருவாகிய டிரிப்டோஃபன், 98.5% தூயதாக இருந்தாலும் அதில் மிகச் சிறிய அளவில் கலந்திருந்த நச்சுப்பொருளே மனிதர்களைக் கொல்லவோ செயலிழக்கச்செய்யவோ போதுமானதாக இருந்தது. (இந்தப் பிரச்சினை தெரியவந்தவுடனே அந்தக்குழுமம் எல்லா மாதிரிகளையும் அழித்துவிட்டது. அதற்கு லேபில் இட்டிருந்தால் தேடுதல் வேகமாக நிகழ்ந்திருக்கும்-இந்த வழக்கு இதுவரை தீர்க்கப்படாமலே இருக்கிறது.)

இயற்கையான பாக்டீரியா தயாரிக்கும் டிரிப்டோஃபன் நஞ்சானதல்ல. ஆகவே மாற்றப்பட்ட பாக்டீரியாதான் நச்சுப்பொருளை உற்பத்திசெய்த காரணி என்று நாம் சுட்டிக்காட்டலாம்.

marapanu-stil-4
நீண்டகாலம் மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தால் ஒழிய மபொ உணவுகள் உண்பதற்குப் பாதுகாப்பானவை என்று யாரும் 100% உறுதிகூற முடியாது.

தாறுமாறான முறையில் மரபணுக்களைத் தாவரத்திலோ விலங்கிலோ செருகுவது, எதிர்பாராத மாற்றங்களை அவற்றில் ஏற்படுத்தி, புதிய அல்லது உயர் அளவிலான தீங்கு பயக்கும் பொருள்களை உணவில் சேர்த்துவிடுகிறது. மபொ உணவுகளில் தீங்கான பொருள்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் கூறுவதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை.

ஒரு புதிய மருந்து முழுமையாகச் சோதிக்கப்பெறவில்லை. அதன் மோசமான விளைவுகளைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்பதாலேயே நீங்கள் அதைப் பயன்படுத்திப் பார்ப்பீர்களா? இதைத்தான் நாம் மபொ உணவுகள் விசயத்திலும் கடைப்பிடிக்கச் சொல்கிறோம். ஆனால் தொழிலகங்களும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் அவை முழுமையாக ஏற்கத்தக்கவை என்று அழுத்திச் சொல்கின்றன.

உள்ளார்ந்த உடல்நல அபாயங்கள் நிகழ்ந்த சில சந்தர்ப்பங்கள்

marapanu-stil-5
* உயர்ந்த வேதிமாற்ற வீதம் இருக்குமாறு ஈஸ்டை மபொ வாயிலாக மாற்றினார்கள். அதனால் நொதித்தல் வேகமாக நிகழும், ரொட்டி செய்தல் அல்லது பீர் வடித்தலை விரைவுபடுத்தமுடியும். குளூகோஸில் வேதிமாற்றங்களை விரைந்து ஏற்படுத்தும் மரபணுக்கள் ஈஸ்டில் செருகப்பட்டன. இதனால் நஞ்சான மரபணுமாற்றப் பொருளான மெதில் கிளையோக்ஸால் என்பதன் சேர்க்கை ஈஸ்டில் ஏற்பட்டுவிட்டது என்று 1995 இல் ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.

* புகையிலைத் தாவரங்கள் மபொ வாயிலாக காமா-லினோலீயிக் அமிலத்தை உற்பத்தி செய்யுமாறு மாற்றப்பட்டன. இது உடல்நல உணவுத் தொழிலில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. 1996 இல், இந்தத் தாவரம் எதிர்பாராதவிதமாக வேறொரு நச்சுப் பொருளை (ஆக்டாடெகாடெட்ரேனிக் அமிலம்) உருவாக்கத் தொடங்கிவிட்டது. இந்த நஞ்சு இயற்கையான புகையிலைத் தாவரங்களில் இருப்பதில்லை.

marapanu-stil-6
* 1998இல், பூச்சிகளைக் கொல்வதற்காக உருவாக்கப்பட்ட மபொ உருளைக்கிழங்கு, நோயெதிர்ப்பு மண்டலப் பிரச்சினைகள், முடமாக்கப்பட்ட உறுப்புவளர்ச்சி, தொண்டைக்குழல் உட்புறத்தோலில் மாற்றங்கள் எனப் பல கடுமையான உயிரியல் பிரச்சனைகளை எலிகளில் சோதித்தபோது ஏற்படுத்தியது என்று ஆய்வாளர் ஆர்பத் புஸ்டாய் காட்டினார். இந்த மபொ உருளைக்கிழங்கை உண்ணும் மனிதர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்குமா?

மபொ உணவை உண்பதால் வேறு பக்க விளைவுகள் உண்டா?

ஒவ்வாமை பற்றிய பிரச்சினைகள் உள்ளன. பெரியவர்களுக்கு 2% வீதமும் குழந்தைகளுக்கு 8% வீதமும் உணவு ஒவ்வாமை இருக்கிறது, ஏறத்தாழ நான்கிலொரு வீத மக்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதற்குக் காரணம் புரோட்டீன்கள். புரோட்டீன் உற்பத்தியில் தான் மபொ ஈடுபடுகிறது. பொதுவாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் மூலங்களான பருப்புகள், மீன்கள், முட்டைகள் மற்றும் பால் பொருள்களிலிருந்து மட்டுமல்ல. மபொ உணவு, கூருணர்ச்சி மிக்க எவரிடமும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எதிர்பாராத, இதுவரை தெரியவராத ஒவ்வாமை விளைவிக்கும் பொருள்கள் உணவில் தோன்றுவதே இதற்குக் காரணம். ஒருவருக்கு இதுவரை பாதுகாப்பாக இருந்த உணவு, மபொ மாற்றத்திற்குப் பிறகு அபாயகரமானதாக மாறிவிடக்கூடும். புதிய புரோட்டீன்கள் அவற்றில் உற்பத்தி ஆவது ஆபத்தான வேதிவினையைத் தூண்டுவதாகிவிடலாம்.

marapanu-stil-7
களைக்கொல்லிகளை எதிர்க்குமாறு உருவாக்கப்பட்ட மபொ சோயா அவரையில் பாக்டீரியா, பெடூனியா, ஹெபாடைடிஸ் பி மற்றும் எச்ஐவியை உண்டாக்கும் வைரஸ் போன்றவை அடங்கியுள்ளன.

அதிகமான புரோட்டீனைத் தருவதற்காக சோயா அவரைக்குள் பிரேசில் பருப்பிலிருந்து எடுத்த ஒரு மரபணு செலுத்தப்பட்டது. ஒவ்வாமை உடைய நபர்கள் எல்லோருக்கும் இந்த சோயா அவரையால் மோசமான எதிர்வினை உண்டாயிற்று என்று பின்னர் நடந்த சோதனைகள் காட்டின. அந்த உற்பத்திப் பொருள் நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மபொ சோயா அவரையினால் உணவு ஒவ்வாமை 50% கூடுதலாக அதிகரிக்கிறது என்று காட்டினார்கள். செரித்த பிறகுதான் இந்த புரோட்டீன் எதிர்வினைகளைத் தூண்டுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், குடல் எரிச்சல் உணர்வு, செரிமானப் பிரச்சினைகள், தோல்நோய்கள், மிகுகளைப்பு அறிகுறிகள், தலைவலை, வேலைசெய்ய இயலாமை போன்றவை ஏற்படுவதாகப் புகார் கூறினர்.

ஒவ்வாமை வேதிகள் இருக்கின்றனவா? என்று உங்களால் சோதித்துத்தான் அறிய முடியும். ஒவ்வாமை உணவுகளைச் சாப்பிட்ட பிறகு கொஞ்சநேரம் கழித்துத்தான் எதிர்வினைகள் நிகழ்கின்றன. பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள், பூச்சிகள், தாவரங்கள் அல்லது விலங்குகள் போன்ற உயிரிகளிலிருந்துதான் மரபணுக்கள் எடுக்கப்படுகின்றன. இவை உணவில் இதுவரை சேர்க்கப்படாதவை. எனவே அவை உற்பத்திசெய்யும் பொருள்கள் (புரோட்டீன்கள்) என்ன, எப்படிப்பட்ட பாதிப்பைத் தரும் என்பது தெரியாது.

உங்களுக்கு இதுவரை தெரியவராத ஒன்றை எவ்விதம் சோதிக்க முடியும்? இவற்றைப் பற்றிய லேபில்கள் (அறிவிப்பு ஒட்டிகள்) இன்றி இவற்றையும் இயற்கை உணவையும் வேறுபடுத்தி அறியமுடிவதில்லை என்பதால், மேலும் கேடு நிகழ்கிறது, நுகர்வோரால் இம்மாதிரி உணவுகளைத் தவிர்க்கமுடிவதில்லை.

மபொ உணவுக்கும் எதிருயிரி எதிர்ப்புக்கும் உள்ள தொடர்பு என்ன?

உயிர்த்தொழில்நுட்பத்தில் எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களின் பயன்பாடு இன்னொரு பிரச்சினை. கிருமிகளுக்கெனப் பயன்படுத்தும் எதிருயிரிகள் (ஆண்ட்டிபயாடிக்ஸ்-நோய்களுக்கும் தொற்றுகளுக்கும் சிகிச்சைக்கெனப் பயன்படுத்தும் பயனுள்ள மருந்துவேதிகள்) எல்லாக் கிருமிகளையும் அழிப்பதில்லை. சில கிருமிகள் ஏற்கெனவே மருந்து எதிர்ப்புச் சக்தி பெற்றுவிட்டதால் பிழைத்துவிடுகின்றன. பாக்டீரியாக்களில் எதிருயிரிமருந்துக்கு எதிர்ப்பு உருவாக்கும் மரபணுக்களை மரபணுப் பொறியியலாளர்கள் “காட்டி”களாகப் பயன்படுத்துகிறார்கள்.

marapanu-stil-8
புதிய உயிரிக்குள் வேண்டப்பட்ட மரபணுக்களோடு இவையும் செலுத்தப்படுகின்றன. இந்தக் காட்டிகளைக் கொண்டு, இந்த அந்நிய மரபணுக்களை ஏற்றுக்கொண்ட செல்களை விஞ்ஞானிகள் பிரித்தறிய முடியும். (காட்டிகளை ஏற்ற செல்கள் மட்டும்தான் எதிருயிரிமருந்து இருக்கும் நிலையில் பிழைத்திருக்கமுடியும், பிற செல்கள் அனைத்தும் அழிந்துவிடும்.)

சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியாக்களும், எளிய உயிரிகளும் மபொ பயிரிலிருந்து இந்த எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுதான் அபாயம். சிறிதுகாலத்தில் இவை இவற்றைப் பண்ணையிலிருக்கும் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் கடத்திவிடும். எனவே மபொ உணவின் பரவலான பயன்பாடு, தொற்றுகளுக்கும் நோய்களுக்கும் பயன்படுத்தும் மருந்துகளுக்கு எதிர்ப்புச் சக்தியைப் பரப்புவதாகவே முடியும்.

எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களைக் கொண்ட மபொ உணவை நாம் உண்ணும்போது எவ்வித பாதிப்பு நமக்கு ஏற்படுகிறது?

டிஎன்ஏவும், மரபணுக்களும் மிகத் தயாராக பாக்டீரியாக்களுக்கும் பிற எளிய உயிரிகளுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன என்பதைப் பல ஆய்வுகள்  நிரூபித்துள்ளன. மபொ தொழிலகங்கள் சொல்வதற்கு மாறாக, அவை முழுமையாக மபொ உணவிலிருந்து பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் வாய், உணவுப்பாதை வழியாகப் புகுந்துவிடமுடியும்.

மரபணுக்களும் டிஎன்ஏவும் செரிப்பிலும் உயிர்பிழைத்திருக்கும்

* எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்கள், மபொ உணவிலிருந்து அப்படியே மனித உணவுப் பாதைக்குள் குதித்து, குடலில் பல நிமிடநேரம் உயிர்வாழ முடியும். ஆகவே மபொ உணவிலிருந்து நேராகவே எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்கள் மனிதருக்கும் (அல்லது விலங்குகளுக்கும்) பரவ முடியும். மபொ உணவை உண்ணும் மனிதர்கள் நோயுறும்போது எதிருயிரி மருந்துகளால் அவர்களுக்குப் பலனிருக்காது.

marapanu-stil-9
* உணவுப்பாதையின் செரிப்பு மாற்றங்கள் டிஎன்ஏவை பாதிப்பதில்லை. எலிகளுக்குத் தரப்பட்ட டிஎன்ஏவை அவற்றின் இரத்த வெள்ளை அணுக்கள், மண்ணீரல், கல்லீரல் செல்கள் பெற்றுக்கொண்டன. எலிகளின் டிஎன்ஏவுடன் அவற்றில் சில ஒருங்கிணைந்துவிட்டன.

எதிருயிரிக் காட்டி மரபணுக்கள் ஒருவேளை பாக்டீரியா அல்லது வைரஸ்களுக்குக் கடத்தப்பட்டால், எதிருயிரி மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்கள் வனவிலங்குகளுக்கும் பண்ணை விலங்குகளுக்கும் மனிதருக்கும் பரவக்கூடும். இப்படிப்பட்ட காட்டி மரபணுக்களையும் அவற்றின் விளைபொருள்களையும் கொண்ட பயிர்களைப் பரவலாகப் பெருமளவில் பயிரிடுதலும் நுகர்தலும் நுணணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் எல்லாரிடத்திலும் மிகப்பெரிய அளவில் எதிருயிரி மருந்தெதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கிவிடும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்.

உதாரணமாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (எஃப்டிஏ) 90களில், பாலில் எதிருயிரிகளின் அளவை 100 மடங்கு அதிகப்படுத்த அனுமதி அளித்தது. தங்கள் பண்ணைகளிலிருக்கும் பசுக்களுக்குத் தொற்று ஏற்படாமலிருக்க மிகுதியாக எதிருயிரி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்த இது வாய்ப்புத்தந்தது. ஆனால் இதனால், எதிருயிரிகளுக்குக் கட்டுப்படாத புதிய நோய்க்கிருமிகள் அவற்றில் உருவாயின. இவற்றின் பாலைக் குடித்த மக்கள், மேலும் அதிக அளவிலான மருந்துகளையும், புதிய மருந்தெதிர்ப்பு பாக்டீரியாக்களையும் ஏற்க நேரிட்டது.

ஏற்கெனவே, அதிக எண்ணிக்கையிலான நோய்களை (காச நோய், காலரா, நிமோனியா போன்றவற்றை) குணப்படுத்த முடியவில்லை. பலவகை எதிருயிரி மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்திகொண்ட உயர்வகைக் கிருமிகள்தான் இதற்குக் காரணம். உபயோகமான மருந்துகளை மருத்துவர்கள், விவசாயிகள், பிராணிஉணவுத் தயாரிப்புத் தொழிலகத்தினர் போன்றோர் மிகுதியாகவும் தவறாகவும் பயன்படுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டது.

மரபணுப் பொறியியல்பக்கவாட்டு (சமதள) மரபணுப் பெயர்ப்பு என்ற கொள்கை 

அடிப்படையில் நிகழ்கிறது. இதற்கு ஓர் இனத்திலிருந்து தொடர்பற்ற இன்னொரு இனத்திற்கு மரபணுக்களை  மாற்றுவது என்பதுதான் அர்த்தம்.

மேலும் மோசம், பக்கவாட்டு மரபணுப் பெயர்ப்பு நிகழும் போது, நோய்க் கிருமிகள் எதிருயிரி மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போவதால், இம்மாதிரிச் சமதள மாற்றத்தில் அவை புதிய சேர்க்கைகளில் அல்லது இடமாற்றங்களில் புதிய நோய்களை உண்டாக்குகின்ற புதிய, அதிக ஆற்றலுள்ள கிருமிகளை உருவாக்கிவிடும்.

மரபணுப் பொறியியலில் அபாயகரமான பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் பயன்படுத்துவதில் பிற ஆபத்துகள் ஏதேனும் உண்டா?

marapanu-stil-10
புதிய நோய்களைத் தொடங்கும் அபாயம் இருக்கிறது. உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்களால் பயன்படுத்தப்படும் பல பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை கழலைகள், பற்றுகள், நோய்களைத் தாவரங்களிலும் பிராணிகளிலும் உண்டாக்கக் கூடியவை. உதாரணமாக, மபொ பயிர்களில் காலிபிளவர் மொசாய்க் வைரஸ் மரபணுக்களை செயலூக்கம் செய்யவோ செயல்மட்டுப்படுத்தவோ ஊக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஹெபாடைடிஸ் பி-யை ஒத்தது, எச்ஐவிக்குத் தொடர்புள்ளது. நாய்க்கடி வைரஸ் (ரேபீஸ்) பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுக்குப் பல நோய்களை எதிர்ப்பதற்காகப் பயன்படுத்தும் கிருமிக்கொல்லிகளில், ஒரு பூச்சியின் வைரஸில் தேளின் விசத்திலுள்ள மரபணுவைச் சேர்த்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அது ஒருவேளை மனிதர்களுக்குக் கடத்தப்பட்டால், நரம்புமண்டலம் அல்லது நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

மரபணுப் பொறியியலில் இயற்கைக்கு மாறான முறையில் மரபணு மாற்றம் செய்வது, புதிய நோய்களின் தோற்றத்துக்குக் காரணம் எனச் சில விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். இவை இனங்களின் எல்லைகளை மீறிக் குதிப்பதால், மனிதனுக்கும் விலங்குக்கும் ஏற்படுபவை. இவை பாக்டீரியாவும் வைரஸ்களும் முன் கணிக்க இயலாத மாற்றங்களுக்கு உட்பட்டதால் ஏற்பட்டவை. உதாரணமாக, பழ ஈக்களிலிருந்து ஒரு மரபணு மனிதர்களுக்குத் தாண்டிக்குதித்ததால் நரம்பியல் சார்ந்த ஒரு க்ஷீணநோய் ஏற்படுகிறது என்று புதிதாகக் கண்டுபிடித்தார்கள்.

தொடர்பற்ற பல நோய்க்கிருமிகள் புதிய செல்களில் தாக்கக்கூடிய மரபணுககள் பலவற்றைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழல் பக்கவாட்டு மரபணு இடப்பெயர்ச்சிகளால் மட்டுமே நேர்ந்திருக்கமுடியும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள். இவற்றின் விளைவாகப் பலவேறு இனங்களுக்கிடையில், தாவரங்களிலிருந்து பூஞ்சைகளுக்கும், பூச்சிகளிலிருந்து பிற விலங்குகள், பண்ணைப் பிராணிகள் ஆகியவற்றிற்கும், இவற்றிலிருந்து கடைசியாக மனிதராகிய நமக்கும் புதிய நோய்களும் தொற்றுகளும் கடத்தப்படும்.

உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் சொல்லுவதுபோலபயிர்களின் மரபணுப் பொறியியல்,நச்சுவேதிப்பொருள் பயன்பாட்டைக் குறைக்கிறதா?

இல்லை. மாறாக, அதிகமான நச்சுவேதிப் பொருள் எச்சங்களைத்தான் நாம் எதிர் பார்க்கமுடியும். மபொ பயிர்களில் பெரும்பான்மையானவை, இவற்றின் விதைகளை விற்கும் குழுமங்கள் தயாரிக்கும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி வளருமாறுதான் உருவாக்கப்படுகின்றன. எனவே, இயல்பாகவே இந்தக் களைக்கொல்லிகளின் விற்பனை மிகுதியாகியுள்ளது.

ஆகவே எப்போதையும் விட இன்று நச்சுவேதிப்பொருள்களைச் சார்ந்திருப்பது மிகுதியாகியிருக்கிறது. மபொ பயிர்கள், களைக்கொல்லிகளின் செயலை எதிர்ப்பதால், முன் போலன்றி, விவசாயிகள் இப்போது தங்கள் பயிர்களைப் பாதுகாக்க, மேலும் அதிக நச்சுப் பொருள்களைத் தெளிக்கக்கூடும். இதன்விளைவாக, நாம் உண்ணும் பயிர்களில் முன் எப்போதையும்விட அதிக நச்சுப்பொருள்கள். சில மபொ பயிர்கள், தங்கள் ஒவ்வொரு செல்லிலுமே பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்குமாறு உருவாக்கப்படுகின்றன. (அமெரிக்காவில் இப்பயிர்களே பூச்சிக்கொல்லிகளாகத்தான் வகைப்படுத்தப்பட்டுள்ளன.) ஆனால் எதிருயிரித் தடுப்புக் கிருமிகளைப் போலவே, இவற்றில் பிழைத்திருப்பவை எதிர்ப்பை ஏற்று, ‘மீயுயிரி’களாக மாறிவிடும். இது விவசாயிகளுக்குப் புதிய சுற்றுப் பிரச்சினைகளை உருவாக்கும், மேலும் அதிகப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த நேரிடும்.

இம்மாதிரி தங்கள் செல்களுக்குள்ளாகவே உள்கட்டமைக்கப்பட்ட நஞ்சுகளைக் கொண்ட பயிர்கள், நாம் உண்பதற்குப் பாதுகாப்பானவை என்று உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் சாதிக்கின்றன.

ஆனால் இவை புதிய பயிர்களாக இருப்பதாலும், மனிதர்களிடம் இவற்றைச் சோதிக்கப் பல ஆண்டுகள் ஆகும் என்பதாலும், இவை சோதிக்கப்படுவதே இல்லை. இவற்றின் பக்க விளைவுகள் தெரியவரப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். இதுவரை மனிதர்கள்மீது எவ்வித ஆய்வும் நடத்தப்பட்டதில்லை என்பதால் அவை பற்றி யாருக்கும் தெரியாது.

சில பயிர்கள், பூச்சிகளைக் கொல்லுமாறும், களைக்கொல்லிகளை எதிர்க்குமாறும் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட உணவுகள், நம்மை அதிக அளவு நச்சு வேதிப் பொருள்களை நாம் விழுங்க வைக்கும் என்பது உறுதி.

marapanu-stil-11
பிடி (Bt) பயிர்கள்: பூச்சிக்கொல்லி உள்அமைப்பு ஒவ்வொரு செல்லிலும் தங்கள் பூச்சிக்கொல்லிகளைத் தாங்களே படைத்துக்கொள்ளுமாறு உருவமைக்கப்பட்டவை.

இன்று பல தாவரங்கள், தாங்களே தங்களுக்குள் நஞ்சு உருவாக்கிப் பூச்சிகளைத் தடுக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மிகப் பிரபலமான ஒன்று, Bt எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் பசிலஸ் தூரிஞ்சியென்சிஸ். இது இயல்பாக மண்ணில் காணப்படுவது. இது உருவாக்கும் நஞ்சு இப்போது எல்லா உணவுகளிலும் உள்ளது. இயற்கைப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் விவசாயிகள் மிக ஆர்வத்தோடு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நஞ்சைத் தெளித்து வருகிறார்கள். சில பூச்சிகளின் உணவுப்பாதையில் சேரும்போது மட்டுமே நஞ்சாகுமாறு இவ்வேதி அமைந்துள்ளது. இந்த நச்சுக்குக் காரணமான பிடி மரபணுவைப் பலவேறு பயிர்களில் (உருளைக்கிழங்கு, சோளம், தக்காளி, ஆப்பிள், புகையிலையிலும்கூட) செருகினார்கள். இந்தத் தாவரங்கள் உருவாக்கிய Bt நஞ்சு, பரந்த எண்ணிக்கையிலான பூச்சிகளை-வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள், மகரந்தச் சேர்க்கைசெய்யும் பிற பூச்சிகள் போன்ற நன்மை செய்பவற்றையும்கூடக் கொல்லும் அல்லது அவற்றிற்குத் தீங்கு செய்யும் சாத்தியத்தைக் கொண்டிருந்தது.

Bt தொழில்நுட்பத்தால் நஞ்சு உட்புகுத்தப்பட்ட பயிர்களில் தாவரங்கள் தாமே இந்த நஞ்சைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதால், செல்களில் உயர்அளவில் இது தேங்கி விடுகிறது. இந்த நஞ்சு பூச்சிகளின் உணவுப்பாதைகளைத் தகர்த்து ஒழிக்கிறது. விலங்குகளிலும், மனிதர்களிலும்கூட, உயர்அளவிலான இந்த நஞ்சு ஏதேனும் உயிரியல் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. Bt உணவை மிக அதிக அளவில் உண்ணும் நுகர்வோருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம், அல்சருக்கான மருந்துகளை அல்லது வயிற்று அமிலத்தன்மையைக் குறைக்க ஆண்டாசிடுகளைப் பயன் படுத்துவோரிடம் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மபொ பயிர்களை வளர்ப்பதால் வேறுபிற எதிரான விளைவுகள் உண்டா?

உண்டு. மரபணு மாசுபாடு என்பது பெட்ரோல் அல்லது கச்சாஎண்ணெய் பரவியதைத் துடைப்பதைப் போல எளிதில் துடைத்துவிடக் கூடியதல்ல. மபொ உயிரிகளும், பாக்டீரியாக்களும், வைரஸ்களும் வெளிச்சூழலில் விடப்படும்போது, அவற்றைக் கட்டுப்படுத்தவோ மீட்டுக்கொள்ளவோ இயலாது. மரபணுக்களில் நிகழ்த்தப்பட்ட தவறுகளைச் சரிசெய்வது கடினம். ஏனெனில் இவை வேதி மாசுகளைப் போன்றவை அல்ல. இவை வளர்கின்ற, வாழ்கின்ற, மாற்றமடைகின்ற, இனப்பெருக்கம் செய்கின்ற உயிரிகள். இதன் விளைவாக, விலங்குகளிலும், சுற்றுச்சூழலிலும் எதிர்பாராத முடிவுகளை ஏற்படுத்துமாறு சூழலியல் மாசுபடலாம்.

இப்போதே மபொ பயிர்களிலிருந்து மகரந்தம் காற்றாலும் மழையாலும் அடித்துச் செல்லப்படுகிறது, வண்டுகள், மகரந்தத்தைப் பரப்பும் தேனீக்கள் போன்ற காட்டு உயிரிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, பண்ணைப் பயிர்களுக்கும், மைல் கணக்கில் தொலைவிலுள்ள அப்பூச்சிகளின் இனங்களுக்கும் பரவுகின்றன.

உள்வளரும் பூச்சிக்கொல்லிகளைக் கொண்ட மபொ பயிர்கள் தீங்குசெய்யும் பூச்சிகளை மட்டுமல்ல, வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கை செய்வனவற்றையும், தீங்கான பூச்சிகளை உண்டு உதவுவனவற்றையும் கொல்லும் இயல்பு படைத்தவை.

இப்படியிருப்பினும்இந்தப் புதிய பயிர்கள் வளர்க்கப்படுவதும் உணவாக விற்கப்படுவதும் ஏன்?

மிகப் பெரிய அளவிலான பணம் இவற்றில் கொட்டப்பட்டிருக்கிறது. (2000இல் உலக அளவிலான உயிர்ப்பொருள் சந்தையின் மதிப்பு 2000 பில்லியன் அமெரிக்க டாலர், இது இன்னும் பலமடங்கு அதிகரித்துள்ளது.)

உயிர்த்தொழில் நுட்பம், உணவு, சேர்க்கைப்பொருள்கள், மருந்துப்பொருள்கள், வேதிப் பொருள்கள், விதைகள் ஆகிய தொழில்களில் கட்டுப்படுத்தும் ஆற்றலோடு இறங்கியிருப்பவை ஒருசில இராட்சசத் தொழிலகங்களே. இந்த பன்னாட்டுத் தொழிலகங்கள், தாங்கள் பெரும்பணம் செலவிட்டு வளர்த்த மபொ விளைபொருள்களின் உரிமைகளையும் முழு அதிகாரத்தையும் கையில் வைத்துள்ளன. ஆகவே போட்டியாளர்களை மீறிச் சந்தைகளை அடைய அவை வேகமாகச் செயல்படுகின்றன. அரசாங்கத்தின் பாதுகாப்பு நிபந்தனைகளைத் தளர்த்தவும் விரைகின்றன.

marapanu-stil-12
இதனால்தான் உணவுப் பயிர்கள், பிராணிகள் போன்றவற்றை மரபணுப் பொறியியல் மாற்றம் செய்வது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பண்ணைகளில் நடைபெறும் இயற்கையான வளர்ப்புமுறையின் ஒரு வகையே என்று உயிர்த் தொழில்நுட்பத் தொழிலகங்கள் கூறிவருகின்றன. அவற்றின் வாதங்களைச் சுருக்கிச் சொன்னால்-

* மபொ உணவுகள், நாம் உண்ணும் இயற்கை உணவுகளோடு ஒத்தவை ஆதலின் (சாராம்சச் சமன்மை என்பது இங்கு பயன்படுத்தப்படும் சொல்) அவைகளிலிருந்து வேறுபட்டவை அல்ல.

* மபொ உணவுகள், இயற்கை உணவுகளைப் போன்றவையே ஆதலின், அவற்றை மிகுந்த பணச்செலவு பிடிக்கக்கூடிய, மனிதர்கள், விலங்குகள் மீதான முழுமையான நீண்டகாலச் சோதனைக்கு உட்படுத்துவது தேவையில்லை;

* ஆகவே இம்மாதிரி மபொ உணவுகளைத் தனியாக அடையாளமிடுவதுகூடத் தேவையில்லை, ஏனெனில் அவை இயற்கை உணவுகளைப் போன்றவையே என்று அத்தொழிலகங்களின் வாதம் செல்கிறது.

அரசாங்கங்களும், பன்னாட்டு ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் (எஃப்ஏஓ, டபிள்யூஎச் ஓ போன்றவை) இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவேதான் இப்போது எங்கு பார்த்தாலும் மபொ பயிர்களை வளர்ப்பதும் விற்பனை செய்வதும் நடக்கிறது, அடையாளமிடப்படாத செயற்கை உணவுகள் எங்கும் கிடைக்கின்றன.

சாராம்சச் சமன்மையினால் ஏற்படும் பிரச்சினை

சாராம்சச் சமன்மை என்ற வாதத்தின் காரணமாகத்தான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மபொ உணவுகளை நீங்கள் இப்போது சாப்பிடுகிறீர்கள். பாரம்பரியத் தாவர அல்லது பிராணி வளர்ப்பு முறையின் சற்றே மாறிய வடிவமே மபொ என்று தொழிலகங்கள் சொல்வதைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஊட்டச்சத்துப்பொருள்கள், ஒவ்வாமை பயக்கும் வேதிகள், இயற்கை நஞ்சுகள் போன்ற சில அடிப்படைகளில் மட்டுமே மபொ உணவுகள் சோதிக்கப்படுகின்றன. அவற்றில் புதிதாக நஞ்சாகவோ, தீங்குபயப்பதாகவோ இருக்கக்கூடிய தெரியாத பொருள்களைச் சோதனைகள் கருத்தில் கொள்வதில்லை.

டிரிப்டோஃபனால் கொடிய விளைவுகள் ஏற்பட்டபோதிலும் அந்தக் குழுமம், சாராம்சச் சமன்மை என்ற கோட்பாட்டு அடிப்படையில், தனது மபொ விளைபொருள், “தூய்மையானது”, இயற்கைப்பொருளைப் “போன்றே உள்ளது” என்று காட்டமுடிந்தது. விலங்கு அல்லது மனிதன் மீது இந்தப் பொருள் சோதிக்கப்பட்டிருந்தால், இந்த விளைபொருள் இயற்கையான டிரிப்டோஃபனைப் போன்றது அல்ல என்று உடனே தெரிந்திருக்கும்.

மமா உணவு பாதுகாப்பானது. பாரம்பரிய உணவு சோதிக்கப்படுவதை விட அது இன்னும் முழுமையாகவே சோதிக்கப்படுன்றது. ஆகவே மேலும் பாதுகாப்பானதாகவே இருக்கும்” என்று உயிர்த்தொழில்நுட்பத் தொழில் சொல்கிறது. இதை நாம் நம்ப முடியுமா?

இந்தத் தொழில்நுட்பம் இன்னும் புதியது தான். 30 வயது கூட ஆகவில்லை. மரபணுக்களின் நடத்தையைப் பற்றிப் போதிய அளவு நமக்குத் தெரியாது. ஆகவே இவ்வகை உணவு பாதுகாப்பானது என்ற கூற்றை ஒப்புக்கொள்ள முடியாது. மான்சான்டோ போன்ற முன்னணி நிறுவனம்கூட, “மபொ உணவுகளை நீண்டகாலம் உண்பதன் விளைவுகளைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது, எங்கள் விளைபொருள்களைப் பாதுகாப்புக்கென மனிதர்கள்மீது ஒருபோதும் சோதித்துப் பார்த்ததில்லை” என்று ஒப்புக்கொள்கிறது.

தொழில்நிறுவனங்கள் அபாயங்கள் இல்லை என்று கூறினாலும், இவ்வளவு சிக்கலான ஆபத்துகளும், ஏதேனும் தவறாகப் போனால் யார் பொறுப்பு என்னும் கேள்வியும் எழுவதால் காப்பீட்டுக்கழகங்கள் தொழிலைக் காப்பீடு செய்வதற்கான செலவைக் கணிக்க முடியாமல் திணறுகின்றன.

எந்த மபொ உணவிலும் மரபணுக்களைத் தாறுமாறாக மாற்றுவதே முன்கணிக்க இயலாத விளைவுகளைக் கொண்டதுதான். எந்த அபயாகரமான பொருளையும் கண்டு பிடிக்க முழுமையாக நம்பத்தகுந்த முறை எதுவும் இப்போது கிடையாது.

marapanu-stil-13
மருந்துகளின் பாதுகாப்பைச் சோதிக்கும் இப்போதுள்ள முறைகள் மிகவும் செலவு பிடிப்பவை, காலம் எடுத்துக்கொள்பவை. அப்படியும் அவையும்கூட, சந்தையில் புதிதாகப் புழக்கத்துக்கு வரும் மருந்துகளில் 13% அளவு ஏற்படுத்தும் தீங்கான விளைவுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இம்மாதிரிச் செலவுமிகுந்த நீண்டகால சோதனைகளைத் தவிர்க்க, உயிர்த்தொழில் நுட்பப் பெருந்தொழில், மிகப் பெரிய முயற்சியை மேற்கொண்டு ஒழுங்குபடுத்தும் அமைப்புகளைப் பாரம்பரிய வளர்ப்புமுறையின் ஒரு மாறுபாடுதான் மரபணுப் பொறியியல் என்று நம்பவைத்துள்ளது.

வேடிக்கை என்ன என்றால், ஒழுங்குபடுத்தும் அமைப்புகளே விளைபொருள்களைச் சோதிக்கவும் மதிப்பிடவும் மேற்கண்ட உயிர்த்தொழில்நுட்பத் தொழிலகங்களைத்தான் சார்ந்துள்ளன.

நீதிபதியே தீர்ப்புச் சொல்லக் குற்றவாளியை நம்பியிருக்கும் நிலைதான்!

அரசாங்கத்தின் அமைப்புகளிலுள்ள விஞ்ஞானிகளுக்கு இவை எல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால் அரசாங்கத்துக்கு பயந்தோ, பெரிய குழுமங்களிலிருந்து கிடைக்கும் பெருந்தொகைகளுக்கு ஆசைப்பட்டோ அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அணுவின் ஆபத்து தெரிந்தும் கூடங்குளங்களை வரவேற்கும் விஞ்ஞானிகள் போலத்தான். அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் பொறுக்கினால் போதும். அவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் மபொ நஞ்சுகள் எல்லார் உடலிலும் கலந்தால் யாரும் விளைவுகளைத் தவிர்க்க இயலாது. பணமுள்ளவர்கள் லஞ்சம் கொடுத்தும் தப்பித்துக்கொள்ள முடியாது. ஒருவேளை வளரும் நாடுகளின் அரசாங்கங்கள், இம்மாதிரி உணவை உண்டு மக்கள் தாங்களாகவே தங்கள் தொகையைக் குறைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்களோ என்றும் நினைக்கவேண்டியுள்ளது.

(அடுத்த வாரம் இக்கட்டுரையின் இறுதிப்பகுதி)

மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள் – கட்டுரையின் இறுதிப்பகுதி

marapanu-stil-14
மரபணுத் தொழில் நுட்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிறுவனங்களே தங்கள் சோதனைகளுக்கு அத்தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஆய்வகங்களைச் சார்ந்துள்ளன என்று முன்பே குறிப்பிட்டோம். அந்த நிறுவனங்கள் மிக மேலோட்டமாகத்தான் சோதனைகளை நிகழ்த்துகின்றன. மனித உயிரின் மாண்பு என்பது அந்நிறுவனங்கள் அறியாதது. அவை அறிந்ததெல்லாம் காசு பார்ப்பது ஒன்றே.

நிறுவனங்களின் மேலோட்டமான சோதிப்பு முறைகளுக்கு உதாரணங்கள்:

மபொ உருளைக்கிழங்கு: Bt நஞ்சினைத் தன் மபொ உருளைக்கிழங்கில் மான் சாண்டோ சோதித்தது ஒரு மேலோட்டத்தன்மைக்கு ஒரு நல்ல உதாரணம். இந்த உருளைக்கிழங்கு பலபேருக்கு ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தியது. பூச்சிக்கொல்லி எதிர்ப்பு உருளைக் கிழங்கிலிருந்து போதிய அளவு நச்சுப் பொருளைப் பிரித்தெடுக்க முடியவில்லை என்று குழுமம் என்று சாக்குக் கூறியது. ஆகவே Bt மரபணுவை E.கோலை கிருமிகளில் புகுத்தினார்கள். இந்தக் கிருமிகளிலிருந்து வெளிப்பட்ட நஞ்சினைத் தனிமைப்படுத்திச் சோதனைகளில் பயன்படுத்தினார்கள். இந்த நஞ்சு, குறிப்பாக ஒவ்வாமைகளுக்குக் காரணமாக அமையும் தன்மையில் மபொ உருளைக்கிழங்கில் வெளியாகும் அதே நஞ்சாக இருக்க வாய்ப்பில்லை.

பூச்சித்தடுப்புச் சோளம்: (Bt சோளம் என்று சொல்லப்படுவது) மனிதர் உணவுக்கானது. நோவார்ட்டிஸ் நடத்திய உணவுச்சோதனைகள் இந்தச் சோளத்தைப் பயன்படுத்திச் செய்யப்படவில்லை. இதற்கும் ஒரு மாற்று ஏற்பாடுதான். (Bt நஞ்சு, E.கோலையிலிருந்தே பெறப்பட்டது.) இந்தச் சோளத்தைச் சரியாகவும் சோதிக்கவில்லை. மனிதருக்கு பதிலாக எலிகள் பயன்படுத்தப்பட்டன. மக்களுக்கு இந்த மபொ சோளம் விஷமூட்டும் அளவுக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்ற சாத்தியத்தை இந்தக் குழுமம் அறவே புறக்கணித்துவிட்டது.

நட்பான, இலக்கு நிர்ணயிக்காத பூச்சிகளின்மீது Bt சோளத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் மோசமானமுறையில் அமைக்கப்பட்டிருப்பது, தனியார் உளவுநிறுவனம் ஒன்றினால் கண்டறியப்பட்டது. யதார்த்தமான முறையில் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. பூச்சிகள் அந்த நஞ்சுகளை உண்டனவா என்பதே ஐயத்திற்கிடமானது. இந்நிலையில் எந்த எதிரான விளைவுகளும் அறியப்பட வாய்ப்பில்லை. குழுமத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உணவுச் சங்கிலி எதிர்வினைகளையும் புறக்கணித்துவிட்டார்கள், வேதி நஞ்சுகளைச் சோதிக்கப் போதுமான முறைகளை அவர்கள் கையாளவில்லை.

marapanu-stil-21
மான்சாண்டோவின் rBGH: பசுக்கள் மிகுதியாகப் பால் கொடுக்கவேண்டி அவற்றின் உடலில் இந்த மறுசேர்க்கைக் கால்நடை ஹார்மோன் ஊசியாகப் போடப்பட்டது. இதற்கான சோதனை, முப்பது எலிகளின்மீது 90 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. (வழக்கமாக, மனிதர்கள் பயன்பாட்டுக்கான புதிய மருந்தினைக் குறைந்தபட்சம் பல நூற்றுக்கணக்கான எலிகள்மீது இரண்டு ஆண்டுகளேனும் நடத்துவதுதான் முறை.)

ஆனால் அந்தக் குறைந்த நாட்களிலேயே மருந்து எலிகளுக்குத் தீங்குசெய்வது குழுமத்திற்குத் தெரிந்துவிட்டது. எலிகளில் எதிர்ச்செயல்செல்கள், தைராயிடு கழலைகள், புரோஸ்டேட் சுரப்பி பாதிப்பு ஆகியவை கண்டறியப்பட்டன. பசுக்களிலும் 20க்கு மேற்பட்ட கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புத் தெரிந்தது. தொற்றுகள் அவற்றிடையே மிகுதியாகப் பரவுதல், குறிப்பாகப் பால்மடிகளில் தொற்று, சினைப்பைகளில் குழிப்புண்கள், கருப்பையிலும் செரிப்பு மண்டலத்திலும் ஒழுங்கீனங்கள், உறுப்புகளில் காயம், கால்களில் கோளாறுகள், கன்றுகள் பிறப்புக் குறைபாடு ஆகியவை ஏற்பட்டன. தொற்றுக்கு ஆட்பட்ட பசுக்களின் பாலில் அதிக சீழ், மிகவலுவான கிருமிகள், இரத்தம் ஆகியவை காணப்பட்டன. மற்ற முடிவுகள்: பாலின் சுவை மாற்றம், வீட்டில் வைத்திருக்கும் கால அளவில் குறைபாடு, அதிகக் கொழுப்பு, குறைந்த புரோட்டீன் அளவு போன்றவை. இவ்வளவு குறைகள் இருந்தும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை(FDA), rBGHக்கு அனுமதி வழங்கியது. இதனால் தொற்றுகளைத் தடுக்க அதிக அளவில் எதிருயிரி மருந்துகள் தேவையாயின. பாலில் அனுமதிக்கப்படும் எதிருயிரிகளின் அளவை 100 மடங்கு (10000%) FDA உயர்த்தியது.

அமெரிக்க FDAவுக்கு மான்சாண்டோ அளித்த ஆய்வு, சுதந்திரமான அறிவியல் மதிப்பீட்டுக்கு அளிக்கப்படவே இல்லை. மான்சாண்டோவின் மதிப்பு சரிப்படுத்த இயலாத அளவுக்குக் கெட்டுப்போகும் என்ற கருத்தினால் இதுவரை FDA ஆய்வின் அடிப்படைத் தகவல்களை மதிப்பிட அனுமதி வழங்கவே இல்லை.

marapanu-stil-31

ரவுண்ட்அப் ரெடி சோயா அவரை (RRS): மீன்களுக்குப் பத்துவார அளவு வரை உணவாக அளிக்கப்பட்ட பின்பு, மான்சாண்டோவின் RRS மனிதர்களுக்குத் தகுதியானது என்று சான்று அளிக்கப்பட்டுவிட்டது. சிறிய எண்ணிக்கையிலான கோழிக்குஞ்சுகள், எலிகள், பசுக்களுக்கு சிற்றளவுச் சோதனைகள் நடத்தப்பட்டன. சோதிக்கப்பட்ட RRSக்கு ரவுண்ட்அப் களைக்கொல்லி தெளிக்கப்படவே இல்லை. எனவே அதில் பாதிக்கக்கூடிய வேதிப்பொருளான கிளைபோசேட்டின் அளவு மிகக்குறைவாகவே இருந்திருக்கும். முறையான நஞ்சுச் சோதனைகளாக இவை ஏற்கப்படாது என்று மான்சாண்டோவிற்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் இதற்கு உடல் நலத்திற்கு ஏதுவான சோதனை என்று குழுமம் பெயர் இட்டது. மேலும் பல விடுபாடுகளும் யூகங்களும் இருந்தன. புதிய புரோட்டீன்கள் பாலில் இருப்பது புறக்கணிக்கப்பட்டது. விவாதிக்கவே படவில்லை. ஒவ்வாமையை உண்டாக்கும் தெரிந்த புரோட்டீன்கள் மட்டுமே சோதிக்கப்பட்டன. சாதாரணப் பசுக்கள், கோழிக்குஞ்சுகளோடு ஒப்பிட்டால், சோதிக்கப்பட்ட சிறிய அளவிலான பசுக்களின் பாலில் அதிகக் கொழுப்பும், கோழிக்குஞ்சுகளுக்கு அதிக மாமிசமும் காணப்பட்டன. ஏன் என்று சோதிக்க மேலும் சோதனை எதுவும் நடத்தப்படவே இல்லை. RRSஇன் சுவை நன்றாக இருந்ததால், அது மிக அதிகமாக உண்ணப்பட் டதுதான் காரணம் என்று மான்சாண்டோ கூறிவிட்டது. அதிக எண்ணிக் கையிலான பிராணிகளை வைத்துச் சோதித்திருந்தால் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்திருக்கக்கூடும்.

ஒழுங்குபடுத்தும் அதிகாரஅமைப்புகள் இத்தகைய ஆய்வுகளை முதலில் எவ்விதம் ஒப்புக்கொண்டன என்பதே விந்தையானது. இப்படிப்பட்ட புதிய உற்பத்திப் பொருள்களை நீண்டகாலம் மனிதர்களுக்குக் குறைந்த அளவில் உணவாக அளித்துச் சோதிப்பது ஒன்றே உணவுப்பாதுகாப்பினைத் தகுந்த அளவு உறுதிப்படுத்த ஒரே வழி.

(குறிப்பு: 1998 மே மாதத்தில் அமெரிக்காவில் அறிவியலாளர்கள், மதத் தலைவர்கள், உடல்நல அதிகாரிகள், நுகர்வோர், உணவுசமைப்போர் ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பு ஒன்று FDAவின்மீது வழக்குத் தொடர்ந்தது என்பதில் வியப்பில்லை. கடுமையான சோதனைகள் இன்றியும், அடையாளப்படுத்தப் படாமலும் மபொ உணவுகளைச் சந்தையில் விடுவதன் வாயிலாக FDA உலகம் முழுவதுமுள்ள பொதுமக்கள் நலத்தைப் புறக்கணிக்கிறது, மத சுதந்திரத்தைக் குலைக்கிறது என்பது அதன் சாரம்.

போதுமான பாதுகாப்பு மதிப்பீடுகள் இல்லாததைப் பற்றிக் குழுமத்தின் சொந்த அறிவியலாளர்கள், நலத்திறனாளர்கள் ஆகியோரின் பரவலான எதிர்ப்பையும் எஃப்டிஏ புறக்கணித்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுமுகமான ஆவணங்க ளையும் நினைவுக்குறிப்புகளையும் இந்த வழக்கு வெளிப்படுத்தியது.)

மருந்துகளிலும், பாரம்பரிய நோய்களைக் குணப்படுத்துவதிலும் நமக்கு மரபணுப் பொறியியல் உதவ முடியுமா?

மரபணுநகலெடுத்தல் (குளோனிங்) உள்ளிட்ட மருத்துவ ஆய்வுகள் மரபணுப் பொறியியலைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் வேறு முரணான பிரச்சினைகள் எழுகின்றன. இங்கு மபொ உணவுகள் பற்றி மட்டுமே பார்ப்பதால் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி இங்கு எழுதஇயலாது. ஆயினும், அதே தவறான தொழில்உத்திகள், கருதுகோள்கள் அடிப்படையில்தான் ஆய்வு அமைந்திருப்பதால், விவசாயத்தில் எழும் அதே பிரச்சினைகளே மருத்துவத்திலும் எழுகின்றன.

நாம் மபொ உணவுகளை உண்கிறோமா? இந்தியாவில் மபொ உணவுகள் விற்கப் படுகின்றனவா?

——————–

மரபணுரீதியில் கெடுக்கப்பட்டு, இந்தியாவில் விற்கப்படும் உணவுகள்

சீஸ் ஸ்ப்ரெட்-”கிரீம் சீஸ்”

கிரீம்டு ஹனி-”குழந்தைகளுக்கு ஏற்றது”

marapanu-stil-41

டெய்ரி மில்க்-சாக்கலேட்

பேபி பிஸ்கட்-”தனியாகக் குழந்தைகளுக்கெனச் செய்யப்பட்டது”

கார்ன் ஆயில்

வைட்டமின் ஈ சப்ளிமெண்ட்

குழந்தைகளுக்கான செயற்கைப் பால்

இன்னும் பல.

——————————

மபொ சோயா அவரை (களைக்கொல்லி எதிர்ப்பு) விற்கப்படுகிறது. மற்றசில தாவர வகைகளும்-சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவை விற்கப்படுகின்றன. இவை இயல்பாக விளைந்து வந்த உணவுகள் அல்ல, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, பெருங்கடைகளில் கிடைக்கின்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

வேகஉணவுத் தொடர்கள், உணவுக்கடைகள் போன்றவை பொதுவாக மற்றொரு ஆதாரம். மெக்டொனால்டு கடைகளின் பர்கர் பன்களிலும், கேஎஃப்சியின் பன்களிலும் ரவுண்ட்அப் ரெடி சோயா பீன்ஸ் இருப்பதை கிரீன்பீஸ் நிறுவனம் கண்டறிந்தது. (இந்த நிறுவனத்தின் சிக்கன்65 விளம்பரங்களைப் பெருநகரங் களில்-ரூ.25க்கு இது கிடைக்கிறதாம்-எங்கும் காணலாம்.)

அடையாளமிடப்படாததால், குறித்த ஒரு பொருள் மபொவா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. சோயா அவரையைப் பொறுத்தமட்டில், இயற்கையான சோயாபீன்ஸ் உடன் செயற்கை உணவைத் தயாரிப்பாளர்கள் கலந்துவிடுவதால் உங்களால் தனியாக அதைத் தேர்ந்தெடுக்க முடியாது.

மபொ உணவுகளின் வகைகள்

பொதுவாக மபொ உணவுகளில் மூன்று வகைகள் உள்ளன:

ஃ புதிதாக வரும் உணவு அல்லது இயற்கைவிளைச்சல்களிலிருந்து மாறுபடும் உணவு. உதாரணமாக, வைட்டமின் ஏ மிகுதிப்படுத்திய அரிசி அல்லது உறைவுஎதிர்ப்பு ஸ்ட்ராபெரிப் பழங்கள்.

ஃ ஓரளவு பதப்படுத்தலுக்கு ஆளாகிய, சோயா பால் போன்ற மபொ உணவுகள் அல்லது உணவுப்பகுதிகள். அவற்றில் மாற்றப்பட்ட புரோட்டீன் அல்லது டிஎன்ஏ உள்ளது.

ஃ கடைசியாக, மபொ தாவரங்களிலிருந்து பெறப்பட்ட, மிகுதியான பதப்படுத்தலுக்கு ஆளான உணவுகள். உதாரணம், மபொ கரும்பிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை. இவற்றில் மாற்றப்பட்ட புரோட்டீன் அல்லது டிஎன்ஏவின் அளவு இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். அதைக் கண்டுபிடிப்பது கடினம்.

மபொ உணவைத் தவிர்ப்பது எப்படி?

மபொ உணவுகளைத் தவிர்ப்பது மிகக்கடினமாகி வருகிறது. எதிலும் அடையா ளமிடுவதே கிடையாது என்பதால், நீங்கள் மபொ உணவு எது என்றே கண்டறிய வழியில்லை. ஆகவே வாங்குவதா தவிர்ப்பதா என்பதையும் முடிவெடுக்க முடியாது. மிகச்சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கின்ற மபொ சோயாவை எடுத்துக்கொள்ளுங்கள். வடஇந்தியர்கள் அதிக அளவு சோயா பீன்ஸை உண்கி றார்கள். தமிழ்நாட்டிலும் இப்போது சோயாவை உண்பது அதிகரித்து வருகிறது. பலவேறு சோயா பீன்ஸ் உணவுவகைகளையும் தயாரிப்பு முறைகளையும் தயாரிக்கும் குழுமங்களே அறிமுகப்படுத்துகின்றன. மேற்கிலும்கூட சோயா எண்ணெய், சோயா மாவு, சோயா லெசிதின் போன்ற தயாரிப்புகள் உட்பட அவை எல்லாப் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் 60%க்குக் குறையாமல் உள்ளன. பெரிய முதலீட்டாளர்களின் கடைகளில் விற்கப்படும் ஐஸ்கிரீம், தானியங்கள், பிஸ்கட்டுகள், குழந்தை உணவு, மரக்கறி பர்கர்கள் முதலியவற்றிலிருந்து சமையல் எண்ணெய் வரை மபொ உணவுகள் தான்.

marapanu-stil-51
சோளம், கனோலா போன்றவை சமையல் எண்ணெயிலும் மார்கரீனிலும் பயன்படுத்தப்படும் பொதுவான மபொ உணவுகள். தக்காளி, உருளைக்கிழங்கு, ஸ்க்வாஷ் போன்றவை பிற பொருள்கள்.

உணவுச்சேர்க்கைகளுக்கும் (அமிலேஸ், கேடலேஸ், லாக்டேஸ் போன்ற) என்சைம்களுக்கும் உணவுத்தயாரிப்புத் தொழிலகங்களும் பரவலான பொருள்களைத் தயாரிக்க மபொ உணவுகளையே நம்பியிருக்கின்றன. இவற்றில் ரொட்டி, குழந்தை உணவுகள், சர்க்கரை, கார்ன்சிரப், பழச்சாறுகள், ரொட்டிசோடா, மென்பானங்கள் போன்றவை அடங்கும். இப்போது பாலடைகளைத் தயாரிக்க உதவும் ரென்னெட்டுக்கு மபொ பாக்டீரியா பயன்படுத்தப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு அதிகமாகக் கடைகளில் பாலடை (சீஸ்) கிடைக்காது. இப்போது எங்குபார்த்தாலும் பாலடை கிடைக்கிறது. மபொதான்! நம் உயர்குடி யினர் மொழியிலும், தொலைக்காட்சி மொழியிலும் இது ‘ப(ன்)னீர்’! இப்போது கடைகளில் பன்னீர் என்றால் வாசனைத் தெளிப்பு நீர் கிடைக்காது. பாலடையைத்தான் கொடுப்பார்கள். அந்த அளவு பழக்கத்துக்கு வந்துவிட்டது.

‘பனீர்’ தயாரிப்பில் பக்கவிளைவுகளாகக் கிடைப்பன, சாக்கலேட், மார்கரீன் போன்றவற்றைத் தயாரிக்கப் பயனாகின்றன. ரொட்டி, பரப்பிகள், உணவுச் சேர்க்கைகள், பீட்சா, பீர், ஒயின் போன்றவற்றைத் தயாரிக்க மபொ யீஸ்டு பயன்படுகிறது. நீரிழிவுக்காரர்களுக்கான செயற்கைச் சர்க்கரைகளும் மபொ தயாரிப்புகளே.

அடையாளமிடுதல் இல்லை ஆகையால், நீங்கள் நேரடியாக விளைந்துவரும் உணவுகளை உண்டாலொழிய, மபொ உணவுகளைத் தவிர்க்க இயலாது. சலவைப் பொருள்கள், அழகுசாதனங்கள், சோப்பு, ஷாம்பு, பபிள்பாத் போன்ற தனிமனித பராமரிப்புப் பொருள்கள் ஆகியவற்றிலும் மபொ கலப்புகளை உயிர்த் தொழில் நுட்பத் தொழிலகங்கள் கலந்துவிட்டன. கால்நடைகள், மீன் போன்றவை உண்ணும் பொருள்களிலும் மபொ தயாரிப்புகள் மிகுதியாகக் கலந்து விட்டன. இவை கடைசியாக நமது உணவுத்தட்டுகளுக்குத்தான் வந்து சேர்கின்றன.

நான்-ஜிஎம்ஓ, ஜிஎம்ஓ-ஃப்ரீ என்ற வகைகளுக்கான வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். (ஜிஎம்ஓ என்றால் ஜெனடிகலி மாடிஃபைடு ஆர்கானிம்-மரபணு மாற்றப் பட்ட உயிரி என்பது பொருள்). நான்ஜிஎம்ஓ என்றால் குறிப்பிட்ட அளவைவிட (1% என்று கொள்ளுங்கள்) அப்பொருளில் கலப்பு குறைவு என்று பொருள். ஜிஎம்ஓஃப்ரீ என்றால் கலப்பு இல்லவே இல்லை என்று பொருள்.

(குறிப்பு: அமெரிக்காவில் 2000இல் ஏறத்தாழ 5 கோடி ஏக்கரில் மபொ பயிர்கள் இடப்பட்டன. இப்போது அயல்மகரந்தச் சேர்க்கையாலும், அளிப்புத்தொடரிலுள்ள கலப்பினாலும், அந்த நாட்டில் மபொ உயிரிக் கலப்பற்ற உணவு என்பதைப் பிரித்துக்கூறவே முடியாது என்கிறார்கள்.)

உணவுப் பகுதிப்பொருள்களிலும் உணவுப்பொருள்களிலும மபொ கலப்புகள்

இயற்கையாக விளைந்தது என்று வெளிப்படையாகக் கூறாமல், கீழே கூறப்பட்ட பகுதிப்பொருள்கள் பொருளின் அடையாளஅட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தால், அதில் ஒருவேளை மபொ கலப்பு இருக்கலாம். வெறுமனே “மாற்றப்பட்ட” ஸ்டார்ச் என்று குறிப்பிட்டிருந்தால், அது மபொ என்று பொருளல்ல. அதற்கு அப்பொருள் வேதிமுறை அல்லது வெப்பம் வாயிலாக மாற்றப்பட்டது என்பதே அர்த்தம். (ஆனால் அந்த ஸ்டார்ச் ஒருவேளை மபொ சோளத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.)

பின்வரும் பொருள்களில் மபொ சேர்க்கை இருக்கலாம்

முதல் வகை

marapanu-stil-61
சோயாஅவரை: சோயா மாவு, சோயா எண்ணெய், சோயா பானங்கள், தாவர அல்லது சோயா சாறு, சோயா புரோட்டீன், சோயா தனிப்பிரித்த புரோட்டீன், ஹைட்ரலைஸ்டு தாவர புரோட்டீன். மபொ சோயா சார்புகளைப் பெற்ற பொருள்கள்: வைட்டமின் ஈ, தானியங்கள், மரக்கறி பர்கர்கள், சாஸேஜ்கள், சோயா சாஸ், சிப்ஸ், ஐஸ்கிரீம், உறைதயிர், குழந்தை உணவு, சாஸ்கள், புரோட்டீன் பவுடர், மார்கரீன், சோயா சீஸ், நொறுக்குத்தீனிகள், ரொட்டிகள், குக்கிகள், சாக்கலேட், இனிப் புகள், பொரித்த உணவுகள், மேம்டுத்தப்பட்ட மாவுகளும் பேஸ்டாக்களும்.

மக்காச்சோளம் அல்லது சோளம்: சோள மாவு, சோள ஸ்டார்ச், சோள எண்ணெய், சோளச் செயற்கைச் சர்க்கரை, சோள சிரப். மபொ சோளப் பொருள்களைக் கொண்ட உற்பத்திப் பொருள்களான  வைட்டமின் சி, சிப்ஸ், மிட்டாய்கள், ஐஸ்கிரீம், குழந்தை உணவுகள், சாலட் மேலிடுபொருள்கள், தக்காளி சாஸ்கள், ரொட்டிகள், பருப்புகள், ரொட்டி சோடா, ஆல்கஹால், வனிலா, மார்கரீன், சோயா சாஸ், பொரிக் கப்பட்ட உணவுகள், மாவுச்சர்க்கரை, மேம்படுத்தப்பட்ட மாவுகள், பேஸ்டாக்கள்.

கனோலா: எண்ணெய். மபொ கனோலாப் பொருள்களைக் கொண்டவை-சிப்ஸ், சாலட் மேலிடுபொருள்கள், குக்கிகள், மார்கரீன், சோயா பாலடை, பொரித்த உணவுகள்,

* பருத்தி: எண்ணெய். மபொ பருத்தி அல்லது அதன் பொருள்களைக் கொண்டவை:

சிப்ஸ், கடலை எண்ணெய், நொறுக்குகள், குக்கிகள்.

* உருளைக்கிழங்கு: மாவு, உருளைக்கிழங்கு ஸ்டார்ச். மபொ உருளைக்கிழங்கு அல்லது அதன் பொருள்களைக் கொண்டவை-அடையாளமிடாத பதப்படுத்திய உணவுகள் (பொரித்தவை, பிசைந்தவை, சுட்டவை, கலந்தவை போன்றவை), சிப்ஸ், நீரகற்றிய உருளைக்கிழங்கு மென்நறுக்குகள், சூப்புகள்.

* தக்காளிப் பொருள்கள்: மபொ தக்காளியை அல்லது தக்காளிப் பொருள்களை உடையவை. சாஸ்கள், பீட்சா, லாசேன்.

*  பசுக்களிலிருந்து பெற்ற பால் பொருள்கள்: கால்நடை வளர்ச்சிக்கான ஹார் மோன்களைக் கொண்டவை (அமெரிக்காவில் rBGH எனப்படுபவை)-பால், பாலடை, வெண்ணெய், மோர், புளிப்புகிரீம், யோகர்ட் (தயிர்), பிற பதப்படுத்திய பொருள்கள்.

பிராணிகளிலிருந்து பெறும் பொருள்கள்: பல நாடுகளில், பிராணிகளுக்கான உணவுகளில் மபொ பகுதிப்பொருள்கள் சேர்ந்திருப்பதால், பிராணிகளிலிருந்து பெறும் பொருள்கள் அலலது அல்லது உப பொருள்கள் யாவுமே பாதிக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவில், மபொ வளர்ச்சி ஹார்மோன்கள் (ஏறத்தாழ 6 வகைகள்) கால்நடைகளின் வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டிறைச்சியில் இதன் எச்சங்கள் காணப்படும்.

இரண்டாம் வகை

மபொ மூலங்களிலிருந்து தயாரித்தவற்றைக் கொண்ட சேர்க்கைகளும் பதப்படுத்தும் உதவிப்பொருள்களும்

சோயா லெசிதின்/லெசிதின்(E322), காரமெல் நிறப்பொருள்(E150), ரிபோஃபிளேவின் (வைட்டமின் பி2), கைமோசின் போன்ற என்சைம்கள் (மரக்கறிப் பாலடை தயாரிக்க உதவும் மபொ என்சைம்), வெள்ளைச் சர்க்கரை செய்ய உதவும் ஆல்ஃபா அமிலேஸ், மால்டோடெக்ஸ்ட்ரின்கள், சத்துமிக்க கார்போஹைட்ரேட் இனிப்பாக்குபொருள்கள் (கார்ன் சிரப்), அடுமனைத் தயாரிப்புகளைப் புத்தம்புதிதாக வைக்கப்பயன்படும் நோவாமைல்(TM), புல்லுலானேஸ் (உயர்அளவு ஃப்ரக்டோஸ் கொண்ட கார்ன் சிரப் தயாரிக்க உதவுவது). விற்பனைப் பொருள்களின் லேபில்களில் என்சைம்களைக் குறிப்பிடத் தேவையில்லை-காரணம், அவை பீர்கள், ஒயின்கள், பழச்சாறுகள், சர்க்கரை, எண்ணெய்கள், பால்பொருள்கள், அடுமனை உணவுகள் போன்றவற்றில் சேர்க்கப்பட்டாலும் உணவுப் பொருள்களாகக் கருதப்படுவதில்லை.

மூன்றாம் வகை

மபொ மூலங்களிலிருந்து பெறப்பட்டாலும், பெருமளவு மபொ சேர்க்கைகளைப் பதப்படுத்துதல் நீக்கிவிடும் தன்மை பெற்றவை

சோயா எண்ணெய், தாவர எண்ணெய், ஹைட்ரஜனேற்றம் செய்த தாவர எண்ணெய்,

தாவரக் கொழுப்பு, மாற்றப்பட்ட சோள ஸ்டார்ச், குளூகோஸ் சிரப், சோளச்சர்க்கரை, சோள சிரப், டெக்ஸ்ட்ரோஸ், ஃப்ரக்டோஸ், மால்டோடெக்ஸ்ட்ரின்.

மபொ உணவுகளை அடையாளப்படுத்த வேண்டுமா?

கட்டாயம். நமது உணவு மபொ வா இல்லையா என்பதை அறியும் உரிமை நமக்கு உண்டு. நாம் விரும்பும் உணவுப்பொருளைத் தேர்ந்தெடுப்பது அடிப்படை உரிமை. அடையாளப்படுத்துதல் அறியும் உரிமையை காக்கிறது. வெறும் சுவைக்காகவோ விருப்பத்திற்காகவோ மட்டுமின்றி, உடல்நலத்துக்காகவும் நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆஸ்துமா, நீரிழிவு, புற்றுநோய், இதய நோய்கள், பிற நெடுங்கால நோய்கள் உள்ளவர்கள் மட்டுமல்ல, எடைகுறைப்பவர்கள், குழந்தையை எதிர்பார்க்கும் தாய்மார்கள், விளையாட்டுவீரர்கள், மரக்கறிஉணவை உண்பவர்கள் போன்றவரும் தங்கள் உணவு களைப் பற்றிப் பெரிதும் கவலைப்படுவார்கள்.

உணவு ஒவ்வாமை உடையவர்களும் அவ்வாறே. வேர்க்கடலை, பிற கொட்டைகள், ஷெல்மீன், பால், பால்பொருள்கள் போன்றவை ஒவ்வாமைக்குக் காரணமாகலாம். தினவு, தடிமன்கள் முதலாக மூச்சிறைப்பு, வேற்றுப்பொருள்களால் ஏற்படும் ஒவ் வாமை அதிர்ச்சிகள் உட்பட இவற்றின் எதிர்வினை உடனடியானது.

மரபணுப் பொறியியல் உணவுகளில் ஆபத்தானவைகளைச் சேர்ப்பதால், உடல்நல முள்ளவர்களும் நீண்டகால அளவில் மபொ உணவுகளை உண்ணும்போது உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மபொ பற்றி-குறிப்பாகத் தாறுமாறாகப் புதிய புரோட்டீன்களை உண்டாக்குவது பற்றி இன்னமும் மிகப்பெரிய அளவிலான அறிவியல் நிச்சயமின்மை காணப்படுகிறது. இவற்றின் எதிர்பாராத விளைவுகளைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது, டிரிப்டோஃபனில் கண்டது போல, எந்த விஞ்ஞானியும் எதிர்பாராத விளைவு ஏதும் 100% ஏற்படாது என்று உறுதிகூற இயலாது. விளைவுகள் வெளிப்படச் சில பத்தாண்டுகள்கூட ஆகலாம். மேலும் அடையாளப்படுத்தல் இன்றி, சுகாதார அதிகாரிகள், பிரச்சினைகளின் மூலத்தைத் தேடியறிய முடியாது.

கடைசியாக, நுகர்வோர் பாதுகாப்புக்காக அல்லாமல், ஒழுக்கவியல் காரணங்களுக் காகவும் பலர் மபொ உணவுகளைத் தவிர்க்க விரும்பலாம். அவர்கள் இந்தச் சிந்தனைக்கும் அல்லது முழுத் தொழிலுக்குமே ஆட்சேபணை தெரிவிக்கக்கூடும்.

அடையாளப்படுத்தலுக்கும் மேலாக இதில் பிரச்சினைகள் உண்டா?

தகவல் தராமை நுகர்வோர் சரியான தேர்ந்தெடுப்பைச் செய்கின்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகிறது. அடையாளமிடுதல் இன்றி நுகர்வோர்கள் அறியாமையில் தள்ளப்படுவது மட்டுமல்ல, ஏதேனும் தவறாகப் போகும் நிலையில், மூலங்களை அல்லது காரணங்களைக் கண்டறிவதும் மிகக் கடினமாகிவிடும். டிரிப்டோஃபன் விஷயத்தில், புதிய விசித்திர நோயின் மூலத்தையும் உற்பத்தியாளரையும் அறிவதில் அமெரிக்க அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதற்குள் குழுமம் தன் சேமிப்புகள் அனைத்தையும் அழித்துவிட்டதால் எவ்விதச் சோதனையும் செய்ய இயலாமல் போயிற்று.

அடையாளமிடுதல் இன்மை முறையான வாணிகமும் அல்ல. நுகர்வோரைத் தவறான வாங்குதலுக்குட்படுத்தல், ஏமாற்றுதல் இதில் உள்ளது. நுகர்வோர்கள் அடையாளமிடு தலை அமைப்புகள் வாயிலாகக் கேட்கும்போது, உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் உரிமம்பெறும் அலுவலகத்திற்குத் தங்கள் பொருள்கள் இயற்கைப் பொருள்கள் போன்றவை என்று கூறியவாறு உரிமம் பெற ஓடுவதைப் பார்த்தாலே இது தெளிவாகும்.

நமது மத மற்றும் ஒழுக்கவியல் பார்வைகளுக்கும் மபொ உணவுகளுக்கும் என்ன தொடர்பு?

marapanu-stil-71
நிறைய இருக்கிறது. இந்தியா, வெவ்வேறு மதங்களும் கலாச்சாரங்களும் கொண்ட பலவேறு இனத்தவர் வாழும் நாடு. ஹராம் அல்லது தடைசெய்யப்பட்ட உணவு முஸ் லிம்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தும். அறியாத அல்லது அடையாளமிடப்படாத மூலங்களிலிருந்து பெறப்பட்ட மரபணுக்களைப் பயன்படுத்திய மபொ உணவுகளின் இயல்பு (ஹலால்) பற்றி இயல்பாகவே அவர்கள் கவலைப்படுவர். குறிப்பாக இது வரை உணவாகப் பயன்படுத்தப்படாதவை பற்றிக் கவலை இருக்கும். பன்றியின் மரபணுக்களைப் பயன்படுத்தியவைகளையும், இஸ்லாமிய முறைப்படி கொல்லப்படாத பிற பிராணிகளையும் அவர்கள் உண்ண விரும்பமாட்டார்கள்.

இந்துக்களும் பௌத்தர்களும்-குறிப்பாக மரக்கறி உணவு உண்பவரும், மாட்டிறைச்சி உண்ணாதவர்களும் விலங்கு மரபணுக்கள் கொண்ட உணவுகளைப் பற்றிக் கவலைப்படுவார்கள். மரக்கறி உணவுப்பழக்கமுள்ளவர்கள், விலங்குகள் அல்லது மனித மரபணுக்களைக் கொண்ட எந்த உணவையும் எதிர்ப்பார்கள்.

வலுவான மத நம்பிக்கை உடையவர்கள், கடவுளின் படைப்புக்கு மரபணுப பொறியியல் மாறானது என்ற அடிப்படையில் மபொ உணவுகளை எதிர்ப்பார்கள். உயிர்ப் பிராணிகளுடைய வாழ்வின் பாரம்பரிய அமைப்புகளை மாற்றுவதும் கலப்பதும் கடவுளின் ஆட்சிக்கும் அவரது தெய்விகத் திட்டத்திற்கும் மாறானது என்று கருதுவார்கள்.

உலகத்தில் வறுமையையும் பசியையும் மாற்றித் தங்கள் மபொ பயிர்கள் உணவளிக்கும் என்ற உயிர்த்தொழில்நுட்பத் தொழிலகங்களின் பேச்சை நாம் நம்பமுடியுமா?

உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் வணிக நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பவை என்பதை நாம் மறந்துவிடலாகாது. இது ஒரு மிகப்பெரிய வாணிகம். 1999இல் மபொ பயிர்களுக்கு ஜப்பான், கிழக்கு ஐரோப்பா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை தடைவிதித்தபோது அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு ஒரு பில்லியன் (நூறுகோடி) டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக அமெரிக்க விவசாயத் தொழிலகங்கள் கணக்கிட்டன. ஹார்மோன் பயன்படுத்திய அமெரிக்க மாட்டிறைச் சிக்குக் கிழக்குஐரோப்பிய நாடுகள் இறக்குமதித் தடைவிதித்ததால் மட்டும் 20 முதல் 30 கோடி டாலர் இழப்பு ஓராண்டில் அமெரிக்காவுக்கு ஏற்படுகிறது.

ஆகவே நுகர்வோருக்கு மபொ உணவுகளினால் விளையுமென எதிர்பார்க்கும் நன்மை நிஜமாக இதுவரை உண்டாகவில்லை. இதுபற்றி மிகையாகச் சொல்லப்படுகிறது. ஆபத்துகளும் எதிர்மாறான விளைவுகளும் வெளியிடப்படுவதில்லை. ஏழை நாடுகளில் பசியையும் பஞ்சத்தையும் போக்க, அதிகரித்துவரும் உலக மக்கள் தொகையைக் காப்பாற்ற, நமக்கு மரபணுப் பொறியியல் தேவை என்பது புதிதாக இக்குழுமங்கள் கண்டுபிடித்த வாதம்.

ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின்படி, உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான உணவைப்போல இப்போதே ஒன்றரை மடங்கு இருக்கிறது. உலக மக்கள் தொகையின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற, மபொ அற்ற உணவுகளே போதுமானவை என்று 2000 ஜூலையின் அறிக்கையில் உணவு விவசாய நிறுவனம் கூறியிருக்கிறது.

ஊட்டச்சத்துக் குறைந்த மக்களுக்கென அதிகச் சத்துவாய்ந்த பயிர்களை (வைட்டமின் ஏ மேம்படுத்தப்பட்ட அரிசி போன்றவற்றை) உருவாக்குவதாக உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் கூறினாலும், அவை யாருக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறதோ அவர்கள் அவற்றை வாங்கவும் இயலாது. இதற்குத் தீர்வு விவசாயத்துக்கு வெளியில் தான். (அதாவது ஏழைகளின் வருவாயைப் பெருக்குதல் போன்றவை). உணவு தானியங் களைக் கால்நடைகளுக்குத் தீனியாகக் கொடுத்தல் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் சொல்லுவதுபோல மபொ வளரும் நாடுகளுக்கு உதவ இயலுமா?

மாறாக, இருக்கும் பிரச்சினைகளை மரபணுப் பொறியியல் மேலும் மோசமாக்கவே முடியும். நிறுவனங்களின் வாக்குறுதி ஒருபுறம் இருக்க, வளரும் நாடுகள், பெரும் நிறுவனங்கள் மற்றும் முதல் உலகத்தின் உதவிக்கு அலையவும் அவர்களிடம் கடன்பெறவும் அவர்களைச் சார்ந்திருக்கவும் நேரிடும். மபொ பயிர்கள் “அதிநவீன” விவசாயத்தொழில் நிறுவனங்களுக்கானவை. வேதிப்பொருள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்ற, ஒரேமுறை பயிர்செய்கின்ற, (மிக அதிகமான நீர், வேதியுரங்கள், களைக்கொல்லிகள் பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுகின்ற) பெரிய பண்ணைகளை வைத்திருக்கின்றவர்களுக்கானவை. வளரும் நாடுகளில் இவை சிறிய, குடும்ப விவசாயநிலங்களை வைத்திருப்பவர்களை பலியாக்கும். உணவுப்பயிர் வளர்ப்பது மேலும்மேலும் பெரிய நிறுவனங்களின் ஒற்றை மேலாண்மையின்கீழ் வருவதால், நிலமின்மை, ஏழ்மை ஆகியவற்றை மபொ அதிகரிக்கச் செய்யும்.

முக்கியமாக, உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் தங்கள் விதைகளுக்கு உரிமம் வாங்கி விடுகின்றன. ஆகவே அவற்றைப் பயன்படுத்தும் விவசாயிகள், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தாங்கள் செய்துவருவதுபோல, அந்த விதைகளை விற்பனை செய்யவோ, பிறரிடம் பரிமாறிக்கொள்ளவோ, அடுத்த ஆண்டுக்கெனச் சேமித்து வைக்கவோகூட முடியாது. இந்த விதைகளைப் பகுப்பாய்வு செய்யவோ இவற்றை ஆராய்ச்சிக்குட்படுத்தவோ முடியாது. இந்தக் கட்டுப்பாடுகளுக்குமேல், மான்சாண்டோ போன்ற கம்பெனிகள் தொழில்நுட்பக் கட்டணம் ஒன்றையும் வசூலிக்கின்றன. சோயா விதையின் 25கிலோ கொண்ட பை ஒன்றுக்கு ஆறரை டாலர் கட்டணம். (1998இல் இந்தக் கட்டணமே இக்குழுமத்திற்கு 200 மில்லியன் டாலர்களை ஊதியமாகப் பெற்றுத்தந்தது.)

ஒவ்வோராண்டும் இத்தகைய கட்டணம் செலுத்தி இந்த விதைகளை வாங்க மூன்றாம் உலக விவசாயிகளால் முடியுமா? தொன்றுதொட்டுத் தாங்கள் விதைகளைச் சேமித்து வைக்கும், பரிமாறிக் கொள்ளும் உரிமையை அவர்கள் விட்டுத்தரமுடியுமா? (அமெரிக்க விவசாயிகள் தங்கள் ஒப்பந்தங்களை முறித்ததற்காக மபொ நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்தன. உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் விதைத் திருட்டுச் செய்வ தாக ஆயிரக்கணக்கான வழக்குகள்.)

பயிர்கள் அழுகுவதைத் தடுக்கவும், அவற்றை நீண்டகாலம் சேமித்து வைக்கவும், அவற்றில் நோய்களைத் தடுக்கவும், பூச்சிவிழுவதைத் தடுக்கவும், அவற்றிற்கு நல்ல தோற்றத்தை அளிக்கவும் பெருங்குழுமங்கள் செய்த முயற்சிகள் யாவும் ஏற்றுமதிக்காரர்கள், வேதிவிவசாயக் குழுமங்கள், உற்பத்தியாளர்கள், சிறுவியாபாரிகள் ஆகி யோருக்குப் பயன்பட்டனவே தவிர, மூன்றாம் உலகத் தேவைகளுக்குப் பயன்படவேயில்லை. நிலநடுக்கோட்டு விரைவுப் பயிர்களுக்கு பதிலாக மாற்றுகளைப் பயிரிட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் (சான்றாக, தென்னை, பாமாயில், வனில்லா, கோகோ) மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற தெற்குநாடுகளின் ஏற்றுமதி முயற்சிகளுக்கு ஊறுசெய்தன.

உண்மையில் மபொ தொழில் நுட்பம், உலகத்தின் செல்வத்தை மிகச்சில ஒற்றை யாதிக்கக் குழுமங்களுக்கே குவியச்செய்யும்.
உயிர்த்தொழில் நுட்பம் பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?  

மரபணுத் தொழில் நுட்பத்தின்மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு ஈரடியாக இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது. ஒருபுறம் அது பொதுமக்கள் ஆரோக்கியம், பாது காப்புப் பற்றித் தன் அக்கறையினைத் தெரிவிக்கிறது; மறுபுறம் விவசாயத்திற்கு இரு பத்தோராம் நூற்றாண்டின் தேர்வாக உயிர்த்தொழில் நுட்பத்தை ஆதரிக்கிறது.

சர்வதேச அளவில் மலேசியாவின் நிலைப்பாடு உதாரணநிலையில் உள்ளது. உயிர்ப் பாதுகாப்பு பற்றிய கார்ட்டெக்னா உடன்பாட்டு ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டுள்ளது. உடல்நலம், சுற்றுச்சூழல் மீது உயிர்த்தொழில்நுட்பத்தின் கோளாறான விளைவுகளைக் குறைக்க இது ஒரு முன்வரைவாகும். கார்ட்டெக்னா ஒப்பந்த உடன்படிக்கை மரபணுரீதியாக மாற்றியமைக்கப்பட்ட உயிரிகளின் பயன்பாடு, இட மாற்றம், கையாளுகை, எடுத்துச்செல்லுதல், புகுத்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்து கிறது. இறக்குமதி செய்யும் நாடுகள் முழுஅளவு அறிவியல் ஆபத்துகள், இடர்ப்பாடு களின் நிச்சயின்மை பற்றித் தெரியாமல் இவற்றைத் தடைசெய்யவும் கட்டுப்படுத்த அனுமதிக்கவும் இவற்றுக்கு அடையாளமிடவும் அது வழிசெய்கிறது. ஜிஎம்ஓக்களை நிர்ப்பந்தமான தரநிர்ணயித்தலின் வாயிலாக நாடுகள் ஒழுங்கு படுத்த அனுமதிக்கிறது.

தேசிய விவசாயக் கொள்கை, விவசாய வணிகத்தை மேம்படுத்துவதற்கு உயிர்த் தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான கருவியாக நோக்குகிறது. இதனால் விளைச்சலை மேம்படுத்தவும், தாவரப்பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் இழப்பினைக் குறைக்கவும், உழைப்பு மற்றும் நிலத்தின் விளைவை முன்னேறச்செய்யவும் நினைக்கிறது. கார்ட்டெக்னா உடன்பாடு 2003இல் அமுலுக்கு வந்தது.

கூட்டாக எஃப்ஏஓ-டபிள்யூஎச்ஓ உயிர்த்தொழில்நுட்பம் மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைத்த நிபுணர் ஆலோசனையையே-அதாவது, பாரம்பரிய முறைகளால் வளர்க்கப்பட்ட இயற்கை உணவுகளுக்கு மபொ உணவு ஒப்பானது என்ற நிலைப்பாட்டையே பெரும்பாலான வளரும் நாடுகளின் உடல்நல அமைச்சகங்கள் பின்பற்றுகின்றன.
உயிரியல் பலதரத்தன்மை பற்றிய அமைப்பு முன்வைத்துள்ள முன்னெச்சரிக்கைக் கொள்கையின் சார்பாக இந்நாடுகள் நின்றிருக்கலாம். நிச்சயின்மை இருக்கும்போது, அதாவது ஜிஎம்ஓக்களின் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருள்களின் பாதுகாப்பு பற்றிய தெளிவான சான்று கிடைக்கும்வரை, அவற்றின் இறக்குமதியையும் பயன்பாட்டையும் மறுப்பது என்பதுதான் அந்த முன்னெச்சரிக்கைக் கொள்கை.

இடர்க் கணிப்பு முறை :

நம் நாட்டில் பழங்கள், காய்கறிகள், நெல், சோயா, ஆர்க்கிடுகள் போன்ற துறைகளில் சோதனைகளுக்காகப் பல ஆய்வு நிறுவனங்கள் ஆய்வக மற்றும் களச்செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளும், உயிர்ப்பாதுகாப்பு பற்றிய சட்டங்களும் உருவாக் கப்பட்டு, உரிய இடம் அளிக்கப்படும்வரை, இடர்க்கணிப்பு என்பது வெறும் வாய்ச் சொல்லாகவே இருக்கும். பாதுகாப்பைப் பற்றிய பல பிரச்சினைகள் மற்றும் சூழலியல் தாக்குதல்கள் இன்னும் கவனத்தில் கொள்ளப்படவே இல்லை.

இந்த நாடும், ஏனை வளரும் நாடுகளைப் போல, பன்னாட்டுக் குழுமங்கள் பரிந்துரைக்கும் உள்ளார்ந்த அபாயகரமான ஆய்வுகளுக்குச் சோதிக்குமிடமாகவும் அவற்றின் கழிவுகளைக் கொட்டும் இடமாகவும் மாறிவிடக்கூடும் என்று நாம் கவலைப்படுகிறோம். மேலும் இப்போது மேற்கில் மபொவுக்கு எதிராக நுகர்வோரின் எதிர்ப்புக்குரல் எழுச்சி பெற்றிருப்பதால், மபொ குழுமங்கள் தங்கள் குவிமையங்களையும் திட்டங்களையும் கிழக்குநாடுகளையும், வளர்ச்சி குறைந்த நாடுகளையும் நோக்கித் திருப்பியுள்ளன. மபொ உணவின் உடல்நல ஆதாயங்களை விளம்பரப்படுத்துகின்றன. மபொவை உலக அளவில் பசிக்கும் வறுமைக்கும் ஒரு தீர்வாகவும் இவை முன்வைக்கின்றன.

அமெரிக்கா, கானடா, ஆர்ஜெண்டினா ஆகிய மூன்று நாடுகளும்தான் அதிகபட்சமாக மபொ உணவுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவை. இவற்றிற்கு மியாமி நாடுகள் என்று குறிப்புப் பெயர். இவை கார்ட்டெக்னா உடன் பாட்டை ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் வந்த நகோயா உடன்பாட்டையும் ஒதுக்கி யிருக்கின்றன.

வளரும் நாடுகள் பல, பூச்சிகளுக்கும் களைக்கொல்லிகளுக்கும் தடைச்சக்தி பெற்றுள்ள, அழுகாத இந்த “அற்புதப்” பயிர்களுக்குக் கதவுகளைத் திறந்துள்ளன. பெருங்குழுமங்களின் இலவச முன்னோட்டங்களுக்கும், தொழில்நுட்பத் திட்டங்க ளுக்கும் இந்நாடுகள் தடைசொல்வது கடினம்தான். தங்கள் சொந்த நலன்க ளுக்கு மட்டுமே பாடுபடும் நம் நாட்டு அமைப்புகளின் பக்கபலமும் இவற்றுக்கு உள்ளது. அமெரிக்க வணிகத் துறை அல்லது எஃப்டிஏ, உலகவங்கி, யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகள் உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்களுக்கும் வளரும் நாடுக ளுக்கும் இடையில் சமரசம் செய்கின்ற விவசாயத்தொழில் பயன்பாடுகளை ஏற்கும் சர்வதேசச் சேவை போன்ற அரசுசாராத் தன்னார்வ அமைப்புகள் போன்றவை பின்னணியில் பேரத்தில் ஈடுபடுகின்றன. இவை போகும்போக்கில் வளரும் நாடுகளின் தொழில்நுட்பத் தேவைகளைக் கண்காணிப்பதோடு, அவற்றின் விஞ்ஞானிகளுக்கும் பயிற்சிதருகின்றன.

நம் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?  

நுகர்வோரின் பாதுகாப்புக்காகவும் உடல்நலத்துக்காகவும், பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்:

ஃ மபொ சோயா அவரை உள்ளிட்ட எல்லாவிதமான மபொ உணவுகள் மற்றும் விளைபொருள்களின் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றைச் சட்டப்படி நிறுத்தி வைக்கவேண்டும்.
இத்துறையில் புறவயமான, அறிவியல் பூர்வமான, கட்டுத்திட்டமான, தன்னிச்சையான சோதனைகளை நிகழ்த்தவேண்டும். மபொ உணவுகள், விளைபொருள்கள் பாதுகாப் பானவை என்று நிரூபிக்கும் பொறுப்பை அவற்றை உற்பத்தி செய்வோரும், ஏற்றுமதி செய்வோரும்தான் ஏற்க வேண்டும்.
ஃ உடல்நலத்தின்மீதும் சுற்றுச்சூழலின்மீதும் எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, மரபணுப்பொறியியல் உருவாக்கிய உயிரிகளை உற்பத்திசெய்து சுற்றுச்சூழலமைவில் நுழைக்கும்விதமான விவசாய மற்றும் பிறதுறை சார்ந்த மரபணுத் தொழில்நுட்பம் தடைசெய்யப்பட வேண்டும்.
ஃ பன்னாட்டு உயிர்ப்பாதுகாப்பு விதித்தொகுப்பினை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஏற்றுச் செயல்படுத்தவேண்டும். இதன்படி, கடுமையான தேசிய உயிர்ப்பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அவை சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சத் தரங்களை ஏற்றிருக்க வேண்டும்.
ஃ மபொ உணவுகளும் விளைபொருட்களும் கண்டிப்பாக அடையாளமிடப்பட வேண் டும். தாங்கள் எதை உண்கிறோம் என்று அறிந்துகொள்ளும் உரிமை, அதுவும் அபாயங்கள் இருக்கும்போது, மத மற்றும் ஒழுக்க விதிகளோடு அது சம்பந்தப்பட்டி ருக்கும்போது, நுகர்வோருக்குக் கண்டிப்பாக உண்டு.
ஃ விவசாயிகளுக்கும் அந்தந்த வட்டார மக்களுக்கும் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவிதமான நீண்டகாலப் பயனுடைய விவசாய, உற்பத்தி முறைகளில் முதலீடு செய்யவேண்டும். இப்போதுவரை, பெரிய, பன்னாட்டுக் குழுமங்களுக்கு இலாபம் ஈட்டித் தருகின்ற, போதிய அளவு சோதிக்கப்பெறாத, தொழில்நுட்ப விரைவு ஒட்டு வேலைகளுக்கே அதிக அழுத்தம் அரசினால் தரப்பட்டு வந்துள்ளது.


தமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு

thamil-naagarigam5

தமிழன் என்றொரு இனமுண்டுதனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அந்தத் தனிப்பண்பு என்ன என்று நீண்டநாள் சிந்தித்துப் பார்த்ததுண்டு. கடைசியில்என் சிந்தனையில்அது ஓர் எதிர்மறைப் பண்பாகத்தான் இருக்கிறது. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்று ஒரு சொலவடை வழங்கிவருகிறது. வந்தாரை வாழவைப்பது மட்டுமல்லவந்தவர்கள் கலாச்சாரத்தையும் தங்களதாக ஏற்றுக்கொண்டு தங்கள் சொந்தக் கலாச்சாரத்தைக் கோட்டைவிடுவதுதான் தமிழனின் தனிப்பண்பு.

வடமொழிக்கும் அதன் இலக்கிய இலக்கணத்துக்கும் தத்துவ வளத்திற்கும் தமிழ் எவ்வளவோ தொண்டு செய்திருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. இந்தியாவின் தலைசிறந்த தத்துவஞானிகளில் இருவர் தமிழகத்தில் தோன்றியவர்கள் (ஆதி சங்கரரும் இராமாநுஜரும்-ஆதிசங்கரர் தோன்றிய காலடி இன்று கேரளா என்று கூறப் பட்டாலும் அந்தக் காலத்தில் சேரநாடுதான்.) கும்பகோணத்திலும் காஞ்சிபுரத்திலும் இருந்த வடமொழி அறிஞர்கள் (இவர்கள் எல்லாரும் பிறப்பினால் தமிழர்கள்தான்) தமிழில் இருந்த வளமான நூல்களை எல்லாம் (அன்று சமஸ்கிருதம் இந்தியாவின் பொதுமொழி என்று கருதப்பட்டதால்) சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொடுத் தார்கள்சொந்தமாகவும் எழுதினார்கள். சாணக்கியர்பரதர் முதற்கொண்டு பல ஞானி களும் தமிழகத்தில் தோன்றியவர்கள்தான். இந்த அளவுக்கு வடமொழிக்குத் தொண்டு செய்த இனத்தைப் பார்த்துத்தான் இன்று சிலர்,இனவெறி கொண்ட மக்கள் என்கிறார்கள்.

சமசுகிருதத்துக்கு மட்டுமல்லவிஜயநகர ஆட்சியில் இருந்ததால் கன்னடம்தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் தமிழர்கள் எவ்வளவோ தொண்டுசெய்திருக்கிறார்கள். தமிழுக்குக்கூட அவர்கள் பாடுபட்டதில்லை. மாஸ்தி வேங்கடேசரும்உள்ளூரும் தமிழர்களே அல்லவாஇப்படிப்பட்ட மக்களைப் பார்த்துத்தான் இனவெறி கொண்ட மக்கள் என்கிறார்கள் சிலர். நம் தமிழகத்து ஆர்.கே. நாராயனணையும்ஏ.கே. இராமாநுஜனையும்கூட கன்னடப் பிரதேசத்தில் வாழ்ந்ததால் அவர்கள் எழுத்தாளர்கள் என்று முறையற்ற சொந்தம் கொண்டாடுகிறார்கள் அவர்கள்.

இந்த ஏமாளித் தமிழக மக்களைப் பார்த்துத்தான் மொழிவெறிஇனவெறி பிடித்தவர்கள் என்கிறார்கள் சிலர்.

எல்லா இன மக்களும் அவரவர் சொந்த மொழியில்தான் பெயர்வைப்பார்கள்பேசுவார்கள்பாடுவார்கள்கவிதை கதை முதலிய இலக்கியங்களை வளர்ப்பார்கள். இதில் என்ன தவறு இருக்கிறதுஎந்த ஆங்கிலேயனைப் பார்த்தாவது நீ ஜேம்ஸ் என்று பெயர் வைத்துக்கொள்ளாதேவாஞ்சிநாதன் என்றுதான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமாஆங்கிலப் பாட்டைவிட்டு நீ இந்தியில் அல்லது ரஷ்யனில்தான் பாடவேண்டும் என்று சொல்ல முடியுமா?

ஆனால் தமிழில் பெயர் வைத்துக்கொண்டால் மட்டும்தமிழில் பேசினால் மட்டும்தமிழில் பாடு என்று கேட்டால் மட்டும் அது குறுகிய மொழி வெறியாம். இப்படிப் பட்டவர்களைப் பக்கத்திலுள்ள பெங்களூருக்கோ மைசூருக்கோ அனுப்பினால் போதும்நீ உன் மொழியில் (அங்கே கன்னடம்) பேசாதேபாடாதேபெயர் வைத்துக் கொள்ளாதே என்றால் போதும்தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விடுவார்கள்.

ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை. இதுதான் தமிழனின் தனிப் பண்பு போலும்.

அபர்ணா என்ற சொல்லுக்கு ஆடையற்றவள் என்று ஒருவர் பொருள் சொன்னால் உடனே அது பார்வதி என்ற தெய்வத்தின் பெயராயிற்றே எப்படிச் சொல்லலாம் என்று குதிக்கிறார் ஒருவர். தெய்வம் எந்த ஆடை அணிந்திருந்தது என்று அவர் போய்ப் பார்த்துவிட்டுவந்து சொல்லட்டும். தெய்வத்தை அவள் அவன் என்று கூடச் சொல்லக் கூடாது தத்‘-அது என்றே சொல்லவேண்டும் என்பதுதான் நமது வேதாந்த மரபு. “ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ” என்று இறைவனின் உருவமற்ற,நாமமற்றபண்புகளற்ற (நிர்க்குணத்) தன்மையைப் பாடினார் மாணிக்கவாசகர்.

அதெல்லாம் போகட்டும்அபர்ணா கதைக்கு வருவோம். பர்ண என்றால் இலை. இலைகளால் வேயப்பட்ட குடிலைப் பர்ணசாலை என்றார்கள் (இதுவும் இலை அணிந்த வீடுதான்இலை தின்னும் சாலை அல்ல). பர்ணா-இலை உள்ளவள்இலை ஆனவள்இலையை அணிந்தவள். அபர்ணா என்றால் இலை ஆகாதவள்இலையை அணியாதவள். (இலையை உண்ணாதவள் என்று வலிந்து பொருள் சொல்கிறார்கள் இங்கே.) பழங்காலத்தில் பெண்கள் தழையாடைஇலையாடை அணிவது மரபு. இது வடநாடு முதல் தென்னாடு வரை உள்ள பழக்கம்தான். குறிஞ்சிப்பாட்டில்கூடதலைவியும் அவள் தோழியும் சுனையில் நீராடிவிட்டுஆங்காங்கு கிடைத்த இலை தழைகளைக் கொய்து உடுத்திக் கொண்டார்கள் என்று ஒரு நீண்ட பகுதி வருகிறது. இவர்கள் எல்லாம் பர்ணாக்கள். அதாவது இலை அணிந்தவர்கள். அபர்ணா என்றால் இலைகூட அணியாதவள்அதனால் நிர்வாணி என்று பொருள் கொள்வதில் என்ன தவறு?

அபர்ணா என்ற பெயர் பார்வதியைக் குறிக்கும் என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். பார்வதி சிவனை மணப்பதற்கு இமவான் மகளாகப் பிறந்து மன்மதன்-ரதியை அனுப்பிப் பார்த்தாள். கதை நடக்கவில்லை. தட்சன் மகளாகப் பிறந்து தாட்சாயணி ஆகியும் எரிந்துபோனாள். அதனால் கடைசியாக உணவு ஏதுமின்றி (அதாவது இலைகூட உண்ணாமல்) தவம் செய்ததால் அபர்ணா என்று பெயர் பெற்றாளாம் பார்வதி. ஒரு கனிகூட உண்ணாமல் என்றால் நாம் ஒப்புக்கொள்ளலாம். ஒரு இலைகூட (அதாவது கீரை என்று அர்த்தம் கொள்ளவேண்டுமாம்) உண்ணாமல் இருந்ததால் பார்வதி அபர்ணா ஆனாளாம்.

தமிழகத்தில் பலபேரும் பெயரின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டா பெயர் வைக்கிறார்கள்ஏதோ வழிவழியாக வருகிறதுஅவ்வளவுதான். நல்ல தேனாக இனிக்கும் தமிழ்ப் பெயர்களை வைக்கலாமேஇப்படிச் சுற்றலில் விடும் (ambiguous) வடமொழிப் பெயர்களை ஏன் வைக்கவேண்டும் என்று ஒருவர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?தமிழ்நாட்டிலேயே தமிழ்ப் பெயர்களை வைக்கப்போவதில்லை என்றால்வேறு எந்த நாட்டில் போய் வைத்துக் கொள்ளச் சொல்வது?


தமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை

Music-e1339701935618-1024x707
திரைப்படப் பாடல்கள் எல்லாம் கவிதை என்று எத்தனையோ பேர்-கல்லூரிப் பேராசிரியர்கள், நன்கு கற்றவர்கள் உள்பட-நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள்மேல் தப்பில்லை. காலம் காலமாக நாம் இலக்கியத்தை-செய்யுள் வடிவில் எழுதப்பட்டதை எல்லாம் பாடல் என்றே சொல்லி வந்திருக்கிறோம். உதாரணமாக “இந்தச் சங்கப்பாடல் கடினமாக இருக்கிறது” என்போம்.

ஆனால் பாடல் வேறு, கவிதை வேறு. இது காலம்காலமாக-நான் ஏறத் தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவரும் கருத்து. அது மட்டுமல்ல, செய்யுள் என்பதும் வேறுதான். ஒரு நூற்றி ஐம்பது ஆண்டுகள் முன்னால் இந்தப் பிரிவுகளுக்கெல்லாம் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் ஆங்கிலக் கல்வி வளர்ந்து, ஆங்கில முறையைப் பின்பற்றி நாம் புதுக்கவிதை, மரபுக்கவிதை என்றெல்லாம் ஆளத்தொடங்கிய பிறகு, முன்புபோலப் பேசினால் அர்த்தமில்லை.

முதலில் செய்யுள் என்ற சொல். இதை நாம் உடன்பாடாகவோ (பாசிடிவாகவோ), எதிர்மறையாகவோ (நெகடிவாகவோ) எடுத்துக்கொள்ளலாம். செய்யுள் என்றால் செய்யப்பட்ட ஒன்று என்று அர்த்தம். அது கவிதையாகவும் இருக்கலாம், உரைநடையாகவும் இருக்கலாம், புதுக்கவிதையாகவும்கூட இருக்கலாம். ஆனால் பொதுவழக்கின்படி, யாப்பின்படி அமைந்த, கவிதையாகாமல் போய்விட்ட ஒன்றிற்குத்தான் செய்யுள் என்று பெயர்.

அண்ணன்  என்பவன்  தம்பிக்கு  மூத்தவன்

திண்ணை  என்பது தெருவிலே  உள்ளது

கண்ணன்  என்பவன்  கண்ணிரண்டு  உள்ளவன்

வெண்ணெய்  என்பது  பாலினில்  விளைவதே.

இது செய்யுள் என்பதற்கு பேராசிரியர் கைலாசபதி தந்த எடுத்துக்காட்டு. இதில் யாப்பு மிக நன்றாக அமைந்திருக்கிறது. ஆனால் இதைக் கவிதை என்று நமது நண்பர்கள் கருதமாட்டார்கள் என்பது நிச்சயம்!

கவிதை என்பது ஓர் அனுபவத்தை மனத்திற்குள் விதைத்துச் சிந்திக்கத் தூண்டுகின்ற ஒன்று. அது யாப்பில் அமைந்திருக்கலாம், யாப்பில் இல்லாமலும் இருக்கலாம். யாப்பில் இல்லாததைப் புதுக்கவிதை என்றும் மற்றதை மரபுக் கவிதை என்றும் சொல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. ஒரு மிகச் சிறிய கவிதை இதோ-

இருப்பதற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்.

வருகிறோம்-போகிறோம் என்ற இருமை எதிர்வையும், இருப்பதற்கென்றுதான்-இல்லாமல் என்ற முரண்பாட்டையும் பாருங்கள். எவ்வளவு அற்புதமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறது!

இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டது பாட்டு. பாட்டு, இசை என்ற கைத்தடி இல்லாமல் நடக்கமுடியாது. ஸ்வரம் மாதா, லயம் பிதா என்பார்கள். ஸ்வரங்களால் ஆன ராகத்தைப் பாட்டு கொண்டிருக்கவேண்டும், லயம் என்ற தாளத்திற்கேற்ப அது நடக்கவேண்டும்-அதாவது பாடப்பட வேண்டும்.

கவிதை பாடப்படவேண்டிய அவசியம் இல்லாதது. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறள் கவிதையை-இது நிச்சயம் கவிதை-எந்த ராகத்தில் பாடுவது? பாடுவதுதான் தேவையா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கக்கவிதையை எந்த ராகத்தில், எந்தத் தாளத்தில் பாடுவது? இவற்றைப் படித்து அனுபவிப்பது, உணர்வதுதான் முக்கியம்.

திரைப்படப் பாடல்கள் எல்லாம் பாட்டுகள்தான். பாட்டுகளில் வார்த்தை இல்லாத இடத்தை லாலாலாலா, ராராரீரீ, டபக் டபக்கு டபக்குதான், சிங்கிரி சிச்சான் சிச்சான் ங்ங்கொய்யா என்று எதையாவது போட்டு நிரப்பிவிடுவார்கள். பழைய பாகவதர்கள் என்றால் ஆலாபனையிலேயே இழுத்துவிடுவார்கள். ஆக, இசைக்காக, தாளத்துக்காக எழுதப்பட்டதைப் பாட்டு என்கிறோம். பழைய காலத் திலேயே ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா ஆளுங்கோ ரவுண்டானா அசந்துட்டா டஹல்தானா என்று திரைப்படப் பாட்டு எழுதியிருக்கிறார் தஞ்சை ராமையதாஸ்.

ஆகவே பாட்டு வேறு, செய்யுள் வேறு, கவிதை வேறு என்று தெரிந்து கொள்வது நல்லது. பாட்டு எழுதுபவர்களைக் கவிஞர்கள் என்று சொல்வது வழக்கமில்லை. லிரிசிஸ்டு என்பார்கள் ஆங்கிலத்தில். பொயட் என்று அந்தஸ்து தரமாட்டார்கள். நம் ஊரில்தான் பாட்டு எழுதுபவன் எல்லாருமே கவிஞன் என்று போட்டுக்கொள்கிறான்.

நாம் இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களுடனே வாழ்ந்து திரைப் படப் பாடல்களுடனே சாகிறோம். குழந்தை பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே சினிமாப்பாடல் பழக்கமாகிவிடுகிறது.

பாட்டு கவிதை இல்லை என்று சொன்னதால் கெட்டது என்று அர்த்த மில்லை. நம் திருவையாற்றில், பிறகு சென்னையில் ஆண்டுக்கு ஒருமுறை பெரிய சங்கீதத் திருவிழா நடத்துகிறார்களே, எதற்கு? எல்லாம் தியாகராஜ சுவாமிகள் செய்த தெலுங்குக் கீர்த்தனைகளுக்கு (பாடல்களுக்கு)த்தான்.

அப்பர் சுவாமிகள், திருஞான சம்பந்தர் காலம் தொடங்கி, வள்ளலார் வரைக்கும் இறைவன்மீது பக்திப்பாடல்கள் பாடியிருக்கிறார்கள். வள்ளலார் கீர்த்தனைகளும் பாடியிருக்கிறார். பாரதியார் பாடல்கள் இயற்றியிருக்கிறார். பாரதி தாசன் இசையமுது இயற்றியிருக்கிறார். இவையெல்லாம் நல்ல பாட்டுகள் (அதாவது ஏதோ ஒரு இலட்சியத்தைக் கொண்டு அமைந்த பாடல்கள்) என்று சொல்லலாம். இலட்சியமில்லாத பாட்டுகளையும், பாட்டு எழுதுபவன் வாழ்க்கைக்குச் சம்பந்தம் இல்லாத பாட்டுகளையும் நான் மோசமான பாட்டுகள் என்பேன்.

வானம் எனக்கொரு போதிமரம்

நாளும் எனக்கது சேதி தரும்

ஆகா, என்ன அற்புதமான வரிகள், எவ்வளவு அற்புதமான கருத்து என்று பாராட்டத் தொடங்கிவிடுவீர்களே? இதை எழுதியவர் யாரென்று உங்களுக்குத் தெரியும்.

இது உண்மையான, இலட்சியப் பாட்டு என்றால், அந்தப் பாடலாசிரிய ருக்கு வானம் என்ற போதிமரம் நாளும் தந்த சேதி என்ன? கோடிகோடியாகக் குவித்துக்கொள், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதா? இந்த ஜனங்கள் எல்லாம் முட்டாள்கள், நன்றாக இவர்களை எந்த உருவகத்தையாவது போட்டு ஏமாற்று என்பதா? அதனால்தான் இதுபோன்றவற்றைப் போலிப்பாட்டுகள், ஏமாற்றுப் பாட்டுகள், வணிகப்பாட்டுகள் என்கிறோம். அந்த நேரக் கவர்ச்சிதான் இதற்கெல் லாம் முக்கியம். அதற்குமேல் ஒன்றுமில்லை.

தமிழ்த் திரைப்படப் பாட்டுகளின் மிக முக்கியமான குணம், பெண்    அடிமைத்தனத்தை உருவாக்குவது. சிறு குழந்தை முதலாகவே திரைப்படப் பாடல்கள் மனத்தில் நம்மை அறியாமல் பதிந்து நம்மை ஆட்சிசெய்துகொண்டே இருப்பதால், பெண் அடிமைத்தனம்-அதாவது பெண்களை அடிமைகளாக நினைப்பது, இரண்டாந்தர மனிதர்களாக நினைப்பது என்ற பண்பு ஆண்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. பெண்களுக்குத் தங்கள் அடிமைத்தனத்தை இது இயல்பானதுதான் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வந்துவிடுகிறது.

இதற்கு விதிவிலக்கான திரைப்படப்பாடல்கள் மிகக் குறைவு. ஒரு சதவீதம் தேறுவதுகூடக் கடினம். உதாரணத்திற்கு சில பாடல்களை நாம் பார்க்கலாம். நான் எங்கள் காலத்திலிருந்து (ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து) எங்களை பாதித்த-நல்ல இனிமையான பாடல்கள் என்று கருதப்பட்டவற்றிலிருந்து எடுத்துக்கொள்கிறேன்.

1968இல் வெளிவந்த ஒரு பாட்டு-நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன், என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன், நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்….என்று செல்வது. உங்களில் பலபேருக்குத் தெரியும் இது.

பலபேர் இது ஒரு நல்ல காதல்பாட்டு என்று நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஒரு காதலன் தன் காதலியைக் கேள்வி கேட்பது போலவும், காதலி அதற்கு விடை சொல்வதுபோலவும் அமைந்திருக்கிறது. காதலன் கேட்கிறான்-

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?

உன் வளைகொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது பரிசென்ன தந்தார்?

(இதையெல்லாம் இந்தக் காதலனே செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டுமாம், இது மரபாம்.) அந்தக் காவியக் காதலி அவ்வளவு சுரணை உள்ளவள் அல்ல. அவள் சற்றும் கோபமில்லாமல் சொல்கிறாள்-

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என்கிறாள். உண்மை கூறவாம், நினைத்துப்பாருங்கள், எவ்வளவு மோசம் என்று.

இன்னும் பழங்காலப் பாட்டு ஒன்று.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

பெண்ணுக்குச் சிந்திப்பதற்கும் தனக்கென்று ஓர் உலகத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் உரிமை கொஞ்சம்கூட இல்லையா?

முதல்வராய் இருந்த ஒரு நடிகரின் பாட்டுகளில் பெண் அடிமைத்தனம் மிகப் பச்சையாகவே இருக்கும். ஒரு திரைப்படத்தில் வரும் “இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே-இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டிலே” என்ற பாட்டைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள். அல்லது “புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்” என்ற பாட்டைக் கேட்டுப்பாருங்கள். இதில் புரட்டிப்பார்ப்பது, பள்ளியறை என்ற சிலேடை (இரண்டு அர்த்தம் தொனிக்கும் சொற்கள்) வேறு.

இப்படி புத்தகம், கித்தகம் என்ற நல்ல சொற்கள்கூட இல்லாமல்போய், இப்போது சினிமாப் பாட்டுகளில் பெண்ணைக் கட்டையாக்கி, ஃபிகர் ஆக்கிவிட்டார்கள். சற்றும் கூச்சமில்லாமல் நாட்டுக்கட்டே நாட்டுக்கட்டே என்று பெண்ணை விளிக்கிறான் ஆண். பெண்ணும் சற்றும் தயக்கமில்லாமல் அதை ஏற்றுக் கொள்கிறாள். போய் உண்மையாகவே கிராமத்தில் விளித்துப்பாருங்கள். விளைவு என்னவென்று தெரியும்.

ஆனால் இதையெல்லாம் பொது இடத்தில்- ஏற்றுக்கொள்ளும், பாடும் மனம்-திருவிழாவில் ரிகார்டு போடும் மனப்பான்மை எப்படி உண் டாயிற்று? அதுதான் ஈவ்டீசிங் முதலிய கொடுமைகளுக்குக் காரணம். இப்படிப் பாடல் எழுதுபவர்களை என்ன செய்ய முடியும்? அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு.